புதிய பதிவுகள்2

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

1 month 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள். இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம். ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா. அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார். படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா. அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன. "பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா. அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர். "முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார். உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர். படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார். "சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்? ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார். கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார். இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா. அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

1 month 1 week ago
மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு Bookday15/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo) மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு அ. குமரேசன் “என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி இல்லையே என்ற ஏக்கம்தான்: விடுதலை, தப்பித்தல், ஒரு வகையான திறந்த சுதந்திரம்.” – இவ்வாறு பொருளாதார ஆய்வாளரும் களச்செயல்பாட்டாளருமான கனடா நாட்டு எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) தமது ‘நோ லோகோ’ (No Logo: Taking Aim at the Brand Bullies – வேண்டாம் இலச்சினை) என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1999இல் வெளியான அந்தப் புத்தகத்தைத் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்க முடியாது முடியாது – ஏனெனில் நேரடியாக அது எந்த நாட்டின் அரசாங்கத்தாலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துடன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்தது. யார் அவ்வாறு தாக்கினார்கள் என்றால் உலகளாவிய கார்ப்பரேட் சக்திகளும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரச் சிந்தனையாளர்களும். “வேண்டாம் இலச்சினை” என்று நூலாசிரியர் கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக இலச்சினைகளைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைச் சரக்குகள் மீது ஒரு விசுவாசத்தனமான மோகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த இலச்சினைகள் மூளைக்குள் பதிய வைக்கப்படுவதை அவர் அம்பலப்படுத்துகிறார். தி ஷாக் டாக்ட்ரைன் (The Shock Doctrine – அதிர்ச்சிக் கோட்பாடு), திஸ் சேஞ்ஜஸ் எவ்ரிதிங் (This Changes Everything – இது எல்லாவற்றையும் மாற்றுகிறது) என்ற புத்தகங்களையும் எழுதியுள்ள நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை நீதித்துறைப் பேராசிரியருமாவார். இந்த நூல் பற்றித் தெரியவந்தபோது செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடிப்படையான புரிதலுக்கு உதவுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பது என்பதைத் தாண்டி, மக்களுக்கான வாழ்க்கை முறைகளையே விற்பனை செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரத்தில் ஊடுருவி, பல்வேறு தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் குறிப்பிட்ட வணிகப் பெயர்கள் (பிராண்டுகள்) மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள வைக்கின்றன. உலகமயமாக்கலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பியிருந்தாலும், அவர்களின் லாபம் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவில்லை, மாறாக வேலையிழப்புகள்தான் அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இதன் தாக்கங்கள் பலவகையான போராட்டங்களில் வெளிப்படுகின்றன. புத்தகம் எதைப்பேசுகிறது? இந்தச் செய்திகளைத்தான் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). இது நாவலோ தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்போ அல்ல. வணிக இலச்சினையை மையமாக வைத்து உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டலின் பரிமாணங்களை விளக்குகிற பொருளாதார–அரசியல்–சமூக ஆய்வு நூல் என்று கூறலாம். வெளி இல்லை (No Space), தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லை (No Choice), வேலைகள் இல்லை (No Jobs), இலச்சினை இல்லை (No Logo) என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருள்களின் தரம் என்பதை இலச்சினைகளோடு தொடர்புபடுத்துவது முதல், நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் வெளி ஒப்பந்ததாரர்களிடம் விடப்படுவது (outsourcing), மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவது வரையில் புத்தகம் அலசுகிறது. நமது நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளோடு ஆலைகள் அமைக்க வழி செய்யப்பட்டதையும், மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த ஊதியத்தில் இங்கே தொழிலாளர்களை நியமிக்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் வந்ததையும் சாட்சியங்களாகக் கொண்டுவரலாம். சாம்சங் தொழிலாளர் போராட்டம் உள்பட எத்தனை சான்றுகள்! வணிகத்தோடும் வருமானத்தோடும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கை முறை, நுகர்பொருள்களின் தேர்வு ஆகியவற்றில் கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்குவது பற்றியும் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) விவாதிக்கிறார். வியர்வைக் கொட்டகைகளாக இருக்கும் இயந்திரக் கூடங்கள், கார்ப்பரேட் பாணி தணிக்கைகள், கருத்துகளை வெளியிடுவதற்கான பொதுவெளி அரிக்கப்படும் நிலைமைகள் ஆகியவை தொடர்பான அவதானிப்புகளையும் பகிர்ந்திருக்கிறார். உலக சமுதாயத்தின் வேர்மட்டத்தில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு, உழைப்பாளி வர்க்கத்தின் எழுச்சி, அதில் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்பு ஆகியவற்றை விவரிக்கிறார். அந்தப் போராட்டங்களோடு சமூகநீதி, சமத்துவ இலட்சியங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகிறார். அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்கையில் இந்த இலச்சினைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற தன் கனவைப் பகிர்ந்துகொள்கிறார். தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதோடு, இத்தகைய மாற்றங்களுக்காகச் செயல்படவும், அவ்வாறு செயல்படுவோருக்கு ஆதரவாக இருக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்று புத்தகம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கின்றன. வெளிகள் ஆக்கிரமிப்பு சுதந்திரமான விவாதங்களுக்கான பொதுவெளிகள் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, தங்களுடைய பிராண்டுகள் சந்தையில் முந்தியிருக்கச் செய்வதற்காக நிறுவனங்கள் கையாளும் மூர்க்கத்தனமான வழிமுறைகள், அதில் பலியிடப்படும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகள், அடிமைப்படுத்தப்படும் படைப்பாக்கத் திறன்கள், மறக்கடிக்கப்படும் வட்டாரப் பண்பாடுகள் ஆகியவற்றையும் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. உலகமயமாக்கல் சூழலில் தன்னாளுமை உரிமைகளை மீட்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர். உலக மயமாக்கலின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பார்க்கத் தவறுகிறார், உலகப் பரப்பு இன்று எவரும் எளிதில் சென்றுவரக்கூடியதாக மாறியிருப்பதை, இதனால் தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களை க்ளெய்ன் நிராகரிக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே கூறியது போல கார்ப்பரேட்டுகள் தரப்பிலிருந்தும் கார்ப்பரேட் ஆதரவுச் சிந்தனையாளர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சிலர், உலகமயமாக்கலால் நன்மைகளே ஏற்படவில்லையா என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைகளை மறுப்பதற்கில்லைதான். உலகின் சில பகுதிகளில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வறுமைக்கோடு அளவு உயர்ந்திருக்கிறது. வட்டாரத்திற்குள் சுருங்கியிருந்த வாழ்க்கை பரந்த எல்லைகளுக்கு விரிவடைந்திருக்கிறது. குடியிருப்பு வசதிகள், நவீன வாகனங்கள் என்ற விளைச்சல்களையும், பாலின சமத்துவச் சிந்தனைகள் முன்னுக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. என்ன விளக்கம்? ஆனால், உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்படுவதற்கும், அதனால் அவர்களது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கும் எப்படி விளக்கம் அளிப்பது? எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி செக்டார்) சார்ந்த ஊழியர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்ற தோற்றம் ஒரு புறமிருக்க, எல்லா ஐடி நிறுவனங்களிலும் அந்த நிலைமை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற உறுதியற்ற நிலையில் தினமும் காலையில் கண்விழித்துக்கொண்டிருக்கிறார்களே – அதை எப்படி இல்லை என்று கூறுவது? அந்த நிறுவனங்களின் தேவைகளை ஏற்று, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் செய்துகொள்கிற சமரசங்கள், சட்டத் திருத்தங்கள் போன்றவற்றை எப்படி நியாயப்படுத்துவது? வறுமையின் அளவு மாறியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் சொல்லட்டும், ஆனால் வறுமையின் கொடுமைகளும் துயரங்களும் தற்கொலை உள்ளிட்ட அவலங்களும் மாறவில்லையே? பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தோற்றத்திற்குப் பின்னால், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றனவே? வேலையிழக்கும் ஆண்களால் அவர்களின் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது செய்தியாகிக்கொண்டிருக்கிறதே? முற்போக்கான மாற்றங்கள்தான் இனி நிகழும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மதவாத. சாதியவாத வன்மங்கள் தாண்டவமாடுகின்றனவே? இயற்கை வளங்களும் பசுமைப் பரப்புகளும் சூறையாடப்படுகின்றனவே? கட்டுப்பாடற்ற கரிம வெளியேற்றத்தால் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படுகிறதே? சமுதாய வளர்ச்சியின் இறுதிக்கட்டம் முதலாளித்துவம் அல்ல, உலகமய கார்ப்பரேட் யுகம் அல்ல என்று மேலும் மேலும் தெளிவாகப் புலப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மூலதனக்காரர்களின் “தொழில் திறமை” மட்டுமல்ல, அரசாங்கங்களின் பங்களிப்பு, வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, மதம், இனம், சாதி சார்ந்த சமுதாயத் தலைவர்களின் கைகோர்ப்பு ஆகியவை இருக்கின்றன. பொருளாதார அடியாள் போல 2004ஆம் ஆண்டில் வந்த ‘கன்ஃபெஸ்ஸன்ஸ் ஆஃப் அன் எகனாமிக் ஹிட் மேன்’ (Confessions Of An Economic Hit Man) என்ற புத்தகம் வந்தது. அமெரிக்கரான ஜான் பெர்க்கின்ஸ் என்ற வணிக ஆலோசகர் எழுதிய அந்தப் புத்தகத்தை அதற்கடுத்த ஆண்டிலேயே, இரா. முருகவேல் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்தது பாரதி புத்தகாலயம். உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஊழல் உட்பட மோசமான குற்றங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அந்தப் புத்தகம் கூண்டில் நிறுத்தியது. அப்படிப்பட்ட “அடியாள்” வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் மனசாட்சியோடு அதிலேயிருந்து வெளியேறி, வேட்டையாடப்பட்ட, ஆயினும் துணிந்து நின்றவர் ஜான் பெர்க்கின்ஸ். அவரே தன் கதையைச் சொல்வதாக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கையேடாகியிருக்கிறது. அதே போல், உலகக் கார்ப்பரேட்டுகளின் வணிகச்சூது உலகத்தை சந்திக்குக் கொண்டுவரும் புத்தகம்தான் இது என புரிந்துகொள்ள முடிகிறது. “வேறுபட்ட கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வேறு ஏதோவொரு நிகர்நிலை உலகத்தில் வாழ்வது போலத் தோன்றுகிறது. அவர்கள் காலையில் எழுகிறார்கள், தங்கள் லெவிஸ் ஆடைகளையும் நைக் காலணிகளையும் அணிகிறார்கள், தொப்பிகளையும் முதுகுப் பைகளையும் சோனி பெர்சனல் சிடி பிளேயர்களையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.” –உலகமய கார்ப்பரேட் யுகம் எப்படி வளரும் தலைமுறைகளை ஒரு மாதிரியாக வார்த்து வைத்திருக்கிறது என்று தன் மனக்குமுறலை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய புத்தகம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களை கைகுலுக்கி வரவேற்கலாம், வாழ்த்தலாம். https://bookday.in/naomi-klein-no-logo-taking-aim-at-the-brand-bullies-book-oriented-article-written-by-a-kumaresan/

