Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிங்களத்தில்: சிசிர குமார பண்டார, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார் ஆதி­கா­லத்­தி­லிருந்தே இலங்கை சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­தோரும் இங்கு குடி­யேறி, இந்­நாட்டின் பிர­ஜை­க­ளா­னார்கள். அவ்­வாறு வந்து குடி­யே­றிய ஒரு இனக்­கு­ழு­ம­மா­கவே இந்­நாட்டு முஸ்­லிம்­களும் திக­ழு­கி­றார்கள். ஆனாலும் இதர இனங்­களை விடவும் முஸ்­லிம்­க­ளிடம் விசேட தன்­மை­யொன்று காணப்­ப­டு­கி­றது. அதா­வது அவர்­களுள் ஒரு சில­ரது பரம்­பரைப் பெயர்கள் சிங்­களப் பரம்­பரைப் பெயர்­க­ளோடு இணைந்­த­தா­க­வுள்­ள­மையே இவ்­வாறு சிறப்­பிடம் பெறு­கி­றது. அக்­கு­றண முஹம்­தி­ரம்­லாகே கெதர அபூ­பக்கர், உட­ரட்ட ராஜ­கீ…

    • 0 replies
    • 891 views
  2. கூட்டைத் தடுக்கும் ‘புறச்­சக்தி’ * விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது. *ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்…

  3. ‘அடை­யா­ளங்­களை’ இழக்கும் முஸ்லிம் சமூகம்: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை முஸ்­லிம்கள் எதிர்காலம்..! பாரம்­ப­ரி­யத்­தி­னூடு இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு கடத்­தப்­பட்ட இன, மத, கலா­சார அடை­யா­ளங்­களை இழப்­ப­தா­னது நமது வர­லாற்றின் பக்­கங்­களை நாமே கிழித்­தெ­றி­வதைப் போன்­ற­தாகும். இலங்கை முஸ்­லிம்கள் நிகழ்­கா­லத்தில் அவ்­வா­றான ஒரு நெருக்­கடி நிலை­யையே எதிர்­கொண்­டி­ருக்­கின்­றனர். தனித்­துவ அடை­யா­ளங்­களைக் கொண்ட இஸ்­லா­மி­ய­னா­கவோ அல்­லது முஸ்­லி­மா­கவோ அன்றி, ‘இரண்­டும்­கெட்­டான’ நிலைக்­குள்­ளான ஒரு ‘கலப்பு சமூ­க­ வி­லங்­காக’ வாழ்­வ­தற்­கான நிர்ப்­பந்­தங்கள், தெட்டத் தெளி­வாக முஸ்­லிம்கள் மீது தவணை அடிப்­ப­டையில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. ஒப்­பீட்­ட­ளவ…

  4. அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள்!! -சிறிமதன் June 21, 2019 என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே நாம் வழமை போன்று அரசியல் கைதிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுபவர்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்திரு…

  5. கோத்­தா­வுடன் எனக்கு எந்த தொடர்­பு­மில்லை : இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் (ஆர்.யசி ) முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்­த­தில்லை. அவர்கள் எனக்கு சம்­பளம் கொடுக்­கவும் இல்லை. என்னைக் கோத்­த­பாய ராஜபக்ஷவுடன் இணைக்க வேண்டும் என்ற தேவை சில­ருக்கு உள்ளது என இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அப்துல் ராசிக் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­விக்­குழு முன்­னி­லையில் நேற்று வியா­ழக்­கி­ழமை விசா­ர­ணைக்­காக அழைக்­…

  6. அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…

  7. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்? கலாநிதி அமீர் அலி 1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ' அரசியல் ஹீரோக்கள் ' தமிழர் பிரச்சி…

  8. தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன. காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க…

    • 4 replies
    • 2.1k views
  9. ஹேலியர் சுயூங் பிபிசி செய்தியாளர் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும். இந்த போராட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்தியது இளைஞர்கள். பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதை சமீபத்தில் தாண்டியவ…

  10. அச்சமூட்டும் கட்டுக் கதைகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:10 மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் செயற்பாடுகளில், சிங்களப் பேரினவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உணவு, உடை போன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியவர்கள்…

  11. புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து இலங்­கைக்கு வருகை தந்த முத­லா­வது வெளி­நாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜயம் இலங்­கைக்கு மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமைந்­தி­ருந்­தது. ஆனால், இந்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த விஜ­யத்­தின்­போது தமிழ்ப் பேசும் மக்கள் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்திய விடயம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்தை முக்­கி­யத்­து­வப்­ப­டுத் தும் முக­மாக சம்­பி­ர­தாயபூர்­வ­மாக மரக்­கன்று ஒன்று இந்­தியப் பிர­த­மரால் ஜனா­தி­பதி மாளி­கையில் நாட்டி வைக்­கப்­பட்­டது. அந்த மரக்­கன்றின் பெயர் மற்றும் அது…

  12. கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …

    • 1 reply
    • 472 views
  13. ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 குருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத…

  14. படத்தின் காப்புரிமை AFP Contributor இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பிபிசி செய்தியாளர் களத்திற்கு சென்றபோது, கொச்சினில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வுத் துறையின…

  15. இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 03:26 Comments - 0 அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது. கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சு…

  16. கண்ணால் காண்பதே மெய் -கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் A.P.Mathan / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 04:54 Comments - 0 எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை, நேரடியாகச் சென்று தெளிவுபடுத்தும் நோக்கில், திங்கட்கிழமை காலையில், அமைச்சர் திருகோணமலைக்குச் சென்றிருந்தார…

  17. கோடி அற்­புதர் அந்­தோ­னி­யாரின் கோலா­க­ல­மற்ற திரு­விழா இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10 மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ் மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள். கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா...? இல்லை... நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும் திரு­விழா இது. புனித அந்­தோ­னியார்...! அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ…

  18. காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ? (ஆர்.யசி) அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்…

  19. அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 01 (ஆர்.யசி) காத்தான்குடியில் சஹாரான் ஆட்சியே இடம்பெற்றது. ஐ.எஸ் அமைப்பின் கோடியை ஏந்திக்கொண்டு வன்முறை ரீதியிலான அடிப்படைவாத கொள்கையையே அவர்கள் கையாண்டனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிலருடன் அரசியல் உடன்படிக்கைகளும் செய்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் எனவும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார். அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்கரவாத அ…

  20. ‘காவி’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:07Comments - 0 முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும். ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும் சில செயற்பாடுகள் கோமாளித்தனமானவையாக உள்ளன. முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, இனவாதிகளுக்கு இருந்து வந்த ஆத்திரத்தை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தீர்க்க நினைக்கின்றமை, மிகப்பெரும் அயோக்கியத்தனமாகும். ரிஷாட் பதியுதீன…

  21. இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டும்­ நிலக்­கண்­ணிவெ­டி­ அ­கற்றும் நிகழ்ச்­சித்­திட்டம் இலங்­கையின் நிலக்­கண்­ணி­வெ­டி­ ஆ­பத்துக் கல்வி நிகழ்ச்­சித்­திட்டம் வெற்­றி­க­ர­மான ஒரு நி­கழ்ச்­சித்­திட்­ட­மாக பூகோளப் பங்­கா­ளர்­க­ளினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திக­தி­வரை ஜெனீ­வாவில் பிர­தா­ன­மன்­றத்­து­டனும் பக்­க­ நி­கழ்­வு­க­ளு­டனும் நிலக்­கண்­ணி­வெடி அகற்­றல் பற்­றிய ஒரு மீ­ளாய்வுக் கூட்டம் இடம்­பெற்­றது. பிர­தா­ன­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாவட்­டங்­களில் ஆரம்­பத்தில் 1302 சது­ர­ கி­லோ மீற்றர் நிலப்­ப­கு­தியில் நிலக்­கண்­ணி­வெடி ஆபத்­துள்­ள­தாக சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­ட­தாக உறு­தி­செய்­யப்­பட்…

  22. அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து. சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை …

    • 4 replies
    • 636 views
  23. நாம் நம்பிய தலைமைகள் தரங்கெட்டவர்களாக மாறுவது தமிழர்களின் தலைவிதி தேர்தல் என்று வந்தால் உங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள் என்று. அப்­போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்­ட­மாற்­றாகக் கோரியே கொடைகள் தரப்­பட்­டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அர­சியல் திருத்­தச்­சட்­டத்தில் உள்ள அதி­காரப் பகிர்வு வடக்­குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனா­தி­பதி இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அண்­மையில் கூறி­யுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்­மா­னிப்­பது அவர் அல்ல. எமது மக்­களே! அவரைப் பத­விக்குக் கொண்­டு­வர நாங்கள் 2014இல், 2015இல் பாடு­பட்­டது அவர் எங்­க­ளுடன் சேர்ந்து பேசி எமது அர­சியல…

  24. எமக்கு வேறு வழி இருக்கவில்லை ; முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவு அரசியலில் பாரிய திருப்பம் என்கிறார் ஹக்கீம் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அல்­லது அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா என்­பதே தற்­போ­தைய அர­சியல் சூழலில் அனைத்து தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரும் விட­ய­மாக உள்­ளது. நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லாத அமைச்­ச­ர­வை நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அண்­மையில் எடுத்த அர­சியல் தீர்­மானம் அதிர்ச்சி வைத்­தியம் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இந்த முடிவின் பார­து­ரத்­தன்மை அதன் விளை­வுகள் எதிர்­கால நகர்­வுகள் குறி…

  25. சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம் என கிழக்கு மாகாண ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.