புதிய பதிவுகள்2

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

3 days 14 hours ago
08 Oct, 2025 | 08:57 AM கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் ஆபத்து பகுதிகளாகவும், பன்றிகள் 1992 ஆம் ஆண்டு 59 ஆம் எண் கொண்ட கால்நடைநோய்கள் சட்டத்தின் கீழ் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு 2025 அக்டோபர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் இந்த வர்த்தமானி முன்னர் இரத்து செய்யப்படாமலோ, தொடர்புடைய சட்டத்தின் பிரிவு 5(3) இன் கீழ் நீடிக்கப்படாமலோ செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும், நிலவும் நோய் நிலைமையைப் பொறுத்து செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 14 hours ago
"குடும்ப நல வழக்கில் எதிர் தரப்பில் இருப்பவரை "பாலியல் தொழிலாளி, சைக்கோ" என்று dehumanize செய்யலாம், கிரிமினல் வழக்கில் அப்படிச் செய்யக் கூடாது" என்கிறீர்களா😂? ஒன்று "வாத்தியார்" என்ற அவதாரப் பெயரை மாற்றுங்கள், அல்லது சீமான் போன்ற மூன்றாந்தர அரசியல்வாதிக்கு நிபந்தனையில்லாத முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்கள்! இந்த இரு பாத்திரங்களும் ஒத்து வரவில்லை என்பது என் அபிப்பிராயம்😎!

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

3 days 14 hours ago
08 Oct, 2025 | 09:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உயர்ஸ்தானிகரும், எம்.ஏ. சுமந்திரனும் விரிவாகக் கலந்துரையாடினர். விசேடமாக, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார். இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு ! | Virakesari.lk

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 15 hours ago
இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார் சொல்லி, பின் விலத்தியது (எப்படி நடந்த உடல் உறவு இல்லாமல் போகும்) மற்றது கோயிலில் திருமணம் (இதுவே எல்லாரையும் ஏய்க்காட்டும் கதை). (நடிகை புகாரை விலத்துவது என்பது, புகார் பகிடிக்கு சொன்னது என்று வரும், வருகிறது) நடிகை தங்கி இருந்தது 'பெண்' என்ற போர்வைக்குள்ளும் (மேற்கிலும் இது பொதுவாக பாவிக்கப்படுவது) - அதை நீதி மன்றம் கிழித்து விட்டது. சீமானின் நிலை ஏறி இருக்கிறது - எந்த விதமாக பார்த்தாலும், சீமான் செய்தது நடிகையின் குற்றச்சாட்டுக்கு செய்த மறுதாக்கம் - அதுக்கு தானே நீதி மன்ற உத்தரவு சீமான் மன்னிப்பு கேட்கும்படி அப்போது என் சீமான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை சொல்வதை மறுக்கும் போது. நடிகை சொல்வதை சீமான் மறுத்தது, சட்டத்துக்கு உண்மை என்று நடிகையே நிரூபித்துவிட்டார் . சீமான் அவதூறு பேசியது கூட, அது இயற்கையா (மனித சுபாவம்) என்றல்லவா வருகிறது. செய்யாத ஒரு விடயத்தை செய்தது என்று குற்றம் சுமத்தும் போது, எவருக்கும் ஆத்திரம் தலைக்கேறும் என்பது.

மின் வெட்டுக்கான அச்சுறுத்தல்?!

3 days 15 hours ago
Published By: Digital Desk 3 08 Oct, 2025 | 03:59 PM மின்சார பொறியாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (07) மாலை 4:15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார். இந்த தீர்மானம் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துபூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். வேலை விதிமுறைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்கத்தின் தீர்மானத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களை கடிதங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். “அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கு மேல், அவசரம் எதுவாக இருந்தாலும், எந்த பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணியும் நடைபெறாது,” என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227234

‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

3 days 15 hours ago
08 Oct, 2025 | 04:47 PM தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள பலரும் இணைந்து , 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அதிபர் எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர நீச்சல், 6 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோ மீட்டர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தாலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இந்த நிகழ்வில் இந்திரா ஜயசூரியவின் தந்தையான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது மகள் மார்பகப் புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்ட போராட்டத்தையும் நினைவுகூர்ந்திருந்தார். அத்தோடு இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும், 19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு | Virakesari.lk

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு

3 days 15 hours ago
08 Oct, 2025 | 04:54 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு | Virakesari.lk

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

3 days 16 hours ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 16 hours ago
இன்றைய போட்டியைப் பார்த்தா, அவுஸ்ரேலியா மயிரிலையில் தப்பியுள்ளது போல் உள்ளது. பெத் மூனி தான் ஒரு ராணி என்று இன்று காட்டியிருக்கிறா.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 16 hours ago
இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது. விபரங்கள் கீழே: Sean 'Diddy' Combs sentenced to over 4 years in prisonCombs apologised to his mother, children, and victims, specifically naming his two ex-girlfriends, Casandra Ventura and "Jane".சுருக்கமாக, டிடி கோம்ப்ஸ் பல ஆண்டுகளாக பல பெண்களை உணர்வு ரீதியாகச் சித்திரவதை செய்து தானும் அனுபவித்து விபச்சாரத்திற்கும் தூண்டியிருக்கிறார். அவர்கள் விலக முடியாத படி அந்தக் காட்சிகளை மிரட்டும் சாட்சியாக (blackmail) சேமித்து வைத்திருக்கிறார். 12 மாதங்கள் முன்பு இதற்காக குற்றம் சாட்டப் பட்டுக் கைதான போது, கோம்ப்ஸ் பேசியது கிட்டத் தட்ட சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பேசியது போலவே இருந்தது😂. கோம்ப்ஸ் தரப்பினர் மிரட்டினார்கள் , பெண்களை விபச்சாரிகள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஆனால், கோம்ப்சை குற்றவாளியாக ஜூரிகள் தீர்ப்பளித்த பின்னர் ரெக்கோர்ட்டை மாற்றிப் போட்டார்கள் கோம்ப் தரப்பினர். கடந்த வாரம் "11 வருட சிறை வழங்க" வேண்டுமென அரச தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்ட போது. "நான் திருந்தி விட்டேன், 14 மாத சிறையில் நான் திருந்தி விட்டேன்" என்று கடிதம் எழுதி நிறைய கண்ணீரெல்லாம் விட்டார்கள் கோம்ப்சும் குடும்பத்தினரும். ஆனால், நீதிபதி சுப்ரமணியன் (ஆம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த நியூ யோர்க்கின் முக்கிய மாவட்டத்தில் பெடரல் நீதிபதி, தமிழராக இருக்கக் கூடும்) "நீ திருந்துவதாக இருந்திருந்தால் 2019 இல் ஒரு வீடியோ வெளியே வந்த பின்னரே திருந்தியிருக்க வேண்டும். இது மனம் வருந்திய திருத்தம் அல்ல" என்று 4 ஆண்டுகள் சிறை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார். பிந்திய செய்திகளின் படி, கோம்ப்ஸ் குற்றவாளியாகத் தீர்ப்புக் கிடைத்தவுடன் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் தூது அனுப்பியிருக்கிறாராம். ஒரு ஒப்பீட்டுக்கு, யாழ் கள பெரிசுகளுக்காக, இதைப் பகிர்ந்திருக்கிறேன்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 16 hours ago
ஆகவே சீமானுக்கு எதிரான பாலியல்~ புகாரே தவிர அங்கு மழை இல்லை. ஈரம் இல்லைப்போல் தெரிகிறது. உண்மை என்ன??? அது சீமானுக்கும் அந்த நடிகைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும். சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது, அதை ஏந்த ஒருவர் இருப்பதையும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அது சீமானுக்குப் பொருந்தும்போல் தெரிகிறது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 17 hours ago
மன்னிப்புக் கேட்பது உயர்ந்த பண்பு என்பது சரி. ஆனால், வருடக் கணக்காக விட்டுத் துரத்தி, பல இடங்களில் ஒளித்து விளையாடி, இறுதியில் "இனியெங்கும் போய் ஒளிய முடியாது"😎 என்று ஒரு மூலையில் மாட்டிக் கொண்ட பிறகு மன்னிப்புக் கேட்கிற ஒருவர் உண்மையில் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கிறாரா அல்லது தன்னைக் காத்துக் கொள்ள மன்னிப்புக் கேட்கிறாரா? இந்த மன்னிப்பின் பின்னணியை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார்களா யாழ் கள "பெரியோர்" அல்லது இதுவும் முரட்டு முட்டின் ஒரு தொடர்ச்சியா?

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

3 days 17 hours ago
தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன. இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1449893

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 17 hours ago
என்ரை கவலை என்னெண்டால்...... இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂 அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 18 hours ago
கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும் இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா .... நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா அதை போலத்தான் இதுவும்

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 18 hours ago
மன்னிப்பு கேட்பது மாண்புதான்…. எப்போது? அது உளப்பூர்வமான மன்னிப்பாக இருக்கும் போது. போன வாய்தாவின் பின் கூட மன்னிப்பு கேட்கமாட்டேன் என வாய் ஜம்பம் அடித்தவர்…இன்று மன்னிப்பு கேட்பது அப்பட்டமான போக்கிரித்தனம். அத்தோடு அண்ணன் தான் பிழையே விடவில்லை என்றார்…தம்பிகளும் அதற்கு வில்லுபாட்டு பாடினர். அப்போ இப்போ ஏன் மன்னிப்பு கேட்கிறார்? ஒன்றில் பிழை விட்டு விட்டு - மக்களுக்கு பொய் சொல்லி விட்டு - இப்போ மன்னிப்பு கேட்கிறார். அல்லது… செய்தாத தவறுக்கு கோழைதனமாக மன்னிப்பு கேட்கிறார். எப்படி பார்த்தாலும் ஒன்றில் சீமான் பொய்யன் அல்லது கோழை என்பதே முடிவாகும். சொல்லுவதுதான் சொல்லுறம் 40% எண்டால் தம்பி-அண்ணன்களாவது சந்தோசப்படுவார்கள்🤣. பிகு தம்பிகளுக்கு ஒரு கேள்வி. நாளைக்கு சோனியா காந்தி, மகிந்த இதே போல் முள்ளிவாய்காலுக்கு மன்னிப்பு கேட்டால்…. மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் எனவே அவர்கள் மாண்புள்ளோர் என கொண்டாடுவீர்களா? %செய்தாலும் செய்வீர்கள்
Checked
Sun, 10/12/2025 - 05:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed