Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மேஜர் கயல்விழியின் தந்தையார் அவர்தம் கல்லறை முன் விம்மி அழும் காட்சி 20-04-2007 (சியாமளா நடேசு)
  2. சங்கீதன் மற்றும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு 11-07-2007 "கண்ணாளனே வந்தால் என்ன? நம் பிள்ளையை செல்லம் கொஞ்ச!" 'கிளிநொச்சி ஏ9 வீதியில் இருந்த கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தினுள் இரு வித்துடல்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னால் இருக்கும் வித்துடல் லெப். கேணல் சங்கீதன் அவர்களின்ர, அங்கால் இருப்பது ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயருடைய அண்ணாவின்ர.' குறிப்பு: சில வேளைகளில் "மாவீரர் மண்டபத்தினுள்" வைக்காமல் இவ்வாறு பொது மண்டபங்களில் (கிளிநொச்சி பண்பாட்டு மண்டபம்) பொதுமக்களின் வீரவணக்கத்திற்காக வித்துடல்கள் வைக்கப்படுவதுண்டு. இம்மண்டபமானது 2009இல் சிங்களவரால் தரைமட்டமாக்கப்பட்டது. இங்குதான் எனது கணினி வகுப்பு (கணினி நிலையத்தால் நடாத்தப்பட்டது.) தொடர்பான நிகழ்வும் நடைபெற்றிருந்தது என்பது தனிப்பட்ட தகவலாகும்.. 'ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட போராளியின் மனைவியான தமிழ்ச்செல்வி அவர்கள் தனது கணவனின் வித்துடலைக் கண்டு கதறி அழுகிறார்.' 'ஆறுமுகம் ஆனந்தகுமார் மற்றும் சங்கீதன் ஆகிய போராளிகளின் வித்துடல்கள் மாவீரர் ஊர்தியில் ஏற்றப்படுகின்றன' =========================== இறுதி வணக்க நிகழ்வு ''சங்கீதன் அவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்'' 'விதைகுழியினுள் மண்தூவிச்செல்லும் உறவினரை தாங்கிப்பிடிக்கிறார் மாவீரர் பூரணி'
  3. லெப். கேணல் அர்ச்சுணனின் (இளையதம்பி கதிர்ச்செல்வன்) இறுதி வணக்க நிகழ்வு 20-04-2007 "காதல் உயிரே, காதல் உயிரே கண்ணீராய் கருகிறதே! காதல் கணவன் வீரச்சாவு என்முன்னே தெரிகிறதே!" விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் 'அர்ச்சுணன்ர வித்துடலைத் தாங்கிச் செல்கின்றனர்' 'லெப் கேணல் அர்ச்சுணனின் மனைவியார்' பிரிகேடியர் கடாபி, கேணல் வேலவன், லெப் கேணல் ராஜேஸ் உள்ளிட்டோர் நிற்கின்றனர். 'லெப். கேணல் அர்ச்சுணனின் வித்துடல் சந்தனப்பேழையினுள் வைக்கப்பட்டுள்ளது' 'அன்னாரின் வித்துடலானது வித்துடல் மேடையில் வைக்கப்படுகின்றது'
  4. கேணல்.மனோகரன் ஆசிரியர் குறித்து அரசியல் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருக்கும் அவரது நினைவுக் குறிப்பு பின்வருமாறு: “என் இளமைக்கால நண்பன். வீரச்சாவடையும் வரை அவனோடு பேசிக்கொண்டிருந்தேன். 29.04.2009 அன்று குருவியிடமிருந்து துயரச்செய்தி வந்தது. ‘அண்ணே எறிகணை வீச்சில் வாத்தி இறந்துவிட்டார்’. இப்படி எத்தனையோ இழப்புகள். வலிகளால் நிறைந்தது எம் வாழ்க்கை.” கருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. எனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார். அவர்தான் கேணல் மனோ மாஸ்டர். அடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும் வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் “வீரகேசரியில்’ கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை கேணல் மனோ மாஸ்டர் மட்டுமே... அன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்.. ‘வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர். https://www.meenagam.com/6560-2/
  5. 28-09-2002 இரண்டாம் பலாலித் தாக்குதல் தரைக்கரும்புலிகளில் ஒருவரும் அத்தாக்குதலில் இருகால்களிலும் விழுப்புண்ணடைந்து மயக்கமுற்ற நிலையில் சிறீலங்காப் படையினரால் பிடிக்கப்பட்ட மேஜர் தரநிலையுடைய கென்னடி அவர்கள் ஜெனிவா போர்நிறுத்தக் காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஓமந்தையில் வைத்து ஒப்படைக்கப்பட்ட போது அவரை பேருவகையுடன் கட்டித்தழுவும் கட்டளையாளர் பானுவும் அதை மகிழ்வுடன் காணும் கட்டளையாளர் ஜெயம் அவர்களும் குறிப்பு: தரைக்கரும்புலி கென்னடி அவர்கள் சிறீலங்காப் படையினரால் உயிருடன் பிடிபட்ட விடையமே சிறீலங்காப் அரசாங்கத்தால் போர்க்கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகளிற்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் அன்னாரின் பெயர் மாவீரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.