விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்! இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது. இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது'' என்று குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 0 replies
- 288 views
-
-
இது ஓர் அணி, இதில் தனி நபர்கள் இல்லை: ரவி சாஸ்திரி இந்த இந்திய அணி உலகத் தரமானது, சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமை பெற்றது என்கிறார் ரவி சாஸ்திரி. | படம்: பிடிஐ. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார். மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர். …
-
- 1 reply
- 491 views
-
-
ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…
-
- 0 replies
- 294 views
-
-
தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம் ஜெய்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் தேவ். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ். கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன். இந்திய…
-
- 0 replies
- 246 views
-
-
தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…
-
- 0 replies
- 221 views
-
-
பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…
-
- 0 replies
- 277 views
-
-
குட் பை சாம்பியன்ஸ்! தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும் தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான். என் வழி தனி வழி! ‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக், தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரா…
-
- 1 reply
- 503 views
-
-
தரக்குறைவான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் விரட்டியது: தோனி தோனி. | படம்: ஏ.பி. கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப் படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை விரட்டியடித்தது என்று கூறினார். புதுடெல்லியில் ‘யாரி’ டிஜிட்டல் நிகழ்ச்சியின் போது கிறிஸ் கெய்லுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட தோனி கூறும்போது, “நாம் ஜெண்டில்மேன் ஆட்டத்தை ஆடுகிறோம். நாம் வெற்றி பெற விரும்புகிறோம், ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும். தரக்குறைவான, அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் கிரிக்கெட் விரட்டியுள்ளது. நட்பு ரீதியான ஒரு கேலி நல்லதுதான், இதைத்தான் டுவெண்டி 20 லீகுகள் செய்தன. ஸ்லெட்ஜிங் என்று அறியப்படும் ஒன்றுக்கு எதிராக வீரர்களை ஒன்ற…
-
- 0 replies
- 306 views
-
-
என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…
-
- 0 replies
- 335 views
-
-
சானியா - மார்ட்டினா சாதித்த கதை! சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி, புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர் 'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும் 'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால் ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும் தாண்டி 2-வது இன்னிங்ஸில், இரண்டு பெண்கள் கைகோத்து உச்சம் தொட்டிருக்கின்றனர். ஒருவர் சானியா மிர்சா, இன்னொருவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ் மங்கை. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது பட்டங்களை வென்று, டென்னிஸ் உலகையே இப்போது திரும்பிப்பார்க்க வை…
-
- 0 replies
- 405 views
-
-
சச்சின் தனது திறமைக்கு நியாயம் செய்யவில்லை: கபில் தேவ் கருத்து சச்சின் டெண்டுல்கர் தனது அபரிதமான திறமைகளுக்கு நியாயம் செய்யவில்லை, அவர் முச்சதம், நாற்சதங்களை எடுத்திருக்க முடியும் ஆனால் அவரால் முடியவில்லை என்று உலகக் கோப்பை வென்ற இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் கூறியுள்ளார். கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் கபிலை மேற்கோள் காட்டி வெளியான செய்தி வருமாறு: "என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தனது திறமைக்கு சச்சின் நியாயம் செய்யவில்லை. அவர் செய்ததைக் காட்டிலும் இன்னும் கூட அதிகமாக சாதித்திருக்க முடியும் என்றே நான் எப்போதும் கருதுகிறேன். அவர் மும்பை வகையறா கிரிக்கெட்டில் தேங்கி விட்டார். கருணை காட்டாத சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் தன்னை அவரது திறமைக்கேற்ப ஈடுபடுத்த…
-
- 3 replies
- 793 views
-
-
வெற்றியில் மிளிர்ந்த வில்லியம்ஸ் றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைப் போன்று, நியூசிலாந்து அணியின் சொனி பில் வில்லியம்ஸின் உயர்ந்த நடத்தையும், இறுதிப் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும், பாராட்டப்படும் ஒன்றாக மாறிப் போனது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தைச் சுற்றிவர முயன்ற போது, 14 வயதான நியூசிலாந்து இரசிகனான சார்லி லைன்ஸ், தனது கதாநாயகனான பில் வில்லிம்ஸை நோக்கிச் செல்ல முயன்றான். எனினும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் காரணமாக அவனைப் பின்தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி, அவனைத் தடக்கிக் கீழே வீழ்த்தினார். இதனைக் கண்ட பில் வில்லியம்ஸ், அந்தப் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து லைன்ஸைப் பிரித்து, அவன் பார்வை…
-
- 1 reply
- 442 views
-
-
ஓல் ஸ்டார் கிரிக்கெட் : லாரா, மஹேல, வோர்ன் பங்கேற்பு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ஓல் ஸ்டார் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் முதல் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி அமெரிக்கா நியூயோர்க்கில் நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வோகன், ஸ்வான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன், ரிக்கி பொண்டிங், மெக்ராத், ஹேடன், சைமன்ஸ், நியூஸிலாந்தின் வெட்டோரி, பாகிஸ்தானின் வசீம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென்னாபிரிக்காவின் கலிஸ், க்ளூசனர், ஜொன்டி ரோட்ஸ், பொல்லாக்,…
-
- 0 replies
- 636 views
-
-
பீலேவை தொடர்ந்து ரொனால்டோ இந்தியா வருகை! உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 15 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள பிரேசில் வீரர் ரொனால்டோ இந்தியா வருகிறார். ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி - மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை அவர் நேரில் ரசிக்கிறார். ஆனால் ரொனால்டோ டெல்லியில் நகரில் ஒரே ஒருநாள் மட்டும்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது பிரேசில் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளின் முன்னாள் விங்கரும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ராபர்ட்டோ கார்லசை ரொனால்டோ சந்திக்கிறார். பிரேசில் அணிக்காக 1998, 2002, 2006ஆம் ஆண்டு என 3 உலகக் கோப்பை போட்டிகளில் ரொனால்டோ விளையாடியுள்ளார். 1998 உலகக் கோப்பை போட்டியில்அதிக கோல் அடித்த …
-
- 0 replies
- 308 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் அணிகளி டையே மீண்டும் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் அணிகளி டையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிரிக்கெட் போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரராக இந்த கருத்தை கூறுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாததாலும், தங்கள் ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத தாலும் பாகிஸ்தானில் உள்ள இளம் வ…
-
- 0 replies
- 302 views
-
-
சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …
-
- 0 replies
- 292 views
-
-
எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச றக்பி சபையினால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் எட்டாவது அத்தியாயம் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20 நாடுகள் நான்கு குழுக்களில் மோதும் உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இங்கிலாந்துக்கும் ஃபிஜிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. லண்டன், ட்விக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இறுதிப் போட்டி இதே அரங்கில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டிகள் முதன் முதலில் அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 1987இல் கூட்…
-
- 24 replies
- 2.1k views
-
-
ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…
-
- 0 replies
- 233 views
-
-
பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார். அதோடு சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். தற்போது துப…
-
- 9 replies
- 2.1k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …
-
- 0 replies
- 258 views
-
-
புதிய அணிகளுக்கு10 வீரர்கள் நேரடி தெரிவு November 01, 2015 பிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்…
-
- 2 replies
- 496 views
-
-
உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா ( வீடியோ) கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 42-வது ஓவரை வீசிய இந்திய பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கென் ரூதர்போர்ட், இயார்ன் ஸ்மித், இவான் சார்ட்பீல்ட் அகியோரின் விக்கெட்டுகளை கிளீன் போல்டு முறையில் வீழ்த்தி அசத்தினார் சேத்தன் சர்மா. இதன் மூலம் உலகக் கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் சேத்தன் பெற்றார். http://www.vikatan.com/news/article.php?a…
-
- 0 replies
- 212 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் நாதன் மக்கலம் October 31, 2015 நியூஸிலாந்து அணியின் சகலதுறை வீரரான நாதன் மக்கலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 35வயதான அவர் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்- 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார். 84 ஒருநாள் ஆட்டங்களில் 4 அரைச் சதங்களுடன் 63 இலக்குகளையும்- 61 டெஸ்ட் ஆட்டங்களில் 55 இலக்குகளையும் வீழ்த்தியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2821&cat=2
-
- 1 reply
- 318 views
-
-
நியூஸிலாந்துக்கு எதிராக 503 ரன்கள் சேர்த்து ஏரோன் பின்ச், ரயான் கார்ட்டர்ஸ் சாதனை ஏரோன் பின்சை பாராட்டும் நியூஸி. வீரர்கள். | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்காக 503 ரன்கள் சேர்த்து பின்ச், கார்ட்டர்ஸ் சாதனை நிகழ்த்தினர். நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. 29-ம் தேதி சிட்னி பிளாக்டவுன் பார்க்கில் தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் தொடக்க வீரர்கள் 503 ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் பிட்ச் மோசமடைந்ததன் காரணமாக இந்த பயிற்சி ஆட்டம் 503/1 என்ற நிலையில் கைவிடப்பட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியின் கார…
-
- 1 reply
- 390 views
-
-
சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது! வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்ட…
-
- 0 replies
- 251 views
-