புதிய பதிவுகள்2

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 8 hours ago
பிகு விஜி விடயம் ஓவர் என குசி படும் அண்ணன் மாருக்கு. இப்போ சீமான் English Premier League வீரர்கள் செய்வது போல DMK க்கு loan இல் விளையாடுகிறார். ஆகவே திமுக இதை கையில் எடுக்காது. ஆனால் தேவைப்படும் போது நிச்சயம் - “விஜியிடம் மண்டியிட்ட வீரன்” என்ற ரேஞ்சில் இதை பாவிப்பார்கள். அண்ணன் வாயில் சனி 1000 வருட குத்தகையில் உள்ளது. இவர் விஜி அண்ணியை பற்றி ஒரு வார்த்தை விட்டால் போதும் - கோர்ட் உத்தரவை மீறினார், நீதிமன்ற அவமதிப்பு எண்டு கூட ஆகும். கண்ணுங்களாthe circus is not over, it just moved to the next act 🤣.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 8 hours ago
திராவிடியா ஊடகங்களுக்கு ஊடக அறம் கிடையாது. அவர்கள் விரும்பும் செய்தி கிடைக்காவிடில் அவர்கள் விரும்பியவாறு செய்திக்கு தலைப்பிடுவார்கள். தற்போதைய ஊடகங்களின் தலைப்பை வைத்து செய்தியைக்கணிப்பிட முடியாது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
இப்படி ஒரு நீதி விசாரணை என்றாவது விஜி அண்ணி வழக்கில் நடந்ததா? கடைசியாக சென்னை உயர் நீதிமன்றம் இப்படியான விசாரணை ஒன்றை நடத்தும்படி பொலிசுக்கு அறுதியாக சொல்ல… அண்ணன் டெல்லிக்கு போய், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு தடை வாங்கினார். ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது. இன்னுமொரு விசயம்…. தண்டனைக்குத்தான்…நீங்கள் சொன்ன mitigating circumstances எல்லாம்… நீங்கள் தண்டனையையும், மன்னிப்பையும் போட்டு குழப்பிகொள்கிறீர்கள். மன்னிப்புக்கு மூன்றே தகுதிகள் தான்… செய்த குற்றத்தை ஏற்பதும்…அதற்கு மனம் வரும்துவதும்… இனி செய்யேன் என உளமார உறுதி மொழிவதும். இவை மூன்றும் சீமானிடம்மில்லை. அவரின் வக்கீல் மன்னிப்பு கேட்ட ஆவணத்தை கோர்டில் தாக்கல் செய்கிறார்…. அவரின் கொ.ப.செ தூஷண துரை அண்ணன் மன்னிப்பே கேட்கவில்லை என உருட்டுகிறார்🤣. இதே போல் நாளைக்கு போர்குற்ற விசாரணையில் மகிந்தவும் மன்னிப்பு கேட்டாலும் - ஒரே வாதம்தான். இது மாண்பல்ல…கச போக்கிலித்தனம். அண்ணன் போன வாய்தாவின் பின் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பேட்டியே கொடுத்தார். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, பொய்யர் திருமகன் சீமான். தலைவரை chef ரேஞ்சுக்கு இறக்கி கதைகட்டிய பொய்யன்… அவர் பேசினாலும், எழுதினாலும் அதில் குண்டு மணியளவு உண்மை இருந்தால் ஆச்சரியம்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு என்பது எழுத்து மூலம் கேட்கப்படும் பொது அந்த எழுத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அந்த மனிதனுடைய மன்னிப்பின் தன்மையை வெளிக் கொண்டு வரும் இது எனது நிலைப்பாடு ஆனால் வாய் மொழியால் கேட்கும் மன்னிப்பு என்பதன் ஆழம் அவர் முகத்தில் தெரியும் அப்போது அவரால் நடிக்க முடிந்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
நீ களவெடுத்தியா? ஆமா சார் ..... மன்னிச்சு விடுங்கள் சார்..... என்றபோதும் ஓகே இவருக்கு கசையடி பத்து என்ற ரீதியில் விசாரணையும் தீர்ப்பும் இருந்தால் எப்படி ? ஏன் களவெடுத்தாய் ? அதை வைத்து என்ன செய்தாய் ? அந்தக் களவுக்கு அந்த இடத்தை எப்படித் தேர்ந்தாய் ? உனக்கு அங்கெ களவெடுக்கலாம் என்று எப்படித் தெரியும்? எத்தனை நாள் காத்திருந்தாய்? என்று இத்யாதிக் கேள்வி கேட்டால்...... அதற்கான விடைகளுடன்மன்னிப்பும் கோரினால்..... கிடைக்கும் தண்டனை வித்தியாசமாக தானே இருக்கும் ஆனால் கேட்கும் மன்னிப்பு என்பது ஒன்றுதான் இதில் உணர்ந்து கேட்பது என்பது நடிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது 😂

கோவலென்கோ: நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் ரஷ்ய உயரடுக்கை புடினை நிராகரிக்கத் தூண்டக்கூடும்

3 days 9 hours ago
கோவலென்கோ: நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் ரஷ்ய உயரடுக்கை புடினை நிராகரிக்கத் தூண்டக்கூடும் அக்டோபர் 8, 2025, அதிகாலை 02:45 தந்திரோபாய ஏவுகணை அமைப்பு வில்கா (புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்) ஆசிரியர்: அலெக்ஸ் ஸ்டெஜென்ஸ்கி உக்ரைனின் தவறான தகவல்களை எதிர்ப்பதற்கான மையத்தின் தலைவர் ஆண்ட்ரி கோவலென்கோவின் கூற்றுப்படி, ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் விளாடிமிர் புடினை உக்ரைனுக்கு எதிரான தனது போரை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்தக்கூடும். அமெரிக்கா உக்ரைனுக்கு டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கக்கூடும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 7 அன்று கோவலென்கோ இந்த அறிக்கையை வெளியிட்டார், அவை எதிரிகளின் எல்லைகளுக்குப் பின்னால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. "டோமாஹாக்ஸ் - பாலிஸ்டிக் ஏவுகணைகளை மறந்துவிடாதீர்கள். புடின் உண்மையில் ரஷ்யர்களுக்கு ஒரு வேடிக்கையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்," என்று கோவலென்கோ டெலிகிராமில் எழுதினார். "ஒரு உண்மையை நினைவில் கொள்ளுங்கள்: மாஸ்கோவும் செயிண்ட் பீட்டும் இந்தப் போரை நேரடியாகவும் - தொடர்ந்தும் - உணரத் தொடங்கியவுடன், அது இரண்டு விஷயங்களில் ஒன்றைக் குறிக்கிறது: உயரடுக்கினர் புடினை மாற்றவும் போரிலிருந்து வெளியேறவும் பார்க்கத் தொடங்குவார்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாக, அல்லது புடின் போரை நிறுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்." அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்ட முழுமையான இறையாண்மை கொண்ட நாடாக ரஷ்யா இனி இல்லை என்றும் அவர் கூறினார். "அவர்கள் அணு ஆயுதங்களைப் பற்றி கத்துவார்கள், நிச்சயமாக. ஆனால் ரஷ்யா இப்போது சீனாவிற்கு ஒரு மூலப்பொருள் துணைப் பொருளாக மட்டுமே உள்ளது. மாஸ்கோ இனி அது போன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் சக்தியாக இல்லை" என்று கோவலென்கோ எழுதினார். தகவல் கிராபிக்ஸ்: NV செப்டம்பர் 26 அன்று, ஐ.நா. பொதுச் சபையில் மூடிய கதவுக் கூட்டத்தின் போது, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குமாறு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கை மேற்கோள் காட்டிய ஆதாரங்களின்படி, உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் புடினை அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்று ஜெலென்ஸ்கி டிரம்பிடம் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 28 அன்று, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், உக்ரைனுக்கு டோமாஹாக்ஸை வழங்குவது குறித்து நிர்வாகம் விவாதித்து வருவதாக உறுதிப்படுத்தினார். மேலும் படிக்க: உக்ரைனின் டோமாஹாக் ஏவுகணைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அஞ்சுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைன் ஏவுகணைகளைப் பெற்றால் ரஷ்யா "அதற்கேற்ப" எதிர்வினையாற்றும் என்று அச்சுறுத்தினார். அக்டோபர் 6 ஆம் தேதி, டோமாஹாக்ஸை உக்ரைனுக்கு மாற்றலாமா வேண்டாமா என்பது குறித்து "நடைமுறையில் ஒரு முடிவை எடுத்துள்ளதாக" டிரம்ப் கூறினார். மின்சாரத் தடையின் விலையையும், உக்ரேனியர்கள் தினமும் எதிர்கொள்ளும் பிற கஷ்டங்களையும் ரஷ்யர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறினார். அவரைப் பொறுத்தவரை, ரஷ்யா மற்றும் அதன் தலைமையின் மீது பல திசைகளில் இருந்து தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்பதன் மூலம் மட்டுமே போரை நிறுத்த முடியும்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
இங்கே உள்ள தம்பிகளை பற்றி எனக்கு அதிகம் கவலை இல்லை. முன்பே சொன்னது போல் எல்லாருக்கும் தலையால் சிந்திப்பது எப்போதும் இயலுவதில்லை. ஆனால் நீங்கள்? சீமானபிமானம் உங்கள் கண்ணை கூடவா மறைக்கிறது. மன்னிப்பு என்றால் அது சகல குற்றங்களுக்கும் ஒன்றேதான். உண்மையில் மனம் திருந்தினால், மகிந்தவும், சீமானும் மன்னிப்புக்கு தகுந்தோரே. ஆனால் தண்டனையில் இருந்து தப்ப கேட்கும் மன்னிப்பு அது எந்த குற்றத்துக்கு கேட்டாலும் - போக்கிரித்தனமே. அண்ணன் ஒரு அட்சயபாத்திரம். அந்த கவலை எவருக்கும் வேண்டாம்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

3 days 9 hours ago
தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
மகிந்த மற்றும் சோனியாவின் பங்களிப்புடன் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்காலையும் சீமானின் பாலியல் ரீதியிலான தாக்குதலையும் ஒன்றாக பார்க்க முடியாது என்பதே எனது கருத்து அதற்கான பதிலே இரண்டு குற்றங்களையம் ஒரே தண்டனைக்கு உட்படுத்த நினைப்பது தவறு என்பது மற்றும்படி மன்னிப்பு என்பது மனித பண்பு தான் அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு ஒருவனைத் தள்ளி விட்டு அவனிடம் மன்னிப்புக் கேட்பவன் உலகில் இருந்தாலும் அந்த மன்னிப்பை யாருமே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 9 hours ago
திராவிடியா ஊடகங்களின் யாழ்கள நிருபர்கள் அந்த ஊடகங்களின் செய்தியை அப்படியே காவித்திரிவது வியப்புக்குரியது அல்ல.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 10 hours ago
எம்ஜீஆர் ரோடு ஜெயலலிதா சேர்ந்த மாதிரி விஜேயோடு தேர்தல் வரமுதலே திரிசா கூட வரப் போறாவாம்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 10 hours ago
அதைவிட விஜய் + விஜயலட்சுமி (பெயர் கூட தூக்கலாக இருக்குதல்ல) வைத்து நாம் தமிழர் வாக்கு வடை போச்சே என்றவர்களுக்கு .... படுத்த இருவரும் படுத்த நாங்கள் தான் ஆனால் இனி வெளியே சொல்லமாட்டம் என்று இருவரும் ஒத்துக்கொண்டு பிரிந்து சென்றாலும் இங்கே பல்லுப் போனாலும் நானும் பழசல்ல என்றபடி சில பெரிசுகள்.....???

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 11 hours ago
நாளைக்கு எல்லா உற‌வுக‌ளும் இந்தியா வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கின‌ம்............................ வ‌ங்கிளாதேஸ்சின் ப‌ந்து வீச்சு அருமை , ந‌ல்லா ப‌ந்து போடுகின‌ம்.....................

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

3 days 11 hours ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.😢

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 11 hours ago
இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவையும் நாளைய போட்டியில் இந்தியாவையும் எல்லா போட்டியாளர்களும் தெரிவு செய்து இருந்தார்கள். அதற்கு அடுத்தப்போட்டியில் பலர் நியூசிலாந்தினை தெரிவு செய்தாலும் நீங்கள் உட்பட ஒருசிலர் வங்காளதேசம் அணியை தெரிவு செய்திருக்கிறீர்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 11 hours ago
வினா 10) 107 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 10, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 11 hours ago
Beth Mooney எப்ப‌வும் நிதான‌மாக‌ தான் விளையாடுவா , முன்ன‌னி விக்கேட் போனால் சில‌ர் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்ட‌னும் என‌ நினைத்து ஆடுவின‌ம் , ஆனால் இவா ப‌டு நிதான‌ம் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் தான் அதிர‌டியாக‌ விளையாடின‌வா.....................சோலி இல்லாத‌ ம‌க‌ளிர் தானும் த‌ன்ட‌ விளையாட்டும்🙏👍.........................
Checked
Sun, 10/12/2025 - 05:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed