Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை - ஜனகன் முத்துக்குமார் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை உருவாக்கப்போவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்திருந்தது. குறித்த விடயம் தொடர்பில், ஐ.அமெரிக்காவின் தலைமையில் 30,000 இராணுவத்தினர், எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும், ஐ.அமெரிக்கா தெரிவித்திருந்தது. …

  2. கூட்டமைப்பின் பின்னடைவு பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் மட்டுமல்லாது வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பாராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாணத்திலுள்ள 56 உள்ளூராட்சி சபைகளில் 40 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், யா…

  3. ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல... ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அப்பத்தை உண்டுவிட்டு அடுத்த நிமிடம், “நான் அவர்களுடன் ஒன்றுமில்லை” என்று, தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சிக்கான முயற்சி, 2015 ஜனவரியில் மஹிந்தவைத் தூக்கி எறிந்தது. ஆனால், அதை முறியடிப்பதற்கான முயற்சியிலிருந்து, தான் விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்…

  4. மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா? தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த…

  5. பகுத்­த­றிவும் பட்­ட­றிவும் இன்றேல் கெட்­ட­றி­வுதான் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தாமரை மொட்டு சின்­னத்தின் செயற்­பாட்­டா­லேயே தமி­ழீழம் கிடைக்­கலாம் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அப்­பாவி சிங்­கள மக்­களை ஏமாற்றத் தவ­றான பிர­சா­ரங்­களைச் செய்­வ­தா­கவும் சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யுள்ளார். உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் யாப்பு இயற்­றப்­பட்டு தமி­ழீழம் வழங்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் அதற்கு இத் தேர்தல் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாக நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் மஹிந்த கூறி­யது தவறு. தனது கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எங்­குமே பிரி­வி­னைக்­கு­ரிய வார்த்தை இல்லை என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார். இவர் உயர் நீதி­மன்­…

  6. கலப்பு தேர்தல் முறை காலை வாரியுள்ளதா? நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இலங்­கையின் அர­சியல் நெருக்­கீ­டு­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­தி­ருந்­தது. இலங்­கையின் வர­லாற்றில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது தேசிய ரீதியில் பாரி­ய­ளவு அர­சியல் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இருந்­த­தென்றால் அது இம்­முறை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலே ஆகும் என்­ப­தனை சக­லரும் ஏற்றுக் கொள்வர். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் இடம்­பெற்ற அர­சியல் அதிர்­வ­லைகள் இன்னும் முற்­றாக ஓய்ந்­து­வி­ட­வில்லை. எதுவும் எப்­போதும் நடக்­கலாம் என்ற நிலையே இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இம்­முறை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் இ…

  7. சிரியாவின் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும் 2011ஆம் ஆண்டு சிரி­யாவில் அர­சுக்கு எதி­ராக மக்கள் செய்த கிளர்ச்­சியில் பல அமைப்­புக்கள் இணைந்­து­கொண்­டன. பல புதிய அமைப்­புக்­களும் உரு­வா­கின. சிரியத் தேசிய சபை, சுதந்­திர சிரி­யப்­படை, ஜபத் அல் நஷ்ரா, இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு, மத­சார்­பற்ற மக்­க­ளாட்­சிக்­கான அமைப்பு, டமஸ்கஸ் பிர­க­டன அமைப்பு, சிரிய மக்­க­ளாட்சி கட்சி, சிரியப் புரட்­சிக்­கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்­கி­ணைப்புக் குழு, மக்­க­ளாட்சி மாற்­றத்­திற்­கான தேசிய ஒருங்­கி­ணைப்புக் குழு, தேசிய மக்­க­ளாட்சி அணி, சிரி­யப்­ பு­ரட்­சிக்­கான தேசிய ஆணை­யகம், சிரிய விடு­த­லைப்­படை, சிரிய இஸ்­லா­மிய முன்­னணி, சிரியத் தேசிய விடு­தலை முன்­னண…

  8. தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் ஜெனீவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் விட­யங்­களில், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யி­ழக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்ற, வலி­யு­றுத்தி வரு­கின்ற கருத்­துக்­களே இதனை உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. கொழும்­புக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான, ஜேம்ஸ் சென்­சென்ப்­ரெக்னெர் கடந்த வியா­ழக்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அப்­போது சம்­பந்தன் இரண்…

