அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் ஜப்பான் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடனேயே கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டுப் பிரதமர் அபே பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டதுடன் கடந்த மார்ச் மாதம் ரோக்கியோவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களையும் நடாத்தியிருந்தார். இப்பேச்சுக்களின் போது பொருளாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்தி…
-
- 0 replies
- 459 views
-
-
மீண்டும் தோன்றும் நெருக்கம் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இதுவரையில் பகிரங்கமான மோதல்கள் இருந்ததில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்வப்போது தனது உரையில் கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்திருந்தாலும், இரா.சம்பந்தனின் பெயரைக் குறிப்பிட்டு அத்தகைய விமர்சனங்களைச் செய்ததில்லை. அதுபோலவே, இரா.சம்பந்தன் ஒருபோதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனை விமர்சிக்கவோ, அவரைக் குறை கூறும் வகையிலோ நடந்து கொள்ளவில்லை தமிழ் அரசியல் பரப்பில் அண்மையில் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட்ட ஒரு நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடந்த “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீடு தான். வடமாகாண ம…
-
- 0 replies
- 430 views
-
-
வடக்கிற்கும் பரவும் சீன ஆதிக்கம் -சத்ரியன் இப்போது இந்தத் திட்டமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்றியிருக்கிறது. இந்தச் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது இந்திய அரசாங்கம். வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணி சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. இது தான் இந்தச் சர்ச்சையின் அடிப்படை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும், அரசாங்…
-
- 2 replies
- 639 views
-
-
இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார்’ என்ற நூல் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த மேடையில் அமர்ந்திருந்தார். விக்னேஸ்வரன் ஆதரவு அணியும், கூட்டமைப்பி னரும் சங்கமித்த நிகழ்வாக அது அமைந்தது. 5ஆண்டுகள் அஞ்சாதவாசம் கிட்டத்தட்ட 5ஆண்டுகளுக்கு முன்பாக, 2013ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 697 views
-
-
வித்தியா முதல் றெஜினா வரை.... சமுதாய சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு, நாகரிக அலங்கோலங்களின் அவஸ்தைக்குள் பலர் தங்களைத் தாங்களாகவே தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிறரால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் விளைவுகள் சமகாலத்தில் பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. சமூக விரோதச் செயற்பாடுகளையும் அவை தூண்டியிருக்கின்றன. ஆன்மீக ரீதியில் உள்ளத்தை அடக்கி ஆளவேண்டிய ஆறறிவு கொண்ட மனிதன் உள்ளத்தால் அடக்கி ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு சில வினாடித்துளிகளில் எழுகின்ற உணர்ச்சிக் கோளாறுகளுக்கு அடிமையாகி, அதன் வழியே பலரின் வாழ்க்கையில் விளையாடி, அவர்களும் அழிந்து ம…
-
- 0 replies
- 623 views
-
-
புலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும் கருணாகரன் புலியைக் கொல்லும்போது அது கொண்டாட்டமாகவே மாறி விடுகிறது. இது ஏன்? புலி பயங்கரமாக இருப்பதாலா? அல்லது அப்படி உணர்வதனாலா? அல்லது புலியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற உள்ளுணர்வின் தூண்டலினாலா? 02 கிளிநொச்சி அம்பாள்குளம் என்ற காட்டோரக் கிராமத்தினுள் புகுந்த (சிறுத்தை) புலியை 2018.06.21 இல் அந்தக் கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பிறகு அதைப் படமெடுத்து முகப்புத்தகம் உட்படச் சமூக வலைத்தளங்களில் பரவினார்கள். ஊருக்குள் வந்த புலியைத் தேடுவதும் பிறகு அதைச் சுற்றி வளைத்துப் பலர் தாக்குவதும் கொல்வதும் கொன்றபின் இறந்த புலியின் உடலைத் தூக்கிக் கூட்டாகக் கொண்டாடுவதும் இந்தக் காட்சிகளில் தெர…
-
- 0 replies
- 633 views
-
-
கூட்டமைப்பிலிருந்து வெளியில் வர என்ன காரணம்? -சிவசக்திஆனந்தன்|
-
- 0 replies
- 222 views
-
-
விக்னேஸ்வரன் இப்பொழுதும் தளம்புகிறாரா? -மக்கள் உணர்த்தும் செய்தி என்ன? விக்னேஸ்வரனின் நூல் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சம்பந்தனும் விக்கியும் ஒன்றாகத் தோன்றும் மேடை என்பதால் அது தொடர்பில் ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகையின் துவக்க விழாவில் இருவரும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். அந்த மேடையில் மாவைக்கு எரிச்சலூட்டும் கருத்துக்களை விக்கி தெரிவித்திருந்தார். அதன் பின் வேறு சில மேடைகளில் சம்பந்தரும் விக்கியும் ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் காலைக்கதிர் மேடையைப் போல விக்கியின் நூல் வெளியீட்டிலும் சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசப்படக் கூடும் என்ற ஆர்வம் கலந்த ஊகங்கள் பரவலாகக் காணப்பட்டன. …
