விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
உலககோப்பை தகுதி சுற்று: அர்ஜென்டினா, பிரேஸில் வெற்றி உலககோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெரு அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேஸில் வீரர் அகுஸ்டோ. படம்: ஏஎஃப்பி. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான போட்டியில் நேற்று பிரேஸில்-பெரு அணிகள் மோதின. இதில் பிரேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கோஸ்டா 22வது நிமிடத்திலும், அகுஸ்டோ 57வது நிமிடத்திலும், பிலிப் லூயிஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் அர் ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. அந்த அணியின் லூக்க…
-
- 0 replies
- 224 views
-
-
யூரோ 2016இன் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டன அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு, உக்ரைன் தகுதிபெற்றுள்ளது. ஸ்லோவேனிய அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்தே, தங்களது இடத்தை உக்ரைன் உறுதிப்படுத்தியது. இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்லோவேனிய அணிக்கெதிராக, 1-1 என்ற கோல் கணக்கிலான சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்ட உக்ரைன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தகுதிபெற்றது. இதன்படி, யூரோ 2016இல் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி தகு…
-
- 0 replies
- 313 views
-
-
மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? ஒருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல்…
-
- 0 replies
- 401 views
-
-
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கோப்புப் படம். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு…
-
- 0 replies
- 247 views
-
-
அணிக்காக எதையும் செய்வார்: விருத்திமான் சஹாவை ஆதரிக்கும் விராட் கோலி மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆம்லாவை வீழ்த்தியதைக் கொண்டாடும் விராட் கோலி, சஹா, புஜாரா. | கோப்புப் படம். தோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக செயலாற்றி வரும் விருத்திமான் சஹாவின் சர்வதேச தரம் பற்றிய கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாக வாதாடியுள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. “சஹாவின் அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே பிடித்துள்ளது. அவர் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீர்ர். அணிக்குத் தேவையான எந்த ஒன்றையும் அவர் செய்ய தயாராகவே இருக்கிறார். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் நி…
-
- 0 replies
- 209 views
-
-
அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்திய டெய்லர்: பாராட்டாத வீரர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அயல்நாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டெய்லர். அவுஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 559 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 166 ஓட்டங்களும், டெய்லர் 290 ஓட்டங்களும் குவித்தனர். டெய்லர் 290 ஓட்டங்கள் எடுத்து கடைசி வீரராக ஆட்ட…
-
- 4 replies
- 434 views
-
-
திரிமான்ன நீக்கப்பட்டார் டிசெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட், ஒ.நா.ச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் குழாமிலிருந்து லஹிரு திரிமான்ன நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட்: அஞ்சலோ மத்தியூஸ், குசால் மென்டிஸ், உதார ஜயசுந்தர, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, மிலிந்த சிரிவர்தன, கித்துருவன் விதானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்றி வன்டர்சே ஒ.நா.ச: அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, திலகரட்ண டில்ஷான், குசால் பெ…
-
- 0 replies
- 242 views
-
-
ஹாசிம் ஆம்லாவிடம் விருது பெற்ற இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் நரபலி! தென்ஆப்ரிக்காவில் மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வீரரின் பெயர் பெயர் நவாஸ் கான் (வயது 23). இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், உம்ஸிண்டோ என்ற நகரில் தாயுடன் வசித்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. இவர் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை தனது சொந்த பிரச்னைகள் தொடர்பாக சந்தித்துள்ளார். அதற்கு, அந்த மந்திரவாதி ஒருவரது தலையை வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தண்டோக்வேக் டுமா, மன வளர்ச்சி குன்றிய நவாஸ் கான் த…
-
- 1 reply
- 399 views
-
-
ஆஸி. – நியூசி நாளை முதல் டெஸ்ட் November 04, 2015 ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாளை ஆஸ்திரெலியாவின் பிரிஸ் பெயின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிமித்தின் தலைமையில் அதிகளவான இளம் வீரர்களைக் கொண்டதாக ஆஸ்திரேலிய அணியும், மக்கலத்தின் தலைமையில் அதிகளவான அனுபவ வீரர்களைக் கொண்டதாக நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. ஆள்பலத்தின் அடிப்படையில் நியூசிலாந்து பலம் மிக்கதாகக் காணப்பட்ட போதிலும் சொந்த மண், பழக்கப்பட்ட ஆடுகளம் என்பன ஆஸ்திரேலிய அணிக்குக் சாதகமாக அமையும். இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் எதிர்வரும் 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/spor…
