Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…

  2. உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர். இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நில…

  3. குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…

  4. தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…

  5. சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…

  6. அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…

  7. கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் ! கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும். கத்தார் உலகக் கோப்பையில் இருப்பிட நெருக்கடி ; கூடாரங்கள் தீர்வாக அமையும் ! உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000 அறைகளை கத்தாரால் தரமுடியாத அளவுக்கு, தற்போதைய கட்டுமான வேலைகளின் முன்னேற்றம் காணப்படும் நிலையில், இந்த யோசனையை , போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூடாரங்களை அமைக்கும் யோசனை, ஃபிஃபாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு ஆ…

  8. F1 காரோட்டும் தகுதி பெண்­க­ளுக்கும் உண்டு போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வதை போர்­மி­யூலா 1 பொறுப்­பாளர் பேர்னி எக்­லெஸ்டோன் எதிர்க்­க­வில்லை என சுஸி வுல்வ் தெரி­வித்­துள்ளார். எனினும் போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வ­தற்கு தகுதி இல்லை என்ற அவ­ரது கூற்றை ஏற்க முடி­யாது என முன்னாள் வில்­லியம்ஸ் பரீட்­சார்த்த சாரதி சுஸி வுல்வ் தெரி­வித்தார். போர்­மி­யூலா 1 போட்­டி­களில் பங்­கு­பற்றும் அள­வுக்கு பெண்கள் தகு­தி­யா­ன­வர்கள் என நினைக்க முடி­யாது எனவும் எக்­லெஸ்டோன் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், ‘‘போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­ட…

  9. 'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM (நெவில் அன்தனி) எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓ…

  10. தகுதி இழப்புப் புள்ளிகள்: தடையை எதிர்நோக்கும் ஜடேஜா, வ.தேச வீரர் சபீர் ரஹ்மான் நடுவர் புரூஸ் ஆக்சன்போர்ட். | படம்: ஏ.பி. எதிரணியினரிடம் வாக்குவாதம், நடுவர்களிடம் வாய்ப்பேச்சு, பிட்சை சேதம் செய்யும் விதமாக செயல்படுவது போன்ற நடத்தைகளுக்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் ஆகியோர் தடையை எதிர்நோக்கியுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா வேண்டுமென்றே பிட்சை சேதம் செய்யும் நோக்கத்துடன் ‘அபாய பகுதி’ என்று அழைக்கப்படும் பகுதிக்குள் ஓடி வந்தார், இதனால் நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் எச்சரித்ததோடு, நியூஸிலாந்துக்கு 5 அபராத ரன்களை வழங்கினார். கொல்கத்தா டெஸ்…

  11. மலையக மண் பெற்றெடுத்த பிரபல கால் பந்தாட்ட வீரர் மோகன் ராம் https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/451620016240627

  12. கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2 ஆவது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68 ஆவது மற்றும் 72 ஆவது நி…

  13. 2019 உலகக்கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பாரா? - சிவராமகிருஷ்ணன் பேட்டி 1980-களில் கிரிக்கெட்டை ரசித்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரைட்-ஆர்ம் லெக் ஸ்பின்னர் என்றால் அது எல். சிவராமகிருஷ்ணன்தான். முதன் முதலில் இவர் தனது 12 வயதில் மெட்ராஸ் இன்டர்-ஸ்கூல் சாம்பியன்ஷிப் விளையாட்டில் 2 ரன்கள் (7/2) 7 விக்கெட்களை எடுத்து கிரிக்கெட் பிரியர்களிடையே கவனத்தை ஈர்த்தார். தனது 15-வது வயதில், 19 வயதுக்கும் கீழ் உள்ள கிரிக்கெட் அணியின் இளைய உறுப்பினராக ஆரம்பித்தது இவரது கிரிக்கெட் பயணம். இன்றளவும் கிரிக்கெட்டில் பங்காற்றிவரும் இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரிகளையும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பிளேயர் ரெப்ரசென்டாகவும் உள்ளார். வருகிற ஜூலை 22-ம்…

  14. தோனிக்கும் தனக்குமான உறவு குறித்து கவுதம் கம்பீர் பகிர்வு கவுதம் கம்பீர், தோனி. - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். முன்னாள் இந்திய கேப்டன் தோனி கேப்டன்சியில் ஆடிய நாட்களை கவுதம் கம்பீர் மகிழ்ச்சியான காலக்கட்டம் என்று வர்ணித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கம்பீர் தனக்கும் தோனிக்குமான உறவு குறித்து கூறியதாவது: எங்கு அவருக்கு பெருமையைச் சேர்க்க வேண்டுமோ அதைச் சேர்ப்பதுதான் நியாயம். பலர் அவரது கேப்டன்சியை விமர்சித்துள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை பலர் செய்ததில்லை. குறிப்பாக அணி தோல்வியடையும் போது அவர் அதனைக் கையாண்ட வி…

  15. இந்திய வீரர்களின் சம்பளம் 100% உயர்கிறது: கேப்டன் விராட் கோலி ரூ.10 கோடி பெற வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்…

  16. 3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப கட்ட குழாமுக்கான தெரிவுப் போட்டிகள் கடந்த வாரம் பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெற்றது. அதில் 30 வீராங்கனைகள் தேசிய வலைப்பந்து குழாமுக்காக தெரிவு செய்யப்பட்டனர். …