-
- 1 reply
- 440 views
-
-
சம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது ? யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டில் பங்குகொண்டிருந்தனர். இதில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார். சம்பந்தன் நிகழ்வில் பங்கு பற்றியது அத்துடன், விக்கினேஸ்வரனை எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்னும…
-
- 0 replies
- 447 views
-
-
யார் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள்? அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்ற நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான காய்நகர்த்தல்களும் அரசியல் நகர்வுகளும் மிகத்தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அதற்கான அறிவிப்பு செய்யப்படவேண்டும். அப்படிப் பார்த்தாலும் கூட இன்னும் 18 மாதங்கள் அதற்காக இருக்கின்றன. ஆனால் இவ்வளவு குறிப்பிடத்தக்க நீண்டகாலம் இருந்தும் கூட தற்போதே அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாரிய கவனம் செலுத்த ஆரம்பித்து…
-
- 0 replies
- 773 views
-
-
உறுதியான அரசியல் தலைமையின் அவசியம் நாட்டில் தேர்தல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர,அதற்கு அப்பால் உள்ள ஜனநாயக அரசியலில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.மக்கள் நலன் சார்ந்து நாட்டம் கொள்ளப்பட வேண்டிய சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி அரசியலிலும் உரிய வகையில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியல் அவசியம். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், தேர்தலுக்கு அப்பால் உள்ள அரசியலே நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமான அரசியல். அது ஜனநாயக அரசியல். மக்களுக்கான அந்த ஜனநாயக அரசியல் இல்லையென்றால், அது போலித்தனமானது.வெறுமனே அரசியல் அந்தஸ்தையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியலாகும். அது ஆட்சிக்குப் …
-
- 0 replies
- 387 views
-
-
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் இன்று இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் சமூகவலைத்தளங்களில் பிரதான சர்வதேச பேசுபொருளாக அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சந்திப்பு, பலஸ்தீன விவகாரம், ISIS பயங்கரவாதம், சிரிய நெருக்கடி, அகதிகள் விவகாரம், புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றங்களும் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. இதே சூழ்நிலையில் அமெரிக்க - சீன வர்த்தகப் போர், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப்போர் என்ற வாசகங்களும் உலகச் செய்திகளில் பரவலாக பேசப்படுகின்றன. பூலோகம் இரண்டு மகா யுத்தங்களையும், சோவியத் சீன, வியட்நாமிய கொரிய கம்யூனிச புரட்சிகளையும், அமெரிக்க சோவியத் வல்லரசுகள் உல…
-
- 0 replies
- 787 views
-
-
சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், அண்மையில் நடந்து முடிந்துள்ள சிங்கப்பூர் சந்திப்பு, பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை, ஐ.அமெரிக்க - வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்திப்பில் முழுமையாக உடன்பாடு எட்டப்பட்டது எனச் சொல்லுமளவுக்கு, எதுவுமே இருந்திருக்கவில்லை. உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியத் தலைவர் கிம், வடகொரியாவுக்கான - UNGJIN கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார். அது, வடகொரியாவின் அண…
-
- 0 replies
- 262 views
-
-
விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார் இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்ல…
-
- 0 replies
- 410 views
-
-
‘அடி மடியில் கை’ மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு, புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை பற்றி நாம் அறிவோம். அந்த வகையில் மூன்று முக்கிய திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன: 1. மாகாணசபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்படும் நியமனப்பத்திரத்திலுள்ள மொத்த வேட்பாளர்களின…
-
- 0 replies
- 728 views
-
-
