Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 01:04 PM பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். 20 வயது பிரிவின் கீழ் திருகோணமலை / சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், திருகோணமலை /சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  2. ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்ட…

  3. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. …

  4. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். …

  5. அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் ந…

  6. பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …

  7. 19 SEP, 2024 | 10:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனம…

  8. 18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…

  9. நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்…

  10. துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…

  11. சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அ…

  12. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…

  13. தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம் Published By: VISHNU 12 SEP, 2024 | 09:54 PM (நெவில் அன்தனி) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (12) இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்தது. போட்டியின் முதல் நாளன்று இலங்கைக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்திருந்தன. இதற்கு அமைய இரண்டாம் நாள் போட்டி முடிவில் இலங்கைக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்து…

  14. Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தத…

  15. தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை…

  16. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8…

  17. 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்…

  18. Published By: VISHNU 08 SEP, 2024 | 09:55 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். நியூயோர்க் சிட்டி ப்ளஷிங் மெடோவ்ஸ் ஆர்த்ர் அஷே அரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரினா சபலென்கா சம்பியனானார். ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு செட் முன்னிலையிலிருந்த சபலென்கா 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் கோக்கோ கோவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தார். இந்த வருடம் நடுநிலையாளராக போட்டியிட்ட 2ஆம் நி…

  19. இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடரின் முதல…

  20. வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…

  21. பவர் பிளேவில் 113 ஓட்டங்கள் விளாசி அவுஸ்திரேலியா புதிய சாதனை சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில், பவர் பிளே ஓவர்களில் 113 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்கொட்லாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி, எடின்பர்க்கில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அவுஸ்திரேலிய அணியில் ஜேக் ஃபிராஸர் டக் அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு, ருத்ர தாண்டவமாடினார். பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்…

  22. லோர்ட்ஸ் அரங்கில் ஜூன் 11 இலிருந்து 15 வரை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி Published By: VISHNU 03 SEP, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2025 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஜனவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இரண்டு வருட சுழற்சி பருவ காலத்தைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள …

  23. Published By: VISHNU 01 SEP, 2024 | 08:37 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் சிட்டியில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் முறையே சம்பியன்களான காலோஸ் அல்காரெஸ் மற்றும் நோவாக் ஜோக்கோவிச் ஆகிய இருவரும் இந்த வருடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் அதிர்ச்சி தோல்விகளைத் தழுவி நொக் அவுட் செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்றுப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத நெதர்லாந்து வீரர் பொட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்கல்பிடம் 3 நேர் செட்களில் 2023 சம்பியன் காலோஸ…

  24. சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்…

  25. Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.