3 months 1 week ago
LIVE
1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League
Royal Challengers Bengaluru (19.6/20 ov) 173/6
Chennai Super Kings
RCB chose to bat.
Current RR: 8.65 • Last 5 ov (RR): 71/1 (14.20)
3 months 1 week ago
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன.
சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது.
********************
புலம் பெயர்ந்த புகை
----------------------------------
இங்கு வந்த நாங்கள்
இப்பொழுது
இறக்க தொடங்கி விட்டோம்
கடைசியில்
ஒரு இடு வீட்டில்
ஒரு வாரம் விறைப்பாக கிடந்து
அங்கிருக்கும் புகை போக்கியால்
எரிந்த மெய்
புகையாக போகின்றது
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது
இன்றே ஏன் வாழக்கூடாது
எவருக்கும் சொல்லத் தெரியவில்லை
இன்று அவர் ஓடுகின்றார்
ஆகவே இவரும் ஓடுகின்றார்
இன்று அவர் வாங்குகின்றார்
ஆகவே இவரும் வாங்குகின்றார்
பின்னர் ஒரு நாளில்
ஊர் மண்ணை போய் சேர
மீண்டு வரும் சொர்க்கம் என்று
எண்ணி எண்ணி இருக்க
அந்த நாள் என்றும் வருவதில்லை
திடீரென பெய்த மழையில்
கொத்தாக குருவிகள் ஒதுங்கின
வீட்டுக் கூரைக்குள்
கிச் கிச் கீச்சென்று
ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன
துளி விழுந்து
துள்ளி ஓடி வந்தது
வெளியே போன குஞ்சு ஒன்று
அகமும் விழியும் இருந்தால்
இந்த வாழ்க்கை சமமே
இங்கும் அங்கும்.
3 months 1 week ago
22 MAR, 2024 | 06:05 PM
இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது.
சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது.
இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படுகின்றது.
அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர்.
அத்துடன் இந்த மாநாட்டினை
https://www.virakesari.lk/article/179453
3 months 1 week ago
இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் விடுவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(22) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
ஜே/244 வயாவிளான் கிழக்கு , ஜே/245 வயாவிளான் மேற்கு, ஜே/252 பலாலி தெற்கு , ஜே/254 பலாலி வடக்கு, ஜே/253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
https://thinakkural.lk/article/296730
3 months 1 week ago
அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மாணவர்களிற்கான விசாக்களை இறுக்கமாக்க தீர்மானம்
22 MAR, 2024 | 10:45 AM
அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா நடைமுறைகளை அவுஸ்திரேலியா இறுக்கமானதாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களிற்கான விசாக்களுக்கு ஆங்கில தேவைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் முதல் நாங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளாரா ஓநெய்ல் தெரிவித்துள்ளார்.
தொழில் வாய்ப்பை மையமாக வைத்து அவுஸ்திரேலியாவிற்கு வரவிரும்பும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக உண்மையா மாணவர் சோதனையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ள அவுஸ்திரேலியா விசிட்டர் விசாக்களில் வருபவர்களிற்கு அவுஸ்திரேலியாவில் மேலும் தங்கியிருக்க முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்படும்.
https://www.virakesari.lk/article/179396
3 months 1 week ago
அண்ணை யாழில் 18/21 வயதுக்கு கீழுள்ளோர் வாசகர்களாகவோ உறுப்பினர்களாகவோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லைத் தானே?
3 months 1 week ago
தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்
44 நிமிடங்களுக்கு முன்னர்
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.
திமுக 21 இடங்களில், அதிமுக 33 இடங்களில், பாஜக 20 இடங்களில் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அறிவிக்கப்படுள்ள வேட்பாளர்களில் தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
கே. அண்ணாமலை
பட மூலாதாரம்,FACEBOOK
தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த சில மாதங்களாகவே, பேச்சு அடிபட்டு வந்தது. நான் போட்டியிட மாட்டேன் என முதலில் கூறிய அண்ணாமலை, தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கோவையில்தான் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை.
கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக கருதுகிறது.
சிங்கை ராமச்சந்திரன்
பட மூலாதாரம்,FACEBOOK
கோவையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் இவர், முதல் முறை வேட்பாளர். தேர்தல் களத்துக்குப் புதிது என்றாலும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.
அதிமுகவின் இளைஞர் அணி முகங்களில் பிரபலமான இவர், கோவை அதிமுக வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.
கோவையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “ஐ அம் வெயிட்டிங்” என்று பதிவிட்ட அவர், சமூக ஊடக தளங்களில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டு பிரபலமானவர்.
பாஜகவிலிருந்து களமிறங்கும் இளம் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட இவரே சரியானவர் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன்
பட மூலாதாரம்,FACEBOOK
தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகக் குறிப்பாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை.
சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ள நகரம். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர்.
தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர்.
மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் நகர்ப்புற மக்களுக்கான சரியான வேட்பாளராக இருப்பார் என்று பாஜக கருதியதால் தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஜய பிரபாகர்
பட மூலாதாரம்,DMDK
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் இருந்து தேமுதிக சார்பாகப் போட்டியிடுகிறார்.
விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெறும் தேர்தலில், அவர் பிறந்த ஊரான ராமானுஜபுரம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏ சி சண்முகம்
பட மூலாதாரம்,FACEBOOK
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருப்பது பாஜகவுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
கனிமொழி
பட மூலாதாரம்,FACEBOOK
கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.
ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.
கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். அவர் தாயாரது சமூகமும் தூத்துக்குடியில் அவர் நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணம்.
நயினார் நாகேந்திரன்
பட மூலாதாரம்,FACEBOOK
திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன்.
பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற முடிந்தது.
இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கு முக்கியக் காரணம்.
ஆ. ராசா
பட மூலாதாரம்,FACEBOOK
தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா தற்போது மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டத்தில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
பாஜக அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.
தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக.
செல்வ கணபதி
பட மூலாதாரம்,FACEBOOK
இவர் 1991இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் 1999இல் அதிமுகவின் சார்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கட்சியின் முதல் கட்டத் தலைவர்கள் பட்டியலில் இவர் இல்லாதபோதும், சேலம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர்.
அவர் மீதிருந்த ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வ கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து சேலத்தில் அதிமுக சார்பாக 31 வயது புதுமுகமான விக்னேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தத் தொகுதியில் சமூக செல்வாக்கையும் பெற்றுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார்.
https://www.bbc.com/tamil/articles/cyez76dzw08o
3 months 1 week ago
காஸா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் பிரேரணை மீது பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு
Published By: SETHU 22 MAR, 2024 | 02:39 PM
காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதை வலியுறுத்துவதற்காக அமெரிக்க அனுசரணையுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகளை அமெரிக்கா ஏற்கெனவே 3 தடவைகள் தனது வீட்டோ அதிகாரரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.
இந்நிலையில் தற்போது காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க அனுசரணையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போர் நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இன்று எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
https://www.virakesari.lk/article/179434
3 months 1 week ago
LIVE
1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League
Royal Challengers Bengaluru 11.6/20 overs) 79/5
Chennai Super Kings
RCB chose to bat.
RCB படு தோல்விதான் போல??
3 months 1 week ago
மொங்கோலியாவின் வரலாறே மிகக் கடுமையான காலநிலைகளால் ஆனது. கொடுங்கோல் சக்கரவர்த்தியான ஜெங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசை உருவாக்குவதற்கு அவர்களின் கடும் காலநிலையும் ஒரு காரணம்.
3 months 1 week ago
சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை என்று பாதிக்கப்பட்டவர்கள் பலகாலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரிலேயே எல்லாம் தெரிந்த ஒருவர் இருப்பது இப்போது தான் எங்களுக்கு தெரியுது.....😀
எத்தனை குத்துக்கரணங்கள் தான் இவர்கள் எல்லோரும் அடிப்பார்கள்.....🫣
3 months 1 week ago
படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை.
இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.
3 months 1 week ago
வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 வயதில் தந்தை திருமணமா ? பிஞ்சிலே முற்றி வெம்பி பழுத்தது.
மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
3 months 1 week ago
மழைக்காலம் வந்தால் மண்வாசனை....
தேர்தல் காலம் வந்தால் தார்வாசனை....
காத்துவாக்கில் வந்தது...😎
3 months 1 week ago
ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை மக்கள் முன்னரே தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள் என்பது ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் உண்மையே. ஒரு 'அலை', உதாரணம் ராஜீவ் காந்தியின் மரணம், இருந்தால், எல்லோரும் அந்த அலையில் இழுபடுவார்கள், மற்ற கட்சிகள் என்ன இலவசங்களை வழங்கினாலும். அப்படி எதுவும் இல்லாவிட்டால், தேவர் இன மக்கள் யாருக்கு வாக்குப் போடுவார்கள், கவுண்டர் இன மக்கள் யாருக்கு போடுவார்கள் என்பது போன்ற முடிவுகள் முன்னரேயே தீர்மானிக்கப்பட்டதுதான். நடுநிலை வாக்காளார்கள் கொஞ்சமே.
கட்சிகளும், என்னதான் சமூக நீதி பேசினாலும், வேட்பாளர்கள் தெரிவில் கிட்டத்தட்ட சாதிக் கட்சிகள் போன்றே நடக்க வேண்டிய சூழல் அங்கே.
கமலின் மையம் கட்சி கூட ஒரு தடவை மக்களுக்கு இலவச டார்ச் லைட் கொடுக்க முற்பட்டார்கள்.....🤣
3 months 1 week ago
எல்லோரும் தேடுகினம் ....கண்ணில அகப்படுகிறான் இல்லையே...
போலீசார் அவரை கவனிப்பார்கள். வேண்டாம் விபரீத ஆசை .( சிற்றுவேஷன் கவிதை போல இருக்கு ) 😃
3 months 1 week ago
ஒரு சின்ன ஆலோசனை ..நீங்களே அங்கு சென்று பதியலாம் .
3 months 1 week ago
வரவேற்கத்தக்க முயற்சி . தொடருங்கோ ...
ஆதரவாளர்கள் இருக்கிறோம்.
3 months 1 week ago
அவனைப் பிடிச்சுக் கொல்லுங்கடா!
3 months 1 week ago
நன்றாக இருக்கின்றது, அல்வாயன்.......🤣
அடிதடிகளுக்கு பஞ்சம் இருந்ததேயில்லை அங்கே.
அல்வாய், வதிரிப் பகுதிகளில் அந் நாட்களில் டயமண்ட்ஸ், பொம்மேர்ஸ், மனோகரா என்று கழகங்கள் இருந்ததாக ஞாபகம். ரட்ணசிங்கம் மாஸ்டர் பள்ளிக்கூடத்தில் எங்களின் பயிற்றுவிப்பாளாராக இருந்தார். தர்மேந்திரா பள்ளிக்கூட அணியில் கலக்கிக் கொண்டிருந்தார்.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed