View Posttigertel, on 03 August 2011 - 07:43 PM, said:
நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.
வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................
புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி.
இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை.
அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?
This post has been edited by shanthy: 03 August 2011 - 09:35 PM
சாந்தி அக்கா பேராளிகளின் தியாகங்களுக்கு முன் நான் எப்பவுமே வீரம் பேசியதில்லை..... இதற்க்கான காரணத்தையும் நான் எழுதல......!