எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 1 reply
- 2.1k views
-
-
தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கு…
-
- 7 replies
- 1.2k views
-
-
மீள நினைவூட்டுவது வரலாற்றின் கடமை: ( மறப்பது மனிதனின் இயல்பு? ) தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களில் ஒன்றாக திகழ்கிறது “நமது ஈழநாடு”. தெற்காசியாவின் மிகவும் பழைமையான மற்றும் உயர் தரத்திலான செய்தித்தாள் வெளியீட்டில் தடம் பதித்த யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான முதலாவது தினசரியான “ஈழநாடு” பத்திரிகையை தழுவி “நமது ஈழநாடு” பத்திரிகை உருவாக்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் கோபு அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களை பணிப்பாளராகவும் மூத்த பத்திரிகையாளர் இராதையன் அவர்களை பிரதம ஆசிரியராகவும் கொண்டு புத்திஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்ட “நமது ஈழநாடு” பத்திரிகை, தமிழர்களின் உரிமைக்குரலாக 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தினசரி பத்…
-
- 0 replies
- 773 views
-
-
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் தனது .யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார். ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட…
-
-
- 1 reply
- 1.4k views
-
-
'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒர…
-
-
- 3 replies
- 545 views
-
-
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று: தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று. காலை விடிந்ததென்று பாடு:சங்க காலம் திரும்பியது ஆடு இந்தப்பாடல் போர்க்காலத்தில் பிரபலமான பாடல். எஸ்.ஜி சாந்தன் பாடிய பாடலிது. சோழ மன்னர்களின் படைகளுக்கு ஒப்பாக புலிகளின் படை ஒப்பிடப்பட்டு எழுதப்பட்ட பாடலிது. இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியிருந்தார். இப்பாடலின் சரணத்திலும் சோழன் பெயர் வருகிறது. எட்டுத் திசையாவும் தொட்டுப் பெருஞ்சோழன் ஏறி கடல் வென்றதுண்டு:அவன் விட்ட இடமெங்கும் வேங்கைக் கடல்வீரன் வென்று வருகிறான் இன்று என்பதே அச்சரணம். இக்காலத்தில் இராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சை நிலவுவதைக் காண்கிறோம். இராஜராஜ ச…
-
- 0 replies
- 504 views
-
-
போர்க்காலத்தில் இயல்பான வழக்குடைய இலக்கணச் சொற்களிலேயே பெருவீதமான பாடல்கள் வெளிவந்தன. மிகச்சொற்பமான பாடல்களே வட்டார வழக்குச் சொற்களையும், காலச்சூழல் அமைவுச் சொற்களையும் கொண்டமைந்தன. உதாரணமாக இன்றைய காலத்தில் 'நன்றாக உள்ளது' என்பதற்கு 'சட்டப்படி' எனச் சொல்வர். இது காலச்சூழல் அமைவுச் சொல். அக்காலத்தில் 'அந்தமாதிரி' என்பர். இதை வைத்தும் ஈழப்பாடலுண்டு. இப்பதிகையிலே ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த பாடல்களில் 'எங்கட', 'நம்மட' போன்ற சொற்கள் உள்ளடங்கும் பாடல்களை நோக்கலாம். சினிமாவும், போரல்லா இலக்கியமும் என அதிகமான உள்ள இக்காலத்தில் இவ்விதமான பதிவுகளுக்காக தேடலும், நினைவுப் பதிவும் மிக அவசியமாம். ஆயிரமான ஈழப்பாடல்களில் 'எங்கட', 'நம்மட' எனும் சொல் இடம்பெறும் பாடலைக் க…
-
- 0 replies
- 578 views
-
-
எச்சார்புளோர் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றினை எழுதினும், ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை புலிகள் எதிர்கொண்டமை பற்றியோ, புலிகளை ஜெனரல் அனுருத்த ரத்வத்தை எதிர்கொண்டமை பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் எதிர்கொண்ட அரச தரப்பு இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தைக்கும் முக்கிய இடமுள்ளது. இதனால்தான் புலிகளின் ஈழப்போராட்ட பாடல்களில் அரச தரப்பின் இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தை இடம்பிடித்திருக்கிறார். இப்பாடல்களில் எல்லா இடத்திலும் பரிகாசம் செய்யப்படும் ஒருவராகவே ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இடம்பெறுகிறார். கேணல் நிலையில் இருந்த அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர்(ரிவிரெஷ) நடவடிக்கையின் பின்னர் நேரடியாக ஜெனரல் நிலைக்கு அன்…
-
- 0 replies
- 284 views
-
-
லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது. "மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ள…
-
-
- 7 replies
- 1.2k views
-
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…
-
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
Tamil Naatham March 6, 2005 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information And Communication Technology) ஒரு தேசத்தின் எழுச்சியையும், இருப்பையும் தீர்மானிக்க வல்லது. இந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசமும் உலகின் தகவல் தொடர்பாடல் வளர்ச்சி வேகதிற்கு ஈடுகொடுத்து தனது தேவைகளை தனது சொந்தக் காலில் நின்று பூர்த்தி செய்யக் கூடிய வகையில் வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியின் ஒருபடியாக "வன்னிரெக்" 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ITTPO எனப்படும் சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் புகழ் பூத்த தகவல் தொழில் நுட்பவல்லுநரும், வன்னி ரெக்கின் முகாமை நிறுவனமான ITTPO வின் தலைவரும…
-
- 0 replies
- 731 views
-
-
www.puthinam.com ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் தூரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும். ~வன்னி நிலம் வரவேற்கிறது| எனும் பெயர்ப் பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்கு பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன. சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள். நீங்கள் உங்களுடைய வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு செல்ல முடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் து}ரத்தில் எமது சோதனை நிலையம் அமைந்துள்ளது. வன்னிப்பகுதிக்குள் செல்வோருக்கான இடத்தில் ப…
-
- 0 replies
- 379 views
-
-
கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு ஜூலை 23, 2024 ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது. மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் …
-
- 1 reply
- 639 views
-
-
https://vayavan.com/?p=12702 “போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்” என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும் அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை. அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்புவார்கள். அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது. ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு பகுதிக்கு அழைத்துவந்து அவர்களை…
-
- 0 replies
- 907 views
-
-
எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். போராடடா, ஒரு வாளேந்தடா வாழும் வரை போராடு சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு தோல்வி நிலையென நினைத்தால் அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா) இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்னிச் சோழன்
-
-
- 10 replies
- 694 views
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]" மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி…
-
- 1 reply
- 422 views
-
-
Published By: VISHNU 23 JUL, 2024 | 06:41 PM கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழ…
-
- 0 replies
- 440 views
-
-
கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான்…
-
- 1 reply
- 498 views
-
-
ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள்…
-
- 0 replies
- 411 views
-
-
"வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக்குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்…
-
- 0 replies
- 531 views
-
-
"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்க…
-
- 1 reply
- 420 views
-
-
"பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு" இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இலங்கையின் வடக்கு மாகாணம் மோதலின் நிழலில் இருந்து ஒரு பலவீனமான அமைதியைத் தழுவியது. இரண்டரை தசாப்தங்களாக நீடித்த போர், மே 2009 இல் முடிவுக்கு வந்தது, நிலத்திலும் அதன் மக்களிலும் கண்ணுக்கு தெரியும் மற்றும் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது. இடிபாடுகள் மற்றும் போர்நிறுத்தத்தின் அமைதிக்கு மத்தியில், ஒரு இதயத் துடிப்பு எதிரொலிக்கத் தொடங்கியது - பாரம்பரியம், நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் இதயத் துடிப்பு. வடக்குக் கரையோரமாக அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் கடலோர காங்கேசன்துறை கிராமம் யுத்த அழிவுகளை நேரடியாகக் கண்டிருந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த மீன்பிடி குக்கிராமம் அதன் முந்தைய நிழலின் …
-
- 0 replies
- 269 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
-
- 1 reply
- 746 views
-
-
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த…
-
- 0 replies
- 700 views
-