Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - செப்டம்பர் மாதத்தில் முடிவு படம்: ஏ.எஃப்.பி. புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு அணிக்கும் முழு நேர பயிற்சியாளர் தேவை. நாங்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம், செப்டம்பர் மாதம் பயிற்சியாளர…

  2. 2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்க…

  3. 'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…

  4. 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய சாதனையை முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல…

  5. அணியின் நன்மையே முக்கியம்: டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார் டிவில்லியர்ஸ் கோப்புப் படம்.| பிடிஐ. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய வீரர்களின்றியே தொடரை வென்றதால் டுபிளெஸிஸ் கேப்டன் பொறுப்புக்கு மிகத் தகுதியானவர் என்று கூறி ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார். “நான் உட்பட எந்த ஒரு தனிநபரின் நலனைக் காட்டிலும் அணியின் நன்மையே முக்கியம். அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு என்னைப் பணித்தது மிகப்பெரிய கவரவமாகக் கருதுகிறேன். ஆனால் நான் இரண்டு தொடர்களில் ஆட முடியாமல் போனது, வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரிலும் நான் ஆடுவது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க …

  6. ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …

  7. அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடுவர்களுடன் வாதிடும் விராட் கோலி. - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா வருத்தத்துடன் சாடியுள்ளார். கொல்கத்தா…

  8. ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள்... நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது …

  9. உலக கிண்ணத்தில் 12 அணிகள் இடம்பெற வேண்டும்; ரி 20 கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைக்கப்படவேண்டும் - எம்.சி.சி.கோரிக்கை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்கை பத்­தாக குறைக்­கப்­பட்­டுள்­ளமை ஒரு பின்­னோக்­கிய நகர்வு எனவும் ரி 20 கிரிக்கெட் போட்டி ஒலிம்­பிக்கில் அரங்­கேற்­றப்­ப­ட­வேண்டும் எனவும் எம். சி. சி. உலகக் கிரிக்கெட் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 14 இலி­ருந்து 10 ஆகக் குறைப்­ப­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்­மா­னத்தை மீளாய்வு செய்­ய­வேண்டும் எனவும் அந்தக் குழு தெரி­வித்­துள்­ளது. அணி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா…

  10. உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் ஜெர்மனி வெற்றி அஜர்பைஜான் நடுகள வீரர் ரஷித்திடம் பந்தை விட்டுக்கொடுக்காமல் கடத்திச் செல்லும் ஜெர்மனி வீரர் லியோன் கோரேட்ஸ்கா. - படம்: ஏஎப்பி உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெ…

  11. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள்…

  12. உடற் தகுதியை நிரூபித்து காட்டிய நுவன் குலசேகர, லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பயிற்சிக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 20 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதல் இடங்களை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றுள்ளனர். சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. ஐ.சி.…

  13. 3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000 மீற்றரில் மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று அசத்தல்! : இன்று பகல் வரை 5 புதிய சாதனைகள் Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 01:27 PM (நெவில் அன்தனி) தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர். அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படு…

  14. ரோஜர் பின்னி: "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்த்த நல்லவர்" சுரேஷ் மேனன் விளையாட்டு எழுத்தாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE HINDU இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது. பிசிசிஐ தலைவராக அலுவல்ப…

  15. அணிக்காக எதையும் செய்வார்: விருத்திமான் சஹாவை ஆதரிக்கும் விராட் கோலி மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆம்லாவை வீழ்த்தியதைக் கொண்டாடும் விராட் கோலி, சஹா, புஜாரா. | கோப்புப் படம். தோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக செயலாற்றி வரும் விருத்திமான் சஹாவின் சர்வதேச தரம் பற்றிய கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாக வாதாடியுள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. “சஹாவின் அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே பிடித்துள்ளது. அவர் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீர்ர். அணிக்குத் தேவையான எந்த ஒன்றையும் அவர் செய்ய தயாராகவே இருக்கிறார். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் நி…

  16. ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இம்முறை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை ஒரு தங்கப்பதக்கத்தையும், 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது. அதன்படி நீளம் பாய்தல் போட்டியில் ஜனக பிரசாத் விமலசிறியும், 800 மீற்றர்ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சியும், 400 மீற்றர் ஓட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். இலங்கை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் 3வது முறையாக கலந்துகொண்டுள்ளதுடன் ஆசிய உள்ளக மெய்வல்ல…

    • 0 replies
    • 207 views
  17. 'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM (நெவில் அன்தனி) எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓ…

  18. கைது செய்யப்படுவாரா வங்கதேச கிரிக்கெட் வீரர் தாகா: தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை துன்புறுத்திய பிரச்னையில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹுசைன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹுசைன், 29. இதுவரை 38 டெஸ்ட் (72 விக்.,), 51 ஒரு நாள் (47), 6 ‘டுவென்டி–20’ (4) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது வீட்டில் வேலை செய்ததாக கூறப்படும் 11 வயதான சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதில், ஷகாதத் மற்றும் அவரது மனைவி சேர்ந்து தன்னை அடித்து காயப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்வர் ஹுசைன் கூறுகையில்,‘‘ சிறுமியை மீட்கும்போது அழுது கொண்ட…

  19. எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …

  20. தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை By NANTHINI 30 OCT, 2022 | 01:50 PM தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ, benchpress பிரிவில் 183 கிலோ, deadlift பிரிவில் 275 கிலோ பளுக…

  21. இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Christian Petersen படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்…

  22. ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …

  23. மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளர் ஜோயல் கார்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளராக ஜோயல் கார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடகால ஓப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். 63 வயதான ஜோயல் கார்னர் 2009 தொடக்கம் 2010 ஆண்டுவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளதோடு , பார்படோஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியின் முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜோயல் கார்னர் தெரிவிக்கையில் மீண்டும் அணியில் முகாமையாளராக இணைந்துக்கொண்டமை சந்தோஷமளித்துள்ளதாகவும், தனது அனுபவம…

  24. சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு டிசம்பர் 13, 1981. பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக 172 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் இயன் போத்தம் பந்தை விளாசும் காட்சி. | கோப்புப் படம். இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் வி…

  25. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.