  9. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அங்கத்துவ நாடொன்று விலகுவதற்கான சட்ட அரசியல் ஏற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பிரிவு 50 இல் கூறப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடொன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உரிமை உள்ளது. பிரிவு 50 இன் ஏற்பாடுகளுக்கமையவும் அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமையவும் விரும்பினால் விலகமுடியும். என பிரிவு 50 கூறுகிறது. விலக தீர்மானித்த திகதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் விலகல் தொடர்பான சட்ட அரசியல் தொடர் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தலும் விலகியதன் பின்னர் உடனடிக்காலமான் இடைமாறு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பிரிவு 50 …

  10. அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி

  11. தோல்வியில் முடிந்த ஒபரேசன் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­யலர் சுசில் பிரேம ஜயந்­தவும், வெளி­யிட்ட கூட்டு அர­சாங்கம் இன்­னமும் தொடர்­கி­றது என்ற அறி­விப்­புடன், ஆட்சிக் கவிழ்ப்­புக்­கான ஒப்­ப­ரேசன் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. மைத்­திரி- ரணில் கூட்டு அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்­காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்­டப்­பட்ட திட்­டங்­களும், மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களும், தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கிய பின்­ன­ரான ஒரு வார­கா­லத்தில் கொழும்பு அர­சியல் களம் பெரும் பர­ப­ரப்­பிலு…

  12. மஹிந்தவை நம்பவில்லையா சீனா? 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில், மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து அகற்­று­வதில் தீர்க்­க­மான பங்கை வகித்­தி­ருந்த சர்­வ­தேச சமூகம், தற்­போ­தைய கூட்டு அர­சாங்­கத்தைக் காப்­பாற்­று­வ­திலும் குறிப்­பி­டத்­தக்க பங்கை ஆற்­றி­யி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கூட்டு அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் ஏற்­பட்ட பெரும் பின்­ன­டைவு, இலங்­கையின் அர­சியல் தலை­வி­தி­யையே மாற்றி விடக் கூடிய நிலை ஒன்­றுக்கு இட்டுச் சென்­றி­ருந்­தது. உள்­ளூ­ராட்சித் தேர்தல் என்ன, குப்­பை­களை அகற்­று­வ­தற்கும் வீதி­களைச் செப்­ப­னி­டு­வ­தற்கும் தானே என்ற ஏள­ன­மான கருத்­…

  13. தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும் யதீந்திரா நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்…

  14. ரணில் ஒரு வலிய சீவன்? நிலாந்தன்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு. அப்படிக் காட்டுவோர் பாலசிங்கம் கூறிய ‘ரணில் ஒரு நரி’ என்ற வாசகத்தையை மேற்கோள் காட்டுவதுண்டு. 2005ல் ரணில் பதவிக்கு வருவததை புலிகள் தடுத்து நிறுத்திய பொழுதும் மேற்படி வாசகம் மேற்கோள் காட்டப்பட்டது. நோர்வே செய்த சமாதானத்தை ஒரு தர்மர் ப…

  15. தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி ரொபட் அன்­டனி கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டில் தேசிய மட்­டத்தில் அடித்­துக்­கொண்­டி­ருந்த அர­சியல் சுனாமி தற்­போது ஓர­ளவு ஓய்ந்­துள்­ளது . எனினும் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே இன்னும் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம் என்­பது பொது­வாக அனை­வரும் கூறும் விட­ய­மாகும். ஆனால் அதுவே சில சம­யங்­களில் பொது­மக்­க­ளுக்கு விசித்­தி­ர­மா­ன­தாக அமைந்­து­வி­டு­வ­துண்டு. நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­ய­தை­ தொடர்ந்து தென்­னி­லங்­கையில் அர­சியல் சுனா­மியே ஏற்­பட்­டது. தெ…

  16. B639/15 எனும் மிக்-27 விசாரணைகள் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் காலப்­ப­கு­தியில், அந்த தேர்­தல்கள் விட­யங்­க­ளுக்கு சமாந்­த­ர­மாக பேசப்­பட்ட ஒரு விட­யமே, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க டுபாயில் கைது செய்­யப்­பட்ட விவ­காரம். எனினும் அந்த விடயம் ஒரு வாரத்­துக்­குள்­ளேயே புஷ்­வா­ண­மாகிப் போனது. காரணம் கைதான அவரை ஐக்­கிய அரபு இராச்சிய அதிகாரிகள் விடு­தலை செய்­த­மையும், அவரை இலங்­கைக்கு அழைத்­து­வர எம் நாட்டு அதி­கா­ரி­களால் முடி­யாமல் போன­மை­யு­மாகும். இந்த இய­லாமை இலங்­கையைப் பொறுத்­த­வரை மிகப் பெரிய பின்­ன­டை­வாக கரு­தப்­பட்ட நிலையில், அந்த பின்­ன­டை­வினை மிகப் பல­மாக எதிர்­கொண்டு இலங்­கையின் சட்டம், ஒழுங்கை பாது­காக்கும் அத…

  17. நினைத்ததும் நடந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது. தென்பகுதிகளில் உள்ள மக்கள…

  18. தொண்டையில் சிக்கிய முள் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. தேசிய அளவில், ஆட்சி மாற்றமொன்றை, ஏற்படுத்தி விடுமளவுக்கான கொதி நிலையை, இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கி விட்டிருக்கின்றன. மூன்று வருடங்க…

  19. காணாமல் ஆக்­கப்­ப­டுமா...? ‘காணாமல் போனோர்’ விவ­காரம் காணாமல் போனோரை தேடும் தமிழ் உற­வுகள் விரக்­தியின் விளிம்பில் நிற்­பதை நான் நேரில் பார்த்தேன். அவர்­களை பொறுத்­த­வரை தங்­க­ளுக்கு ஆறுதல் வார்த்­தைகள் கூறு­வ­தற்கு கூட எவரும் இல்­லாத நிலை. இதில் ஒரு உண்­மையை உணர வேண்டும். இலங்கை அர­சியல்வாதி­களின் சிங்­க­ளவர் உட்­பட எவ­ரு­டைய பிள்­ளையும் இவ்வாறு காணாமல் ஆக்­கப்­பட­வில்லை. அப்­படி நடந்­திருந்தால் அதன் வேத­னையை ஓர­ள­வா­வது புரிந்து இருப்­பார்கள். தமிழ் அர­சியல்வாதிகள் முக்­கி­ய­மாக எதிர்­க்கட்சித் தலை­வ­ராக இருக்கும் சம்­பந்தன் இந்த விடயம் தொடர்­பாக எவ்­வித கரி­ச­னை­யையும் காட்­ட­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. தமிழ் அர­சியல்வாதி­களை நம்­பினோம், ஜ…

  20. யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின. ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச…

  21. மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது. இலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந…

  22. விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுகள் பல பாடங்­களை கற்­பித்­தி­ருக்­கின்­றன. தேசிய அர­சி­யலில் பல மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ள­தோடு ஆட்­சி­யா­ளர்கள் மீளவும் தமது சேவை­களை திரும்பிப் பார்ப்­ப­தற்கும் தேர்தல் முடி­வுகள் வழி­வ­குத்­தி­ருக்­கின்­றன. மேலும் அர­சி­யல்­வா­திகள் தேர்தல் காலங்­களில் வழங்­கு­கின்ற வாக்­கு­று­தி­களை உரி­ய­வாறு நிறை­வேற்ற வேண்டும். மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்­களை மக்­களே தூக்­கி­யெ­றிவர் என்­கிற சிந்­த­னை­யையும் தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மென்ற…

  23. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! இயற்­கை­யின் நிய­தி­யால் தாமரை மொட்டு மலர்­கி­றது. ‘ஈஸ்ட்’ என்ற நொதி­யம் அப்­பத்­துக்­கான மாவைப் பொங்க வைக்­கி­றது.’’ கடந்த சில நாள்­க­ளாக சமூக இணை­ய­ளத்­தங்­க­ளில் வெளி­யான விமர்­ச­னத் துணுக்­கு­க­ளில் மேற்­கு­றித்த துணுக்கு பல­ரது இர­ச­னைக்­குப் பாத்­தி­ர­மா­யிற்று. மாறி­வ­ரும் உல­கில் மாறா­தி­ருக்­கு­மொரு விட­யம் ‘மாற்­றமடைதல்’ என்­பதே என முது­மொ­ழி­ யொன்…

  24. குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது. தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் ப…

  25. கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள். அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.