  17. விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ரன் அவுட் காதல்கள்! ரோஹித் சர்மா, விராட் கோலி. - படம். | ராய்ட்டர்ஸ். ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே தவறான கணிப்புகளினால் ஏற்படும் ரன் அவுட்கள் அன்றைய போர்ட் எலிசபெத் போட்டியில் நடந்ததுடன் 7-வது முறையாகும். இரு வீரர்களும் சேர்ந்து 50 ஓவர்கள் வரை ஆடினால் உலகில் எந்தப் பந்து வீச்சும் சிதறடிக்கப்படும் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும், இதனால் அணிகள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும்போது ரன்களை, குறிப்பாக சிங்கிள், இரண்டுகளை எடுக்க விடாமல் இறுக்கமான களவியூகங்களை அமைப்பது இயல்பான ஒன்றே. இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்படும் ரன் ஓட்டப் …

  18. சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை! சாய்னாவின் அந்தப் புகைப்படம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு, வாய்திறந்து கத்துகிறார். மூடியிருந்த அந்தக் கண்களிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. அத்தனை செய்தித்தாள்களிலும் அந்தப் புகைப்படம்தான். அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தால், அது காமன்வெல்த் சாம்பியனின் மகிழ்ச்சித் தருணமாக மட்டும்தான் தெரியும். ஆனால், நிச்சயம் அது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அந்த அலறலில் வெளியேறியது சாய்னாவின் இரண்டாண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில், அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்…

  19. விடைபெறுகிறார் கோல்கீப்பர் Gianluigi Buffon ஜுவென்டஸ் அணியில் இருந்து 17 ஆண்டுகள் பங்கேற்று விளையாடியதற்கு பின் சனிக்கிழமை விடைபெறுகிறார் பிரபல கால்பந்து வீரரும், கோல் கீப்பருமான ஜியான்லுகி பஃபான். சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் பஃபான் (40) ஜுவென்டஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஜுவென்டஸ் அணி அண்மையில் சீரி ஏ கால்பந்து பட்டம் வெல்லவும் பஃபான் உறுதுணையாக இருந்தார். பார்மா அணியில் கடந்த 1995-இல் இடம் பெற்ற பஃபான், 2001-இல் ஜுவென்டஸ் அணிக்கு இடம் மாறினார். இத்தாலி அணியின் சார்பில் 2006 உலகக் கோப்பை …

  20. சங்கா, மஹேலவுக்கு மெத்தியூஸ் புகழாரம் குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் …

  21. பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…

  22. கெய்ல் மீண்டும் விளாசல் டான்டன்: ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன் குவிக்க சாமர்சட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் நாட்வெஸ்ட் ‘வென்டி–20’ தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் சாமர்சட், ஹாம்ஷயர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஹாம்ஷயர் அணிக்கு கேப்டன் வின்ஸ் (64*), எர்வின் (30*) கைகொடுத்தனர். ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கெய்ல் புயல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு டிரஸ்கோதிக் (1) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், டிரிகோ ஜோடி ஹாம்ஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபா…

  23. மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ண கிரிக்கெட் போரில் வென்றது இந்தியா! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எங்களை தோற்கடிக்கவே முடியாது என இந்தியக் கிரிக்கெட் அணி, மீண்டுமொரு முறை பாகிஸ்தான் அணிக்கு உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில், பரம எதிரி நாடுகளான இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நேற்று மென்செஸ்டர் ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. நீலம் மற்றும் பச்சை வண்ண ஆடைகளால் மைதானத்தில் புடை சூழ்ந்திருந்த இரசிகர்கள் சத்தமிட்டு வீரர்களை உற்சாக படுத்த, பெரும் எதிர்பார்…

  24. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் சீனாவுக்கு `காற்று' பெரும் தடையாக இருக்குமா? [04 - February - 2008] [Font Size - A - A - A] ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள சீனாவுக்கு `காற்று' பெரும் பிரச்சினையாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடத்தும் பொறுப்பு அந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க ஒலிம்பிக்கை எடுத்து நடத்துவதை ஒவ்வொரு நாடும் மிகப் பெரிய பெருமையாக கருதுகின்றன. இவ்வகையில் வாய்ப்புப் பெற்றுள்ள சீன அரசுக்கு பிரச்சினை காற்று வடிவில் உருவெடுத்து சிக்கல் கொடுத்துள்ளது. சீனாவில் காற்று மாசுபாடு அதிகளவில் உணரப்படுவதால் உலகத் தரத்தில் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை முடுக்கிவிட்ட…

  25. ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி: பெடரரை வீழ்த்தி 4வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிக் லண்டனில் நடைபெற்ற ஏடிபி டூர் பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிக். படம்: ஏஎஃப்பி 2வது இடம் பிடித்த பெடரர். படம்: ஏஎஃப்பி ஏடிபி டூர் பைனல்ஸ் இறுதிப்போட்டி யில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோ விக் பட்டம் வென்றார். ஏடிபி டூர் பைனல்ஸில் அவர் தொடர்ச்சியாக பட்டம் வெல்வது இது 4வது முறை யாகும். லண்டனில் ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.