அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு கபில் இன்று பக்க அமர்வுகள் மிகஅதிகளவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அவற்றுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கூட பல சமயங்களில், ஊகிக்க முடிவதில்லை. அந்தளவுக்கு ஜெனீவா களத்தில் நிலைமைகள் மாறியிருக்கின்றன. அதிகளவு பக்க அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், ஜெனீவாவைக் கையாளும் விடயத்தில் தமிழர் தரப்பு எந்தளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது என்ற கேள்வி உள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்துகின்ற, அநீதிகளுக்கு நியாயம் கோருகின்ற தளமாக மாறியிருந்த ஜெனீவாவில், அந்த வாய்ப்ப…
-
- 1 reply
- 555 views
-
-
http://www.kaakam.com/?p=1079 முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அடிப்படை அறவுணர்வுக்கு புறம்பி நின்று முசுலிம்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்டத்தினை அகமகிழ்ந்து கொண்டாடிய குறைக் கூட்டம் ஒரு புறமும் முசுலிம்களிற்கும் தமிழர்களுக்குமிடையிலான பகைமையுணர்வு தோன்றியமைக்கு அக்கால தமிழர் தலைமைகள் தான் காரணம் என்ற…
-
- 0 replies
- 419 views
-
-
ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு? என்.கண்ணன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு கூட்டு எதிரணி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதன் மூலம், இன்னொரு அரசியல் குழப்பத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்ற பின்னர், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில் கூட்டு ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்றுப்போக, கடைசியில் அது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையாக மாறியது. …
-
- 0 replies
- 369 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் – நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபாலசிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இக்கல்லூரியின் முத…
-
- 0 replies
- 322 views
-
-
சமகால சவால் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது. மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத சித்தாந்தங்களும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு அவை முக்கியத்துவம் பெறுவதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவுள்ளது. பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதோடு, அடக்கு முறைக்கும் வழிவகுப்பது மாத்திரமின்றி, பழிதீர்க்கும் படலத்தையும் அரங்கேற்றி வர…
-
- 0 replies
- 691 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் போகிறது? பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த புதன்கிழமை சபாநாயகரிடம் கையளித்த நிலையில் இலங்கை அரசியலின் போக்கு ஒரு பரபரப்பான திசையை நோக்கி நகர்ந்திருப்பது ஜெனிவா பரபரப்பை விட வேகமுடையதாக மாறியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளு மன்றில் சமர்ப்பிக்கப்படுமா? அது தோற்கடிக்கப்படுமா என்றெல்லாம் பேசப்பட்டும் சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கையி…
-
- 0 replies
- 583 views
-
-
பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம் இலங்கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உரிய நீதிப் பொறிமுறைக ைள உருவாக்கிச் செயற்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணையாளர் கேட் கில்மோர் அம்மையார் கோரியிருக்கின்றார். இது, அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடைந்துள்ள கடும் அதிருப்தியின் வெளிப்பாடாகும். இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அடுத்த அறிக்கை வர…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கைக்குக் கிடைத்த ‘நிதஹஸ்’ இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு, இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தெரிந்திருக்கலாம். இலங்கையின் 70ஆவது சுதந்திர நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடரில், இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்குகொண்டன. ஒப்பீட்டளவில் பலமான அணிகளான இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இறுதியில், இந்தியாவும் பங்களாதேஷும் தான் தகுதிபெற்றன. அத்தொடரில் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு என்ன காரணம் என்பதெல்லாம், கிரிக்கெட் நிபுணர்கள் ஆராய வேண்டியது. ஆனால், இலங்கையின் அண்மைக்கால நடப்புகளை…
-
- 0 replies
- 492 views
-
-
பறிக்கப்படுமா ரணிலின் பதவி? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி. இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்…
-
- 0 replies
- 339 views
-
-
சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம் சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது. ‘முன்னர் பிற்பகலில் 10-15 வரையானவர்கள் தேநீர் அருந்துவதற்காக இங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டதை அடுத்து இங்கு எவரும் வருவதில்லை’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளரான வில்சன் தெரிவித்தார். இத்தேநீர்ச்சாலையானது சிறிலங்கா, அதாவது சிலோன், பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைவதற்கு…
-
- 1 reply
- 581 views
-
-
நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல் மலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக தற்போதும் ஆணித்தனமான அழுத்தங்கள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவர்களின் அடிமை வாழ்க்கைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி இலக்குகளை அடைவதற்கான அதிவிரைவு பயணத்தின் அவசியம் குறித்தும் ஆழமாக வலியுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. நாளைய பொழுது நல்லபொழுதாக விடிந்துவிடும். சுதந்திர சமுகமாக சஞ்சாரிக்க முடியும் என்ற பேரவா? அந்த மக்கள் மனதில் வேரூன்றியிருக்கின்றத…
-
- 3 replies
- 566 views
-
-
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம் மாகாணங்களின் எல்லை மீள் நிர்ணய இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அதாவது, மாகாண சபைகளுக்குள் அடங்குகின்ற தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட அந்தஸ்து பெறப்பட வேண்டும். அந்த அடிப்படையில், 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவைத் திருத்திய 2017ஆம் ஆ…
-
- 0 replies
