2 days 18 hours ago
சின்ன அரும்பு மலரும் படம் பங்காளிகள்
2 days 19 hours ago
09 Oct, 2025 | 10:42 AM முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார். தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் அழைப்பின் பேரில் விமல் வீரவன்ச, அப்பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227286
2 days 19 hours ago
09 Oct, 2025 | 10:10 AM முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார். எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227281
2 days 19 hours ago
Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/227268
2 days 19 hours ago
09 Oct, 2025 | 11:52 AM யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/227301
2 days 19 hours ago
கையில கல்லு இருக்கு டென்மார்க்கில் இருந்து எறிந்தால் கலிபோனியாவில் வந்து விழும் , இன்னொரு முறை இந்தியா தோக்கனும் என நினைப்பே உங்களிடத்தில் இருக்க கூடாது ஹா ஹா லொள்😁.....................
2 days 20 hours ago
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது. போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார். Tamilwinபொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந...முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிப...
2 days 20 hours ago
அப்ப இனி மோட்டார்சைக்கில் பாவனை குறையும்.😆
2 days 20 hours ago
திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
2 days 22 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 days 22 hours ago
3 days 1 hour ago
தமிழர்களுடன் ஒட்டி உறவாட சுமத்திரன்(எந்த வித பிரயோசனமும் கிடைக்காது தமிழர்களுக்கு) சிங்களவர்களுடன் ஒட்டி உறவாட மோடி ஜீ ..இதனால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம் சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் இருப்பை இல்லாமல் பண்ண உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கும்...
3 days 1 hour ago
வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?
3 days 1 hour ago
நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்
3 days 1 hour ago
எனக்கு போஸ்டுக்கு 200 ரூபாய் நட்டம். இப்போ சீமான்+திமுக ராசி ஆகிவிட்டதால் சீமானை திட்டி போடும் பதிவுகளுக்கு வெறும் 20 ரூபாய்தான் தருகிறார்கள். இப்படியே போனால் நானும் திரள்நிதியில் குடும்பம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்படலாம். பிகு தமிழ் நாட்டில் எது நடப்பினும் என் தனிவாழ்வில் ஒரு உரோமம் வீழ்ந்த பாதிப்பும் கூட இல்லை. இலங்கை அரசியல் கூட, வெளிநாட்டில் வாழுவோரின் நில உரிமையில் கைவைக்காதவர்ரை பாதிப்பு குச் நஹி. ஆனால்…தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான சங்கிகள் வளர விடக்கூடாது என்பது, தமிழ் நாட்டின் நண்பனாக எனது நிலைப்பாடு. பெரியார் அல்ல…அதற்கு முன் வள்ளார்….அதற்கும் முன் 9ம் நூற்றாண்டில் சிவவாக்கியர், இராமானுஜர் காலம் தொட்டு - சங்கிதுவத்தை எதிர்த்த, எதிர்கின்ற மண் தமிழ் நாடு. அதன் மீதும் காவி கறை வீழ்வது அதன் சகஜ வாழ்வுக்கு நல்லதல்ல. தமிழ் நாடு தவிர் இதர இந்தியா சங்கி மயமாகி, இந்து-முஸ்லீம் என வெட்டுப்பட்டால் எனக்கு அது பற்றி எந்த அக்கறையும் இல்லை. சொல்லப்போனால் வட இந்தியாவில் இப்படி ஒரு இரெண்டாம் பாகிஸ்தான் உருவாகி இந்தியா சிதறி - அதன் மூலம் தென்னிந்தியா, அதிலும் தமிழ்நாடு தனியாக வந்து விடாதா என்ற ஒரு நப்பாசையும் எனக்கு உண்டு.
3 days 1 hour ago
அந்த தந்தை ஒருவர் கை உடைந்த மகனுடன் கொடுத்த பேட்டி பார்த்திருக்கிறீர்கள் போல 🤣
3 days 2 hours ago
தீவில் இப்ப எல்லாம் சட்டப்படி தான் நடக்குதாம்... பொலிசார் வீடு புகுந்தால்(உத்தர்வின்றி உள்ளே புகுந்தால்) சட்டத்தரனிகளே பகிரங்கமாக போராட்டம் நடத்த கூடியதாக இருப்பதற்கு காரணம் எங்கள் செந்தோழர் களின் ஆட்சி யாழில் நடப்பதால் தான்... இது தான் செய்தி ....இது தான் ஐ,நா சபைக்கு அரசு சொல்லும் செய்தியும் .....செம்மணி புதைகுழி அல்ல முக்கியம்🤔
3 days 2 hours ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
3 days 2 hours ago
இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.
3 days 2 hours ago
Checked
Sat, 10/11/2025 - 23:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed