அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கான உத்தியா? நிருபா குணசேகரலிங்கம்:- 28 பெப்ரவரி 2016 இனக் கலப்புத் திருமணங்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறை என வடக்கிற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அவர், தனது பதவியேற்பின் பின் ஆற்றிய கன்னிப் பேச்சு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றமை பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தமிழ் மக்களிடத்தில் ஓருவகை சலனத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இவ் உரைக்கான பதிலளிப்புக்கள்; அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கிளம்பியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் இன நல்லிணக்கமும் கலப்புத் திருமணமும் என்ற சிந்தனை ஓர் அரசியல் தீர்வை எதிர்பார்த்து பயணிக்கும் இலங்…
-
- 0 replies
- 516 views
-
-
இந்தியாவை திருப்திப்படுத்தாதுவிட்டால்? - யதீந்திரா தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள், குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மகிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, இந்தியா தொடர்பான விவாதங்கள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன. இவ்வாறான எதிரணி பிரச்சாரங்களுக்கு ரணில் கடுந்தொனியில் பதிலளித்திருக்கின்றார். அதாவது, யார் எதிர்த்தாலும் இந்தியாவுடனும் சீனாவுடனும் உடன்பாடுகளில் கைச்சாத்திட்டே ஆகுவோம் என்றும் ரணில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற…
-
- 2 replies
- 794 views
-
-
ரணிலை புரிந்துகொள்வது அவசியம் - தெய்வீகன் நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி மகிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த ஏழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ்மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது. இது விடயத…
-
- 1 reply
- 644 views
-
-
1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட ‘தனிச் சிங்களச்’ சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் ‘பிரிந்து’ செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி …
-
- 0 replies
- 492 views
-
-
சுரேஷின் அகற்றமும் மாவையின் நோக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப். - சுரேஷ் அணி) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள். இந்தப் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் சேர்த்துக் கொள்ளப்படக் கூ…
-
- 0 replies
- 533 views
-
-
இறைவனின் கையில் தான் தமிழரின் தீர்வு! நல்லாட்சி என்பது தமிழரைப் பொறுத்த மட்டில் வார்த்தையில் தான் மலர்ந்திருக்கிறதே தவிர, அரசியல் செயற்பாடுகளில் அல்ல.வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரசியல் தலைவர்கள் மைத்திரி யின் நல்லாட்சி பற்றி என்னதான் புகழ்ந்தாலும்,அந்த நல்லாட்சியால் முழுமையாக நன்மை பெறுவது பெரும்பான்மையின சிங்கள மக்களே ஆவர்.இறையாட்சியை தவிர ஆட்சி வந்தாலும் தமிழர் நிலை ஒருபோதும் மாறாது என்பதைத் தமிழர் தரப்பு முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட இனம் ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஒரு சரீரத்தினுடைய வளர்ச்சியைப் போன்றது. ஒரு சரீரத்தின் எந்தப் பாகமாவது பாதிக்கப்பட்டால் …
-
- 0 replies
- 623 views
-
-
சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது - ஈழநாட்டுக்காரன் மௌனத்தைவிட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும். வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத் திட்டங்களில் குறை கண்டுள்ளனர். இந்தக் குறைகண்டு பிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான…
-
- 11 replies
- 1.3k views
-
-
அசிங்க அரசியலின் உச்சம்? - யதீந்திரா படம் | TAMILNET சில வேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்ற போது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக் கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மேலும் ஒரு படி நோக்கி முன்நகர்ந்தது. இதனை மேலும் நிரூபிக்கும் வகையில் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, அதனை அமுல்படுத்துவதற்கான வாக்குறுதியையும் வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகவே அரசாங்கம், தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஆட்சி மாற…
-
- 2 replies
- 727 views
-
-
புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள் படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது – ‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக…
-
- 0 replies
- 519 views
-
-
விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? நிருபா குணசேகரலிங்கம்:- 14 பெப்ரவரி 2016 பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்…
-
- 0 replies
- 538 views
-
-
தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:- 14 பெப்ரவரி 2016 விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாட…
-
- 0 replies
- 471 views
-
-
ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ? கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரி…
