விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
யாழ்.இந்து - கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட்; போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மற்றும் சனிக்கிழமை (25) ஆகிய கிழமைகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/144492#sthash.jB7eRikG.dpuf
-
- 3 replies
- 595 views
-
-
இலங்கை வருகிறது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு இருபது – 20 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடர் இலங்கையின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இரண்டு இருபதுக்கு– 20 போட்டிகளும் கொழும்பில் நடைபெறவிருக்கின்றன. ஜூன் 17 முதல் ஜூலை 7ஆம் திகதிவரை டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின் றன. ஒருநாள் போட்டிகள் ஜூலை 11ஆம் திகதி முதல் ஜூலை 26ஆம் திகதி வரையும் நடைபெறும். இருபது – 20 முதல் போட்டி ஜூலை 30ஆம் திகதி…
-
- 0 replies
- 343 views
-
-
நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும். வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவ…
-
- 0 replies
- 458 views
-
-
கடைசி 5 ஆண்டுகளில் 90 வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்: ரஷித் லடீப் சாடல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சன மழை பொழிந்துள்ளனர். முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரஷீத் லடீஃப் கூறும் போது, “கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இதைவிட மோசமனது நாம் அவர்களை நல்ல நிலையில் ஆடுவதற்கான கால அவகாசத்தையும் கொடுக்கவில்லை என்பதே. தொடக்க ஆட்ட ஜோடிகளில் 19 வேறுபட்ட சேர்க்கையை முயற்சி செய்துள்ளோம். பந்துவீச்சில் கேட்கவே வேண்டாம்.. நிறைய வீச்சாளர்கள் வந்தார்கள்.. சென்றார்கள்..இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி நிலைபெறவில்லை” என்றார். …
-
- 0 replies
- 466 views
-
-
ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ராஜினாமா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக செயல்பட்ட அவர், தனது மோசமான பார்ம், அணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியாதது ஆகிய காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது நபி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறேன். அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறேன். அணியின் சமீபத்திய செயல்பாடு, எனது மோசமான பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரரா…
-
- 0 replies
- 451 views
-
-
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் சாதனையை மேத்யூஸ் முறியடிப்பார்: இலங்கை அணி முன்னாள் மேலாளர் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை அஞ்சேலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸோய்சா கூறியுள்ளார். 46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மேத்யூஸ் 3,193 ரன்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும். 156 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களை 1 சதம் மற்றும் 26 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். டி ஸோய்சா கூறியதாவது, “வங்கதேசத்துக்கு எதிரான தொடர் முதல் 2015 உலகக் கோப்பை போட்டிகள் வரை, அஞ்சேலோ மேத்யூஸின் வளர்ச்சி பிரமாதமானது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்டுமோ அதனை நிரப்பியுள்ளார். ஜெயவர்தனே, சங்கக்காரா ஆகி…
-
- 0 replies
- 459 views
-
-
ட்வீட்டாம்லேட்: தோற்றாலும் குறையாத சிஎஸ்கே கெத்து! தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் முத்துக்களைத் தெறிப்பதற்காகவே ஐபிஎல் பார்க்கிறார்களோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்சின் விசிறிகளின் பதிவுகள். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு இதுவே முதல் தோல்வி. இருப்பினும் இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களை அசர வைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல அணியை உற்சாகமூட்டும் வகையில் வெறும் 3 பவுண்டரிகளை அடித்து வெளியேறிய மெக்கல்லமை வாழ்த்தியும், தோனிக்கு விசில் போடவும் தொடங்கினர். சென்னை ரசிகர்களின் மனம் தளராத ஆதரவு ரசிகர்கள…
-
- 0 replies
- 514 views
-
-
கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…
-
- 0 replies
- 288 views
-
-
இங்கிலாந்தில் சங்கா சதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார். சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/144318#sthash.O5…
-
- 1 reply
- 399 views
-
-
ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் ! ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். நன்ட்விச் மற்றும் கல்டி கழக அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கழக மட்டத்திலான போட்டியின் போதே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. லியாம் லிவிங்ஸ்டனால் பெறப்பட்ட 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும். இப்போட்டியில் நன்ட்விச் கழக அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்குத் துடுப்ப…
-
- 1 reply
- 538 views
-
-
பீட்டர்சன் அணியில் இடம்பெற வேண்டும் : சங்கா இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்கார, இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சங்கக்கார, இது குறித்து கூறுகையில், கெவின் பீட்டர்சன் மிகச் சிறந்த வீரர். இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட குளறுபடியால், அவரால் சில வருடங்களாக அணிக்கு திரும்ப முடியவில்லை. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அவர் அணிக்கு வரும்பட்சத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அவர் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் விளையா…
-
- 0 replies
- 370 views
-
-
லண்டனில் விருது பெற்ற சங்கக்கார லண்டனில் இடம்பெற்ற 5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0
-
- 2 replies
- 1k views
-
-
உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கையும் தகுதிபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட உத்தேச குழாமுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபோது அப்பிரதேசத்திலிருந்து 12 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். இத் தேர்வுகள் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். யாழ். வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மைதானத்தில் கட…
-
- 0 replies
- 364 views
-
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்இ புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கங்குலி இந்திய அணியின் தலைவராக இருந்தபோது, சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை படைக்க உதவினார் என்பதுகுறிப்பிடத் தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0…
-
- 0 replies
- 461 views
-
-
பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று டாக்காவில் நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்களாதேஷில் உள்ள தங்களது தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி நடக்கும் இடங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தன. அதன்ப…
-
- 17 replies
- 829 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் மேற் கொள்ளப்படும் அரச தலையீடு களை பரிசீலிக்க சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர்கள் சபை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும…
-
- 0 replies
- 368 views
-
-
இருபதுக்கு - 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது. எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் …
-
- 0 replies
- 310 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சி.எஸ்.கே.வின் பெரிய 'தல' சென்னை: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தமிழக மக்களுக்கு ட்விட்டர் மூலம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 8வது சீசன் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை அணி வென்றது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி பெற்றுள்ளதால் அணி வீரர்கள் மட்டும் அல்ல பயிற்சிய…
-
- 0 replies
- 542 views
-
-
16 மாதங்களுக்குப் பிறகு ஆட வந்த ஜொனாதன் டிராட் 'டக்' அவுட் 16 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர் டிராட் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து வீரர் ஜானதன் டிராட் மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இவரது ஆட்டத்தைப் பற்றி எகத்தாளமாகக் கருத்துக்கூற அந்தத் தொடரிலிருந்து மனத்தாங்கலுடன் பாதியிலேயே இங்கிலாந்து திரும்பினார் டிராட். இந்நிலையில் மோசமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இன்று ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு…
-
- 17 replies
- 793 views
-
-
ஆஷஸ் தொடரைக் குறிவைக்கும் கெவின் பீட்டர்சன் 170 ரன்கள் விளாசல் மீண்டும் இங்கிலாந்து அணியில் நுழைய அவருக்குப் பிடித்தமான ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தத்தையே கைவிட்ட கெவின் பீட்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அதிரடி 170 ரன்கள் விளாசினார். சர்ரே அணிக்காக அவர் நேற்று 170 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டார். இவரை நீக்கியதில் ஸ்டூவர்ட் பிராட், மேட் பிரையர் பயிற்சியாளர் மூர்ஸ், கேப்டன் குக் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்துக்காக ம…
-
- 0 replies
- 572 views
-
-
ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் உலகக் கோப்பையின் போது பாதித்தது: ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகே தான் மாறிவிட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். இன்று இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணி ஆன்ட்டிகுவாவில் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் ஜடேஜாவுடனான சம்பவம், அதனையடுத்த விசாரணைக்குப் பிறகு தான் முன்பு இருந்த ஆக்ரோஷமான பவுலராக இருப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது என்று ஆண்டர்சன் தெரிவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் அன்று, 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேள…
-
- 1 reply
- 821 views
-
-
முன்னணி வீரராக சங்கா இந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார பெயரிடப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை ஆண்டுதோறும் வெளியிடும் சிறந்த வீரர்களுக்கான பட்டியலிலேயே குமார் சங்கக்கார முன்னணி வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அதேவேளை அந்தச் சஞ்சிகையினால் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தி யூஸ்ஸும் பெயரிடப்பட்டுள்ளார். உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. அதில் அஞ்சலோ மெத்தியூஸ்இ நியூசிலாந்தின் ஜீடன் பட்டேல்இ இங்கிலாந்தின் மொயீன் அலிஇ கெரி பலான்சே, அடம்லயித் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேபோல் இவ்வ…
-
- 0 replies
- 326 views
-
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவரும் சிறந்த பந்து வீச்சாளரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட் தனது 84 ஆவது வயதில் சிட்னியில் காலமானார். சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனாட், 2013-ம் ஆண்டு கார் விபத்துக்குள்ளனார். இதில் அவருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறந்த பந்து வீச்சாளரும்; அதிரடி துடுப்பாட்ட வீரருமான பெனட், டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அணித் தலைவராக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. அவர் மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1964-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கெர்ரி பேக்கர் தொடரை கொண்டு வந்ததில் பெனடின் பங்கு அதிகம். கிரிக்கெட்…
-
- 1 reply
- 915 views
-
-
பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …
-
- 2 replies
- 676 views
-
-
விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு விஸ்டன் - 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன் அலி, கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் விஸ்டனின் இவ்வருட பதிப்பின் முன்னட்டையில் இடம்பெற்றிருந்த நான்கு சிறந்த வீரர்களாவர். - See more at: http://www.tamilmirror.lk/143697#sthash.yI4dTGIX.dpuf
-
- 0 replies
- 496 views
-