Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருநாள் போட்டிகளில் அதிக 'டக்' அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இலக்கைத்…

  2. அடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2017-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4-27 ஆகிய தேதிகளூக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018-ஆம் ஆண்டு மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக…

  3. என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் காரணம்: ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச்-வின்னராகத் தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை. ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் …

  4. நிஷாந்த ரணதுங்க, மஹிந்தானந்த எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர்: சங்கா குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார காரசாரமாக குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸ{க்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்டு குமார் சங்கக்கார அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக தெரிவுக் குழுவினரால்…

  5. இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரக ருமேஷ் ரத்னாயக்க நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%…

  6. ஸ்மித்திற்கு ‘ஆலன்–பார்டர்’ விருது ஜனவரி 27, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான ‘ஆலன்–பார்டர்’ விருதை ஸ்டீவன் ஸ்மித் வென்றார். ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஸ்டீவன் ஸ்மித், 25. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிளார்க் காயத்தால் வெளியேறியதால், கேப்டன் பதவி இவரை தேடி வந்தது. தொடரை 2–0 என வென்றும் காட்டினார். கடந்த ஆண்டு 22 போட்டிகளில் பங்கேற்ற இவர், 7 சதம், 8 அரை சதம் உட்பட மொத்தம் 1756 ரன்கள் குவித்தார். தற்போது, ஸ்மித்க்கு ‘ஆலன்–பார்டர்’ விருது கிடைத்துள்ளது. இதற்கான ஓட்டெடுப்பில், வீரர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். இதில், சக வீரர்கள் வார்னர் (175 ஓட்டு), மிட்சல் ஜான்சனை (126) பின்தள்ளி, 243 ஓட்டுகள் பெற்ற …

  7. நடையை கட்டினார் நடால் *அரையிறுதியில் ஷரபோவா ஜனவரி 26, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரலேிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ வீரரான நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், தரவரிசையில் 7வது இடத்திலுள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை 2–6 என நடால் இழந்தார். தொடர்ந்து சொதப்பிய இவர் அடுத்த இரண்டு செட்டையும் 0–6, 6–7 என பறிகொடுத்தார். இரண்டு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், நடால் 2–6, 0–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோ…

  8. ஐ.பி.எல்., சூதாட்டம்: மவுனம் கலைத்தார் தோனி ஜனவரி 25, 2015. சிட்னி: ‘‘ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீ…

  9. நியூசி.யில் 'டார்லிங்'?.... ஹோட்டல் ரூமில் பேயைப் 'பார்த்து’ காய்ச்சலில் விழுந்த கிரிக்கெட் வீரர்! கிரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில், தனது படுக்கை அறையில் பேயைக் கண்டதாகக் கூறி, காய்ச்சலில் படுத்துக் கிடக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாரிஸ் சொகைல். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ரிட்ஜஸ் லாட்டிமர் என்ற ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வீரர் ஹாரிஸ் சொகைல், நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது தனது படுக்கை அறையில் ஏதோ உருவம் ஒன்றைப் பார்த்துள்ளார். பின்னர…

  10. கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை: சனத் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் தற்போதை நிலைமையை பார்த்தால் எனக்கு சிறிதளவு கூட சந்தோசம் இல்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய கவலை தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 7 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இலங்கை அணி பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய, அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. பந்து வீச்சாளர்கள் எந்த நேரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களே திட்டமிட்டுகொள்ள வேண்டும். லசித் மாலிங்க அணியில் இல்லாதமை பாரிய ஒரு வெற்றிடம். காயத்தினால் அவதிப்படும் அனுபவ வீரர்களான நுவான் குலசேகர மற்றும் சுரங…

  11. மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…

  12. பந்து தாக்கியதில் பாக்., வீரர் மரணம் ஜனவரி 26, 2015. கராச்சி: பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், பந்து மார்பில் தாக்கியதில் இளம் வீரர் ஜீஷான் முகமது மரணமடைந்தார். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், நேற்று நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, இளம் வீரர் ஜீஷான் முகமதுவின், 18, மார்பில் பலமாக தாக்கியது. இதனால் சுருண்டு விழுந்த இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீஷான் முகமது மரணமடைந்தார். இதுகுறித்து ஜீஷான் முகமதுவை பரிசோதித்த டாக்டர் சமாத் கூறுகையில், ‘‘ஜீஷான் முகமதுவின் மார்பு பகுதியில் தாக்கிய பந்து, அவரது இதயத்தை பல…

  13. 11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம் புதுடில்லி: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்: * பீல்டிங் கட்டுப்பாடு கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் கட்டுப்பாடு வந்தது. 3 ஆக இருந்த ‘பவர் பிளே’, 2 ஆக மாற்றப்பட்டது. இதில், முதல் 10 ஓவர்களில் 2 பேர், ‘பேட்டிங் பவர் பிளேயில்’ (40 ஓவருக்குள்…

  14. வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்? 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவி…

  15. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸின் இடத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பந்து வீச்சு துறையில் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சம்பக ராமநாயக்கவை உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ராமநாயக்க அணியில் சேர்ந்தவுடன் சமிந்த வாஸ் நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை அணியின் நிலைமையை ஆராய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய…

  16. ஜேம்ஸ் ஜான்ஸனின் துடுப்பாட்டத்தால் சென்றலைட்ஸ் அணி வெற்றி 25-01-2015 விக்ரம், ராஜன் மற்றும் கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 05 விக்கெட்களால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நேரம் போதாமையால் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிட்சன் பொற்றிக் 40 ஓட்டங்களையும், என்.சற்…

  17. சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்றி விட சீனிவாசன் முடிவு? சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை விட மனம் இல்லாத சீனிவாசன், அதற்கு இடையூறாக உருவெடுத்துள்ள ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்று விட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரிய பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறி விட்டது. மேலும் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கும்வரை சீனிவாசன் வாரிய பதவிக்குப் போட்டியிடவும் அது தடை விதித்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்ற…

  18. 1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ் துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா.. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்த…

  19. ‘பவுன்சர்’ தாக்கி ‘ஹியுஸ்’ காயம்: நுாலிழையில் தப்பிய ஆஸி., வீரர் ஜனவரி 24, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேனியல் ஹியுஸ், ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில், நுாலிழையில் உயிர் தப்பினார். கடந்த ஆண்டு நவ.,ல் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் ‘கோமா’ நிலைக்கு சென்ற ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, கடைசி வரை நினைவு திரும்பாத நிலையிலேயே மரணம் அடைந்தார். தற்போது, இரண்டு மாதங்கள் கழித்து, இதேபோன்ற மற்றொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இங்கு சிட்னியின் மார்க் டெய்லர் ஓவல் மைதானத்தில் முதல் தர போட்டி நடந்தது. காயம் எப்படி: இதில் வடக்கு டிஸ்டிரிக்ஸ், பிளாக்டவுன் அணிகள் மோதின. அப்போது, பிளாக்டவுன் வீரர் காமிரான் நுாபியர் வீசிய ‘பவுன்சர்’ பந்தை…

  20. 4-ஆம் நிலையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த முடியும்: விவ் ரிச்சர்ட்ஸ் ஊக்கம் விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார். இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: "எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முட…

  21. ரோஜர் பெடரர் தோற்று வெளியேற்றம்: அதிர்ச்சி அளித்த ஆண்ட்ரியாஸ் செப்பி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இத்தாலி வீரர் ஆண்ட்ரியாஸ் செப்பி, ரோஜர் பெடரரை 6-4, 7-6, 4-6, 7-6 என்று 4 செட்களில் 3-1 என்று கைப்பற்றி வீழ்த்தினார். 2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இவ்வளவு விரைவில் ரோஜர் பெடரர் வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்பி 11 போட்டிகளில் இப்போதுதான் ரோஜர் பெடரரை வீழ்த்துகிறார். செப்பிக்கு இந்த டென்னிஸ் தொடரில் தரவரிசை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது செட் டைபிரேக்கரில் பெடரர் 4-1 என்று ம…

  22. மாலிங்க தயாராகிடுவார்: மஹேல உறுதியான நம்பிக்கை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என இலங்கை அணியின் சிரேஷ் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்ட இணையத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னரே பந்து வீச ஆரம்பித்து விட்டார். இதுவரையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்கு முன்னர் விளையாட முடியுமா என நூறு வீதம் உறுதிப்படுத்திகொள்ள வேண்டும். ஆனால் அவர் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்க தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என்றார். கட…

  23. ஒழுக்கக்கோவையை மீறும் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல் விளை­யாட்­ட­ரங்­கிற்குள் வீரர்கள் மத்­தியில் இடம்­பெறும் வாக்­கு­வா­தங்கள் மற்றும் முறை­கே­டாக பேசுதல் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பாக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அதி­கா­ரிகள் ஆலோ­சித்து வரு­கின்­றனர். சில வீரர்கள் நீதியை தங்கள் கைக்குள் எடுத்­துக்­கொண்டு ஒழுக்கக் கோவை­களை மீறும் வகையில் செயற்­படும் பழக்கம் தற்­போது அதி­க­ரித்­துள்­ளதைக் காண­மு­டி­கின்­றது. தங்­க­ளது அணிக்கு சாத­க­மான முடிவைப் பெறும் நோக் கில் சில வீரர்கள் விதி­க­ளுக்கு புறம்­பாக சென்று எதி­ரணி வீரர்­களை மனோ­ரீ­தி­யாக வீழ்த்தும் பொருட்டு வசை பாடு­வது அதி­க­ரித்­துள்­ளது.…

  24. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…

  25. பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.