Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கீழ்வரும் படிமங்கள்(3 மறுமொழிப் பெட்டிகள்) யாவும் மார்ச் 15, 1996 நண்பகலில் மன்னார் கடலில் சிங்கள சுற்றுக்காவல் அணி மீது தாக்குதல் நடத்தி முடித்துவிட்டு திரும்பும்போது எடுக்கப்பட்டவையாகும். இத் தரையிலிருந்து கடல் நோக்கியதான சமரில் ஒரு கட்டைப்படகு அழிக்கப்பட்டு மற்றொன்று சேதம்மாக்கப்பட்டதோடு இன்னுமொன்று கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்டதில் ஏறி ஈரூடக அணியினர் கடலில் வலம் வந்தனர். -------------------------------------------------------------- இது தொடர்பான நிகழ்படம்:- https://eelam.tv/watch/ltte-s-ambush-on-sri-lankan-navy-patrol-in-mannar_GQ1wqFKyTQenTP7.html -------------------------------------------------------------- இவர் தான் லெப்.கேணல் சேரன்(நடுவில் நடைபேசியோடு புன்னகைத்தபடி இருப்பவர்). இந்த அணியின் முதலாவது கட்டளையாளர். இவரின் வீரச்சாவிற்குப் பின் இவருடைய பெயரை தாங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து சிங்களத்தை கலங்கடித்தது இவ்வணி. வன்னியின் போர் உக்கிரமடைந்த நாட்களில் குஞ்சுப்பரந்தன், நாச்சிக்குடா, பூநகரி, மல்லாவி என விரிந்த சமர்க்களங்களில் சேரன் ஈரூடகத் தாக்குதலணியினர் சிங்களத்தை கலங்கடித்தனர். அதுமட்டுமல்லாது 2006 இல் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பின்போது அல்லைப்பிட்டியில் இருந்த சேணேவிகளை(Artillery) தரையிறங்கி அழித்ததும் இவர்கள்தான் என்பதை மறந்திட வேண்டாம். இந்த ஈரூடக அணியின் போராளிகள் பலர் இறுதிப்போரில் வீரச்சாவடைந்து விட்டனர். எருக்கலம்பிட்டியும் சிறுத்தீவும் இவர்கள் பெயர்சொல்லும் என்றும்!
  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற படைய அரண்களின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படை 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' என்று அழைக்கப்பட்டது. 03-06-2008 அன்று பூநகரி பள்ளிக்குடா பாடசாலையில் நடைபெற்ற விழாவில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(கேணல்/Col.) சூசை அவர்களால் 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' என இவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. அதுவரை 'ஈரூடக தாக்குதலணி' என்ற பெயராலையே இவர்கள் குறிக்கப்பட்டனர். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" சேரன் ஈரூடகத் தாக்குதலணியின் இலச்சினை | Logo of Cheran Marine Attack Team ஊழியால் இழக்கப்பட்டது😥 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.