விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…
-
- 1 reply
- 366 views
-
-
பந்து தாக்கியதில் பாக்., வீரர் மரணம் ஜனவரி 26, 2015. கராச்சி: பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், பந்து மார்பில் தாக்கியதில் இளம் வீரர் ஜீஷான் முகமது மரணமடைந்தார். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், நேற்று நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, இளம் வீரர் ஜீஷான் முகமதுவின், 18, மார்பில் பலமாக தாக்கியது. இதனால் சுருண்டு விழுந்த இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீஷான் முகமது மரணமடைந்தார். இதுகுறித்து ஜீஷான் முகமதுவை பரிசோதித்த டாக்டர் சமாத் கூறுகையில், ‘‘ஜீஷான் முகமதுவின் மார்பு பகுதியில் தாக்கிய பந்து, அவரது இதயத்தை பல…
-
- 1 reply
- 483 views
-
-
11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம் புதுடில்லி: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்: * பீல்டிங் கட்டுப்பாடு கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் கட்டுப்பாடு வந்தது. 3 ஆக இருந்த ‘பவர் பிளே’, 2 ஆக மாற்றப்பட்டது. இதில், முதல் 10 ஓவர்களில் 2 பேர், ‘பேட்டிங் பவர் பிளேயில்’ (40 ஓவருக்குள்…
-
- 0 replies
- 464 views
-
-
வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்? 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவி…
-
- 0 replies
- 382 views
-
-
கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை: சனத் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் தற்போதை நிலைமையை பார்த்தால் எனக்கு சிறிதளவு கூட சந்தோசம் இல்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய கவலை தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 7 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இலங்கை அணி பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய, அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. பந்து வீச்சாளர்கள் எந்த நேரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களே திட்டமிட்டுகொள்ள வேண்டும். லசித் மாலிங்க அணியில் இல்லாதமை பாரிய ஒரு வெற்றிடம். காயத்தினால் அவதிப்படும் அனுபவ வீரர்களான நுவான் குலசேகர மற்றும் சுரங…
-
- 1 reply
- 434 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸின் இடத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பந்து வீச்சு துறையில் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சம்பக ராமநாயக்கவை உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ராமநாயக்க அணியில் சேர்ந்தவுடன் சமிந்த வாஸ் நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை அணியின் நிலைமையை ஆராய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய…
-
- 0 replies
- 600 views
-
-
ஜேம்ஸ் ஜான்ஸனின் துடுப்பாட்டத்தால் சென்றலைட்ஸ் அணி வெற்றி 25-01-2015 விக்ரம், ராஜன் மற்றும் கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 05 விக்கெட்களால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நேரம் போதாமையால் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிட்சன் பொற்றிக் 40 ஓட்டங்களையும், என்.சற்…
-
- 1 reply
- 252 views
-
-
ஐ.பி.எல்., சூதாட்டம்: மவுனம் கலைத்தார் தோனி ஜனவரி 25, 2015. சிட்னி: ‘‘ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீ…
-
- 2 replies
- 438 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்றி விட சீனிவாசன் முடிவு? சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை விட மனம் இல்லாத சீனிவாசன், அதற்கு இடையூறாக உருவெடுத்துள்ள ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்று விட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரிய பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறி விட்டது. மேலும் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கும்வரை சீனிவாசன் வாரிய பதவிக்குப் போட்டியிடவும் அது தடை விதித்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்ற…
-
- 0 replies
- 497 views
-
-
1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ் துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா.. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்த…
-
- 0 replies
- 462 views
-
-
‘பவுன்சர்’ தாக்கி ‘ஹியுஸ்’ காயம்: நுாலிழையில் தப்பிய ஆஸி., வீரர் ஜனவரி 24, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேனியல் ஹியுஸ், ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில், நுாலிழையில் உயிர் தப்பினார். கடந்த ஆண்டு நவ.,ல் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் ‘கோமா’ நிலைக்கு சென்ற ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, கடைசி வரை நினைவு திரும்பாத நிலையிலேயே மரணம் அடைந்தார். தற்போது, இரண்டு மாதங்கள் கழித்து, இதேபோன்ற மற்றொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இங்கு சிட்னியின் மார்க் டெய்லர் ஓவல் மைதானத்தில் முதல் தர போட்டி நடந்தது. காயம் எப்படி: இதில் வடக்கு டிஸ்டிரிக்ஸ், பிளாக்டவுன் அணிகள் மோதின. அப்போது, பிளாக்டவுன் வீரர் காமிரான் நுாபியர் வீசிய ‘பவுன்சர்’ பந்தை…
-
- 1 reply
- 403 views
-
-
4-ஆம் நிலையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த முடியும்: விவ் ரிச்சர்ட்ஸ் ஊக்கம் விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார். இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: "எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முட…
-
- 0 replies
- 251 views
-
-
ரோஜர் பெடரர் தோற்று வெளியேற்றம்: அதிர்ச்சி அளித்த ஆண்ட்ரியாஸ் செப்பி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இத்தாலி வீரர் ஆண்ட்ரியாஸ் செப்பி, ரோஜர் பெடரரை 6-4, 7-6, 4-6, 7-6 என்று 4 செட்களில் 3-1 என்று கைப்பற்றி வீழ்த்தினார். 2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இவ்வளவு விரைவில் ரோஜர் பெடரர் வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்பி 11 போட்டிகளில் இப்போதுதான் ரோஜர் பெடரரை வீழ்த்துகிறார். செப்பிக்கு இந்த டென்னிஸ் தொடரில் தரவரிசை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது செட் டைபிரேக்கரில் பெடரர் 4-1 என்று ம…
-
- 4 replies
- 554 views
-
-
மாலிங்க தயாராகிடுவார்: மஹேல உறுதியான நம்பிக்கை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என இலங்கை அணியின் சிரேஷ் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்ட இணையத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னரே பந்து வீச ஆரம்பித்து விட்டார். இதுவரையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்கு முன்னர் விளையாட முடியுமா என நூறு வீதம் உறுதிப்படுத்திகொள்ள வேண்டும். ஆனால் அவர் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்க தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என்றார். கட…
-
- 0 replies
- 406 views
-
-
ஒழுக்கக்கோவையை மீறும் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல் விளையாட்டரங்கிற்குள் வீரர்கள் மத்தியில் இடம்பெறும் வாக்குவாதங்கள் மற்றும் முறைகேடாக பேசுதல் போன்றவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சில வீரர்கள் நீதியை தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு ஒழுக்கக் கோவைகளை மீறும் வகையில் செயற்படும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளதைக் காணமுடிகின்றது. தங்களது அணிக்கு சாதகமான முடிவைப் பெறும் நோக் கில் சில வீரர்கள் விதிகளுக்கு புறம்பாக சென்று எதிரணி வீரர்களை மனோரீதியாக வீழ்த்தும் பொருட்டு வசை பாடுவது அதிகரித்துள்ளது.…
-
- 0 replies
- 313 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…
-
- 2 replies
- 479 views
-
-
பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…
-
- 0 replies
- 449 views
-
-
இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…
-
- 0 replies
- 428 views
-
-
ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…
-
- 0 replies
- 605 views
-
-
1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் ஒரு விதத்தில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மக்களிடையே பரவச் செய்வதில் ஒரு நாள் ஆட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்றால் அந்த ஒரு நாள் ஆட்டங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது 1975-ல் நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான். இந்தத் தொடருக்கு முன்பாக 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளே நடைபெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட் என்ற அம்சமே புதுமையாகப் பார்க்கப்பட்டது. ஆட்டம் என்னமோ அதே பாணியில்தான் நடந்தது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒரு நாள் போட்டியிலும் ஆடியது. டெஸ்ட் பாணியிலேயே இதுவும் ஆடப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 60…
-
- 25 replies
- 5.7k views
-
-
இங்கிலாந்து அணியை நீக்க திட்டம்? *உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி ஜனவரி 17, 2015. துபாய்: இங்கிலாந்து அணியை உலக கோப்பை தொடரில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஐ.சி.சி., இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பை அணிக்கு கேப்டனாக, அயர்லாந்தை சேர்ந்த இயான் மார்கன் உள்ளார். தவிர, கேரி பேலன்ஸ் (ஜிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், வெஸ்ட் இண்டீசின் பார்படாசை சேர்ந்தவர். அதாவது, இங்கிலாந்து உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல. விதியால் பலன்: ஐ.சி.சி., விதி 2010, 3.3ன் படி, ‘ தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
மனைவிகளுக்கும் தடை, காதலிகளுக்கும் தடை.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! மும்பை: உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களுடன் அவர்களது மனைவியரும், காதலிகளும் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடித் தடை விதித்து விட்டது. இதனால் வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம். குறிப்பாக விராத் கோஹ்லி இனிமேல் அரை சதம் அடிக்கும்போதும், சதம் போடும்போதும் பெவிலியனைப் பார்த்து காதலி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தங்களைப் பறக்க விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாம் இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிப்ரவரி 14ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிரஷரை…
-
- 0 replies
- 395 views
-
-
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி ஜனவரி 17, 2015. டர்பன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஸ்டைன், பிலாண்டர் உள்ளிட்ட பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டர்பனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். டிவிலியர்ஸ் அபாரம்: முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரோசவ் (0), டுபிளசி (0) ஏமாற்றினர். பின் இணைந்த ஹசிம் ஆம்லா (66), கேப்டன் டிவிலியர்ஸ் (81) ஜோடி அபாரமாக ஆடியது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (70) நம்பிக்கை தந்தார். டுமினி (12)…
-
- 5 replies
- 553 views
-
-
கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…
-
- 0 replies
- 297 views
-
-
செய்தி சில வரிகளில்.. #அண்டார்டிக் கடல் பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் குளிரில் 1.4 மைல் தூரத்தை 52 நிமிடங்களில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பக்தி சர்மா. அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இச்சாதனையை படைத்த இளம் வயது வீராங்கனை, முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையையும் பக்தி சர்மா பெற்றுள்ளார். # மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் கிராண்ட் பிரீக்ஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் அரையிறுதிக்கு சென்றுள்ளார். # உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொ…
-
- 0 replies
- 473 views
-