Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளைாயடியுள்ளார். ஸ்மித் 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1560 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 61 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதேவேளை 33 இருபதுக்கு-20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17298

  2. பிரமிக்க வைத்த போல்ட்டின் கேட்சை முறியடிக்கும் கேட்சை எடுப்பேன்: புகழாரத்துடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் உறுதி ஏ.பி.டிவில்லியர்ஸ். - படம். | கே.முரளிகுமார். ஆர்சிபி அணிக்காக அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை புரட்டி எடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இதே போட்டியில் முக்கியக் கட்டத்தில் விராட் கோலியை வெளியேற்ற பவுண்டரி அருகே இன்னமும் கூட நம்ப முடியாத பிரமிக்க வைத்த கேட்சைப் பிடித்த டிரெண்ட் போல்ட்டின் முயற்சியை முறியடிக்கும் கேட்சுக்குச் செல்வேன் என்று கூறுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பீல்டிங்கைப் பற்றி முதன் முதலில் ஒரு வீரர் பேசுகிறார், அதுவும் அந்தக் கேட்சை முறியடிப்பேன் என்று கூறும் ஒரு ஆளுமை ஏ.ப…

  3. ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: டில்சான் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ண டில்சான் தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று கொழும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தொடரை 5-2 என கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்சான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்சான் தனது ஓய்வு குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில். இந…

  4. ’’ஓய்வு குறித்து டோனியே முடிவெடுக்க வேண்டும்’’ ரவி சாஸ்திரி February 19, 2016 இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி, 6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்த…

  5. தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேதர் ஜாதவ், சர்துல் தாகூருக்கு இடம்; அஸ்வின், ஜடேஜா மீண்டும் அவுட் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், சர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளனர். இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென்ஆப்பிரிக்க…

  6. பங்களாதேஷ் டெஸ்டிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர்இ 3 ஒருநாள்இ 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பங்களாதேஷ் போட்டி தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டது. இதில் டிவில்லியர்ஸின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் டிவில்லியர்ஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். முதல் முறையாக ரீஜா ஹென்ரிக்ஸ்இ டேன் விலாஸ், ஆரோன் பாங்கிசோ, காஜிசோ ரபடா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்டெயின்இ பிலாண்டர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/05/29/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%…

  7. இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணி தன்னுடைய முதலாவது டெஸ்ட் வெற்றியை ருசித்து இன்றோடு 31 ஆண்டுகள் கடந்திருக்கிறது. 1985 ம் ஆண்டு இலங்கைக்காகன கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணிக்கெதிராக, பி, சரவணமுத்து மைதானத்தில் வைத்து இலங்கை அணி அந்த வரலாற்று சாதனையை எட்டியது. இலங்கை அணிக்கு டுலிப் மெண்டீசும், இந்திய அணிக்கு கபில் தேவும் தலைவர்களாக செயற்பட்டனர்.ரொமேஷ் ரட்னாயக்க இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை விளையாடியுள்ள 251 டெஸ்ட் போட்…

  8. இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை ச…

  9. ‘செய்தித்தாள்களையும், சமூகவலைதளங்களையும் பார்க்காதே’: ஸ்ரேயஸ் அய்யருக்கு தோனி அறிவுரை ஸ்ரேயாஸ் அய்யர், எம்.எஸ்.தோனி - படம் உதவி: ட்விட்டர் ஐபிஎல் நாளேடுகளைப் படிக்காதே, அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும்இருந்தும் ஒதுங்கி, கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று தோனி, எனக்கு அறிவு கூறினார் என்று ஸ்ரேயஸ் அய்யர் தெரிவித்துள்ளார். ஜுன் சேனலில் வெளியாகும், ஓபன் ஹவுஸ் வித் ரெனில் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரேயஸ் அய்யர் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தபின், தோனி எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். அதில் குறிப்பாக என்னை செய்தித்த…

  10. மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …

  11. ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வருகை - இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட் சீசன் இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த…

  12. இந்தியாவில் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம்: டிராவிட் வருத்தம் இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவ…

  13. வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…

  14. கடினமான பிட்ச்களின் பேட்டிங் கலைஞன் மார்டின் குரோவ் 17 சதங்களை அடித்து நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரராவார் மார்டின் குரோவ். | கெட்டி இமேஜஸ். புற்று நோயால் மரணமடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் கிரேட் மார்ட்டின் குரோவின் பேட்டிங் அச்சமற்றது கலாபூர்வமானது. மார்ட்டின் குரோவ் பேட் செய்யும் போது அவரை ஒரு பந்தாவது ‘பீட்’ செய்ய வேண்டும், திணறச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அந்தக்காலத்து அனைத்து பவுலர்களுக்கும் இருக்கும், இத்தகைய ஆவல் உள்ள பவுலர்களில் கபில், போத்தம், இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றாலும் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய பவுலர்கள் அடங்கும் நீளமான பட்டியல் அ…

  15. இனி எளிதாகத் தப்பிக்க முடியாது: பந்தைச் சேதப்படுத்தினால் கடும் தண்டனை: ஐசிசி புதிய விதிமுறைகள் கோப்புப்படம் பந்தைச் சேதப்படுத்தும் வீரர்கள் ஒரு போட்டியுடன் தடை போன்ற எளிமையான தண்டனையில் இருந்து இனி தப்பிவிட முடியாது. கடுமையான தண்டனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுண்சில்(ஐசிசி) வகுத்துள்ளது. பந்தைச் சேதப்படுத்துதல், எதிரணி வீரர்களைத் திட்டுதல், நடுவர்கள் முடிவுக்குக் கட்டுப்பட மறுத்தல் உள்ளிட்டவை 3-வது வகையான கடும் குற்றமாகக் கருதப்படும். இதையடுத்து, இனி பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. …

  16. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: Cricket World Cup‏ ட்விட்டர் பக்கத்திலிருந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய அணி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதியில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பிரித்வீ…

  17. கிளப் போட்டிகளில் ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை கிளப் அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் இவர் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அ…

  18. 1970இல் உலக சம்பியனான பிரேஸில் அணித் தலைவர் கார்லோஸ் காலமானார் 2016-10-27 10:05:40 பிரேஸில் கால்­பந்­தாட்ட ஜாம்­ப­வான்­களில் ஒரு­வரும் 1970 உலக சம்­பி­ய­னான பிரேஸில் அணியின் தலை­வ­ரு­மான கார்லோஸ் அல்­பர்ட்டோ தனது 72ஆவது வயதில் கால­மானார். ரியோ டி ஜெனெய்­ரோவில் இருந்­த­போது அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்டு கால­மா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இத்­தா­லிக்கு எதி­ராக 1970 இல் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் கார்லோஸ் புகுத்­திய கோல், உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் அதி சிறந்த கோலாக இன்றும் புக­ழப்­ப­டு­கின்­றது. பின்­கள வீர­ரான கார்லோஸ், முன்­க­ளத்­திற்கு நகர்ந்து தன்னை நோக்கி பரி­மா­றப்­பட்ட பந்தை எவ­ருமே எதிர்…

  19. சம்பியன்ஸ் லீக்கில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக்கின் இறுதி நாள் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் தகுதி ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துடன் ஆர்சனல் முடித்துக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 66 புள்ளிகளைப் பெற்று மன்செஸ்டர் சிற்றி நான்காமிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று பௌர்ண்மௌத் உடனான போட்டியில் 19-0 என்ற கோல்கண…

  20. புதிய FIFA தரவரிசை வெளியீடு : ஆண்டின் சிறந்த அணியாக ஜெர்மனி சாதனை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) இந்த ஆண்டிற்கான இறுதி தரவரிசை வெளியீட்டின்படி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி ‘ஆண்டின் சிறந்த அணி’யாக 2017ஆம் ஆண்டு முழுவதும் நீடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு தனது உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடவிருக்கும் ஜெர்மனிக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது. 2017 இல் 10 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஜெர்மனி, தான் ஆடிய 15 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக உள்ளது. இதன்மூலம் 2016 மற்றும் 2015இல் ஆண்டின் சிறந்த அணியாக வந்த முறையே ஆர்ஜன்டீனா மற…

  21. செய்தித் துளிகள் - கருத்து தெரிவிக்க மறுத்த கங்குலி கங்குலி. | கோப்புப் படம். துருக்கியின் அக்ரி நகரில் நடைபெற்று வரும் அக்ரி கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா வின் சாகேத் மைனேனி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மதிஜா பெகோட்டிக்கை தோற் கடித்தார். ------------------------------------------------- சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் (பிஃபா) முன்னாள் தலை வரான ஜேக் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச விளையாட்டு நெறிமுறை தீர்ப்பாயம். வார்னர் இனிமேல் கால்பந்து தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாது. ------------------------------------------------- பிசிசிஐயின் தலைவராக வரவுள்ள சஷ…

  22. அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி Image Coutesy - Shuji Kajiyama/AP ரஷ்யாவில் 2018 ஆம் அண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்ற நான்காவது அணியாக ஜப்பான் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளது. ஜப்பானின் சைட்டாமா அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய மண்டலத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலம்கொண்ட அவுஸ்திரேலியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஜப்பான் ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தனது இடத்தை பதிவு செய்து கொண்டது. கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்று வருகின்றமை க…

  23. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன்200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இரு…

  24. ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகள் ஒயிட்வாஷ் தொடரின் நாயகன் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி. 33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இல…

  25. போல்வால்ட்டில் பிரேசில் வீரர் சாதனை போல்வால்ட் பந்தயத்தில் சாதனை படைத்த பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா. படம்: ராய்ட்டர்ஸ். ஆடவருக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாகவும் இருந்து வந்தது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.