-
- 11 replies
- 2.1k views
-
-
மீட்ஷல் ஜோன்சன் தனக்கு ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தோடு மீட்ஷல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார். நியூசிலாந்திற்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பேர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீட்ஷல் ஜோன்சன் வீசிய 28 ஓவர்களில் 157 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கட்டை மாத்திரமே பெற்றார். பேர்த் மைதானத்தில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டப்பிரதி இதுவே. மேலும், இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். 73 டெஸ்ட் போட்டியில் 311 விக்கட்டுக்களையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 இருபதுக்கு இருபது போட்டிக…
-
- 3 replies
- 218 views
-
-
'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…
-
- 0 replies
- 210 views
-
-
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…
-
- 2 replies
- 499 views
-
-
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நகரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்டரங்கை சூழவுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையிட்டு பெரும் அதிர்ச்சி அடைவதாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்மனி அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல்கள்…
-
- 0 replies
- 265 views
-
-
எலைட் சம்பியன்ஷிப்’ என்ற புதிய பெயரில் மூவகை முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் முதல் தர கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் மூவகை ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எலைட் சம்பியன்ஷிப் போட்டிகள் என அழைக்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின்போது இந்தத் தகவலை இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். கொழும்பை பிரதான இடமாகக் கொண்டு விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டுத்துறை நாட்டின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் …
-
- 0 replies
- 318 views
-
-
யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …
-
- 0 replies
- 357 views
-
-
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் Cricket All Stars கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 9.30க்கு - அணிகளின் விபரங்கள்
-
- 16 replies
- 510 views
-
-
இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…
-
- 0 replies
- 524 views
-
-
உமர் அக்மல் கைது November 15, 2015 சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், கைதராபாத் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து பங்களாவிற்கு அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது உமர் அக்மலுன் அங்கிருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உமர் அக்மல், அவர்கள் நண்பர்கள் என்றும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்ததன் பேரிலே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 326 views
-
-
சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு இன்றைய தேதியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் உலக தரவரிசைபட்டியலில் முதலிடம் இருப்பது யார் என உங்களுக்கு தெரியுமா? சானியா மிர்சா தான். கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்தத்துவம் எப்போதுமே மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதே இல்லை, அதனால் சானியாவின் சாதனை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தால் கொண்டாடும் நாம், டென்னிஸ் உலகத்தில் நம்பர் ஒன் வீரராக இருப்பவரை கொண்டாடியிருக்க வேண்டாமா? சானியா எளிதில் முதலிடத்தை பிடிக்கவில்லை இதற்கு பின்னர் 20 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. சர்ச்சைகளை உடைத்தது தடைகளை தகர்த்து சானியா எப்படி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் என பார்…
-
- 0 replies
- 374 views
-
-
காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு November 14, 2015 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று …
-
- 0 replies
- 322 views
-
-
ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா தடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற இயலாது ஊக்க ம…
-
- 0 replies
- 188 views
-
-
தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி? பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் விளையாடிக…
-
- 0 replies
- 190 views
-
-
டி வில்லியர்ஸ் ஒரு ஏலியனா? - சிறப்பு பதிவு தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100வது ஆட்டம் ஆகும். எந்த நாட்டை சேர்ந்த ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு டி வில்லியர்சை பிடிக்கும். யாராலும வெறுக்க முடியாத கிரிக்கெட்டரும் கூட. அதானல்தான் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று டி வில்லியர்ஸ் மைதானத்திற்குள் வந்த போது, அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்ததை காண முடிந்தது. ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கின…
-
- 0 replies
- 430 views
-
-
சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…
-
- 1 reply
- 290 views
-