விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 466 views
-
-
09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன்…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார். குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார். தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு விபரம் வீடியோ கீழ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
பங்களாதேஷை 201 ஓட்டங்களால் வீழ்த்திய மே. தீவுகளுக்கு இரண்டரை வருடங்களில் சொந்த மண்ணில் முதலாவது வெற்றி 27 NOV, 2024 | 12:56 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விவியன் றிச்சட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் மிக இலகுவாக வெற்றிபெற்றது. கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியில் ஜஸ்டின் கிறீவ்ஸ் குவித்த கன்னிச் சதம், மிக்கைல் லூயிஸ், அலிக் அத்தானேஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அல்ஸாரி ஜோசப், கெமர் ர…
-
-
- 5 replies
- 410 views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய…
-
- 5 replies
- 824 views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தல…
-
- 9 replies
- 730 views
- 1 follower
-
-
சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…
-
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைத…
-
- 1 reply
- 351 views
- 1 follower
-
-
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 இன்று ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது ரி-20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது. இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. https://thinakkural.lk/article/311911
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார். எழுதியவர், கல் சஜாத் பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர். 58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களா…
-
-
- 9 replies
- 767 views
- 1 follower
-
-
பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்; அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றி (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலை…
-
- 9 replies
- 554 views
- 1 follower
-
-
சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார். எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி. டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203…
-
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர், இங்கிலாந்து அணித் தலைவர் லிவிங்ஸ்டன் (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இதே வகையான இரண்டு தொடர்களில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரை முன்னிட்டு மேற…
-
-
- 6 replies
- 916 views
- 1 follower
-
-
முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸி…
-
-
- 81 replies
- 7.3k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை. அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு …
-
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம் (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது. 13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தி…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 457 views
- 1 follower
-
-
பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்…
-
- 10 replies
- 10.9k views
- 1 follower
-
-
இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார். இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நில…
-
- 1 reply
- 578 views
- 1 follower
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தசுன் ஷானக்க இல்லை (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்…
-
-
- 14 replies
- 686 views
- 1 follower
-
-
இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளை…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை நடத்துமாறு ஐசிசி விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது 15 AUG, 2024 | 02:38 PM (நெவில் அன்தனி) மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணிய…
-
-
- 70 replies
- 3.4k views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். …
-
- 1 reply
- 440 views
- 1 follower
-