Jump to content

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33105
  • Joined

  • Days Won

    3

Everything posted by கறுப்பி

  1. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். Saturday, September 17, 2011, 9:10 சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வளங்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையே இவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=26869
  2. தெரியல ஏன் என்று. என்ன ஏது என்று பார்க்கிறேன்.
  3. டாக்டர் குமாரசாமி இப்போ யாழ்களத்தின் பணக்கார டாக்டர் குமாரசாமி ஆகிவிட்டார்.
  4. குமாரசாமி சார் குடியும் குடித்தனமுமாய் வாழ வாழ்த்துகள்.
  5. பிறந்த நாளில் அவரின் நினைவுகளை நினைவுகூறுகிறோம்.
  6. நமது உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான கிட்னி. அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும் "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்: யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்? சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது. பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன? வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா? முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும். அதை எப்படி கண்டுபிடிப்பது..? வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது. அறிகுறிகள் இருக்குமா..? இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும். எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..? தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம். தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். உணவு முறைகள் என்ன? எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம். எந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..? வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..? அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே... வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா? முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும். சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்... நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம். இல்லாவிட்டால்... நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது. அப்புறம்... இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும். இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..? இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும். கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..? என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள். நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா? முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்) நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..? முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும். சா.இலாகுபாரதி நம் தோழி, ஜூன் 2011 http://www.seithy.com
  7. உங்களது சிறப்பு ஒளிப்படத் தொகுப்புகளை விரைவாக ஓன்லைன் மூலம் அனுப்பலாம்: [Tuesday, 2011-08-02 22:05:17] வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். http://mailvu.com/ http://www.seithy.com/breifNews.php?newsID=47627&category=CommonNews&language=tamil
  8. உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம். பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். http://www.stupeflix.com/ http://www.seithy.com/breifNews.php?newsID=47384&category=CommonNews&language=tamil Source: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம்.
  9. சுமங்களாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. முதலில் தங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம். தாராளமாக எழுதலாமே. யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
  11. "பிரதாப முதலியார் சரித்திரம்" 1879ம் ஆண்டு
  12. அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  13. சாந்திக்கு இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
  14. சிற்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  15. வல்வை லிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும். வீரகேசரி இணையம் Source: பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி
  17. இன்று பிறந்தநாள் காணும் பரணி மற்றும் வானவில் ஆகியோருக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. தூயவனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  19. பிறந்தநாள் காணும் புரட்சிக்கு ஒரு பாடல் பரிசாக...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.