Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழ நடைமுறையரச நீதித்துறையின் அலுவல்சார் வலைத்தளமான 'www.eelamjudicial.org' இன் முகப்பின் தோற்றம். (இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது)
  2. தமிழீழ நடைமுறையரச நிதித்துறையின் ஆயத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.nithiththurai.com/aayam/' இன் முகப்பின் தோற்றம். (இதில் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் என 3 விருத்தும் இருந்தது. அவற்றுள் சிங்களம் என்பதை நான் சொடுக்கியபோது 'Coming soon' என திரையில் விழுந்தது.)
  3. தமிழீழத்தின் அரச சார்பற்ற அமைப்பான Tamil Children's Endowment Funds இன் அலுவல்சார் வலைத்தளமான 'www.tcefund.org' இன் முகப்பின் தோற்றம். இக்கொழுவியினுள் நுழைந்தால் நீங்கள் முதலில் இவ்வாசலைத்தான் அடைவீர்கள். இங்கு உங்களுக்கு வேண்டிய மொழியை - ஆங்கிலம் அ தமிழ் - தெரிவுசெய்தால் உங்களை அது மேற்கொண்டு வலைத்தளத்தினுள் அழைத்துச் செல்லும். நீங்கள் ஆங்கிலத்தைத் தெரிவு செய்தால் சென்றடையும் இடம் இதுதான்.
  4. தமிழீழத்தின் அரச சார்பற்ற நிறுவகமான வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.vanni.org' இன் முகப்பின் தோற்றம்.
  5. தமிழீழத்தின் பொருளாதார முன்னேற்ற நிறுவனமான பொருண்மிய மதியுரையகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.techonnet.org' இன் முகப்பின் தோற்றம்.
  6. தமிழீழத்தின் அரச சார்பற்ற நிறுவனமான பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.c4wdr.com' இன் முகப்பின் தோற்றம்.
  7. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! அன்பான தமிழீழ மக்களே, எமது தமிழீழ நடைமுறையரசு இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 மேயில், பன்னாட்டு வல்லாதிக்க வலிமைகளின் உதவியுடன் சிங்கள சிறீலங்கா அரச படைகளால் பெரும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையுடன் முற்றாக நந்திக்கடலிலோரத்தில் அழித்தொழிக்கப்பட்டது. அது நடைமுறையரசாக உயிர்ப்புடன் இருந்த காலத்தில் குடிமைக் கட்டுமானங்களை வியாபித்து ஒரு இறையாண்மையுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசு போன்று செயற்பட்டது. அவ்வாறு தொழிற்பட்ட போது தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தனது குடிமைச் சிறகுகளுக்கென தனித்தனி வலைத்தளங்கள் வைத்திருப்பது போலவே தனக்கென தனது அதிகாரநிறைவு பெற்ற வலைத்தளங்களைத் தொடங்கி தொழிற்படுத்தியது. அவற்றில் தனது செயற்பாடுகளை பதிவேற்றி வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களோடான தொடர்பை பேணிக்கொண்டது. ஓரிரு வலைத்தளங்கள் 2002இற்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை 2002இல் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திப்பட்ட பின்னரிருந்து 2009 சனவரி வரை செயற்பட்டன. இவற்றில் பெரும்பாலனாவை 2008 டிசம்பரோடு முடங்கி அ முடக்கப்பட்டு விட்டன. எஞ்சியவையும் 2009 சனவரியோடு சரி. ஓரிரு வலைத்தளங்களின் (இவற்றில் ஒன்றை மட்டுமே என்னால் கண்டுபிடிக்க இயன்றது) ஓரிரு பக்கங்கள் மட்டும் அதியுயர் தகவல்களை பேணுவதற்காக வேறு பெயர்களுக்கு மாறி தற்போது வரை செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு இருந்த வலைத்தளங்களுள் என்னால் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டவற்றினது முகப்புகளை மட்டும் (பிற்காலத்தில் ஏலுமென்றால் ஒவ்வொரு பக்கத்தையும் திரைப்பிடிப்பு செய்து போடுகிறேன்) திரைப்பிடிப்பு செய்து ஆவணப்படுத்தும் நோக்கோடு இங்கு பதிவிடுகிறேன். எமது நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களை கண்டு அதனது நடைமுறையரச வீரியத்தை அறியுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  8. துண்டிக்கப்பட்ட தமிழன் ஒருவனின் தலையுடன் சிறீலங்கா படைவெறியன் "காலம் ஒருநாள் மாறாது போகுமா? கண்ணீர் ஒருநாள் காயாது போகுமா? எங்களின் பூமி எங்களிடம் வந்து சேரலாம்! எங்களை வாட்டும் சோகமும் வந்து தீரலாம்!" --> புயலடித்த தேசம் இறுவெட்டிலிருந்து நான் இந்த படத்தினை எரிமலை இதழில் இருந்தே எடுத்தேன். இந்நிழற்படமானது ஓயாத அலைகள்-2 இன் போது விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி படைத்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். பின்புலத்தில் தெரியும் அந்த கொடிக்கம்ப திண்ணையில் 'SP Coy' என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இவங்கள் இருவரும் 'விஜயபாகு தரைப் படையணி'யின் வீரர்கள் ஆக இருக்கலாம். (முடிந்தளவு பகிருங்கள்... சிங்கள வெறித்தனத்தை புடம்போட்டுக் காட்டுங்கள்)
  9. முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையினை தமிழ்ச்செல்வன் பார்வையிட வந்த போது 2005-2007

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.