விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
'Tournament-ல ஜெயிச்சிதான் நல்ல ஷூ வாங்குனேன்' - Arjuna Award பெற்ற Thulasimathi Murugesan தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'அர்ஜுனா விருது' துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்: மலேசியாவில் ஆரம்பம்: இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு Published By: VISHNU (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 6 போட்டிகளுடன் ஆரம்பமாவுள்ளது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மலேசியா முன்னின்று நடத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய மலேசியாவில் 17 வருடங்கள் கழித்து மற்றொரு பிரதான ஐசிசி கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப…
-
- 18 replies
- 751 views
- 1 follower
-
-
14 JAN, 2025 | 02:11 PM (நெவில் அன்தனி) வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது. சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நட…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்…
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தா…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2024-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் புதிய சாம்பியன், அணிகளின் மறக்க முடியாத வெற்றிகள், அதிர்ச்சி தரும் தோல்விகள், புதிய எழுச்சி அணிகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு என பல சுவாரஸ்யமான சம்பவங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தேறின. அந்த வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்தேறிய பல முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி பும்ரா சாதனை: கடிவாளத்தை நழ…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
30 DEC, 2024 | 11:34 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 234 ஓட்டங்களைக் குவித்த ரஹ்மத் ஷா, ஆப்கானிஸ்தான் சார்பாக அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதற்கு முன்னர் அபு தாபி விளையாட்டரங்கில் இதே அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு ஹஷ்மத்துல்லா ஷஹிதி குவித்த ஆட்டம் இழக்காத 200 ஓட்டங்களே ஆப்கானிஸ்தான் சார்பாக தனிநபருக்கான அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது. எவ்வாறாயினும், இப் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆட்டம் இழக்காமல் 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளதால் ரஹ்மத் ஷாவின் ப…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன் செய்த பும்ரா இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளராக அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்படி இதுவரை ஒரு இந்திய பவுலர் வைத்திருந்த அதிகபட்ச புள்ளிமதிப்பீடான அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அஸ்வினின் ஆல்டைம் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் செய்யப்பட்ட அப்டேட்டின் படி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் …
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெ…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 1…
-
-
- 9 replies
- 909 views
- 1 follower
-
-
19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங…
-
- 3 replies
- 384 views
- 1 follower
-
-
மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…
-
-
- 3 replies
- 431 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 06:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார். அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார். புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல்…
-
- 1 reply
- 294 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற…
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 468 views
-
-
09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன்…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார். குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார். தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு விபரம் வீடியோ கீழ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 455 views
- 1 follower
-
-
சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…
-
-
- 1 reply
- 319 views
- 1 follower
-
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வட…
-
- 14 replies
- 786 views
- 1 follower
-
-
பங்களாதேஷை 201 ஓட்டங்களால் வீழ்த்திய மே. தீவுகளுக்கு இரண்டரை வருடங்களில் சொந்த மண்ணில் முதலாவது வெற்றி 27 NOV, 2024 | 12:56 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விவியன் றிச்சட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் மிக இலகுவாக வெற்றிபெற்றது. கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியில் ஜஸ்டின் கிறீவ்ஸ் குவித்த கன்னிச் சதம், மிக்கைல் லூயிஸ், அலிக் அத்தானேஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அல்ஸாரி ஜோசப், கெமர் ர…
-
-
- 5 replies
- 412 views
- 1 follower
-
-
சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைத…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தல…
-
- 9 replies
- 731 views
- 1 follower
-