அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கை மீது குவிகிறதா ட்ரம்பின் கவனம்? அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற போது, அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றது. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது போலவே, யுஎஸ்எஸ்.ஹொப்பரின் இந்தப் பயணமும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்கின்ற போது, கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று தரித்து நின்ற முதல் நிகழ்வாக இது அமைந்திருந்தது. இலங்கைக்கும் அமெரிக்காவு…
-
- 0 replies
- 454 views
-
-
திருகோணமலை: செல்லாக் காசா? - கே.சஞ்சயன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் ப…
-
- 0 replies
- 445 views
-
-
காணாமல்போனோர் பிரச்சினை : தீர்வுகாணுமா அரசாங்கம்? ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யார் காரணம்? யார் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டது? தாக்குதலின் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா? அல்லது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சக்திகளா? என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுதும் 8 தினங்களுக்கு மேல் போராட்டங்கள் இடம்பெற்றன. இந்தப் போராட்டம் சென்னையில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் பரவலாக இடம்பெற்று, ஒரு மக்…
-
- 0 replies
- 385 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன்:- காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும்வரையிலுமான உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்தது. நீரிழப்பினால் அவர்களுடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதை ஒரளவுக்கு மழை தடுத்தது. அந்தப் போராட்டத்திற்கு படிப்படியாக வெகுசன ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. உண்ணாவிரதிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால் அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்றிருந்த ஒரு கட்டத்தில் அரசாங்கம் தலையிட்டது. வரும் 9ம் திகதி பாதுகாப்பு அமைச்சரும்பிரதமரும் சட்டமாஅதிபர் திணைக்களமும் பாதிக்கப்பட்ட மக்களும் இது தொடர்பில் சந்தித்துப் பேச இருக்கிறார்க…
-
- 0 replies
- 874 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு வேண்டிய போராட்டம் பொய்த்துப்போனதா? உணர்வுகளின் நிலைபேறு தன்மையின் இறுதி ஆயுதமாக பல போராட்டங்கள் உலக அரங்கில் உருவாக்கம் பெறுகின்றது. இந்த வகையில் மக்களினுடைய எழுச்சியினூடாக ஏற்படும் போராட்டங்கள் பல, வெற்றியினை அடைந்ததன் பின்னரே நிறைவு பெற்றதும் அதனை புரட்சி என்ற பெயர் கொண்டழைப்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டம் இறுதி தீர்வை பெற்றதாக அமைந்திருந்தமை அண்மைய மக்கள் எழுச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. அவ்வாறான போராட்டங்களின் ஓர் அங்கமாகவே நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் வ…
-
- 0 replies
- 326 views
-
-
இரு தேச மீனவர் போராட்டத்திற்கான சமாதான பேச்சுக்கள்..... கடலும் அதனை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வும் எப்போதும் சஞ்சலம் மிக்கவை. அலைகளின் ஓசை எந்தளவு இரைச்சல் மிக்கதாக உள்ளதோ அதே போன்றதொரு பரபரப்பான நிலையிலேயே அந்த சமூகத்தின் வாழ்வியலும் அமைகின்றது. இவ்வாறானதொரு பரபரப்பான கடற்றொழிலாளர்கள் வாழும் பகுதியான நெடுந்தீவில் மீனவர் பிரச்சினை குறித்து ஆராயும் நோக்கில் சென்றிருந்தோம். ஆழ்கடலுடன் நெடுந்தீவு மக்கள் கொண்டுள்ள நெருக்கமான உறவு அர்த்தம் காட்ட முடியாதளவிற்கு ஆழமானது. காலாகாலமாக கடல் அன்னையை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று தமது வாழ்வாதாரத்தையும் கடல் அன்னையையும் பாதுகாப்பதற்காக போராடுகின்றனர். …
-
- 0 replies
- 326 views
-
-
தோப்பூர் பிரதேச சபை கோரிக்கை நியாயமானதா? புல்மோட்டையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் போது, இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கொண்ட பகுதியாகப் பிரித்து பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்யப்படுமாயின் இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாலுள்ள தமிழ் கிராமங்களும் அது போல் மறு எல்லைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்களும் பாதிப்படைவதுடன் சிறுபான்மைத் தன்மை பெற சூழ்நிலை உருவாகி விடுமென்ற கருத்தை தமிழ்த் தரப்பினர் முன்வைப்பதாகவும் தெரிய வருகிறது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கூடிக் குலாவி வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பிரதேச சபையை உடைத்து தோப்பூர் என்ன…
-
- 0 replies
- 860 views
-
-
ஊசலாட்டத்தின் பிடிக்குள்... ரொபட் அன்டனி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற சக்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போதைய நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்தால்தான் 95 ஆசனங்கள் கிடைக்கும். அப்படியிருந்தும் 96 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியமைக்க முடியாது. கூட்டு எதிரணி இணைந்துகொள்ளும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது. ஆனால் 106 ஆசனங்களைக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் அதிகம…
-
- 0 replies
- 409 views
-
-
விஸ்வரூபமெடுத்த உண்ணாவிரதம் ! இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள்? சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை. ஆயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வீதிகள…
-
- 0 replies
- 364 views
-
-
அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்த உண்ணாவிரதப் போராட்டம் முழுநாட்டினதும் தமிழ் பேசும் மக்களின் கவனத்தையும் அவதானத்தையும் ஈர்த்த காணாமல்போனோரின் உறவினர்களின் உண்ணா விரதப்போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவின் எழுத்துமூல உத்தரவாதத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போனோரின் உறவினர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் என்ற அறிவிப்பானது அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் பாதிக்கப்பட்டோரின் உ…
-
- 0 replies
- 212 views
-
-
ஒபாமா கொடுத்துச்சென்ற இன்னொரு செய்தி! அதிபர் பதவிக்காலம் முடித்து விடைபெறும் தருணத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உத்தரவைப் பிறப்பித்துச் சென்றிருக்கிறார் ஒபாமா. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்குக் கசியவிட்ட செல்ஸி மேனிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையைக் குறைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஒபாமா. ப்ராட்லி எட்வர்ட் மேனிங் எனும் இயற்பெயர் கொண்ட செல்ஸி, ஹார்மோன் கோளாறுகள் காரணமாகத் திருநங்கையாக மாறியவர். அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்பவர். ஆண்களின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் செல்ஸி. ஏற் கெனவே, ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கும் அவர்…
-
- 0 replies
- 463 views
-
-
ஒரு முடிவு அல்லது நடைமுறை படுத்துதல் சார்ந்து கோபம் அவசரம் நயவஞ்சக நோக்கங்களுக்கு முதலிடம் கொடுத்து எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு பிழையானவை எவ்வாறு எதிர்மாறான எதிர்பார்க்காத சரித்திரத்தில் ஆறாத வடுக்களாக பதியப்பட்டுவிடுகின்றன என்பதற்கு தற்போதைய தமிழகத்தின் நிலையே சான்று. அந்த இளைஞர்கள் கெஞ்சிக்கேட்ட ஒரு மணித்தியாலயத்தை ஒதுக்கி கொடுத்திருந்தால் அந்த எழுச்சியின் வெற்றியையும் குடியரசு விழாவையும்சேர்த்து பல கோடி தமிழர்களின் பிரசன்னத்தோடு செய்திருந்தால் அதுவும் மத்திய அரசின் மாநில அரசின் நற்பதிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். ஆனால் இன்று இவ்வாறு அவமானப்பட்டு இந்திய தேசம் மானமிழந்து தலை குனிந்…
-
- 2 replies
- 663 views
-
-
மெரினாவும் வொஷிங்டன் டி.சியும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும், முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருந்தன. ஆனால், திங்கட்கிழமை காலையில் இடம்பெற்ற சம்பவங்கள், அந்தப் போராட்டத்தின் வெற்றியின் பின்புலத்தையே மீளவும் ஆராய வைத்திருக்கின்றன என்பதுதான் கவலைக்குரியது. அதிகார வர்க்கங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரும் ஏனைய பிரிவினரும், தங்களுடைய நலன்களை முன்வைத்தே, அனைத்து விடயங்களையும் மேற்கொள்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை, அச்சம்பவங்கள் காட்டிச் சென்றிருக்கின்றன. தமிழ்நாட்டின் …
-
- 0 replies
- 358 views
-
-
கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது. ஆபிரிக்காவில் மிகவும் சிறிய நாடான கம்பியாவில் அண்மைக்காலமாக நடந்தேறிய நிகழ்வுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவத…
-
- 0 replies
- 646 views
-
-
‘சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது, அரச இயந்திரமும் சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆன…
-
- 0 replies
- 470 views
-
-