- 297 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டக்களம் பலம்பெற வேண்டும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய ஒற்றைக் குறியீடாக, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே’ எழுந்து நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைத் தமது தோளில் சுமந்து கொண்டு முன்வந்தவர்கள் அவர்கள். தனது பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் ஒருங்கே தேடுகின்ற ஆச்சிமாரையும் தன்னுடைய கணவனையும் மகனையும் தேடுகின்ற தாய்மாரையும் தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் தேடுகின்ற மகள்மாரையும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்’ என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிற…
-
- 0 replies
- 278 views
-
-
வெட்கம் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில் சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது நாட்டில், அவ்வப்போது முறுக்கேற்றி வளர்க்கப்பட்டு வந்த இனவாதத்தை, இப்போது அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், இங்கு யாரும் யாரையும் பலிகொள்ள முடியும் என்கிற நி…
-
- 0 replies
- 417 views
-
-
பிரித்தானிய டெலோ பொறுப்பாளர் திரு சம்பந்தன் அவர்களோடான செவ்வி
-
- 0 replies
- 588 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலையை புரிந்து கொள்வார்களா….? நரேன்- தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்கு பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உள ரீதியாகவும், மனிதாபிமானமாகவும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் மைத்தி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகியது. இந்த கூட்டராங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. போர் முடிந்த நிலையிலும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றி வாதத்தில் மிதந்ததுடன் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே…
-
- 0 replies
- 401 views
-
-
சவூதி அரேபியாவின் யுத்தமும் பிரித்தானியாவின் பொருளாதாரமும் - ஜனகன் முத்துக்குமார் சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பிரித்தானியாவுக்கான அண்மையில் விஜயம், பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இராஜதந்திர, வர்த்தக உறவுகளைத் தவிர, இங்கிலாந்திடம் இருந்து 48 டைஃபூன் போர் விமானங்கள் வாங்குவதற்கு, ஆரம்ப ஒப்பந்தமொன்றில் சல்மான் கையெழுத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தமானது, மேற்கத்தேய ஆதரவுடைய ஆயுத உற்பத்தியாளர்கள், பாரசீக வளைகுடாவின் அரேபியப் பிராந்திய ஆயுதச் சந்தைகளைக் கைப்பற்றப் போராடும் நிலைமையைக் காட்டுவதுடன், இது மேலதிகமாக ஏற்கனவே சிக்கல் நிலையில் உள்ள அரேபிய, வடஆபிரிக்க போரியல் நிகழ்வுகளுக…
-
- 0 replies
- 465 views
-
-
முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி! இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இலட்சியங்கள் இல்லாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னதான் தங்கள் சாதனைகள் பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தாலும் கிடைத்துள்ள பெறுமானம் சிறந்தாக அமையவில்லை. முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணக்க அரசியலுக்கே பழக்கப்பட்டுள்ளார்கள். காலத்திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரினவாதிகளுடன் இணக்க அரசியல் என்ற போர்வையில் அமைச்சர் பதவிகளைப் பெற்று வருவதே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் நிலைத்த முடிவாக இருந்து வந்துள்ளது. ஆ…
-
- 0 replies
- 607 views
-
-
சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா? இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். “எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும். “எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந…
-
- 0 replies
- 429 views
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜபக்ஷக்களை நெருங்கும் சர்வதேசம் சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. கொழும்பு வந்திருந்த, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை அவரது இல்லத்தில், கடந்த எட்டாம் திகதி சந்தித்த பின்னர்தான், பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை கூறியிருந்தார்.மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை வீடு தேடிச்சென்று சந்தித்தமை, முக்கியமானதொரு விடயமே. முன்னாள் ஜனாதிபதியான மஹ…
-
- 0 replies
- 431 views
-
-
ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது. எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை மக்கள் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தேர…
-
- 0 replies
- 464 views
-
-
சர்வதேச மயமான இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டுத் தண்டனை பெற, போர் வீரர்கள் சம்மதிப்பார்களா? அரசு அவர்களைப் பயன்படுத்தி விட்டு விசாரணைக்கும் தண்டனைக்கும் கையளிக்க விரும்புமா? போர் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கைப்பற்றிய இடங்களை மீண்டும் தாரைவார்க்க அவர்கள் இடமளிப்பார்களா? தம்மோடு கலந்துகொள்ளாமல் தீர்வு காண இசைவார்களா எனும் நிலைப்பாடுகளே தற்போது பல்லின தேசிய இணக்கப்பாட்டுத் தீர்வுக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அப்படியானால் போர்க்குற்றத்திலிருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்கப்பட்டு அதற்குப் பகரமாக கைப்பற்றிய இடங்களை மீளவும் வழங்கத் தமிழ் …
-
- 0 replies
- 578 views
-
-
இந்தியத் தேசியவாதமும் ராஜபக் ஷ விசுவாசமும் “2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட்டால், அவரை வெற்றி பெறச்செய்வது தேசப்பற்றுள்ள இந்தியர்களின் கடமை. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தவர் அவர்”என்று கடந்தவாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக குறிப்பிடப்பட்டாலும், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமி எப்படிப்பட்ட ஒருவராக மதிக்கப்படுகிறவர் என்பதை இங்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்தளவுக்கு அவர் கடுமையான விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டல்க…
-
- 0 replies
- 548 views
-
-
ஜெனீவாவும் தமிழர் தரப்பும் கபில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் இரண்டு இம்முறை இருப்பதால், ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் ஓட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் கவனத்தை ஈர்க்கின்ற பல்வேறு போராட்டங்களும், பக்க அமர்வுகளும் நடத்தப்பட்ட போதிலும், போருக்குப் பின்னர் தான், ஜெனீவா நோக்கிய தமிழர் தரப்பின் நகர்வுகளும், ஓட்டங்களும் கூர்மையடைந்தன. போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டங்கள் ஜெனீவா களத்…
-
- 0 replies
- 373 views
-