Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சில வரிச் செய்திகள் கால்பந்து ரேங்க்: 156-வது இடத்தில் இந்தியா ஃபிஃபா கால்பந்து தரப்பட்டியலில் இந்தியா 156-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ஜென்டினா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2-வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. கொலம்பியா, பிரேஸில், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை முறையே முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்தியா 15 இடங்கள் பின்னடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் ஓமனிடம் தோல்வியுற்றதை அடுத்து இந்தியா தரவரிசைப் பட்டியலில் கீழிறங்கியுள்ளது. 156-வது இடத்தை கிர்கிஸ்தானுடன் பகிர்ந்து கொண்…

  2. 2016 ரியோ ஒலிம்பிக்: ஓராண்டு கவுன்டவுன் தொடங்கியது 2016 ஒலிம்பிக் ஓராண்டு கவுன்டவுன் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) பிரேசில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹென்ரிக் எட்வர்டோ அல்வெஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஹில்டன், பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் நுஸ்மேன், பிரேசில் அதிபர் அதிபர் தில்மா ரூசெஃப், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச் உள்ளிட்டோர். படம்: ஏஎஃப்பி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில்…

  3. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'! ஆ தொடரில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 60 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கேப்டன் மைக்கேல் கிளார்க்கில் இருந்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர், கொஞ்சம் நிலைத்து விளையாடினார். ஆனால் அவரும் 13 ரன்களில் அவுட் ஆகி விட்டார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக உதிரிகளாக 14 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தது எக்ஸ்ட்ராதான். ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே தனிவீரர்…

  4. 'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் ! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது. லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார். நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது.…

  5. சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…

  6. 236 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த குப்தில்- லாதம் ஜோடி! ஒருநாள் போட்டியில், 236 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் சேஸ் செய்து நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குப்தில் 116 ரன்களும், லாதம் 110 ரன்களும் அடித்து இந்த புதிய சாதனை நிகழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 303 ரன்களை ஜிம்பாப்வே அணி சேஸ் செய்து எளிதாக வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களை எடுத்தது. இதனை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களே அடித்து முடித்து விட்டனர். இதனால் நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் ஒரு ஜோட…

  7. பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…

  8. நியூசிலாந்து அணியின் 303 ரன்களை விரட்டி சென்று வீழ்த்தியது ஜிம்பாப்வே! நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களை விரட்டி சென்று வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குப்தில் 11 ரன்னிலும் லாதம் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வில்லியம்சனும் ராஸ் டெயிலரும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வில்லியம்சன் 102 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ராஸ் டெயிலர் 122 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ம…

  9. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/05/இங்கிலாந்து-அணியின்-துடுப்பாட்ட-ஆலோசகராக-மஹேல

  10. சர்வதேச ஒலிம்பிக் குழுவிலிருந்து விலகுகிறார் பிளட்டர் 2015-08-05 10:48:54 சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் 16 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்து வந்த செப் பிளட்டர் அப்­ப­த­விக்கு மீண்டும் போட்­டி­யி­டு­வ­தில்லை எனத் தீர்­மா­னித்­துள்ளார். சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­வி­யி­லி­ருந்தும் வில­க­வுள்ள செப் பிளட்­டரின் விளை­யாட்­டுத்­துறை சார் நிர்வாகப் பணி விரைவில் முடி­வுக்கு வர­வுள்­ளது. எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம் ­மே­ள­னத்தில் நிலவும் சர்ச்­சை­ க­ளுக்கும் பிளட்­டரின் தீர்­மா­னத்­திற்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிப்­ப­வர்கள் 80 வ…

  11. தேசத்துக்காக ஹாக்கி விளையாடியவர்... இப்போது தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார்! இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஜக்ராஜ்சிங், அண்மையில் நடந்த குர்தாஸ்பூர் காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார். இதன் காரணமாக அவரால் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. விபத்தில் சிக்கும் போது ஜக்ராஜ்சிங்குக்கு வயது 20தான். எனினும் கடுமையான உழைப்பினால் தற்போது பஞ்சாப் காவல்துறையில் டி.எ…

    • 1 reply
    • 335 views
  12. 'மிக முக்கியமானவர் சங்கக்கார' + View all இலங்­கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும்இ நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார பற்றி வி.வி.எஸ். லட்­சுமண் மனம் திறந்து பேசி­யுள்ளார். கோலி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் பங்­கேற்­கி­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான இந்த டெஸ்ட் தொடர் சங்­கக்­கா­ர­விற்கு கடைசி தொட­ராக அமையும். அவர் ஏற்­க­னவே இந்த தொட­ரோடு டெஸ்ட் போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சங்­கக்­கார பற்றி இந்­திய அணியின் முன்னாள் துடுப்­பாட்­டக்­கா­ர­ரான வி.வி.எஸ். லட்­சுமண் ஒரு நிகழ்ச்­சியில் கூறு­கையில்இ இலங்கை மண்…

  13. முதல் 3 பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோ லண்டன்: கிரிக்கெட் உலகில் மிகவும் அரிய நிகழ்வான, பந்து வீச்சை ஆரம்பித்ததும் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்திய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.இங்கிலாந்து கவுன்டி அணியான ஒர்செஸ்டெர்ஷயர் பந்து வீச்சாளர் ஜோ லீச், நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சைத் தொடங்கியதுமே 3 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீசி அசத்தினார். இவரது பந்து வீச்சில், ரிச்சர்ட் லெவி, ராக் கியோ, பென் டக்கெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இருவரையும் விக்கெட் கீப்பர் பென் காக்ஸ் கேட்ச் செய்தார். கடைசி நபரை ஜேக் ஷான்ட்ரி கேட்ச் செய்தார்.கிரிக்கெட் உலகில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது மிக …

  14. 4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி. சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட…

  15. பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது! இந்தூர்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் விளையாடிய டி-20 கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோடிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையமாக வைத்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் பணம் வைத்து ‘ஆன்லைன்’ மூலம் சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கட்ஜு காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்தபடி ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கான பணப் பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்த அஜய் பர்யானி (34) என்பவரை போலீசார் கைது செய்த…

  16. வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நீக்கம் மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு…

  17. வார்னருடன் சண்டையில் ஈடுபட்ட ஜோ ரூட்டுக்கு மது விருந்துகளில் பங்கேற்கத் தடை! ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அப்போது பார் ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்ட, இங்கிலந்து வீரர் ஜோ ரூட் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த டேவிட் வார்னர், ஜோ ரூட் முகத்தில் தாக்கினார். இந்த சம்பவத்தையடுத்து, ஜோ ரூட்டுக்கு தற்போதைய ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற 3வது போட்டியில…

  18. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை! தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர். தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போ…

  19. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன்200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இரு…

  20. விளையாட்டுச் செய்தித் துளிகள் - 02/08/2015 # நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. # 700 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் 28-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 40 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. # வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து ச…

  21. கனேரியாவிடம் 5 கோடி ரூபா அபராதம் கோருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் சபை கிரிக்கெட் தடைக்குட்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் டனிஷ் கனேரியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் செலவினத் தொகையான 249,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை (சுமார் 5 கோடியே 6 இலட்சம் ரூபா) பெற்றுத்தர உதவுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றிடம் ஆங்கிலேய கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசெக்ஸ் பிராந்திய அணிக்காக 2009இல் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின்போது கனேரியா ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012இல் அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை செய்திருந்தது. அத்துடன் 100,000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் அபராதத்தையும் சபை விதித்திருந்தது. …

  22. நான் எப்போதுமே பொறுப்புடன்தான் ஆடிவருகிறேன்: விராட் கோலி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சென்னையில் விராட் கோலி ஆடிய போது.. | படம்: ஜோதி ராமலிங்கம். ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள், உலகக்கோப்பையில் 1 சதம் ஆகியவற்றுக்குப் பிறகு பெரிதாக சோபிக்காத விராட் கோலி, அது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘நான் எப்பவும் பொறுப்புடனேயே ஆடிவந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். பிசிசிஐ டிவி இணையதளத்தில் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது: “ஒரு பேட்ஸ்மெனாக நான் எப்போதும் பொறுப்புடனேயே ஆடியிருக்கிறேன், அதாவது கிரிக்கெட் ஆட்டத்தை நான் ஆடும் விதத்தில் பொறுப்புடனேயே அணுகியிருக்கிறேன். இது எங்கிருந்து வருகிறது என்றால், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வருகிறது, எனவே ஆக்ரோஷம் என்…

  23. பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அவ்றிடி தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் விளையாடிவரும் மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்ஃபான், ஷொயெப் மாலிக் ஆகியோர் இருபது 20 கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றனர். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஷஹித் அவ்ரிடி (அணித் தலைவர்), சர்வ்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் …

  24. சானியா மிர்ஷாவுக்கு விளையாட்டுத்துறையின் உயரிய 'ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது' விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' இந்த ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் சானியா மிஷ்ரா பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த 2013-14ஆம் ஆண்டில் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்வு செய்யப்பட வேண்டியவர்கள் குறித்து அற…

  25. உலகக் கோப்பையை வென்றதன் நினைவாக கொழும்புவில் 96 மாடி கோபுரம் கடந்த 1996ஆம் ஆண்டு உலக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது. அதுவரை உலக கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட இலங்கை அணி விசுவரூபம் எடுத்தது இப்படிதான். அந்த வெற்றியை என்னென்றும் நினைவு கொள்ளும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்,பிரமாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. சுமார் 363 மீட்டர் உயரத்தில் 96 அடுக்குகளுடன் உருவாகும் இந்த கட்டிடம்தான் இலங்கையிலேயே மிக உயரமாக கட்டிடமானது ஆகும். இந்த கட்டிடத்தில் பொழுது போக்கு மையம், வணிக வளாகம், நீச்சர் குளம், உடற்பயிற்சி மையம், உள்ளிட்ட 366 அறைகள் அமைக்கப்படும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.