மாற்றம் காண வேண்டிய தமிழகத்தின் ‘பொங்குதமிழ்’ - ப. தெய்வீகன் தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவினால் ஏற்பட்டுள்ள மாணவர் பேரெழுச்சி, இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்திகளுடன் ஊடகங்களை அலற வைத்திருக்கிறது. வெறுமனே அரசியல் செய்திகளாலும் சினிமா பிரமாண்டங்களினாலும் தன் மீதான கவனத்தையும் சுவாரஸ்யத்தையும் பேணிவந்த தமிழகம், முதல் முறையாக மாணவர்களின் பேரெழுச்சி என்ற புரட்சிமொழியின் ஊடாக உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது. மக்கள் கட்டமைப்பின் பிரதான இயங்கு சக்திகளில் ஒன்றான மாணவர்களின் போராட்டம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒரு புள்ளியிலிருந்துதான் தனது கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம். …
-
- 0 replies
- 630 views
-
-
40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறு…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழ் முஸ்லிம் உறவும் கிழக்கு மாகாணமும்
-
- 0 replies
- 395 views
-
-
சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’ “அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கே அழுத்தத்தை கொடுத்திருந்தார்கள். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஊழலை ஒழிக்க ‘லோக்பால்’ உருவாக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரேன் பேடி ஆ…
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம் இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எரிபொருள் தாங்கிகள் சிலவற்றை மீளப் பெறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை, அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டிருக்கிறார். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புது…
-
- 0 replies
- 597 views
-
-
எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கை மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரிஸினால் கடந்த 17 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் புதிய முறைப்படி நடத்த இருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் புதிய முறைமையில் உள்ள குறைபாடுகள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாமலும், எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில் தேவையான சட்டத்திருத்தங்களை செய்யாமலும் அவசரமாக வர்த்த…
-
- 0 replies
- 605 views
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி? எதையெல்லாம் தற்போதைய அரசாங்கம் தனது வெற்றியாகக் கொண்டாட முனைகிறதோ, அவையெல்லாமே சர்ச்சைக்குரிய விடயங்களாக மாறி வருகின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை கைத்தொழில் முதலீட்டு வலயம், வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலை ஆகியன அண்மைக்கால சர்ச்சைக்குரிய விடயங்களின் வரிசையில் ஆகப் பிந்தியதாக இடம் பிடித்திருப்பது ஜி.எஸ்.பி பிளஸ். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகையை தமது அரசாங்கத்தின் வெற்றியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்களும் பிரசாரம் செய்யத் தொடங்கிய போது தான் அதற்குப் பின்னால் உள்ள பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது. ஐரோப்ப…
-
- 0 replies
- 658 views
-
-
ஈராண்டு கால ராஜதந்திரப்போர்? நிலாந்தன்:- கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முனபு; கூட்டமைப்பின் உயர்;மட்டத்தை சேர்;ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார.; அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். அச்சந்திப்பின் போது சம்பந்தர் மோடியிடம் பின்வரும் தொனிப்பபட ஒருவிடயத்தை அழுத்திக் கூறினாராம். ‘நாங்கள் நாட்டை பிரிக்குமாறு கேட்கமாட்டோம். ஆனால் எமது தாயகம் பிரிக்கப்படாது இருப்பது அதாவது வடக்கு கிழக்கு பிரிக்கப் படாது இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்’ என்று இந்த விடயத்தை சம்பந்தர் ஒன்றுக்கு மேற…
-
- 0 replies
- 457 views
-
-
மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று. அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது. இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. பணம் துட்டு மணி மணி..... இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவ…
-
- 1 reply
- 705 views
-
-
புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்? ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறிமுறை கொண்டுவரப்பட்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது அவசியமாகும். இலங்கை அரசாங்கம், சர்வதேச தரப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவற்றதாக உள்ளன. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரானது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமையப்போகின்றது என்பது மட்டும் திண்ணமாகும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 …
-
- 0 replies
- 442 views
-