அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கை ராணுவத்தின் போர்க் கொள்ளை! அஜித் போயகொட அழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உருவாகிவிடும்போலும்! என்னுடைய ராணுவ வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது. வடக்குத் தீவுகளில் உள்ள காரைநகரில், 1991-ல் நாங்கள் நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த சம்பவம். நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மக்களை எதிர்கொள்ளும்போது போரின் பாதிப்புகளை உங்களால் உணர முடியும். கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்குப் பகுதியில் பணிபுரிந்த நான், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்கு மாறுதலுக்காகக் காத்திருந்தேன். காரைநகரின் கடற்…
-
- 0 replies
- 553 views
-
-
மீண்டும் தமிழர்களை ஏமாற்றிய இணைத்தலைமை நாடுகள் 157 Views எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன. தமிழர்கள் என்ற சொ…
-
- 0 replies
- 368 views
-
-
அரசியலமைப்பு பதற்றங்களும் தடுமாற்றமான செய்திகளும் – ராஜன் பிலிப்ஸ் – சர்வஜன வாக்கெடுப்புகள் ஆபத்து நிறைந்தவை அத்துடன் எவ்வாறு அமையக்கூடியவை என்று முன்னறிந்து கூறவும் முடியாதவை. ஏனென்றால் எந்தவொரு வாக்காளரும் சர்வஜன வாக்கெடுப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரத்துக்காக அல்லாமல் தன்னால் எதிர்நோக்கப்படுகின்ற அல்லது தனது சிந்தனையில் இருக்கின்ற வேறு எந்தவொரு விவகாரத்துக்காகவும் வாக்களிக்கக்கூடும். குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அந்த வாக்கெடுப்பைக் கோருகின்ற அரசாங்கத்துக்கு அல்லது தலைவருக்கு எதிராக மக்கள் வாக்களிக்கும் போக்கை அடிக்கடி அ…
-
- 0 replies
- 383 views
-
-
வடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை? யாருக்குத் தீமை? நிலாந்தன் 24 ஜூன் 2013 வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அத்தேர்தலை நடாத்துவதால் தமிழர்களிற்கும், அரசாங்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள் எவை என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மாகாண சபை அமைப்பெனப்படுவது தமிழர்களுடைய தெரிவு அல்ல. ஏனெனில், அது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. எனவே, மாகாண சபை உருவாக்கத்தின் போது தமிழர்கள் ஒரு தரப்பாக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது முழு இலங்கைத் தீவுக்குமான அத…
-
- 0 replies
- 467 views
-
-
சீனாவும் இந்தியாவும் இலங்கையும் -என்.கே. அஷோக்பரன் ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின் தெற்கில் அமைந்துள்ள, கடலால் பிரிந்துள்ள நாடு. பட்டுப்பாதை உள்ளிட்ட கடற்பாதைகளின் முக்கிய தொடுபுள்ளி. இந்த அமைவிடம்தான், பல்வேறு நாடுகளும் இலங்கையில் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம். சர்வதேச அளவிலான அதிகாரம், செல்வாக்கு என்பவை, இன்று மாற்றத்துக்கு ஒ உள்ளாகி வருவது அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பனிப்போரில் அமெரிக்கா வென்றபோது, சர்வதேச அரங்கின் அதிகாரத்தின் ம…
-
- 0 replies
- 909 views
-
-
கூட்டமைப்பின் சஞ்சலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-11
-
- 0 replies
- 477 views
-
-
துயிலுமில்ல தீர்மானங்களும் அரசியல் விவேகமும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - -வளவன் 23 அக்டோபர் 2013 மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைப்பது தொடர்பாக இரு பிரதேச சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பல உடனடி விளைவுகளையும், அதிர்வுகளையும் தோற்றுவித்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன எனவும், இதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க, எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கருத்துத் தெரிவித்துள்ளதற்கு ஏறத்தாள சமகாலத்தில் வடக்கு கிழக்கில் படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற தீர்மானங்கள் சாவகச்சேர…
-
- 0 replies
- 650 views
-
-
காலம் கடத்தும் சந்தர்ப்பம் பிறழ் நடத்தைகள் காரணமாக கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்ற குற்றச்செயல்களையும், சமூகவிரோதச் செயற்பாடுகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளாக உருவகப்படுத்தி, அதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி, இராணுவத்தின் வெளியேற்றம், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், உள்ளிட்ட அவசரமாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளையும் அரசியல் தீர்வு காணும் அவசியத்தையும் புறந்தள்ளி, காலம் கடத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த நிலைமைகள் துணைபுரியக் கூடும். வாள்வெட்டுக் கு…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழர் அரசியல், வடக்கின் அரசியலாக சுருங்கிச் செல்கிறதா? - யதீந்திரா இப்படியொரு கட்டுரை எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, நீண்ட காலத்திற்கு முன்னர் காலம்சென்ற இராணுவ ஆய்வாளரும் நண்பருமான, டி.சிவராம் (தராக்கி) எழுதிய கட்டுரை ஒன்றே நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை, விடுதலைப்புலிகளின் 'முதலில் யாழ்ப்பாணம்' என்னும் கொள்கை (The LTTE's 'Jaffna First' policy) என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. மேற்படி கட்டுரை, 'புலிகளின் ஆதரவாளர்' என்னும் முத்திரையற்ற காலத்தில் சிவராமால் எழுதப்பட்ட ஒன்றாகும். அது முற்றிலும் இராணுவ தந்திரோபாயத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று. ஆனால் இக்கட்டுரை வடக்கு மாகாணசபை கூட்டமைப்பால் வெற்றிகொள்ளப்பட்ட பின்புலத்தில் நிகழ்ந்து வரும் சில விடயங்க…
