விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பிரோட்டுக்கு அபராதம் January 07, 2016 தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிரோட்டுக்கு போட்டிச் சம்பளத்தில் 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சக வீரர் பேஸ்ட்டோ, எதிரணி வீரர் பவுமாவின் பிடியெடுப்பை தவறவிட்டதால் பிரோட் ஆடுகளத்தை காலால் உதைத்து சேதப்படுத்தினார். இது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக்கிடம் போட்டி நடுவர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த பிரோட் ‘ …
-
- 0 replies
- 487 views
-
-
விராட் கோலி சதத்தை விமர்சித்த மேக்ஸ்வெல்: ஸ்மித், பிஞ்ச் ஆதரிக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் சதமெடுப்பதற்காக தனது அதிரடி வழியிலிருந்து திசைதிரும்புகிறார் என்று ஆஸ்திரேலிய வீர்ர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல் கருத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஏரோன் பிஞ்ச்சும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மேக்ஸ்வெல், ‘இந்திய பேட்ஸ்மென்கள் சதம் என்ற மைல்கல்லை மட்டுமே குறிவைத்து ஆடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். சிலர் மைல்கல்லை நோக்கி ஆடுகின்றனர், சிலர் அப்படி ஆடுவதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்…
-
- 0 replies
- 471 views
-
-
இலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி By A.Pradhap இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. செட்டிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்ட…
-
- 0 replies
- 645 views
-
-
விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது 24 JUL, 2025 | 05:00 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும். தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
என்னதான் நடக்குது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில்? “ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...? உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க, வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற…
-
- 0 replies
- 552 views
-
-
முத்தரப்புத் தொடராகின்றன டெஸ்ட் போட்டிகள்? சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன கொண்ட தொடரில் டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொடர், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இலங்கையும் சிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் முத்தரப்புத் தொடராக மாற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூலமாகக் கிடைக்கும் வருமானம், போதுமானளவில் இருக்காது என்பதால், டெஸ்ட் தொடரை விளையாடும் எண்ணத்தை, சிம்பாப்…
-
- 0 replies
- 318 views
-
-
மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த இரணடு வருட கால போட்டித் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருத்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டிற்காக மரியா ஷரபோவாவிற்கு இரணடு வருட கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்கு எதிராக மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை அடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமை அவர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போட்டிகளில் பங்குப…
-
- 0 replies
- 289 views
-
-
ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…
-
- 0 replies
- 434 views
-
-
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…
-
- 0 replies
- 258 views
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 381 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 437 views
-
-
பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய …
-
- 0 replies
- 333 views
-
-
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…
-
- 0 replies
- 914 views
-
-
கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பே…
-
- 0 replies
- 468 views
-
-
’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …
-
- 0 replies
- 405 views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 433 views
-
-
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…
-
- 0 replies
- 370 views
-
-
வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் சாதித்த சச்சின் – ராகுல் புகழாரம்! 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே. “அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொட…
-
- 0 replies
- 553 views
-
-
அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செ…
-
- 0 replies
- 450 views
-
-
-
- 0 replies
- 394 views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு…
-
- 0 replies
- 415 views
-
-
இந்திய அணியின் அட்டவணை மும்பை: வங்கதேச தொடருக்குப் பின், அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரை இந்திய அணி தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்கதசம் செல்கிறது. பின் ஜூலை மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்குப் பின் இந்திய அணி சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் (செப்., 2015) மோதுகிறது. இதன் பின் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் இந்த…
-
- 0 replies
- 472 views
-
-
ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும். அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒ…
-
- 0 replies
- 273 views
-
-
அது போன மாசம்... யுவராஜிடம் சிக்கி ஒரே ஓவரில் 6 சிக்சர் விட்டு கொடுத்த பிராட் (வீடியோ) இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட், நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்... பிராட் தந்தை கிறிஸ் பிராடும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். இதனால் பிராட்டின் ரத்தத்திலேயே கிரிக்கெட் கலந்துள்ளது. தந்தையை போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த பிராட். 17 வயது வரை தொடக்க வீரராகத்தான் இருந்தார். அதற்கு பின்தான் பந்துவீச்சுக்கு மாறினார். கடந்த 2007ஆம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ்சிங், பிரா…
-
- 0 replies
- 310 views
-
-
விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு மிகப்பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி விராட் கோலி. | கெட்டி இமேஜஸ். விராட் கோலியின் ஆட்டத்தில் தன்னுடைய ஆட்டத்தின் சில சுவடுகள் தெரிவதாக மே.இ.தீவுகள் ‘கிரேட்’ விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதையடுத்து ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய வீரர், அவர் எங்கே, நான் எங்கே... என்று விராட் கோலி தன்னடக்கம் காண்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று பெரிய இலக்கைத் துரத்திய போது அபார சதம் கண்ட விராட் கோலியின் ஆட்டம் விவ் ரிச்சர்ட்ஸ் போன்று இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர், தற்போது விவ் ரிச்சர்ட்ஸே இப்படி கூறுவது உண்மையில் கோலிக்குப் பெருமை சேர்ப்பதாகு…
-
- 0 replies
- 410 views
-