ஹீரோவாகிய இராணுவ அதிகாரியும் சிதையும் தமிழ் தேசியமும் நரேன்- வன்னியில் இருந்து மாற்றலாகி சென்று மீண்டும் வன்னிக்கு வந்திருக்கும் கேணல் ரத்னபிரிய என்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முகப்புத்தகங்கள், ஊடகங்கள் என்பவற்றில் அந்த விடயம் பேசுபொருளாக மாறியிருப்பதுடன் அடுத்து வரும் ஜெனீவா அமர்விலும் அது தாக்கம் செலுத்தும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்….?, யார் பொறுப்பு …? என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானதே. யாழ் மாவட்டத்தை சூரியகதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் 1995 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகளின் கட்மைப்பு வன்னியை மையமாக கொண்டு இ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வாய்ச் சொல்லில் வீரரடி கடந்த 24ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சருடைய உரைத்தொகுப்பு புத்தகமாக வெளியாகியது. உலகத் தலைவர்கள் பலரும் தாம் அவர்கள் செய்த வீரதீரச் செயல்கள், தங்கள் நாட்டுக்காக தாம் உழைத்த உழைப்பு, புரட்சி, பொருளாதார மாற்றங்கள் என பல நடைமுறைßச் செயல் வடிவங்களைப் புத்தகமாக வெளிக்கொணர்வது வழமை அல்லது கண்கூடு, ஆனால் இன்று வடக்கில் விநோதம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாரதி சொன்னது போல “வாய்ச் சொல்லில் வீரரடி” என்ற கூற்றுக்கு வலுச் சேர்ப்…
-
- 0 replies
- 594 views
-
-
சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், எதிர்பாராத விதமாக, தேசிய செய்தியாக மாறி, விலங்குரிமைக்கான கோரிக்கைகளும் விசாரணைக்கான கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இத்தனை கருணை மிகுந்த தேசமாக இலங்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் பலருக்கு எழுப்பியிருக்கிறது. உயிர்களைத் தேவையின்றிக் கொல்லக் கூடாது என்பது, எம்மில் அநேகர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் தான். அச்சிறுத்தை கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, மனது வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும், சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், அதனுடன் “செல்பி” எடுத்துக் கொண்டு, அதை ஒரு க…
-
- 0 replies
- 414 views
-
-
மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேற்றம்: ‘இருந்தென்ன போயென்ன’ உலக அரசியல் அரங்கில், ‘மனித உரிமை’ என்ற சொல்லாடல், பல பொருள்கோடல்களுக்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமைக்கான வரைவிலக்கணங்கள் ஒருபுறம் இருந்தாலும். மீறப்படுவது யாருடைய உரிமைகள் என்பதும், மீறுவது யார் என்பதுமே, மீறப்படுவது மனித உரிமைகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றன. மனித உரிமையின் அரசியல், அதிகம் பேசப்படாத விடயமாக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை, தனக்கான மனித உரிமைப் பேரவையை நிறுவியது முதல், மனித உரிமையின் உலகளாவிய அரசியலைப் பொது வெளிக்குக் கொணர்ந்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் இன்னமும் எல்லோருக்கும் …
-
- 0 replies
- 334 views
-
-
சத்திய சோதனை! களத்திலிருந்து பசீர் காக்கா / காக்கா அண்ணா காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். 'சோகசோபிதசொர்ணக்குயில்' இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார். 'மயானத்தில் மன்னன்' என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதாபாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக …
-
- 0 replies
- 725 views
-
-
முடிந்துபோய்விட்ட மகிந்தவின் அரசியல் யுகம் கடந்து போனவற்றைத் திரும்பிப்பார்க்காது நாட்டின் எதிர்காலம் சிறக்க முன்னோக்கி நகர்வோம் என்கிறார் கலாநிதி விக்கிர மபாகு கருணாரத்ன. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தமை பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தினூடாக கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக நடைமுறை தொடரவேண்டும…
-
- 0 replies
- 694 views
-
-
விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்? முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மேடையும் அப்போது, அதி முக்கியத்துவத்துடன் நோக்கப்பட்டது. ஏனெனில், முரண்பாடுகள் முற்றிய நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி தூக்கிய போர்க்கொடியை, நேரடியாகத் தலையிட்டு, அப்போதுதான்…
-
- 0 replies
- 568 views
-
-
புதிய அரசியல் யாப்பு அனைவரையும் திருப்தி படுத்தாதது...பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
-
- 0 replies
- 362 views
-
-
யுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா? மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான சர்வதேச விசாரணை பொறிமுறைகளை , நீதி பொறிமுறைகளை ஏனைய விடயங்களுடன் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிவழங்கியிருந்தது. இந்த பொறிமுறையானது சர்வதேச நிபுணர்களின் தலையீட்டினை…
-
- 0 replies
- 369 views
-
-
‘அதையும் தாண்டிப் புனிதமானது’ கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட…
-
- 0 replies
- 492 views
-