-
- 0 replies
- 489 views
-
-
பொன்சேகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் இலங்கை இராணுவம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி, மன்னார் மாட்டத்தில் விடத்தல்தீவில் அமைந்திருந்த, விடுதலைப் புலிகளின் போர் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இது, இராணுவத்தினர் பெற்ற முக்கிய வெற்றி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுவரை இராணுவத்தினர், குறிப்பிட்டதோர் இடத்தில், எவ்வளவு பாரிய வெற்றியை அடைந்தாலும், அவர்கள் மீண்டும் கோட்டைவிட்டு விடுவார்கள், புலிகள் மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்றிய இடத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள் என்றதோர் சந்தேகக் கண்கொண்டே, சிங்கள மக்கள் முன்னைய, அந்த வெற்றிகளை நோக்கினார்கள். ஆ…
-
- 0 replies
- 518 views
-
-
சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா? ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த உடனேயே, அவர் பொய் சொல்கிறார் என்று இ…
-
- 0 replies
- 296 views
-
-
மறைக்கப்படுகின்றதா அஷ்ரப் மரண அறிக்கை? ஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு 48ஆம் ஆண்டில், ரோமானியா அரசியல்வாதி பம்பேய் தி கிரேட், படுகொலை செய்யப்பட்டது முதற்கொண்டு, இன்று வரைக்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் படுகொலைகளுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்திருக்கின்றது. அதேபோன்று, 1943ஆம் ஆண்டு, போலாந்தின் பிரதமரும் இராணுவப் பிரதானியுமான வேல்டிஸ்லவ் சிகாரொஸ்கி, விமான விபத்தில் உயிரிழந்தது தொடக்கம், இன்றுவரை விமான விபத்துகளின் ஊடாக இடம்பெறும் படுகொலைகளுக்குப்…
-
- 0 replies
- 552 views
-
-
பிரிக்க முடியாத ஈழம் தீபச்செல்வன் தமிழீழம் சாத்தியமற்றது என்று Ôதி இந்துÕ நாளிதழின் ஆசிரியர் ராம் தனது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஈழ மக்களின் போராட்டத்திற்கு எதிராக அவ்வாறு தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழத் தமிழர்களுக்கு தான் விரோதமானவர் அல்ல என்று சொல்லும் ராம் விடுதலைப் புலிகளையே தான் விமர்சிப்பதாகக் கூறுகிறார். ஆனால் தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலமும் இனப்படுகொலையாளியான ராஜபக்சேவின் நண்பனாக இருந்துகொண்டு ஈழ இனப்படுகொலை விடயத்தில் அவரையே விசாரணை செய்ய வேண்டும் என்பதும் ஈழத் தமிழருக்கு விரோதமானதே. தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலம் ஈழத் தமிழர்களின் அறுபது வருடகால போராட்டம்மீது தனது விரோத ந…
-
- 0 replies
- 1k views
-
-
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள் ‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’ என்றவாறாக வைரமுத்துவின் வரிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோலவே, தற்போதைய கள நிலைவரங்களின் பிரகாரம், ‘புலி இருந்தாலும் பலம்; அது செத்தாலும் பலம்’ என்பது போல ஆகிவிட்டது. புலிகளின் மௌனத்தின் பின், புலிகளைத் தமிழ் மக்கள் மீள நினைக்க மறந்தாலும், புலிகளின் பகைவர்கள் அவ்வப்போது அவர்களைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்த பிற்பாடு, நடைபெற…
-
- 0 replies
- 471 views
-
-
விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பல பாடங்களை கற்பித்திருக்கின்றன. தேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதோடு ஆட்சியாளர்கள் மீளவும் தமது சேவைகளை திரும்பிப் பார்ப்பதற்கும் தேர்தல் முடிவுகள் வழிவகுத்திருக்கின்றன. மேலும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வழங்குகின்ற வாக்குறுதிகளை உரியவாறு நிறைவேற்ற வேண்டும். மக்களை ஏமாற்ற முனைபவர்களை மக்களே தூக்கியெறிவர் என்கிற சிந்தனையையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்ற…
-
- 0 replies
- 265 views
-
-
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’ October 28, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது?எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வ…
-
- 0 replies
- 289 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்? சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலைய…
-
- 0 replies
- 522 views
-
-
அரசியலைத் தாண்டிய பொருளாதார அடாவடித்தனம் உலக ஒழுங்கை மீறி பொருளாதாரத்தை அபாயத்தில் தள்ளும் ட்ரம்ப் சதீஷ் கிருஷ்ணபிள்ளை உலக வல்லரசின் ஜனாதிபதி பதவி. அந்தப் பதவியை அலங்கரிப்பவர் சற்று நிதானம் தவறியவராக இருந்தால் போதும். ஒட்டுமொத்த உலகமும் பாதுகாப்பற்றதாக மாறி விடும். இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மனநல ஆரோக்கியத்துடன் இருப்பதை உளவியல் மருத்துவ சோதனைகள் மூலம் நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தலைவர். உலக நலன் கருதிய மரபு சார்ந்த சிந்தனைகளைத் தாண்டி, வல்லரசு மனப்பான்மையுடன் முதலில் அமெரிக்கா(America First) என்ற கொள்கையை முன்னிறுத்தியவர். அதன் அடிப்…
-
- 0 replies
- 512 views
-
-
ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் ஜப்பான் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடனேயே கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டுப் பிரதமர் அபே பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டதுடன் கடந்த மார்ச் மாதம் ரோக்கியோவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களையும் நடாத்தியிருந்தார். இப்பேச்சுக்களின் போது பொருளாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்தி…
-
- 0 replies
- 457 views
-
-
சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து, தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண், இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள். வந்த தோழியர்க்கோ கோபம். நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா? தோழியர் குற்றம் உரைக்க, அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளே உறங்கிக் கிடந்த தோழி, தன்மேல் குற்றம் சொன்னவர்களைப் பார்த்து, 'இதென்ன, நீங்கள் சின்னவிஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுகிறீர்கள். நீங்கள் குற்றம் சொல்லவேண்டிய நேரமா இது?" …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா? தெற்கில் ஒரு தரப்பினர் இலங்கையில் ஹ।ிட்லரின் ஆட்சி போன்ற ஆட்சிமுறை உருவாக வேண்டும் என்கிறார்கள். வடக்கிலோ தமிழீழ விடுதலைப்புலிகள் தலைதூக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் விரும்புகிறார்கள். இந்த நிலை தொடருமானால் இந்த இரு தரப்பினரும் தாம் விரும்பும் விதத்திலான தலைவர்களை அடைந்திடக் கூடும். உண்மையைக் கூறுவதானால் நாட்டின் பெரும்பாலான மக்கள் குறிப்…
-
- 0 replies
- 867 views
-
-
தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது “சுரேஸ் பிரேமச்சந்திரனின் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் எதிர்காலம் என்ன?” என்று கேட்கிறார்கள் சிலர். இதில் ஒரு சாரார் முன்னொரு காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். இதிலும் சிலர் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு தொடர்பில் உள்ளவர்கள். இந்தக் கேள்வி ஒன்றும் புதியதல்ல. இவர்களுக்குள்ளே நீண்ட காலம் கொதித்துக் கொண்டிருந்த கேள்வியே. நேற்று முன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரைய…
-
- 0 replies
- 536 views
-
-
ரஜினியின் ஆன்மிகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள். ஏன் பொருத்தமான வேறு ஆட்கள் தமிழ்ச் சமூகத்தில் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை குறைந்த சமூகமாக தமிழர்கள் மாறிவிட்ட பிறகு புதியவர்களை எப்படித் துணிச்சலாகத் தேடமுடியும்? இதனால் தங்களுக்கு முன்னே உள்ள பிம்பங்களே அவர்களுக்கு அவதாரங்களாக, தெய்வங்களாகத் தெரிகின்றன. தெய்வ நிலையில் ஒருவரைப் பார்க்க…
-
- 0 replies
- 848 views
-
-
பதின்மூன்றை வைத்துச் சுத்துவது? நிலாந்தன். 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன. 13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது, கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக அது யாப்பில் இருந்து வருகிறது, ஆனால் நடைமுறையில் முழுமையாக இல்லை. அதாவது கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த இலங்கை அரசாங்கங்கள் யாப்பை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று பொருள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், கடந்த 36 ஆண்டுகளாக யாப்பு மீறப்பட்டு வந்துள்ளது. இப்பொழுதும் அதை முழுமையாக அமல்படுத்த ஜனாதிபதி தயாரில்லை. போலீஸ் அதிகாரங்களைக் கழித்து விட்டுத்தான் 13ஆவது திரு…
-
- 0 replies
- 475 views
-
-
அதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்? -இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில் எழுதிவிடுவார்கள் போல் தோன்றுகிறது. இவர்கள், அதிகார மோதல் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்களின் உப பிரிவுகள் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் ஆழமாகவும் அகலமாகவும் பேசுகிறார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த கட்சி இப்போது படும்பாடு சொல்லி மாளாது. இந்த அதிபர் முறைமையானது, நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஏக போக உரிமையைக் கொண்டது என்பதனை ஜெயவர்தனாவும் அறிவார் ரணிலும் புரிந்து கொள்வார். தாங்கள் உ…
-
- 0 replies
- 339 views
-