புதிய பதிவுகள்2

பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு

3 months 1 week ago
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் முன்வைக்க மிகவும் முக்கியமான விஷயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவரது விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்தரையாட வேண்டிய விஷயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு கதைகள் இல்லை. Tamilmirror Online || பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு

மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி!

3 months 1 week ago
22 MAR, 2024 | 07:05 AM மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார். கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி! | Virakesari.lk

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

3 months 1 week ago
22 MAR, 2024 | 07:16 AM கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk

ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி

3 months 1 week ago
யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் | Virakesari.lk

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம்

3 months 1 week ago
22 MAR, 2024 | 12:36 PM வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருவதோடு, கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம் | Virakesari.lk

அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; டெல்லிக்கு அடுத்த முதல்வர் யார்?!

3 months 1 week ago
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு திடீரென மதுபானக் கொள்கை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட் 10 நாள்கள் அமலாக்கப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பதால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சிறையில் இருந்து கொண்டு கெஜ்ரிவால் ஆட்சியை நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறையில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்துவது சாத்தியம் இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி கைதி வாரத்தில் இரண்டு முறை மட்டுமே உறவினர்களை அல்லது வேண்டப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்த முடியும். ஆளுநர் நினைத்தால் கெஜ்ரிவால் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும். அதாவது ஆளுநர் எந்த ஒரு கட்டடத்தையும் சிறையாக மாற்ற முடியும். அந்த வகையில் அர்விந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைக்கும் பட்சத்தில், கெஜ்ரிவால் அன்றாட டெல்லி நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள முடியும். ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்படும்போது முதலில் அவர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். கைது செய்தவுடன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று டெல்லி அமைச்சர்கள் செளரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலும் இதையே தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனால் சிறையில் இருந்து கொண்டு நிர்வாகம் செய்வது சிரமம் ஆகும். அது போன்ற ஒரு நிகழ்வு நாட்டில் இதற்கு முன்பு நடந்தது கிடையாது. இதையடுத்து கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் அந்த இடத்திற்கு மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. ஏற்கெனவே கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோசியா மற்றும் சத்யேந்தர் சிங் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். எனவே கட்சியில் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் செளரப் பரத்பவாஜ், அதிஷி மர்லெனா மற்றும் கோபால் ராய் ஆகியோர் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.மதுபானக் கொள்கையில் மொத்தம் 600 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் 100 கோடி ரூபாய் சவுத் குரூப் கொடுத்திருக்கிறது. அதற்காகத்தான் கவிதா கைதுசெய்யப்பட்டுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜு, மதுபானக் கொள்கையில் கிடைத்த லஞ்சப்பணத்தில் 45 கோடியை கோவா மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு செலவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ``இவ்ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அர்விந்த் கெஜ்ரிவால்தான். இதனால்தான் 9 முறை அமலாக்கப் பிரிவின் சம்மனை நிராகரித்துள்ளார்.'' என்று வாதிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; டெல்லிக்கு அடுத்த முதல்வர் யார்?! |As Arvind Kejriwal has been arrested, the question has arisen as to who will be the next Chief Minister. - Vikatan

அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

3 months 1 week ago
அவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருந்து இருக்கிறார்,..வயதும் 70 மேல் வரும் எந்த நிமிடமும். இந்த உலகிலிருந்து சொல்லலாமால் கொள்ளாமல் போகலாம் மேலும் அவர் எவரையும் நம்புவது கிடையாது அவரைத் தான் நம்புகிறார்கள் இலங்கை இந்தியா ரஷ்யா சீனா அமெரிக்கா,.........இந்த நாடுகளின் தலைவதலைவர்கள் வயோதிபர்கள் தான் எந்த நேரமும் பாசக்கயிறு கழுத்தில் விழும் எனவே… காலம் நீண்ட காலம் கிடக்குறது என்பது சரியான வாதமில்லை 😀

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 1 week ago
`மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? சின்னம் இல்லாமல் காத்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு, `மைக்` சின்னம் ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் இச்சின்னத்தை நா.த.க ஏற்க தயாராக இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக விசாரித்தோம். 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியின் புதுச்சின்னம் என்னவென்ற ஆவல் கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதீதமாக இருந்தது. இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி நா.த.க-வுக்கு `மைக்' சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இச்செய்தி மார்ச் 22-ம் தேதி வெளியாகவே... சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தரப்பிலோ, அதன் நிர்வாகிகளோ இது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. மைக் சின்னம் இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் வழங்கப்படும் என நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இரு தினங்களாகவே ஆட்டோ, பேனா முனை, அரிக்கன் விளக்கு போன்ற சின்னங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அவை அனைத்தும் வதந்தியே. கட்சியின் தலைமை, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை எதையும் நம்ப வேண்டாம் என நோட் அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் அதிகாரபூர்வமாகவே தேர்தல் ஆணையம் `மைக்` சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது. இருந்தும் சீமானோ... தலைமை நிர்வாகிகளோ இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். `தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள்’ என அதே மெசேஜைத்தான் மீண்டும் அனுப்பினர். இதனால் கட்சிக்குள் என்ன நடக்கிறதென்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது” என்றனர் . சின்னம் போஸ்டர் தலைமைக்கு நெருக்கமான சிலரோ, ``நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமானதுதான். ஆனால் அதில் எங்களுக்கு ஏற்பில்லை. அன்றாடம் பயன்படுத்தும் மைக்போல் இல்லாமல் வேறு வடிவில் இருக்கிறது. இதனை வாக்குப்பெட்டியில் மக்களால் எளிதில் அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அதேசமயம் `மைக்’ என்பது ஆங்கில சொல்... `ஒலிவாங்கி` என தமிழ்படுத்தி பேசினால் மக்கள் புரிந்துகொள்வது கடினம். மேலும் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் அதில் ஏற்பில்லை. எனவே தேர்தல் ஆணையத்தை ஆணுகி வேறு சின்னம் கோர முடிவெடுத்துள்ளோம். ஆங்கிலச் சொல்லாக இருந்தாலும் எளிதில் சென்றடையக்கூடிய ஆட்டோ சின்னமோ... தீப்பெட்டி சின்னமோ கேட்டிருக்கிறோம். இல்லாவிடில் படகு, கப்பல் போன்ற சின்னங்களுக்கும் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். மார்ச் 23-ம் தேதி மாலை வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் மாற்றுச் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம், அப்படி எதுவுமே வொர்க்-அவுட் ஆகாத நிலையில் `மைக்’ சின்னத்தோடு பிரசாரத்துக்குக் கிளம்புவோம்” என்றனர். சீமான் தொடர்ந்து பேசியவர்கள், ``நாங்கள் கேட்கும் ஆட்டோ, தீப்பெட்டி ஆகிய சின்னங்கள் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்படித்தான் 2021 தேர்தலில் வேறு கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது, சம்பந்தபட்டவரிடம் தடையில்லா சான்று பெற்று தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கொடுத்ததும், `டார்ச் லைட்’ சின்னத்தை மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கினர். அதுபோல் ஆட்டோ, தீப்பெட்டி சின்னத்தைப் பெற முயல்வோம்” என்றனர். `மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? | Naam tamizhar Katchi dislikes Mike Symbol expects other symbol from ECI - Vikatan

மயிலம்மா.

3 months 1 week ago
இதைத் தான் முதலே வயகு வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கலாமே என்று கேட்டேன். சுவி உங்கள் எழுத்தாற்றலுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 1 week ago
இது வேறு வகையான கேள்வி, இதற்கும் மேல் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தமென விளங்கவில்லை. ஆனால், அன்பளிப்புக் கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றம் இருக்காது. ஏன்? ஒரு கட்சியை, வேட்பாளரை மக்கள் விரும்புவதற்கான காரணம் முதலே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அது சிக்கலான காரணமாக இருந்தாலும் கூட. தொடர்ந்து தோற்று வரும் நா.த.க வை எடுத்துக் கொள்ளுங்கள்: 100 ஆண்டுகள் முன்பு ஒன்றாக இருந்த நிலப்பரப்பில், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் என்று கலந்து கட்டி உருவான ஒரு மக்கள் கூட்டத்திடம் போய் ஏனைய 3 மொழியினரையும் திட்டி வாக்குக் கேட்டால்,அந்த மக்களில் பெரும்பாலானோர் வாக்குப் போடுவார்களா? இயற்கையாகவே , அப்படி வெறுப்பரசியல் செய்யாத கட்சியை நோக்கி (அது ஊழல் கட்சியாக இருந்தாலும்) மக்கள் நகர்வர். இந்தப் பால பாடம் தெரியாமையால் தோற்கும் ஒரு கட்சி, வாக்கு இயந்திரத்தையும், அன்பளிப்புகளையும் திட்டி நேரத்தை வீணாக்குகிறதென நான் நினைக்கிறேன்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 1 week ago
சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.

மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்; ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

3 months 1 week ago
Published By: RAJEEBAN 22 MAR, 2024 | 02:14 PM மொங்கோலியா அரைநூற்றாண்டு காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும் அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர். தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179391

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 months 1 week ago
இந்த‌ சின்ன‌ம் க‌ட்சி த‌லைமை ஏற்க்க‌ வில்லையாம் வேறு சின்ன‌ம் கேட்டு இருக்கின‌ம் நாளை தெரியும் என்ன‌ சின்ன‌ம் என்று...............

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 1 week ago
அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி; உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது! Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 04:17 PM இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர் களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன். பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களை தடுப்பது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி தந்துள்ளார். தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாக கூறியிருக்கிறார். மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்திய தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள் நான் அவர்களிடம் கூறி இருக்கிறேன் இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் எனக் கூறியுள்ளேன். எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினோனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வார்கள். கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான். இதனால் தான் இந்தியா என்னை எதிரியாப் பார்க்கிறது ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாக பார்ப்பதில்லை . ஆகவே இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்தொழில் சங்கங்களைச் சேர்த்து மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்தனர். https://www.virakesari.lk/article/179438

உலக நீர் தினமும் அதன் சமூகப்பாங்கும்

3 months 1 week ago
22 MAR, 2024 | 10:46 AM இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற பல்வேறு தினங்களில் உலக நீர் தினமும் ஒன்றாக அமைகிறது. ஆண்டுதோறும் மாரச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற இந்த நீர் தினமானது ஏனைய உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற தினங்களில் இருந்து அதிமுக்கியத்துவம் பெற்று சற்று வேறுபடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை யாவரும் அறிந்ததே. அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். அதுமட்டுமன்றி, நாடுகளின் புவியியல் அமைப்புக்கு தக்கவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் இந்த நீர் தினத்தின் ஒரு அம்சம் ஆகும். மேலும், ஒரு நாட்டின் எதிர்காலப் பிரஜைகளாக சமூகத்தின் பல சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கும் மாணவ சமூகத்திற்கும் அவரவரது நாட்டின் நீர் வளப் பாதுகாப்புப் பற்றி விழிப்புணர்வு அளிப்பதும் இந்த உலக நீர் தினத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும். இன்னும் சொல்லப்போனால், நீரின்றி அமையாதது உலகு, நீர் வளங்கள் மிக விரைவாக அருகிச் செல்கின்றன. அத்தோடு, சூழல் பிரச்சினைகளில் முன்னோடியாகத் திகழ்வது இந்த நீர் பற்றாக்குறை எனும் தாற்பரியங்களைத் தாங்கி நிற்கிறது இந்த நீர் தினம். நீரில்லாத வாழ்க்கையை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாத அளவுக்கு நீர் எமது வாழ்வின் ஒரு பிரதான அங்கமாகத் திகழ்கின்றது. 1992ஆம் ஆண்டு பிரேஸிலில் ரியோடி ஜனய்ரா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை சூழலும் அபிவிருத்தியும் எனும் மாநாட்டின் 21ஆம் நூற்றாண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த நீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1993ஆம் ஆண்டு மாரச் மாதம் 22ஆம் திகதி முதன் முதலான உலக நீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் இன்று வரைக்கும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலகெங்கிலும் நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளை வலியுறுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1993இல் முதன்முதலாக நீர் தினம் உலகளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர் வளங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மனித சமூகத்துக்கு வழங்குதல் என்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்தபோதிலும் அந்த ஆண்டில் விசேடமான கருப்பொருள் அல்லது எண்ணக்கருவோ அமைந்திருக்கவில்லை. எனினும் 1994ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் முதன்முறையாக “நீர் வளங்களைப் பராமரிப்பது எம் எல்லோரதும் கடப்பாடு” எனும் கருப்பொருளில் உலக நீர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. எமது அன்றாட நடவடிக்கைகளின்போது எண்ணெய், பூச்சிகொல்லிகள், உரங்கள் மற்றும் வண்டல் மண் ஆகியவை நீரூடகங்களை எப்படியோ சென்றடைந்துவிடுகின்றன. எமது நீர் வளங்களைச் சுத்தமாக வைத்திருப்பதையும் மற்றும் நாம் சுற்றுபுறத்தில் போதியளவு நீர் இருப்பதை உறுதி செய்வதையும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அதாவது எமது வீட்டைச் சுற்றியுள்ள நீர் வளங்களை மாசுக்களிலிருந்து பாதுகாத்தல் எனப் பொருள்படும். 1996ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “மகளிரும் நீரும்” என்பதாக அமைந்தது. நீர் சேகரிக்கும் கடமையில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் பெண்களாக அமைவதால் நீரால் பரவும் நோய்களுக்கு முதலில் ஆளாகுபவர்கள் பெண்களே. இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றது. அதுமட்டுமில்லாமல், அதிக குழந்தைகள் இறந்த நிலையிலே பிரசவிக்கின்றன அல்லது குறைபாடுகளுடன் பிறக்கின்றன. பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார சேவையின்றி பெண்கள் மற்றும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கும் தாக்குதலுக்கும் மற்றும் உடல்நலக் குறைவுக்கும் ஆளாகின்றனர். இது அவர்களின் கல்வி, தொழில் மற்றும் கண்ணியத்தை முற்றாகப் பாதிக்கிறது. வீடு, பாடசாலை, வேலைத்தளம் மற்றும் பொது இடங்களில் மேம்படுத்தப்படும் நீர் மற்றும் சுகாதார சேவைகள் பாலின சமத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. சேவைகள் அனைத்தும் அவர்களின் குறிப்பிட்ட தேவைக்கு அமையும் முகமாக பெண்களும் சிறுமிகளும் தீர்வுகளை வடிவமைத்துச் செயற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். நீர் மற்றும் துப்புரவு சேவைகள் இன்றிய சுற்றுப்புறங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலைப்பாடுகள் வாந்திபேதி போன்ற நோய்க் கிளர்ச்சியின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இது ஏழைச் சமூகங்களை பேரழிவுக்கு உட்படுத்தி நகரத்துக்கும் அதற்கு அப்பாலும் பரவுகின்றது. இதனால் சேவை காணாத நகர்ப்புறச் சூழல்கள் இலகுவில் அதிர்ச்சிக்கு ஆளாகின்றன. இந்நிலையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு உலக நீர் தினம் “தாகம் கொண்ட நகரங்களுக்கான நீர்” எனும் கருப்பொருள்கொண்டு அமையப்பெற்றது. 1997ஆம் ஆண்டு உலக நீர் தினம் “உலக நீர் போதுமானதா?” எனும் தொனிப்பொருளில் அமையப் பெற்றது. எமது பூமிக்கிரகம் ஓருபோதும் முற்றாக நீர் இன்றிப் போகாது. எனினும் சுத்தமான நன்னீர் எப்போதும் மனிதர்களுக்குத் தேவைப்படும் இடத்தில் எப்போதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். உலகில் ஆறு நாடுகளில் மட்டுமே உலகின் பாதி நன்னீர் அளவு காணப்படுகிறது. “நிலத்தடி நீர் கண்ணுக்குப் புலப்படாத வளம்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. 1998ஆம் ஆண்டு உலக நீர் தினம், நிலத்தடி நீர் பார்வைக்குப் புலப்படாமல் இருந்தாலும் இது ஒரு ஆரோக்கியமான கிரகத்தின் பல்லின விருத்தி, வளரும் உணவு மற்றும் பிற தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மறைந்துள்ள வளங்களான நீரோடைகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் ஏரிகள் என்பன மழைவீழ்ச்சி, உருகும் பனிமலைகள், நீரோட்டங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பவற்றால் மீள்வளம் பெறுகின்றன. 1999ஆம் ஆண்டு “அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கின்றார்கள்” எனும் கருப்பொருளை விளக்கும் முகமாக உலக நீர் தினம் இடம்பெற்றது. நீரைப் பற்றி கற்பவர்கள் “நாங்கள் அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கிறோம்” என்று கூறுகிறார்கள். இதன் பொருள், நாம் இங்கே நீருக்கு ஆற்றும் எந்த செயலும் இந்த நீரோட்டத்தின் கீழே வாழ்கின்ற மக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கக்கூடும். அவ்வாறே, எங்களுக்கு மேலேயுள்ள நீரோட்டத்தை ஒருவர் மாசுபடுத்தினால் அந்த மாசு கீழேயுள்ள நீரோட்டத்தை அடைந்து எங்களைப் பாதிக்கும். இருபதாம் நூற்றாண்டைக் கடந்துவிட்ட நாம் இன்றும் அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாகிய “நீரினை அணுகும் வழி” என்பதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். உலக சனத்தொகை பெருகும்போது அதற்கேற்ப நீரின் தேவையும் வெகுவாக அதிகரிக்கும். அதேநேரத்தில் காலநிலை மாற்றம், வலுப் பற்றாக்குறை, நிலப் பயன்பாட்டுத் தீர்மானங்கள், கனிய வளங்களின் தொழிற்பாடுகள், தொழிற்சாலைகளின் தேவைப்பாடுகள் ஆகியவற்றால் நீரின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் நீரின் தரம் என்பன மிகவும் சவாலாக உள்ளன. எமது தற்போதைய நீர்ப் பயன்பாட்டைச் சமாளிப்பதற்கும் அதை எதிர்காலத்துக்காக கட்டமைப்பதற்கும் சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும். இதனால் பெருகி வரும் சனத்தொகைக்கு சேவை செய்ய முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்காக இருப்புக்களைப் பாதுகாக்க முடியும். இதனால் 2000ஆம் ஆண்டு உலக நீர் தினம் “21ஆம் நூற்றாண்டுக்கான நீர்” எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. “ஆரோக்கியத்துக்கு நீர்” எனும் கருப்பொருளுடன் 2001ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. நீர் எமது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. உயிரணுக்களுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டு செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது, மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைப் பாதுகாப்பது, உடல் வெப்பநிலையைப் பேணுவது உள்ளிட்ட எமது உடலின் பல செயற்பாடுகளில் நீர் முக்கிய பங்குவகிக்கிறது. நீர் எப்போதும் எங்களுக்கான அருந்து பானமாக இருக்க வேண்டும். “அபிவிருத்திக்கான நீர்” என்றவாறு அமைகிறது 2002ஆம் ஆண்டின் உலக நீர் தினத்தின் கருப்பொருள். நீரானது நிலையான அபிவிருத்தியின் முக்கிய இடத்தில் உள்ளது. அத்துடன் சமூக பொருளாதார அபிவிருத்தி, வலு மற்றும் உணவு உற்பத்தி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் மனித உயிர்வாழ்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகின்றது. சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படும் நீரானது காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் தன்மையின் இதயத்திலும் உள்ளது. “எதிர்காலத்துக்கான நீர்” என்பதே 2003ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருளாக அமைந்தது. மனித குலத்துக்கும் பூமிக்கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளமாக அமைந்த போதிலும் அது வரையறுக்கப்பட்டதும் மற்றும் வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாததும் ஆகும். அதனால்தான் மனிதனின் எதிர்கால நல்வாழ்விற்கும், கடல்வளப் பாதுகாப்புக்கும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் நீரின் நிலைத்தன்மை இன்றியமையாத ஒன்றாகும். 2004ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக அமைவது “நீரும் அனர்த்தமும்” என்பதாகும். பெரும்பாலான அனர்த்தங்கள் நீர் தொடர்பானவை வெள்ளம், நிலச்சரிவு, புயல், வெப்ப அலை, காட்டுத்தீ, கடும் குளிர், வறட்சி மற்றும் நீரால் பரவும் நோய்களின் தீவிரம் ஆகியவை பிரதானமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி இடம் பெறுவதுடன் அவை மிகவும் தீவிரமாகவும் இருக்கின்றன. 2005ஆம் ஆண்டு உலக நீர் தினம் ‘பத்தாண்டு காலத்துள் வாழ்க்கைக்கான நீர்’ எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கின்றது 2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2005 - 2015 காலப்பகுதியை “வாழ்க்கைக்கான நீர்” நடவடிக்கைக்கான “சர்வதேச தசாப்தம்”என அறிவித்தது. 2015ஆம் ஆண்டுக்குள் நீர் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதே இந்த தசாப்பத்தின் முதன்மை நோக்கம் எனத் தீர்மானிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு “நீரும் கலாச்சாரமும்” எனும் கருப்பொருளுடன் உலக நீர் தினம் அமையப் பெற்றது. நீர் என்பது மனித குலத்தால் பேணப்படவேண்டிய ஒரு நன்கொடையாக சிலரால் கருதப்படும் அதேவேளை சுற்றுச் சூழலிற்கும் வனவிலங்குகளுக்குமான நீர் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பார்வையாக மற்றவர்களால் கருதப்படுகின்றது. நீருக்கும் இடத்துக்குமான தொடர்பு பெரும்பாலும் “தொடர்பு மதிப்புக்கள்” என வகைப்படுத்தப்படுகின்ற அதேவேளை உள்நாட்டுக் கலாசாரங்களில் மிகவும் வலுவாகவும் கருதப்படுகிறது. “நீர் பற்றாக்குறையைச் சமாளித்தல்” எனும் கருப்பொருளைக் கொண்டு இடம்பெற்றது 2007ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் தேசிய மற்றும் ஆற்றுப்படுக்கைகளின் மட்டத்திலான நடவடிக்கைகள் அவசியமானவை. இது உலகளாவிய மற்றும் சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை ஈர்க்கின்றது. அத்தோடு நீர் வளங்களின் பகிர்வு முகாமைத்துவம் மற்றும் அதன் நன்மைகள் என்பவற்றின் மூலம் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பினை அதிகரிக்க வழிவகுக்கிறது. “சுகாதாரம்” எனும் கருப்பொருளுடன் 2008ஆம் உலக நீர் தினம் இடம்பெற்றது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட குழாய் நீர் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்புடன் கூடிய சாக்கடை இணைப்புக்கள் மூலமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் வயிற்றுப் போக்கு இறப்புக்களைக் குறைத்து சுகாதாரத்தை சடுதியாக மேம்படுத்த முடியும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “எல்லை கடந்த நீர்” எனும் தொனிப்பொருளுடன் 2009ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்படும் நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுக்கைகள் எல்லை கடந்த நீர்வளம் ஆகும். அதிகரித்துவரும் நீர் அழுத்த சகாப்தத்தில் தவறாக நிர்வகிக்கப்படும் எல்லை தாண்டிய நீர் விநியோகங்கள் சமூக அமைதியின்மையையும் மோதலையும் மீண்டும் திறன் கொண்டவையாக அமைகின்றன. காலநிலை மாற்றம் மற்றும் உலக சனத்தொகையின் அதிகரிப்பு என்பவற்றைச் சமாளிக்க மக்களினதும் சூழலினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் எல்லை தாண்டிய நீர் வள முகாமைத்துவத்தில் அதிதேசிய ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம். 2010ஆம் ஆண்டு உலக நீர் தினம் “ஆரோக்கியமான உலகிற்குச் சுத்தமான நீர்" எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. சுத்தமான நீரினைப் பெறுதல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால், உலகில் நால்வருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இது ஒரு சுகாதாரப் பேராபத்து ஆகும். ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நீரினால் இறக்கின்றனர். நகர்ப்புற நீர் பயன்பாட்டுத் துறைகளில் வதிவிடங்கள், வர்த்தகம், தொழிற்சாலை, நிறுவனங்கள் மற்றும் பிற பயன்பாட்டுத்துறைகள் அடங்குகின்றன. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாத அல்லது சூழலுக்கு பயன்படுத்தப்படாத நீர் “நகர்ப்புற நீர்” எனக் கருதப்படுகிறது. எனவே குடிநீர்க்காகவும் கழிவகற்றலுக்காகவும் மற்றும் குளிப்பதற்காகவும் பயன்படுகின்ற நீர் “நகர்ப்புற நீர்” எனப்படும். 2011ஆம் ஆண்டு “நகர்ப்புற நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தினம் அமையப்பெற்றது. “நீரும் உணவுப் பாதுகாப்பும்” என்ற கருப்பொருளைத் தாங்கிநிற்கிறது 2012ஆம் ஆண்டு உலக நீர் தினம். உணவுப் பாதுகாப்புக்கு நீர் இன்றியமையாதது. பயிர்கள் மற்றும் கால்நடைகளின் வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியமானது. விவசாயத்திற்கு பாரியளவு நீர் தேவைப்படும் அதேவேளை பல்வேறு உணவு உற்பத்திக்கு தரமான நீர் அவசியமாகின்றது. மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற உலகின் அனைத்து நன்னீர்களின் 70 சதவீதமானவை பாசன விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. 2013ஆம் ஆண்டு உலக நீர் தினம் தனது கருப்பொருளை “சர்வதேச கூட்டுறவு ஆண்டு” அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகம் அமைதியானதும் நிலையானதுமான நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்வளப் பாவனை என்பவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. “நீர் மற்றும் வலு” எனும் தொனிப்பொருளினை விளக்கி நிற்கிறது 2014ஆம் ஆண்டு உலக நீர் தினம். நீர் மற்றும் அதன் வலு இரண்டுமே மனித உயிர் வாழ்விற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வளங்கள் ஆகும். குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் மிகவும் அவசியம் ஆகும். அதேவேளை போக்குவரத்து, வெப்பமாக்கல் மற்றும் மின்னுற்பத்திக்கு நீரின் வலு அவசியமாகின்றது. நிலையான அபிவிருத்தி, வாழ்வாதாரம், நீதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில் என்பவற்றிற்கு நீர் மிகவும் இன்றியமையாத ஒரு திறவுகோல் ஆகும். சுத்தமான மற்றும் நிலையான நீர் வளங்களுக்குரிய வழிமுறை இன்னும் தளம்பல் நிலையிலே உள்ளது. அனைவருக்கும் சமமானதும் பாதுகாப்பான நீர் கிடைக்காமல் எந்தவொரு நிலையான அபிவிருத்தி என்ற ஒன்று இருக்கவே முடியாது. இதன் சாராம்சத்தை தழுவி நிற்கிறது 2015ஆம் உலக நீர் தினக் கருப்பொருளான “நீரும் நிலையான அபிவிருத்தியும்”. 2016ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருள் “சிறந்த நீர், சிறந்த தொழில்” என்பதை வலியுறுத்தி நிற்கிறது. இது நீருக்கும் தொழிலுக்கும் இடையான தொடர்புகளை மையமாகக் கொண்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களில் அண்ணளவாக ஐம்பது சதவீதமானோர் நீர் தொடர்பான துறைகளில் தொழில் புரிபவர்கள் ஆவர். அத்துடன் அவை யாவும் தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்தே அமைகின்றன. உண்மையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும்பாலான கழிவு நீரானது தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் நகராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்படாமலே மீண்டும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேர்கின்றது. இந்த நிலையின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற 2017 உலக நீர் தினம் “ஏன் கழிவு நீர்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. “நீருக்காக இயற்கை” என்ற கருப்பொருளை தாங்கி நிற்கிறது 2018க்கான உலக நீர் தினம். சுற்றுச்சூழல் அமைப்பினைப் பாதுகாப்பதே நீர்ப் பாதுகாப்புக்கான திறவுகோல் ஆகும். 2030ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான எமது திறனில் இது பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான தெளிவான பாதையை இயற்கை எமக்கு வழங்குகிறது. இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் அவற்றை மீளக் கட்டியெழுப்புதல் மூலமும் நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் இந்த நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் முடியும். “யாரையும் விட்டு விடலாகாது” என்ற கருப்பொருளுடன் அமையப் பெற்றது, 2019ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். “யாரையும் விட்டுவிடக்கூடாது” என்ற உறுதிமொழியானது தீவிர வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலிருந்தும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு உறுதிப்பாடு ஆகும். “அனைவருக்கும் நீர்” என்பதே இக்கருப்பொருளின் மறுவடிவம். அதாவது, அதிக முன்னேற்றம் கண்டவர்கள் பின்தங்கியவர்களைக் கைவிடாமல் இருப்பதற்கான ஒரு சமூகப் பொறிமுறை உருவாக்கப்படல் அவசியம். 2020ஆம் ஆண்டின் கருப்பொருளாக “நீரும் காலநிலை மாற்றமும்” என்றவாறு அமைகின்றது. நீர் நெருக்கடிக்கு பிரதான ஏதுவாய் விளங்குவது காலநிலை மாற்றம். கடும் வெள்ளம், கடல் மட்டம் உயர்தல், பனி நிலச் சுருக்கம், காட்டுத் தீ மற்றும் வறட்சி என்பவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கங்களை நாம் உணர்கின்றோம். இருப்பினும், நீர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடும். நீர் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துபவர்கள்தான் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கட்டுப்படுத்துகிறார்கள். மதிப்பிடுதல் என்பது நீர்வள முகாமைத்துத்துவத்தில் வலுவானதும் சமத்துவமும் மிக்கதான ஒரு முக்கிய அம்சம் ஆகும். வெவ்வேறான நீர்ப் பயன்பாடுகளின் நீரினை மதிப்பிடத் தவறியமை நீரின் அரசியல் புறக்கணிப்பிற்கும் அதன் தவறான முகாமைத்துவத்திற்கும் மூலகாரணமாக அமைகின்றது. 2021ஆம் ஆண்டு உலக நீர் தினம் “நீரின் மதிப்பீடு” எனும் கருப்பொருளில் அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. “கண்ணுக்குப் புலப்படாத நிலத்தடி நீரைப் புலப்படச் செய்தல்” எனும் கருப்பொருளைத் தாங்கி நிற்கிறது 2022ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நிலத்தடி நீர் உலகளவில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத குடிநீரை வழங்குகின்றது. நாற்பது சதவீதமான நீர் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுகின்ற அதேவேளை மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலை தக்கவைப்பது மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவும் நிலத்தடி நீர் அவசியமாகின்றது. அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் மேற்பரப்பு நீரின் கிடைப்பனவின் நம்பகத்தன்மையும் (மனித செயற்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக) நிலத்தடி நீரின் மீது அதிக விசுவாசத்தையும் அழுத்தத்தையும் கொள்வதற்குக் காரணமாக அமைகின்றன. 2023ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்றவாறு அமைகின்றது. நீர் மற்றும் சுகாதாரத்தின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு நிலையான நீர் முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்தும் முகமாக அரச நிறுவனங்களும் தனியார் துறைகளும் இணைந்து செயற்பட வேண்டும். நீர்ப்பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தல், நீர் மாசடைதலைக் குறைத்தல், சுத்தமான நீருக்கான வசதியினை உருவாக்கல் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்புக்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு முதலீடு செய்தல் என்பதே “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்பது கொண்டுள்ளது. அதனை அடைவதற்கு, சிறுமிகள் மற்றும் பெண்கள், கிராமப்புற மக்கள் ஆகியவற்றின் தேவைப்பாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டு சுத்தமான நீருக்கும் ஏற்ற சுகாதார வசதிக்குமான வழியமைத்தல் வேண்டும். புத்தாக்கத் தீர்வுகள் மற்றும் நிலையான நீர்த் தொழில்நுட்பங்கள் என்பவற்றில் முதலீடு செய்யும் சமூகம் தலைமையிலான நீர்ச் செயற்றிட்டங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும். பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு அமைந்ததை போன்றே இவ்வருடம் “சமாதானத்துக்கான நீர்” எனும் தொனிப்பொருளில் அமைகின்றது. நீர்ப் பற்றாக்குறையாக இருக்கும்போது அல்லது நீர் மாசடையும்போது அல்லது மக்கள் சமமின்மையை உணரும்போது அல்லது ஏற்ற வசதியில்லாதபோது சமூகங்களுக்கும் நாடுகளுக்குமிடையில் பதற்றம் உருவாகும். உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகளவிலான மக்கள் சொந்த நாட்டின் எல்லைகளைக் கடக்கும் நீரை நம்பியுள்ளனர். எனினும், 24 நாடுகள் மட்டுமே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பவற்றைச் சமாளிக்க நீர்வள நிலையப் பாதுகாப்புக்கும் அதை பேணுவதற்கும் நாடுகளுக்கிடையான அவசரத் தேவைகள் உள்ளன. பொதுச் சுகாதாரம் மற்றும் செழிப்பு, உணவு மற்றும் சக்தி அமைப்புக்கள், பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் ஒருமைப்பாடு ஆகியவை நன்கு செயற்படுகின்றதும் சமத்துவ முகாமைத்துவம் மிக்கதுமான நீர்ச் சுழற்சியில் தங்கியுள்ளன. சர்வதேச வலைப் பின்னல், அதாவது World Wide Web எனும் சொற்றொடரை மற்றும் றறற எனும் பதத்தை அறியாதவர்கள் உலகில் எவரும் இல்லை. மீண்டும் அதே பதம் றறற வேறு உள்ளடக்கம் கொண்டு வெளிவரக் காத்திருக்கிறது. அதாவது World Water War (உலக நீர் யுத்தம்) என்பதுதான். அப்படியொரு www உருவாகாமல் நீர் தொடர்பான சகல நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த நீரேந்தும் பூமிக்கிரகத்தில் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு உயிரினத்தினதும் தவிர்க்கமுடியாத தார்மீகப் பொறுப்பு ஆகும். - எந்திரி. எஸ்.ராஜ்குமார் சிரேஷ்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், அம்பாறை பிராந்தியம் https://www.virakesari.lk/article/179394
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed