விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 402 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 234 views
-
-
விவியன் ரிச்சர்ட்ஸ் + சச்சின் + ரிக்கி பாண்டிங் = கோஹ்லி! சொல்வது யார்? கோஹ்லிக்கு பாராட்டுகள் 360 டிகிரியில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் டர்ன். கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும் பரவாயில்லை என கோஹ்லியை விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங் சேர்ந்த காம்போ என்கிறார் அமர்நாத். கோஹ்லியை பற்றி அவர் வாசித்த பாராட்டுப் பத்திரம் இதோ... ”ஒரே வீரரை திரும்ப திரும்ப புகழ்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், விராட் கோஹ்லியைப் புகழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கோஹ்லியைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைப் பார்த்ததில்லை. உண்…
-
- 0 replies
- 307 views
-
-
கோலியின் அதி துணிச்சல் ஆட்டம்: ஓர் அலசல் கோலி, கிறிஸ் வோக்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த அந்த அரிதான, கடினமான ஷாட். இங்கிலாந்துக்கு எதிராக புனே ஒருநாள் போட்டியில் 64/4 என்ற நிலையிலிருந்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கோலி மற்றும் கேதர் ஜாதவ்வின் சதங்களில் கோலியின் ஆட்டம் வேறு ஒரு துணிச்சல் பரிமாணத்தை எட்டியுள்ளது. கேதர் ஜாதவ்வின் வேகமான அதிரடி சதமும் கோலியின் துணிச்சலுக்கு இணையாக அமைந்தது. ஆரம்ப கால சச்சின், பிறகு சேவாக், லாரா, கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, இன்றும் தொடரும் கிறிஸ் கெய்ல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அதி துணிச்சல் ரக அலாதியான ஷாட்களை கோலி தனது 122 ரன்களில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேற்கூற…
-
- 0 replies
- 495 views
-
-
டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம் இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற…
-
- 0 replies
- 278 views
-
-
உலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு டெலாய்ட் நிறுவனம் வருமானம் அடிப்படையில் உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்-ஐ தேர்வு செய்தது. இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 10-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 2016-17 சீசனில் ஈட்டிய வருமானம் அடிப்படையில் கிளப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. யூரோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன்) 2. ரியல் …
-
- 0 replies
- 193 views
-
-
இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அஸ்வின் திகழ்கிறார்: சையத் கிர்மானி புகழாரம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப் படம் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார் சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார். …
-
- 0 replies
- 236 views
-
-
உலக கோப்பை தகுதிச்சுற்று - ஜிம்பாப்வேயை வீழ்த்தியது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியிடம் ஜிம்பாப்வே அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ICCWCQ #Zimbabwe #Unitedarabemirates உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஜிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செ…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன…
-
- 0 replies
- 796 views
-
-
செய்தித்துளிகள்: வார்னருக்கு அனுமதி கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், வந்தனா கட்டாரியா, லால்ரெம்ஷியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி ஜப்பானையும், சீனாவையும் வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போட்டியை நட…
-
- 0 replies
- 434 views
-
-
யார் இந்த இயன் சாப்பல்? - கிறிஸ் கெய்ல் காட்டம் கிறிஸ் கெய்ல். | ஏ.எப்.பி. பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும் புகழ் பெற்ற கிறிஸ் கெய்ல் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர். தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் மது அருந்துவேன்” என்றார். இ…
-
- 0 replies
- 491 views
-
-
புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் : கோப்புப்படம் முழு உடற்தகுதியில்லாத புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. புவனே…
-
- 0 replies
- 357 views
-
-
திங்கள்கிழமை உலக ஜூனியர் சம்பியன் போட்டியில் தோல்வியடைந்து தங்க பதக்கததை இழந்தத பின்னர் ரஷ்ய அணியை சேர்ந்த சியாற் பெய்ஜின் ஆபத்தான வழியில் தன் பொறுமையை இழந்தார். கனடிய அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் 19-வயதுடைய குறிப்பிட்ட ரஷ்ய வீரர் தனது குச்சியை ஒரு ரசிகரை தாக்கும் வண்ணம் அரங்கத்தில் எறிந்துள்ளார். இந்த தங்கப்பதக்க போட்டியில் கனடா 5-4 ஆக ரஷ்ய அணியை வென்றது. கனடியர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் போது கனடிய வீரர் ஒருவரும் தனது குச்சியை மேல் நோக்கி வீசியுள்ளார். பெய்ஜின் நீல கோட்டிற்கு சறுக்கிச் சென்று தனது குச்சியை கண்ணாடி மீது வீசினார். ஜூனியர்சின் அணியை நிரவகிக்கும் சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்காக பெய்ஜின் தண்டனையை எதிர்நோக்க…
-
- 0 replies
- 234 views
-
-
கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது... என்ன செய்யப் போகிறார் யுவராஜ் சிங்? பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யூவீகேன் வென்ச்சர்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். முதலீட்டு நிறுவனமான இதன் மூலம் ஆன்லைனில் நிதி திரட்ட யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். தனது புதிய நிறுவனத்தில் ரூ. 50 கோடி ரூபாயை யுவராஜ்சிங் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் 80 சதவீதம் இவருடைய பங்காகவும் மீதி 20 சதவீதம் யுவியின் நண்பரும் நிறுவனத்தின் துணை நிறுவனருமான நிஷாந்த் சிங்காலின் பங்காகவும் உள்ளது. தனது நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங்காலின் அறிவுரைப்படியே இந்த நிறுவனத்தை யுவராஜ் சிங் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் 300 கோடி ரூபாய் அளவுக்க…
-
- 0 replies
- 240 views
-
-
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது மாமாவோடு (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, க…
-
- 0 replies
- 494 views
-
-
மின்னல் வேகத்தில் 5 கோல்கள் : கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை! கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய பேயர்ன்மியூனிச் அணியின் போலந்து ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி களமிறங்கிய 9 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அதாவது 3.22 வினாடிகளுக்குள் ஹாட்ரிக் கோல் அடித்தும், 5 நிமிடம் 42 வினாடிகளுக்குள் 4 கோல்கள் அடித்தும் 8 நிமிடம் 59 வினாடிகளில் 5 கோல்கள் அடித்தும் புதிய சாதனை படைத்தார். அதோடு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 5 கோல்கள் அடித்ததும் புதிய சாதனை ஆகும். இந்த சாதனைகள் அனைத்தும் க…
-
- 0 replies
- 892 views
-
-
14 JAN, 2025 | 02:11 PM (நெவில் அன்தனி) வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது. சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், 2 ரி-20 போட்டியிலும் விளையாட ரியூடர், சஞ்சீவன் ஆகிய இருவரும் மலேசியா பயணமாகின்றனர். யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்காக விளையாடிய ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காக விளையாடிய சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் சிங்கப்பூர் சென்ற யுனிற்ற…
-
- 0 replies
- 379 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்லது பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதா? இல்லையா? என்பது குறித்தான முகாமைத்துவக் குழுவின் பரிந்தரைகளை சர்வதேச கிரிக்கட் பேரவை திங்களன்று ஆராய்ந்தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச ஒலிம்பிக் குழுவினர், பொதுநலவாய விளையாட்டுத்துறை சமமேளன உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் பேரவையின் நிருவாக சபை தீர்மானித்தது. சீனாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறை வியாபித்து வருவது தொடர்பான அறிக்கை ஒன்று …
-
- 0 replies
- 393 views
-
-
01 Nov, 2025 | 01:00 PM அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் க…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
இறுதிச் சுற்றில் இந்திய இதயங்களை வென்ற தீபா கர்மகர்! ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மகர் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தருவார் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார் தீபா. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபா பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் இறுதியில் தீபா கர்மகர் நான்காம் இடம் பிடித்தார். உலக ஜிம்னாஸ்டிக்ஸில் டாப் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்(தங்கம்) களத்தில் இருக்கும்போது நான்காம் இடம் பிடித்தது மிகப்பெரிய விஷயம். ஒட்டு மொத்த தேசமும் இவரது சாதனை பாரட்டியது. இறுதி போட்டியில் அவர் …
-
- 0 replies
- 370 views
-
-
ஸ்டெம்பை தெறிக்கவிட்ட முகமது அப்பாஸ் - திகைத்துப்போன பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மசூத், பாபர் அசாம் மற்றும் சதாப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய மசூத் அதிகபட்சமாக 156 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமத…
-
- 0 replies
- 547 views
-
-
2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா உலக கோப்பைகால்பந்துபோட்டிகளில் அதிக நாடுகளை பங்கேற்க செய்யும் விரிவாக்கம் மூலம், ஏழு அணிகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பங்குகொள்ள முடியும் என்று, உலக கால்பந்து போட்டியின் நிர்வாக அமைப்பான, கால்பந்து சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜானி இன்ஃபான்டீனோ தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைMICHAEL BUHOLZER/AFP/GETTY IMAGES இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது பங்குகொள்ளும் 32 அணிகளுக்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டு 48 அணிகள் பங்குபெறும். சிறை தண்டனைக்கு தானாக சரணடைந்த கால்பந்துவீரரின் மகன் இப்போது…
-
- 0 replies
- 255 views
-
-
லிவிஸ் அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்தியது மே. தீவுகள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் மே.தீவுகள் அணி 7 விக்கட்டுகள் மற்றும் 31 பந்துகளினால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கம்ரன் அக்மல் 48 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 138 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 14.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. மே.தீவுகள் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவைன் லிவிஸ் 51 பந்துகளில…
-
- 0 replies
- 227 views
-
-
சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை வாங்கும் ரியல் மாட்ரிட் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் முன்னணி இளம் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் வினிசியஸ். 16 வயதே ஆன இவர் அந்நாட்டின் பிளமிங்கோ கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தென்அமெரிக்காவின் 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் 7 கோல்கள் அடித்ததுடன் இரண்டு கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் சாம்பியன் பட்டத்தை வென்றத…
-
- 0 replies
- 405 views
-