Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு! அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார். இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார். இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி…

    • 1 reply
    • 156 views
  2. வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்ட…

  3. ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன? பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார். இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் ப…

  4. இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை 19 AUG, 2025 | 06:16 PM தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார். https://www.virakesari.lk/article/222900

  5. Published By: DIGITAL DESK 3 13 AUG, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 202 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 34 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது. அணித் தலைவர் ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத சதமும் ஜேடன் சீல்ஸின் 6 விக்கெட் குவியலும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றின. ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற கடைசி ச…

  6. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2025 இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர் தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, க…

  7. 30 JUL, 2025 | 10:46 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிருமாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மானிக்கப்படாத பகுதிகளில் தரமான உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். 'யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே, இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிருமானிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை இந்த வருடம் நிருமாணிக்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர். 7 மணி நேரங்களுக்கு முன்னர் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும். ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்…

  9. விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது 24 JUL, 2025 | 05:00 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும். தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை…

  10. WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார் WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" …

  11. 21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுத…

  12. Published By: VISHNU 20 JUL, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார். இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள…

  13. Published By: DIGITAL DESK 2 14 JUL, 2025 | 12:46 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார். இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும். சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார். சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை …

  14. 13 JUL, 2025 | 02:42 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார். 57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்ட…

  15. கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார். மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார். கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்கள…

  16. 2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது. எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும். அணிக்காக உழைத்த அனைவ…

  17. RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு! ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன். ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக…

  18. சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்! 27 Jun 2025, 5:02 PM சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது. சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய நிபந்தனைகள் விவரம்! ஓவர் பிரேக் 60 வினாடிகள்! ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட…

  19. Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown

  20. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து 19 JUN, 2025 | 05:57 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன. இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும். ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த…

  21. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கி…

  22. பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது. ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு…

  23. ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இரு…

  24. Published By: VISHNU 13 JUN, 2025 | 12:04 AM (நெவில் அன்தனி) தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தை…

  25. 10 JUN, 2025 | 06:04 PM யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.