அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசவேண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். கல்முனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றார். இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு 18 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. முஸ்லி…
-
- 0 replies
- 328 views
-
-
கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்! சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன். என்னுடைய அறைக்குத் திரும்பியபோது எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் ஒரு மாணவி கண்ணீருடன் காட்சி தந்தார். "அலெப்போ, அலெப்போவில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்; உலகில் யாருக்குமே அக்கறையில்லையே" என்று விசும்பினாள். அலெப்போ குறித்த தகவல்களை முகநூலில் படித்தேன். மக்களுடைய துயரங்களைச் சகித்துக்கொள்ள இயலவ…
-
- 2 replies
- 429 views
-
-
வலிகளுக்கு மத்தியிலும் 2016 இல் முன்னேற்றமடைந்துள்ள இந்திய-இலங்கை உறவு பல்வேறு விவகாரங்களில், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான இலங்கையின் உறவானது 2016 ஆம் ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- “பரிந்துரைக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழினுட்ப உடன்படிக்கை தொடர்பான முரண்பாடு, இரு நாடுகளின் கடலிலும் மீனவர்கள் சட்டரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுதல், இலங்கைத் தீவில் சீனா தனது செல்வாக்கைச் செலுத்துகின்றமை போன்ற விடயங்கள் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்திய போதிலு…
-
- 0 replies
- 401 views
-
-
-
சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம். மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை அழிக்கும் படலம் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, பர்மா (மியன்மார்), பாகிஸ்தான், பலஸ்தீன், எகிப்து என முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் நடக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அந்த வகையில் தற்போது சிரியாவிலும் முஸ்லிம்களை அழிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. முஸ்லிம்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவது ஏன்? தொடர்ந்தும் பல நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போது சிரியாவிலும் அதன் தொடர்ச்சி ஆரம்பமாகியுள்ள…
-
- 0 replies
- 794 views
-
-
கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்ப்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கிமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்த முக்கியமான தடைகளில் ஒன்று இல்லாமற் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் இராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. தமிழ் மக…
-
- 0 replies
- 462 views
-
-
அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம் - கே.சஞ்சயன் இலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது. இப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்ப…
-
- 0 replies
- 447 views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மோடி -இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்தியா எப்போதும் விழிப்பாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது கொல்லைப்புறத்திலிருக்கும் இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாகவே இந்தியாவை பாதிக்கக் கூடியது. இதுவரை, இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இனியும் அவ்வாறுதான் இருக்கும். இந்த இடத்த…
-
- 0 replies
- 386 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-6
-
- 0 replies
- 522 views
-
-
நல்லிணக்கப் பொறிமுறை நம்பகம் பெறுமா? நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு பிற்போடப்பட்டது. இந்த அறிக்கை ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும், அதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனால், ஜனவரி முதல்வாரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி கூறியிருக்கிறது. கலாநிதி மனோகரி முத்தெட்டுவேகமவை தலைவராகவும், கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்துவை செயலாளராகவும் கொண்ட- மூவினங்களையும் பிரத…
-
- 0 replies
- 355 views
-
-
பொருந்துமா பொருத்து வீடுகள்? நிலாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தம…
-
- 0 replies
- 440 views
-
-
.ஈழத் தமிழன் வெட்கப்பட வேண்டிய ஒரு காணொளி
-
- 1 reply
- 881 views
-
-
ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அ…
-
- 0 replies
- 381 views
-
-
அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன. தகவல்களைப் பரப்பும் வழிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழலில், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இடைவெளி மெதுமெதுவாக இல்லாமல் போகிறது. பொய்கள் மெய்களாகப் பரப்பப்படுகையில், மெய்யைப் பொய்யென இலகுவில் நம்ப வைக்க முடிகிறது. இது ஆபத்தானது. இதை உணர மறுக்கும் சமூகங்கள், இதன்…
-
- 0 replies
- 519 views
-
-
அலெப்போவும் சர்வதேச சமூகத்தின் ‘தோல்வியும்’ - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிரியாவின் அலெப்போவில் நடக்கும் பேரழிவை, உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான், உலக முஸ்லிம்களில் கணிசமானோரினதும் உலக மக்களில் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அக்கறை கொண்டோரினதும் குரலாக, அண்மைய சில வாரங்களாக இருந்து வந்தன. இவ்வாறு கவலைப்பட்டோருக்கு நிம்மதியளிப்பது போன்று, சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில், அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகள், தங்களது பின்னடைவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறிக்குப் பின்னர், போராளிகளின் கட்டுப்…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…
-
- 0 replies
- 301 views
-
-
இதுதான் நல்லிணக்கமா? சிறையிலடைக்கப்பட வேண்டிய மதத்தலைவர்களை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் அழைத்து கௌரவப்படுத்துகிறதா என இப் பத்தியில் இரு வாரங்களுக்கு முன்னர் கேள்வியெழுப்பியிருந்தோம். ஆனால் தற்போது அரசின் செயற்பாடுகள் அதை விட ஒருபடி மேலே போய் அடாவடித்தனம் புரிகின்ற பிக்குகளை அமைச்சர்கள் அவர்களது காலடிக்கே சென்று சந்திக்கின்ற அளவுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்ற நிலைக்கும் வந்திருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த பிக்குகளுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி கொடுத்து அமைச்சரவைக்கு அழைத்து அழகுபார்த்தாலும் ஆச்சரியப்ப…
-
- 0 replies
- 326 views
-
-
இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன் ரொபட் அன்டனி நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வாறான பொறிமுறையை இலங்கை முன்வைக்கப் போகின்றது என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப்போகும் அறிக்கை ஆர்வத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதாவது ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கப்போகிறாரா? அல்லது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணைகொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தப் போகிறாரா? மிகவும் பரபரப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 287 views
-
-
சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம் இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன? யுத்தகாலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் புதிய அரசியல் சாசனம் உருவாகும் இவ்வேளையில் காணப்படுவதும் காட்டப்படுவதும் இலங்கை அரசியலின் நெருக்கடிப் போக்குகளை தெளிவாகவே விளக்குகிறது. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இன்னும் தெளிவான முடி…
-
- 0 replies
- 241 views
-
-
முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும், இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள பௌத்த மத குருக்களுக்கு எதிராகப் பாய்வதில்லை. அவர்களையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் சட்டங்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறியோடு நடந்து கொள்வதை மக்கள் காணக்கூடியதாக உள்ளத…
-
- 0 replies
- 252 views
-
-
வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த சில நாட்களின் முன்னர், ஈழத்தில் மத முரண்பாடுகளைத் தூண்டும் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெத்த விகாரைகளை அமைத்து தங்கியுள்ள சில பிக்குகளே வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாக இருந்த பேரினவாத மதவாத மேலாதிக்க வன்முறைவெறி, அழிவற்று, பலமாகவும் சட்டப் பாதுகாப்போடும் வன்முறைப் பசியோடும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் மத – இனக் கலவரம் ஒன்று ஏற்பட…
-
- 0 replies
- 394 views
-
-
கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …
-
- 0 replies
- 285 views
-
-
இந்திய கொல்லைப்புறத்தில் அகலக் கால் பதிக்கிறது சீனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் திகதி, ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்த…
-
- 0 replies
- 649 views
-
-
ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது - கருணாகரன் விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது. மாவீரர்நாள் கொண்டாட்டங்கள் எத…
-
- 0 replies
- 337 views
-
-
பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய, கவர்ச்சிகரமான, இனிமையான வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சூழல் சார்ந்த நுணுக்கமான வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு. இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்தொரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அன்றி வெளிநாட்டு …
-
- 0 replies
- 402 views
-