Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வாக்­கு­று­தி­களை மறக்­கின்­ற­னரா அரசியல் தலை­வர்கள்? பிர­த­மரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் தேசிய அர­சியல் நெருக்­க­டிகள் தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மிகப் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் 16 உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை ஆத­ரித்து வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து தேசிய அர­சி­யலில் இந்த நெருக்­கடி தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. காரணம் இவ்­வாறு பிர­தமர் ர…

  2. ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை உலுக்­கிய நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் என்ற அர­சியல் அந்­தஸ்தில் மறு­பி­றவி எடுத்­தி­ருக்­கின்றார் என்றே கூற வேண்டும். இப் பிரே­ரணை வெற்­றி­பெற்­றி­ருந்தால் அவர் பிர­தமர் பத­வியைத் துறக்க நேரிட்­டி­ருக்கும். வேறொருவர் பிர­த­ம­ர­ாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்பார். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமைப் பத­வியும் கூட அவ­ரி­ட­மி­ருந்து சில­வே­ளை பறி­போ­யி­ருக்க நேரிட்­டி­ருக்­கலாம். அது மட்­டு­மல்­லாமல் நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் அமைதியையும் சமா­தா­னத்­தையும் நிலை­நாட்­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி முழு­மை…

  3. சர்வதேச தொழில் தாபனம்: தொழிலாளருக்கு குழிபறித்தல் உலகளாவிய அமைப்புகள், மக்கள் நல நோக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை, மக்களின் பொதுநலனில் அக்கறை கொண்டவை. அதனால், அதன் தேவையும் முக்கியத்துவமும் தவிர்க்கவியலாதது என்றெல்லாம் எமக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை அமைப்புகளும் ஆற்றும் பணிகள் பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உலக மக்கள், அவற்றின் மீது அளவற்ற நம்பிக்கை வைக்கக் காரணமாயுள்ளன. ஆனால், நடைமுறையில் இவ்வமைப்புகளால் எதையும் பெரிதாகச் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் நாம் காணவியலும். ஆனால், நாம் இன்னமு…

  4. பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது. ஐ.தே.கவில் ஒரு பகுதியினரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிடப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணி, இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடைசியில், அந்த முயற்சி பிசுப…

  5. நம்பிக்கை பற்றிய கேள்விகள் நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும். அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதி மீதான நம்பிக்கையும் ஒரே சீராக எக்காலத்திலும் தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகும். ஆனால் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள், - ஆட்சியாளர் ஒருவர் மீதான நம்பிக்கையை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதற்குப் பின்னால், அவர்களுடனான இவர…

  6. ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள் ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள் அர­சி­யல் கைதி ஆனந்தசுதா­க­ர­னின் விடு­த­லைக்­காக இன்று ஈழமே அழு­கி­றது. அனைத் துத் தமிழ் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும், வடக்கு முத­ல­மைச்­ச­ரும்,சமூக அக்­கறை கொண்­டோ­ரும், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளும் என எல்­லோ­ரும் அவ­ருக்­கான விடு­த­லையை வலி­யு­றுத்தி பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்­கள். ஆனந்­த­சு­தாகர­னின் மனை­வி…

  7. நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, மத்திய வங்கி பிணைமுறி வ…

  8. ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை? கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாஸவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் காட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவையும…

  9. உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்? -அதிரன் பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல…

  10. தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…

  11. ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா - பாகிஸ்தான் வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவும் பாகிஸ்தானும், வரலாற்றில் ஒரு முறை இராணுவ யுகத்தின் போட்…

  12. முச்சந்தி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு மாறியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகள், இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது, மிகவும் கடினமாகும்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறி…

  13. தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்... கஜேந்திரகுமார்

  14. மஹிந்த மனது வைத்தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தூர­மா­காது இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும் என்­கிற எதிர்­பார்ப்பு நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றது. எனினும் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­றதா? என்­பது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இந்­நி­லையில், இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் வகி­பா­கத்­தி­னையும் அவ­ரது ஆளு­மை­க­ளையும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்­தி­ய­மா­கு­மென்றும் பெரும்­பான்மை மக்கள் அதனை நிச்­சயம் ஏற்­றுக்­கொள்வர் என்றும் இவர்…

  15. எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்.... மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா... வவுனியா....” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது. கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்ற…

  16. ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத் தொடர் யாருக்கு சாதகம் ஐ.நா. வின் 37 ஆம் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை என்ன? ஐ.நா. வின் இணை அனு­ச­ர­ணை­யோடு இலங்கை செயற்­ப­டு­வதை நாம் வர­வேற்­ற­போதும் பொறுப்­புக்­கூ­றலைத் தாம­தப்­ப­டுத்­து­வது கவ­லையைத் தரு­கி­றது. இதனால் 2019 ஆம் ஆண்­டுக்குள் பிரே­ர­ணையை இலங்கை முழு­தாக அமுல்­படுத்தும் என்­பது சந்­தே­க­மாகும். ஏனெனில் காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான சட்டமூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்­க­ளுக்குப் பின்­புதான் அதற்­கான அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டது. இதைப்­பற்றி நாம் அதி­ருப்தி அடை­கிறோம். காணி­களைக் கைய­ளிப்­ப­திலும் தாம­த­மாகி­றது. காணி தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­மாயின் நம்­பிக்­கையை வளர்ப்­பது ச…

  17. கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் ! இந்­நாட்டில் வாழும் முஸ்­லி­ம்­களின் இருப்­புக்கும், உரி­மை­க­ளுக்கும் திரை­ம­றை­விலும், நேர­டி­யா­கவும் வர­லாற்று நெடுங்­கிலும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்த நிலையில், அண்­மைய தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மைக்­கான பாது­காப்­பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறை­சாற்றி­யி­ருக்­கி­றது. அவ­சர காலச்­சட்­டமும், ஊர­டங்­குச்­சட்­டமும், அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த வேளை­யில்தான் இன­வெ­றி­யர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொரு­ளா­தார அழிவை முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தினர். சட்­டத்தைப் புறந்­தள்ளி அழிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட வன்­மு­றை­யா­ளர்­களை நோக்கி சட்­டத்தை …

  18. இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா ‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வ…

  19. உளவாளி படுகொலை முயற்சி பிளவுபடும் உறவுகள் இங்­கி­லாந்து தேசத்தின் சாலிஸ்­பரி நகரம். நவீன வாழ்க்­கையின் பர­ ப­ரப்­புக்கள் இல்­லாத, தேவா­ல­யங்கள் நிறைந்த இடம். ஞாயிறு ஆரா­த­னை­களைத் தொடர்ந்து பொது­மக்­களின் நட­மாட்டம் குறைந்­தி­ருந்த மாலை நேரம். இங்­கி­ருந்த பொது வாங்கில் இரண்டு பேர் சுய­பி­ரக்ஞை அற்ற நிலையில் விழுந்து கிடந்­ததை மக்கள் அவ­தா­னித்­தார்கள். ஒருவர் முதி­யவர். மற்­றவர் நடுத்­தர வயதைச் சேர்ந்த பெண். பெண்ணின் வாயில் இருந்து நுரைகள் ஒழு­கின. கண்கள் திறந்­தி­ருந்­தன. விரைந்து செயற்­பட்ட பொலிஸார் இரு­வ­ரையும் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­தார்கள். இந்தச் சம்­பவம் கடந்த நான்காம் திகதி இடம்­பெற்­றது. இதன் விளை­வுகள் சர்­வ­தேச அரங்கில…

  20. தடுமாறும் கூட்டமைப்பு உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட பின்­ன­டைவைச் சரி செய்யும் ஒரு முயற்­சி­யாக, அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யாத உள்­ளூ­ராட்சி சபை­களில், ஆட்­சி­ய­மைக்கும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ன்றன. தேசியக் கட்­சியா- அல்­லது தமிழ்த் தேசிய விரோதக் கட்­சியா என்ற எந்தப் பாகு­பாடும் இல்­லாமல், அவர்­களின் ஆத­ர­வுடன் வடக்கு, கிழக்கு உள்­ளூ­ராட்­சி­களில் ஆட்­சி­ய­மைத்து வரு­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. இதனால் தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில் கூட்­ட­மைப்பு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. அதே­வேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­தலி…

  21. இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்! பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக, கூட்டு எதி­ர­ணி­யி­னரால் கொண்டு வரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது எதிர்­வரும் புதன்­கி­ழமை 12 மணி நேர விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த விவாதம், இரவு 9.30 மணி­வரை நீடிக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என்றும் பாரா­ளு­மன்றத் தக­வல்கள் கூறு­கின்­றன. இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடக்­குமா - பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடக்­குமா என்று இன்­னமும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­க­ர­மாகத் தோற்­க­டித்து விடுவோம் …

  22. சாணக்கியமா சரணாகதியா? “அர­சி­யலில் நிரந்­தர எதி­ரியும் இல்லை, நிரந்­தர நண்­பனும் இல்லை” என்று பொது­வாகக் கூறப்­ப­டு­வ­துண்டு. 2015இல் ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கூட்டு ஆட்சி அமைத்த போது, தான், இதன் உள்­ளார்ந்த அர்த்தம் சரி­யா­னதே என்று உணர முடிந்­தது. யாழ். மாவட்­டத்தில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­பதை பார்க்கும் போது, அந்தக் கருத்து முற்­றிலும் சரியே என்று மீண்டும் உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபை­களில், எந்தக் கட்­சி­யாலும் அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யாது போன சூழலில், இ…

  23. இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1 இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வுநிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாதம் மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் நீண்ட அனு­பவம் வாய்ந்த வர்­களுள் ஒரு­வரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­க­ரனை சென்­னையில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்தில் சந்­தித்­த­போது, இலங்கை தீவில் காணப்­ப­டு­கின்ற வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டிகள், பூகோள அர­சியல் நிலை­மைகள், இந்­திய அமை­திப்­ப­டையின் செயற்­பா­டுகள்,இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­…

  24. கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்…. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்…

  25. இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது. இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.