-
- 0 replies
- 548 views
-
-
சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப…
-
- 0 replies
- 514 views
-
-
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன் FEB 10, 2016 இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் …
-
- 0 replies
- 489 views
-
-
பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா? - துன்னாலைச் செல்வம் பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த நிலத்தை ஏன் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து கைப்பற்ற வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை இந்த நிலம் தமிழ் மக்களின் தாய் நிலம். இந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் தமது உயிர்களைக் கொடுக்க தயாராக இருந்தார்கள். தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டினாலே இந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. இப்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சிங்கள அரசுடன் சேர்ந்து பலாலியில் பொங்கல் விழா கொ…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழில் தேசிய கீதம் – யாருக்கு வெற்றி? FEB 07, 2016 | கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகாரபூர்வமற்ற தடை விலக்கப்பட்டது என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் அனுமதி என்றும், சர்வதேச ஊடகங்களில் காணப்பட்ட செய்தி, இலங்கை அரசாங்கம் தொடர்பான ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளியுலகில் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு ஒன்றில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டிர…
-
- 0 replies
- 707 views
-
-
பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா? கலாநிதி சர்வேந்திரா பிரித்தானியத் தமிழர் பேரவை சிறிலங்காவின் 68வது சுதந்திரநாளை முன்னிட்டு ஊடக அறிக்கையொன்றை கடந்த 04.02.2016 அன்று விடுத்திருந்தது. இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கு இடித்துரைக்கப்பட்ட விடயங்கள் போலவே தோன்றின. இது பிரித்தானியத் தமிழர் பேரவை குறித்த பலரது அண்மைக்கால எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த அறிக்கையாகவும் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை பங்குபற்றிய பின்னர், இவர்களும் உலகத…
-
- 0 replies
- 683 views
-
-
சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. டிசம்பர் 2006ல் சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச கடந்த பத்தாண்டில் எவ்வாறான பதிவுகளைக் கொண்டுள்ளார் என்பதை இங்கு பார்க்கல…
-
- 0 replies
- 755 views
-
-
பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன? தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்ட நீட்சி, காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றது. ஆனால், அ…
-
- 0 replies
- 599 views
-
-
விவாதம்: இனஅழிப்பும் இனச்சுத்திகரிப்பும் ராகவன் இலங்கையில் 2009 இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்தது இனஅழிப்பா அல்லது யுத்தக் குற்றமா என்று வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் சுமந்திரன் பா.உ., சர்வதேசச் சட்ட வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலையை நிரூபிப்பது கடினம் எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரைத் துரோகியென்றும் இனப்படுகொலையை நிராகரிப்பவர் என்றும் இலங்கை அரசின் ஏவலாள் என்றும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதன் உச்சகட்டமாக லண்டனில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூச்சலிட்டுக் கூட்டத்தைக் குழப்ப முயன்றனர். இவ்வாறு பாரிஸிலும் சுவிஸிலும்கூட நடந்தது. அத்துடன் சமீபத்தில் முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர், அதற் காகத்…
-
- 0 replies
- 835 views
-
-
கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல்; நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வௌியிடவும்! படம் | The Wall Street Journal பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று அறிக்கையொன்று வௌியிடப்பட்டது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. --------------------------- 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை …
-
- 0 replies
- 406 views
-
-
தமிழகத்தின் நிலைமையோ இன்று கன்னடத்தில் இருந்து வந்தவர்களும்,தெலுங்கர்களும் , மலையாளிகளும் வந்து தமிழகத்தை அடக்கி ஆள்வதும்.மலையாள நிறுவனங்கள் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதும்,தமிழகத்தின் வளங்கள் பிற இனத்தவருக்கு வழங்கப்பட்டதும்.தமிழகத்தில் உயர்பதவிகளை பிற இனத்தவர் ஆக்கிரமிப்பதும்.தமிழ் தமிழ் எனச்சொல்லி ஒரு கூட்டமும்,பார்ப்பானிய ஆதரவு என ஒரு கூட்டமும் கொள்ளையடிப்பதும் இங்கே தான். பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்ப…
-
- 0 replies
- 982 views
-
-
யாருக்கு கை கொடுக்கும் மஹிந்த என்கிற அரசியல் கருவி? ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு செல்வதே திரு…
-
- 0 replies
- 465 views
-
-
வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்…
-
- 0 replies
- 488 views
-