2 days 14 hours ago
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி இழுத்தக் கொண்டு சென்றதைத் தவறென்று சுட்டிக்காட்டிய போது அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் இல்லை,.மாற்றுக்கருத்தினர் அப்படி என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்கவும் இல்லை. இந்தியாவின், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் அரசியல் தந்திரமுறையில் மிகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து எல்லாமே நீங்கள்தான் எனத் தமிழ்த் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். நாம் பேசியிருக்கிறோம்,அவர்கள் இலங்கையரசுடன் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள் எனப் பத்திரிகைகளில் அறிக்கைகளைவிட்டு இந்தியப்பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது என்ற முற்றுப்புள்ளியுடன் இந்திய இராஜதந்திர அரசியலாளர்களைச் சந்தித்த புகைப்படங்களுடன் தவணை நகர்வு நிறைவுபெறும். தமிழ்த் தலைவர்கள் அனைவருமே மிகப் படித்தவர்கள்.அரசியல் அனுபவங்கள் நிறைந்தவர்கள்.எனினும் இத்தலைவர்களுக்கு இந்தியாவின் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தந்திரத்தை ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்பது தெரியவில்லை. இறுதியில் ஆயுதப் போரில் தவனை நகர்வு நிறைவுபெற்ற போது இலங்கையை என்றுமே குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் தண்ணீர் ஓடுகிற திசையில் வாய்க்காலை வெட்டியது போல தமிழீழ விடுதலைப் போருக்கு ஆயுத வழியே சரியென்று பலபக்கத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே இலங்கையைச் சீரழித்ததை உணர முடிகின்றது;அதுதான் உண்மையும்கூட.தமிழீழ விடுதலை ஆயதப் போராட்டம் புலிகளின் பெயரால் இந்தியாவால் நடத்தப்பட்டது அல்லது புலிகளைக் கொண்டு இந்தியாவல் நடத்தப்பட்டது என்றும் கூறலாம். இன்றைய அரசின் நடவடிக்கையும் இலங்கை ஜனாதிபதி திரு.அநுர குமார திஸநாயக்காவின் நுட்பமான நகர்வும் இந்தியாவுக்கு பெரும் ஐமிச்சத்தைக் கொடுத்துள்ளது.தமிழர்கள் ஜனாதிபதியை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ அது நடக்கக்கூடாது என்பதில் அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. ஜனாதிபதி அவர்கள் எல்லா நாடுகளுக்கும் இராஜதந்திர பயணங்களை மேற்கொள்வதைப் பார்த்து அவரை எடைபோட போட முடியாத நிலைக்கு வந்துள்ளது இந்தியா. ஒரு நாடு என்பது அந்நாட்டு மக்களோடு இணைந்த ஒன்றாகும்.நாட்டை நிர்வகிப்பதற்கான அரசைத் தெரிவு செய்கின்ற மக்கள் தமக்கான தேவைகளை அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடனேயே அரசைத் தெரிவு செய்கின்றனர். உலகம் நாடுகளாகி,மக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த போது,இனக் குழுமங்களில் தானாக உருவாகிய தலைவர்கள் காலப்போக்கில் மக்களால் தெரிவு செய்யப்படம் தலைவராக மாறினார்கள். ஒரு காலகட்டம் வரையும் ஒரு நாட்டினது செயல்பாடுகள் யாவும் அந்நாட்டின் உள்ளகச் செயல்பாட்டை மட்டுமே கொண்டதாக இருந்து வந்தது. தொடர் வளர்ச்சிநிலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொண்டது.அத்தொடர்புகள் இன்னும் வளர்ந்து செல்கையில் நாடுகள் ஒவ்வொன்றும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கின. உளவாளிகளை நியமித்து மற்றைய நாடுகளை கண்காணிக்கும் செயலுக்கு வழிவகுத்தது. மேலே கூறப்பட்ட விடயங்களால் பல நாடுகளில் உள்ளநாட்டுக் கிளர்ச்சிகளும்,ஆட்சி மாற்றங்களும் முரண்பாடுகளும் தோன்றவே செய்தன. ஒரு நாட்டில் இன்னொரு நாட்டினது தலையீட்டினால் ஏற்படும் விளைவகள் அந்தந்த நாடுகளின் அரச பலத்தைப் பொறுத்ததாவிருக்கும். இதுவே காலப் போக்கில்இன முரண்பாடுகளைச் சில நாடுகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கின.அது ஒரு சூழ்ச்சி,திட்டமிட்ட சதி.அத்தகு நிலையே இந்தியா இலங்கையை கையாள முயற்சிக்கின்றது. ஒரு நாட்டினது தலைவனோ அமைச்சகர்களோ தமது நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக உலக நாடுகள் எங்கும் சென்று உதவிகளைப் பெறுதல் பரஸ்பரம் பண்டமாற்றினை செய்து கொள்ளல் என்பது இயல்பான ஒன்று அதில் எந்த ஒரு நாட்டுக்கும் அறிவுரை சொல்லவோ கருத்துச் சொல்லவோ உரிமையில்லை. இந்தியா,இலங்கை கொண்டுள்ள பல நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கு இந்தியாதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய ஜனாதிபதி எந்த நாட்டுக்குப் பேகிறார் என்பதையோ,இந்தெந்த நாடுகளுக்கு போவதை தாங்கள் விரும்பவில்லை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம் என இந்தியா நினைக்கவும் சொல்லவும் அவர்களுக்கு உரிமையே இல்லை. இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத ஒத்துழைப்பை இன்றைய ஜனாதிபதியான மான்புமிகு திரு.அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர்கள் கொடுத்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்களவர்களையும் தமிழர்களையும் இனவாதத்தின் மூலமும் இனக்கலவரங்களை ஆரம்பித்து அதன் மூலமும் முரண்பட வைத்து அது தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதற்காக ஆயதப் போராட்டத்தை வளர்த்தும் தமிழர்களையும் அழித்து இலங்கையைச் சீரழித்ததும் இந்தியாதான் இந்தியாவேதான். https://akkinikkunchu.com/?p=343999
2 days 14 hours ago
Prashantha Kumar · ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்? -நெகிழ்ந்த நடிகர் நாசர்! “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தேன். திடீரென்று என் அருகில் வந்த சிவாஜி சார் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் “பாய் அப்பனை திட்டுற பாக்கியம் எந்தப் பிள்ளைக்கு கிடைக்கும்? யோசிச்சிட்டு நிக்காதய்யா…. என்னைத் திட்டய்யா….” என்று எனக்கு தைரியமூட்டி நடிக்க வைத்தார். அதன்பிறகு தேவர்மகன் ப்ரீவியூ காட்சிக்கு என்னை அழைத்தனர். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. அன்று இரவு எனது அறையில் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பிரபு. “அப்பா பேசணும்னு சொன்னார்” என்று சொல்ல எனக்கு படபடப்பானது. அடுத்த நொடி சிம்மக்குரல் கர்ஜித்தது “பாய் இப்பதான்யா ‘தேவர்மகன்’ படத்தைப் பார்த்தேன்… சும்மா சொல்லக் கூடாதய்யா… படத்துல மாயத்தேவனாகவே வாழ்ந்துருக்கேயா…” என்று மனம் திறந்து பாராட்டினார். எனக்கு பேசவே முடியாமல் குரல் கட்டிக்கொண்டது... இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?” – 07.11.2018 ஆனந்த விகடன் இதழ் முகநூலில் பதிவு: பிரசாந்த்! Voir la traduction
2 days 14 hours ago
புதுசா கல்யாணம் கட்டியிருக்கிறான் போலே
2 days 14 hours ago
World of Creatures “A tree gives the same gift to all — shade, peace, and life. Whether it shelters people or sheep, its kindness never changes.” 🌳"
2 days 14 hours ago
2 days 14 hours ago
2 days 14 hours ago
மழைக்குள் நடக்கும் ஐ . பி . எல் மாட்ச் மாதிரி நீதியும் ஆங்காங்கே ஓவரை கூட்டி குறைச்சு கொண்டு போகிறது போல் இருக்கு . ......!
2 days 14 hours ago
இல்லை. சீமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் கேட்டது, வழக்கை விசாரியுங்கள் என்று அல்ல. இப்போது மாமா உச்ச நீதி மன்றம் செய்தது போல் விசாரிக்காமல் அடித்து மூடுங்கள் என்பதையே. ஆனால் அரிதாக ஒரு நியாயமான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - இது பாரிய கிரிமினல் குற்றசாட்டு இதை அப்படி நூக்க முடியாது… ஆனால் பொலிசும் இழுத்தடிக்க கூடாது… என காலவரையறை கொடுத்து… மிக, மிக நியாயமான தீர்ப்பை கொடுத்தார்…. தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார். இதுதான் நடந்த தரவு. யாழில் பல செய்திதிரிகளில் இதை காணலாம். சங்கு மட்டும் அல்ல, சவமும்தான் சுட்டால் வெண்மை (சாம்பல்) தரும்🤣. உப்புகல்லை வைரம் எண்டு சொன்னால்…. நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… - கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்-
2 days 15 hours ago
ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது! ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது. மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன. இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர். உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர். https://athavannews.com/2025/1449960 ############### ################## @Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮 ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣
2 days 16 hours ago
ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்
2 days 16 hours ago
உண்மைதான் Suvy, பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.
2 days 16 hours ago
கோசான் , 1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்கு’ என்று முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும். எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம். தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்
2 days 16 hours ago
அவருக்கெதிராக போர்குற்றச்சாட்டுக்களை கூட பணியாற்றியவர்கள் வைக்கலாம், நிரூபிக்கலாம். கூட்டாக போயிருந்தது வீரக்கதைகளை பரிமாறலாம். குற்றச்சாட்டுக்கள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. பிடிக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம், அதற்காகவே காத்திருக்கிறோம்!
2 days 16 hours ago
அடுத்தது யார்? அரச சாட்சியா அல்லது சிறையா? இவர்களின் வாக்கு மூலம் அடுத்தவர் யார் என முடிவு செய்யும்.
2 days 16 hours ago
இனியென்ன, போட்டுக்குடுத்து விட்டு வெளியேறவேண்டியது. பசிலை போட்டுக்கொடுத்ததும் இவர்தானாமே, பேசிக்கொள்கிறார்கள். முகத்தில் அவ்வளவு கலக்கம், வெளியில் சவால் விட்டுக்கொண்டு திரிந்தார்.
2 days 16 hours ago
பேச்சுவார்த்தை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுவோரும் தமிழரை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அவர்களது பிழைப்புக்கு உதவுவது தமிழர் விவகாரம். கூத்தாடிகள் தேடுவது ஊத்தைவாளிகளையே! இல்லையென்றாலும் இதுகள் வாசலில் போய் நின்று தட்டுகிறார்களே.
2 days 16 hours ago
“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்” சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩 நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள். நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏
2 days 17 hours ago
மழை பெய்வதால் விளையாட்டு தாமதம்.................................
2 days 17 hours ago
வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.
2 days 17 hours ago
நன்றாகவே ரசிக்கிறீர்கள்
Checked
Sat, 10/11/2025 - 23:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed