Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 8 வாரங்களுக்கு மெஸ்ஸி இல்லை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனொல் மெஸ்ஸி, 7 தொடக்கம் 8 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்திருந்த நிலையிலேயே, 8 வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் பல்மாஸ் அணிக்கெதிரான இப்போட்டியில், அவருக்கு முழங்காலில் உபாதை ஏற்பட்டிருந்ததோடு 10ஆவது நிமிடத்தில் அவர் வெளியேறியிருந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்ஸி, அணி அறைக்குள் வைத்துப் பரிசோதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மெஸ்ஸின் இடது முழங்காலில் உள்ளக தசைநாண்களில் கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியா…

  2. வரி ஏய்ப்பு: பிரேசில் வீரர் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முன்கள வீரரான நெய்மர், தற்போது பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் தாய்நாட்டை சேர்ந்த சான்டோஸ் அணிக்காக அவர் விளையாடினார். பின்னர் அவரை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக சா பாலோ நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது 33.1 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சொத்து மதிப்பை, வெறும் 3.2 மில்லியன…

  3. நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்! மெல்போர்ன்: இந்த நூற்றாண்டில், ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக வீரேந்திர சேவாக்கின் 195 ரன் விளாசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (வாரியம்) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட 15 பெஸ்ட் செஞ்சுரிகளை தேர்வு செய்து வருகிறது. 2000வது ஆண்டு முதல் இப்போதுவரையிலான செஞ்சுரிகள் அதில் அடங்கும். முதல்கட்டமாக 15 முதல், 10 வரையிலான பெஸ்ட் செஞ்சுரி பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 13வது இடத்தை சேவாக்கின் 195 ரன் பெற்றுள்ளது. டேவிட் வார்னர் நியூசிலாந்த…

  4. திறமையான வீரர்களை கண்டறிவதற்காக திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை: ரவி சாஸ்திரி தகவல் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணி பலமான அணியாக இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய ஏ அணியில் உள்ள திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக அதன் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியில் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அங்கு வந்துள்ள ரவி சாஸ்திரி மேலும் கூறியதாவது: இந்திய ஏ அணியில் உள்ள சில வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்தாலோ அல்லது இடைவிடாது விக்கெட் வீழ…

  5. இன்றைய மோதல்கள் September 26, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி- 20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச்சங்கம் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையே நடத்திவரும் துடுப்பாட்டத்தொடரின் லீக் ஆட்டங்கள் யாழ்.மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரில் மத்தியின் மைதானத்தில் இன்று இடம் பெறும் ஆட்டங்களில் காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்குக்கு ஸ்ரான்லிக் கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதவுள்ளது. சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்.மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு வட்டுக்க…

  6. ஸ்ரான்லியிடம் வீழ்ந்தது மகாஜன September 26, 2015 யாழ். மாவட்டப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திவரும் 19வயதுக்கு உட்பட்ட அணியின ருக்கான ரி -20 தொடரின் ஆட்டங்களில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி 6 இலக்குகளால் மகாஜனாவை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி 16 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 114 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பிரணவன் 19 ஓட்டங்களையும், தயூஸ்ரன் 17 ஓட்டங்களையும், ஜசிந்தன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரான்லிக் கல்லூரி அணியின் சார்பில் விதுசன், சுஜிகரன் தலா 3 இலக்குகளையும் விஸ்ணுவானன், பிரசாந் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த…

  7. இந்தியாவுடன் விளையாட மாட்டோம் * பாக்., போர்டு மிரட்டல் கராச்சி: எங்களுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை எனில், ஐ.சி.சி., மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிரட்டியுள்ளது. கடந்த 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் மோசமானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன. சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப் படி, வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால், இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் நிறுத்தப்படாத வரை, இரு அணிகள் இட…

  8. பிபா தலைவர் மீது போலீசார் வழக்கு ஜெனிவா: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா அமைப்பின் தலைவர் செப் பிளாஸ்டர், இவர் மீது சுவிட்சர்லாந்து போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உபே எனப்படும் ஐரோப்பியன் யூனியன் கால்பந்து கூட்டமைப்பிற்கு 2 மில்லியன் சுவீஸ் பிரான்ஸ் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து , சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் உத்தரவுப்படி அந்நாட்டு போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து செப் பிளாஸ்டர் அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1350067

  9. ஸ்பானிஷ் லா லிகா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட் இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கரிம் பென்ஸிமா. படம்: கெட்டி இமேஜஸ் மாட்ரிட் முன்னணி 20 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்துப் போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், பார்சிலேனாவை, செல்டா 4-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அதிர்ச்சி யளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கும் அத்லெடிக் பில்பாவோ அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 19-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமா ரியல்மாட்ரிட் அணிக…

  10. செய்தித் துளிகள் இஷாந்த் சர்மா. | கோப்புப் படம். மீண்டும் இஷாந்த் தேர்வுக் குழு தலைவரின் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் டெல்லி ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, விதர்பாவுடனான 2-வது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா விவகாரத்தைக் கையாண்ட விதம் காரணமாக டெல்லி அணியின் தேர்வுக் குழுவுக்கு பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ---------------------------------------------- சமிர் படேலுக்கு வாய்ப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியில் சமிர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாபர் அன்சாரி காயமடைந்ததையடுத்து, படேலுக்கு வாய்ப்பு …

  11. ஸபார் அன்ஸாரி வெளியே : சமித் பட்டேல் உள்ளே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்துக் குழாமில், சகலதுறை வீரரான சமித் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார். குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஸபார் அன்ஸாரி காயமடைந்து விளையாடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, சமித் பட்டேலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான சமித் பட்டேல், ஏற்கெனவே காணப்படும் மொய்ன் அலி, அடில் ரஷீத் ஆகிய இரு சுழல்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், விளையாடும் பதினொருபேரில் இடம்பிடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைப்பது சந்தேகமே. அண்மைய உள்ளூர் கிரிக்கெட் பருவகாலத்தின்போது துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும், சுழல் பந்துவீச்ச…

  12. பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…

  13. டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள் இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி, செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆஷ்லி டீ சில்வா, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், டயலொக் நிறுவனத்…

  14. மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843

  15. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்? தோனி, ஜடேஜா. | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு நெருக்கமானவர் என்று ஜடேஜா கருதப்பட்டு வரும் நிலையில் இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டாலும், ஜடேஜாவின் ஆட்டம் அவரது தேர்வுக்கு எதிராக அமைந்தது என்றே கூற வேண்டும். குர்கீரத் சிங் மான் என்ற ஆல்ரவுண்டர் மற்றும் கர்நாடக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் அணியில் தேர்வு செ…

  16. உலகக் கோப்பை டி20 இறுதி ஆட்டம்: புல்லரிக்க வைத்த கடைசி ஓவர் (வீடியோ) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி, 145 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது. மிஷ்பா களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை மறக்க முடியாது. முதல் பந்தை ஜோகிந்தர் சிங், வைடாக வீசி ரன் கொடுத்தார். அடுத்த பந்தை சரியாக வீசினார் மிஷ்பாவால் அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பந்தை மிஷ்பா உல் ஹக் சிக்சருக்கு விளாச, இந்…

  17. சதம் சதமாய்க் குவிக்கும் குமார் சங்ககாரா இங்கிலாந்தில் சரே அணிக்காக ஆடி வரும் குமார் சங்ககாரா கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் இன்று Northamptonshire அணிக்கு எதிராக 101 ஓட்டங்களை எடுத்து உள்ளார். http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804445.html

  18. இன்னுமா டாப் வீரர்?- 11 ஆண்டுகள் கோமாவில் மீண்ட ரசிகருக்கு பெடரர் இன்ப அதிர்ச்சி 11 ஆண்டுகள் கோமாவில் வீழ்ந்த பெடரரின் ரசிகர் கண்விழித்த போது 34 வயதில் பெடரர் இன்னமும் ஆடிவருவது குறித்து மகிழ்ச்சியடைந்தார். | படம்: ஏ.பி. டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர் ஒருவர் 11 ஆண்டுகள் கோமாவில் வீழ்ந்து தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். அவர் ரோஜர் பெடரர் இன்னமும் டென்னிஸ் உலகில் அபாரமாக ஆடிவரும் செய்தியைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜீசஸ் அபாரிசியோ ஒரு கார் விபத்தில் சிக்கி 2004-ம் ஆண்டு டிசம்பர் முதல் கோமாவில் வீழ்ந்தார். அந்த ஆண்டில்தான் பெடரர் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார். அதாவது ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் …

  19. மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி (வீடியோ) ஜெர்மனி பந்தஸ்லிகா(bundesliga) தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான் லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆ…

  20. துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…

  21. வங்கதேசத் தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா? ஸ்ரீராமுக்கு டேரன் லீ மேன் அனுப்பிய மின்னஞ்சல் எஸ்.ஸ்ரீராம். | கோப்புப் படம். கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் ஒரு அணியின் ஆலோசகராக தான் பணியாற்றுவது குறித்து முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரருமான எஸ்.ஸ்ரீராம் பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்பதை நினைவுகூர்ந்த எஸ்.ஸ்ரீராம், அன்று காலை மின்னஞ்சலை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியகரமான ஒரு மின்னஞ்சல் ஸ்ரீராம் பார்வைக்கு வந்தது. அதில், “ஹாய் ஸ்ரீ.. (ஆஸ்திரேலியா) ஏ அணியுடன் நீங்கள் பணியாற்றிய விதம் குறித்து அறிந்தேன். வங்கதேச தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா? -டேரன் லீ மேன்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்…

  22. 37 வருடங்களின் பின்னர் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பிரித்தானியா தகுதி க்ளாஸ்கோ, எமிரேட்ஸ் எரினா டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற டேவிஸ் கிண்ண அரை இறுதிப் போட்­டியில் இரண்டு ஒற்­றையர் ஆட்­டங்­க­ளிலும் ஓர் இரட்­டையர் ஆட்­டத்­திலும் அண்டி மறே வெற்­றி­பெற்­றதன் மூலம் அவுஸ்­தி­ரே­லி­யாவை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் பெரிய பிரித்­தா­னியா வெற்­றி­கொண்­டது. இந்த வெற்­றி­யின்­மூலம் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு 37 வரு­டங்­களின் பின்னர் பெரிய பிரித்­தா­னியா தகு­தி­பெற்றுக் கொண்­டது. ஞாயி­றன்று நடை­பெற்ற முத­லா­வது மாற்று ஒற்­றையர் ஆட்­டத்தில் 7– 5, 6– 3, 6– 2 என்ற புள்­ளி­களைக் கொண்ட 3 நேர் செட்­களில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்னார்ட…

  23. மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …

  24. சிரிய அகதிகளை கவுரவப்படுத்திய ரியல்மாட்ரிட் அணி! ( வீடியோ ) உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அப்படி ஹங்கேரிக்கு வந்த ஒசமா அப்துல் மோக்சன் என்ற கால்பந்து பயிற்சியாளரை, பெண் நிருபர் ஒருவர் காலை இடறி கீழே விழ வைத்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து அந்த பெண் நிருபர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கால்பந்து பயிற்சியாளரான ஒசமா அப்துல் மோக்சனுக்கு ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் பணி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், கடந்த புதன்கிழமை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தனது மகன்கள் சையத்,அகமது ஆகியோருடன் வந்தார். அவருக்கு மாட்ரிட…

  25. கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா) பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.