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி

1 month 1 week ago
22 JUN, 2025 | 01:08 PM (நா.தனுஜா) இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார். அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218131

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

1 month 1 week ago
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்! -சாவித்திரி கண்ணன் ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை; எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்! அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்! 1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார். 1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார். திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி. அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும். முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம். 2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது. சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை. இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார். அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார். இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன். இன்றைக்கு என்ன நிலைமை? இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன. திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார். தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர் 22 JUN, 2025 | 01:59 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/218135

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

1 month 1 week ago
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது https://akkinikkunchu.com/?p=329829

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

1 month 1 week ago
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்? மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது. https://akkinikkunchu.com/?p=329808

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; மத்திய கிழக்கு வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்கும் விமான நிறுவனங்கள் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 03:13 PM ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைத் தவிர்க்க முற்படுகின்றன. அங்கு நடக்கும் இருபக்க ஏவுகணை தாக்குதல்களால் விமானச் சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கின் பெரும்பகுதி வான்வெளியைத் தவிர்க்க முற்படுகின்றன. ஈரானின் அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க அந்த வட்டாரத்திலுள்ள விமானச் சேவை நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன என்று ‘ஃப்ளைட்ரேடார்24’ விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து இல்லை என ‘ஃப்ளைட்ரேடார்24’ தளம் காண்பிக்கிறது. கேஸ்பியன் கடல் வழியே வடக்குமுகமாக அல்லது எகிப்து, சவூதி அரேபியா வழியே தெற்குமுகமாக விமானங்கள் செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக நீள்வதுடன் எரிபொருள், பணியாளர் செலவும் அதிகரிக்கின்றன. பதற்றமிக்க வட்டாரங்களில் ஏவுகணைகளை, ஆளில்லா வானுர்தி ஆகியவற்றால் விமானப் போக்குவரத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. ஜூன் 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விமான நிறுவனங்கள் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. இருந்தபோதும் பக்கத்து நாடுகளிலிருந்து அவர்களது குடிமக்களை வெளியேற்றும் சேவைகள் இயங்கி வருகின்றன. வேறு சில சேவைகள், ஈரானில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை அவர்களது நாடுகளுக்குக் கொண்டுவரவுள்ளன. https://www.virakesari.lk/article/218142

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து; 8 பேர் பலி

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே வெப்பக்காற்று பலூன்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாவ் பாலோ மாநிலத்தில் வானத்திலிருந்து மற்றொரு பலூன் விழுந்ததில் 27 வயது பெண்ணெருவர் உயிழந்ததோடு, 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. https://www.virakesari.lk/article/218104

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 month 1 week ago
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் 22 JUN, 2025 | 01:02 PM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன. முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது. அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார். அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/218129

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஐ நா சபைய‌ குண்டு வைச்சு த‌க‌ர்க்க‌னும் இவ‌ள‌வும் ந‌ட‌ந்து வெறும‌ன‌ வேடிக்கை பார்க்குது என்றால் இந்த‌ ச‌பை உல‌கிற்க்கு தேவை இல்லாத‌ ச‌பை இதே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பெருத்த‌ ஆவ‌த்து நெருங்குது என்றால் இந்த‌ கோமாளி ச‌பைய‌ உட‌ன‌ கூட்டுவின‌ம்....................................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வை அதோட‌ அவ‌ர்க‌ள் எத‌ற்க்கும் துணிந்த‌வை.................இப்போதுவ‌ரை ம‌ற்ற‌ நாடுக‌ளின் உத‌வி இல்லாம‌ தான் 9நாளாக‌ இஸ்ரேல் ம‌ற்றும் அமெரிக்காவுக்கு எதிராக‌ போர் செய்யின‌ம்...............இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ ஜ‌ரோப்பிய‌ ப‌ல‌ நாடுக‌ள் பின்புல‌த்தில் இனி ஈரானுக்கு அவ‌ர்க‌ளின் ந‌ட்பு நாடுக‌ளின் ஆத‌ர‌வு வெளிப்ப‌டையா கிடைக்க‌ அல்ல‌து மறைமுக‌மாய் கிடைக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
என‌க்கு அடிப்ப‌டையில் அமெரிக்கா அர‌சிய‌லை பிடிக்காது.....................அத‌ன் வெளிப்பாட்டை என‌து எழுத்தின் மூல‌ம் பார்க்க‌லாம்.....................சும்மா இருந்த‌ ஈரான் மீது ப‌ல‌ வாட்டி இஸ்ரேல் சீண்டி பார்த்த‌து.................. உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இஸ்ரேல் என்ர‌ நாடு எங்கை இருக்குதென்ரே தெரியாது , சூம் ப‌ண்ணி பார்த்தால் சிறு கோடு தான் தெரியுது அந்த‌க் கோடும் மெது மெதுவாய் அழிய‌ நெத்த‌னியாகுவும் ர‌ம்பும் வ‌ழி வ‌குக்கின‌ம்...................இன்று தானே அமெரிக்கா ஈரான் மீது நேர‌டியாக‌ தாக்கி இருக்கின‌ம் இனி வ‌ரும் நாட்க‌ளில் பாப்போம் அமெரிக்கா காங்ர‌ஸ் ச‌வை ர‌ம்புக்கு க‌டும் எதிர்ப்பு தெரிவித்து X த‌ள‌த்தில் ப‌திவு போடுகின‌ம் , ர‌ம் செய்த‌து பிழையென‌..........................
Checked
Tue, 08/05/2025 - 15:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed