புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை வைத்து இருக்கு என்றால் அமெரிக்கா எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கி ப‌ல‌ நாட்டை நாச‌ம் செய்த‌வை லிஸ் போட்டு சொல்ல‌வா குரு👍 ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ அணுகுண்டு செய்வ‌தில் பிழை இருப்ப‌தாக‌ அல்ல‌து த‌வ‌று இருப்பதாக‌ தெரிய‌ வில்லை👍................... இஸ்ரேல் சில‌ தீவிர‌வாத‌ குழுக்க‌லுக்கு காசுக‌ளை கொடுத்து செய்த‌ நாச‌கார‌ செய‌ல்க‌ளை இந்த‌ உல‌க‌ம் ந‌ங்கு அறியும்...................இன்று கூட‌( ஸ் ) த‌ள‌த்தில் பார்த்தேன் இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருத‌ர் ஓவ‌ரா குரைக்க‌ தொட‌ங்கினார் , ஜ‌ப்பான் மீது அணு குண்டு போட்ட‌தை ஈரானுக்கு நினைவூட்ட‌ விரும்புகிறேன் என்றார் ......................எதிரிட்ட‌ இருக்கிர‌ அதே குண்டு ஈரானிட‌மும் இருந்தால் தான் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடான‌ இஸ்ரேல் மூடிகிட்டு இருப்பான் , இல்லையேன் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌து போல் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இஸ்லாம் நாட்ட‌வ‌ர்க‌ளை கொலை செய்வாங்க‌ள்.....................ஈரான் 2000கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இருந்து அதிவேக‌ மீசேல்க‌ள் மூல‌ம் இஸ்ரேல் த‌லை ந‌க‌ர‌த்த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி விட்டின‌ம் இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது அவ‌ர்க‌ளின் நாட்டின் அழிவுக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் காட்டாம‌ , இப்போது புது ச‌ட்ட‌ம் போட்டு இருக்கின‌ம் , வீடியோ பிடித்து அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சில‌ ஆண்டு சிறையாம்😛😁........................ இன்று இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் தீவிர‌வாத‌ தாக்குத‌லாம் இஸ்ரேல் அர‌சு..............ப‌ல‌ஸ்தீன‌த்தில் புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டை போட்ட‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு இப்ப‌ தான் புரியுது ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு போட்டால் அது ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் என‌ , இதுவ‌ரை கால‌மும் ஈரானின் மெள‌வுன‌துக்கும் பொறுமைக்கும் கிடைச்ச‌ வெற்றி இது.....................இன்னும் 2000க்கு மேல் ப‌ட்ட‌ மிசேல்க‌ள் ஈரானிட‌ம் இருக்கு அதோட‌ சீனாவில் இருந்து விமான‌ம் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ஈரானை வ‌ந்த‌டையுது........................இது ஒன்றும் 2003கிடையாது ச‌தாமுசேன் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று சொல்லி ஈராக்கை நாச‌ம் செய்த‌து போல் ஈரானை அழிக்க‌ முடியாது ,ஈரானில் அமெரிக்க‌ ப‌டைக‌ள் கை வைத்தால் பின் விலைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்ப‌த‌ அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற‌க்கு உண‌ருவின‌ம் ஏன் ஈரான் மேல் கைவைத்தோம் என‌............................எல்லாத்துக்கும் கால‌ம் ப‌தில் சொல்லும்......................... வ‌ட‌ கொரியா இஸ்ரேலுக்கு எதிராக‌ அறிக்கை விட்டு இருக்கு த‌லைவ‌ன் இற‌ங்க‌னும் உல‌க‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும் உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ சொல்லி ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப் இப்போது மூன்றாம் உல‌க‌ போருக்கு அவ‌ரே கார‌ண‌மாய் அமைய‌ போகிறார்....................... ஈரான் அமெரிக்கா கூட‌ பேச்சு வார்த்தைக்கு இட‌ம் இல்லை என‌ சொல்லி விட்டின‌ம் ர‌ம்ப் (ஸ் ) த‌ள‌த்தில் இருந்து வீர‌ வ‌ச‌ன‌ம் எழுதுகிறார் அதை ஈரான் அர‌சு காமெடியாக‌ பார்க்குது உந்த‌ மிர‌ட்ட‌லுக்கு எல்லாம் தாங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ போவ‌து கிடையாது 48ம‌ணி நேர‌ம் கெடு கொடுத்தார் ர‌ம் , இப்ப‌ 60ம‌ணித்தியாள‌த்தை தாண்டி விட்ட‌து............................. ம‌று ப‌டியும் சொல்லுகிறேன் இஸ்ரேல் மிக‌ப் பெரிய‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........................ayatollah ali khamenei இஸ்ரேல் கொலை செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு வ‌ரும் கால‌ங்க‌ளில் நின்ம‌தியாக‌ இருக்க‌ போவ‌து கிடையாது...................அப்ப‌டி இஸ்ரேல் ayatollah ali khamenei கொலை செய்தால் அழிவுக‌ள் ப‌ல‌ கோண‌ங்க‌ளில் வேறு மாதிரி இருக்கும்.............................

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

1 month 1 week ago
தலைவர் மீதான உங்கள் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னே ஆர்வம்? என்னே தவிப்பு?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரித்த அதே காலத்திலேயே இஸ்ரேலும் அணு ஆயுதங்கள் தயாரித்தது. இன்றுவரை இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத விபரங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே ஏன் இந்த ஐந்து நாடுகளில் எவையும் இஸ்ரேலை கேட்கவில்லை என்ற கேள்வி இல்லாமல் ஆகுகின்றது. ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா இந்த மூன்று நாடுகளையும் எப்படி ஐந்து அணு வல்லரசுகளும் விட்டார்கள் என்பது ஒரு விடயமே. இலேசாக அவர்களை விடவில்லை. முழுத்தடைகளை விதித்தார்கள். அதிலும் வட கொரியா, மேற்கு நாடுகளின் தடைகளால் இந்த நாடே பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டது. இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

1 month 1 week ago
திமுக,அதிமுக பிரபாகரன் படத்தை தூக்கினால் பரவாயில்லையா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

1 month 1 week ago
மக்களால் ஒட்டு மொத்தமாக நிகாரிக்கப்பட்ட நபரான சுமந்திரன் அவர்கள் எந்த உரிமையில் பிரித்தானிய தூதுவரை சந்தித்தார்? அதிலும் சுமந்திரன் ஒரு பொய்யன். தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுபவர்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
நேற்று இரவு நியூஸ் 18 இல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பொன்று போய்க் கொண்டிருந்தது. அதில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் Fordo Plant குறித்த தகவல்கள் பிழையானவை போன்று தெரிந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 கிலோகிராம் வரையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதன் மேற்கூரை மேற்பரப்பிலிருந்து 90 அடிகள் கீழே இருக்கின்றது என்று செய்தியில் சொன்னார்கள். இவை 90 அடிகள் அல்ல, 90 மீட்டர்கள் கீழே என்பதே சரியானது என்று வேறு தகவல்கள் சொல்லுகின்றன. பி - 2 விமானத்தின், ஜிபியூ - 57 இராட்சதக் குண்டின் ஆழத்தாக்கு திறன் பற்றியும் அவர்களின் தகவல்கள் சரியானது அல்ல. இந்த ராட்சத குண்டுகள் 200 அடிகள் வரை உள்ளே போய், பின்னர் அங்கே வெடிக்கும் திறன் வாய்ந்தவை. 60 அடிகள் என்றே செய்தியில் சொன்னார்கள். இதை முடிப்பது தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் முடிவு என்றால், இரண்டு பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும். முதலாவது, அங்கிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கமுற்று அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஏற்படப் போகும் கதிர்வீச்சு. அந்தப் பிரதேசமே 50 வருடங்களுக்கு மேலே மனிதர்கள் வசிக்க முடியாத வெறும் நிலம் ஆகிவிடும். இரண்டாவது, இந்தப் பிரதேசத்தில் அந்த மலையின் கீழே போய்க் கொண்டிருக்கும் fault lines. மிகவும் ஆழத்தில் ஒரு நெருக்கப்பட்ட இடத்தில் சில இராட்சத குண்டுகள் வெடிக்கும் போது, அவற்றின் வீரியம் இன்னும் அதிகமாக, கூர்மையாக இருக்கும். இந்த வீரியத்தால் fault lines அசையக்கூடும். அது பெரிய பூகம்பங்களை அந்தப் பகுதியிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தவும் கூடும். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது என்று தான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று சொல்லியிருக்கின்றார். இங்கே சிரிப்பு வந்தால், சிரித்துக் கொள்ளலாம். இது நல்ல ஒரு நகைச்சுவையே. தற்போதைக்கு ஈரானுக்கு உண்மையில் என்ன தெரிவுகள் இருக்கின்றன............ ஒரே ஒரு தெரிவாக அணு ஆயுத திட்டத்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்டிக் கொள்வது தான் உள்ளது. ஒரே ஒரு அணு மின்நிலையமே நாட்டில் இருக்கும் போது, 2000 க்கும் மேற்பட்ட கருவிகளில் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் நோக்கம் வெளிப்படையே.

முல்லைத்தீவில் திடீரென வெட்டப்பட்ட வீதி; அவதியுறும் விவசாயிகள்; அதிகாரிகளின் அசமந்தப் போக்கு

1 month 1 week ago
19 JUN, 2025 | 09:36 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது. குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி இடம்பெறுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல் நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான் காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் குறிப்பாக சிறுபோக அறுவடை ஆரம்பித்து இருக்கின்ற நிலைமையில் நேற்று முதல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த அறுவடை நெல்லினை வீடுகளுக்கு கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில் பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல் அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது எனவும் ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும் ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன் செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். https://www.virakesari.lk/article/217950

கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?

1 month 1 week ago
பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. "இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம். ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை இலவசமாகப் பெற இணையதளங்கள் அனுமதிக்கின்றன. 'கூகுள் சர்ச்' மக்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது, அங்கு அவர்களுக்கு கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பரங்களைக் காட்டுகின்றன. அதன் மூலமாக மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். பெரும்பாலான இணையதளங்கள் இப்படித்தான் பணம் சம்பாதிக்கின்றன. இணைய செயல்பாடுகளில் 68% தேடுபொறிகளில் இருந்தே தொடங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், சுமார் 90% தேடல்கள் கூகுளில் நடைபெறுகின்றன. இணையம் ஒரு தோட்டம் என்று வைத்துக் கொண்டால், பூக்களை வளர்க்க உதவும் சூரியன் என்று கூகுளை குறிப்பிடலாம். தற்போதைய இந்த ஏற்பாடு பல தசாப்தங்களாக வலுவாக இருந்தது. ஆனால் ஒரு சிறிய மாற்றம், இந்த அமைப்பு சிதைந்து வருவதாக சிலரை நம்பச் செய்துள்ளது. கூகுள் தேடுபொறியில் ஒரு புதிய AI கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றபோதிலும், விமர்சகர்கள் அச்சப்படுகின்றனர். அவர்களது கணிப்புகள் நிதர்சனமாகிவிட்டால், இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம். தரமான தகவல்கள் ஆன்லைனில் கிடைப்பது அரிதாகலாம், ஏராளமான மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். இருந்தபோதிலும் விமர்சகர்களின் கணிப்புக்கு மாறாக, இது இணையதளங்களின் வணிக மாதிரியை மேம்படுத்தலாம் என்றும், சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டறியும் வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம் என்றும் பல நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் உங்களுடைய டிஜிட்டல் அனுபவங்கள் இதுவரை இருந்தது போல இனி இருக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கூகுள் தேடுபொறியில் ஒரு விஷயத்தை தேடும்போது, AI உருவாக்கிய பதில்களான AI ஓவர்வியூஸ் தற்போது தோன்றுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுதான் ஆகிறது. 2025 மே 20ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். அதாவது, "ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தேடல் அனுபவத்தை விரும்புவோருக்கு, நாங்கள் ஒரு புதிய AI மோட்-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இது தேடலின் முழுமையான மறுபரிணாமமாக இருக்கும்," என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இதையும் நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் இது மிகைப்படுத்தல் அல்ல, நிதர்சனமான உண்மை. 'இது கூகுள் தேடலின் எதிர்காலம்' பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES மக்கள் ஆண்டுக்கு ஐந்து டிரில்லியன் முறை கூகுள் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். இது இணையத்தின் வடிவத்தை வரையறுக்கிறது. AI மோட் ஒரு தீவிரமான மாற்றமாக இருக்கும். AI ஓவர்வியூஸ் போலன்றி, AI மோட் பாரம்பரிய தேடல் முடிவுகளை முழுவதுமாக மாற்றுகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க சாட்பாட் ஒரு குறுங்கட்டுரையைத் திறம்பட உருவாக்குகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, AI மோட் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தேடுபொறி மற்றும் நிறுவனத்தின் செயலியில் ஒரு பொத்தானாகத் தோன்றும். இது இப்போதைக்கு விருப்பத் தேர்வாக இருந்தாலும், "இது கூகுள் தேடலின் எதிர்காலம்" என்று கூகுள் சர்ச் பிரிவின் தலைவர் லிஸ் ரீட் இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியைத் தொடங்கும்போதே தெளிவாகக் கூறிவிட்டார். AI ஓவர்வியூஸ் ஏற்கெனவே இணையத்தின் மற்ற பகுதிகளுக்கு மிகக் குறைந்த போக்குவரத்தை அனுப்பும் நிலையில், AI மோட் அந்தப் போக்கை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள். இது நடந்தால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தூண்டிய 'வணிக மாதிரி' நசுக்கப்படக்கூடும். "கூகுள் அதன் தற்போதைய வடிவத்தில் AI மோட் வசதியை இயல்பு நிலையாக மாற்றினால், அது இணையத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என சந்தைப்படுத்தல் நிறுவனமான ஆம்சிவின் சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) உத்தி மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார். "இது பெரும்பாலான வெளியீட்டாளர்களின் முக்கிய வருவாய் ஆதாரத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும் இது ஆர்கானிக் தேடல் மூலம் வரும் பயனர்களை நம்பியிருக்கும் உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்கமிழக்கச் செய்யும். அதாவது குறைந்தபட்சம் லட்சக்கணக்கான இணையதளங்கள் பாதிக்கப்படலாம். கூகுளிடம் அதற்கான சக்தி உள்ளது" என அவர் மேலும் கூறுகிறார். இந்தக் கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் கூறுகிறது. AI மோட், இணையதளங்களை ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று நிறுவனம் நம்புகிறது. "ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான கிளிக்குகளை இணையதளங்களுக்கு அனுப்புகிறோம், மக்களை இணையத்துடன் இணைப்பது தொடர்ந்து எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது," என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் போன்ற புதிய முயற்சிகள் தேடலை மேம்படுத்துகின்றன மற்றும் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகின்றன. இது உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டார். இப்படி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூகுள் மற்றும் அதன் விமர்சகர்கள் ஒரேயொரு விஷயத்தில் உடன்படுகிறார்கள்: "அது, இணையம் மிகவும் வித்தியாசமாக மாறப் போகிறது" என்பதுதான். குறைந்தபட்சம் அடுத்த ஓர் ஆண்டில் தற்போதைய ஆன்லைன் சகாப்தம் முடிவுக்கு வரும். அந்த மாற்றத்தின் இறுதியில் இணைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் ஒரே கேள்வி. வெளியீட்டாளர்களின் கவலை இணையம் எங்கும் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமூக ஊடக தளங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன, கட்டணத் திரைகளைக் கொண்ட சில பிரபலமான தளங்கள் செழிப்பாக இருக்கின்றன. மக்கள் ஆன்லைனில் தகவல்களை தேடிக் கண்டறியும் முறை மட்டுமே மாறப் போகிறது. சிலரின் அச்சம், "பொதுவான இணையதளம்" ஆபத்தில் உள்ளது என்பதே. அதாவது, சுதந்திரமாக அணுகக்கூடிய சுயாதீன இணையதளங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வணிகங்களுக்கு சிக்கல் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல், படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் அவர்கள், பெரும்பாலும் "வெளியீட்டாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், இருப்பினும், இதற்கு முன்னரே நாம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். 2010இல் "இணையதளம் இறந்துவிட்டது" என்று வயர்டு பத்திரிகையின் ஓர் அட்டைப்படம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்றும் நாம் இங்கே இருக்கிறோம். ஸ்மார்ட்போன்கள், செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் உலகளாவிய இணையதளம் தொடர்பான 'இறுதி நாள்' கணிப்புகளைத் தூண்டிவிட்டன. ஆனால் மே மாதத்தில் கூகுள் அறிவித்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு AI மோட் முன்னோடியில்லாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறும் நிபுணர்கள் பலரிடம் பிபிசி பேசியது. "இணையதளங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதற்கு 'அழிந்துவிடும்' என்று சொல்வது அதிகப்படியானது என்று நான் நினைக்கிறேன்," என போலெமிக் டிஜிட்டல் (Polemic Digital) என்ற எஸ்.இ.ஓ நிறுவனத்தின் நிறுவனர் பாரி ஆடம்ஸ் கூறுகிறார். அவர், "Decimation (பெருமளவில் குறையும்) என்பது சரியான சொல்" என்கிறார். கூகுள் இதை ஏற்கவில்லை. உண்மையில், AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இணையத்திற்கு நல்லது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள், பயனர்களை "இணையதளங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கின்றன" என்றும், மக்கள் தாங்கள் கிளிக் செய்யும் இணைப்புகளில் அதிக நேரம் செலவிடுவதால் "உயர் தரம்" கொண்ட தேடல் அனுபவம் சாத்தியமாகும் என்றும் கூகுள் உறுதிபடக் கூறுகிறது. இருந்தபோதிலும், கூகுளின் இந்தக் கூற்றுகளை ஆதரிக்கும் தரவை அந்த நிறுவனம் வழங்கவில்லை. ஆர்வமுள்ள வெளியீட்டாளர்களுக்கு கூகுள் AI வழிகாட்டி ஒன்றை வைத்துள்ளது. ஆனால் AI ஓவர்வியூஸ் இணையதளங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய தெளிவான தகவல்களை அது வழங்கவில்லை. இந்த தொடர்பான கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை. அத்துடன், இந்த AI கருவிகள் தேடல் இணையத்திற்கு அனுப்பும் மொத்த டிராஃபிக்கை குறைக்கின்றன என்பதை கூகுள் மறுக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் நேரடியாக மறுக்கவில்லை என்றும் கூறலாம். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இரண்டுமே மூலங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன, இருந்தபோதிலும் நீங்கள் தேடும் கேள்விக்கான பதிலை AI கொடுத்துவிட்டால், நீங்கள் ஏன் மூல பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்?" என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர். தரவுகள் இந்த தர்க்கத்தை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, "கிளிக்-த்ரூ ரேட்" என்று அழைக்கப்படும் இணையதளங்களுக்கு கூகுள் அனுப்பும் போக்குவரத்தின் அளவை AI ஓவர்வியூஸ் 30% முதல் 70% வரை குறைப்பதாகப் பல்வேறு பகுப்பாய்வுகள் கூறுகின்றன. கூகுள் சர்ச்சில் இப்போது சுமார் 60% "ஜீரோ-கிளிக்" ஆக இருப்பதாகவும், பயனர் ஒரு இணைப்பை பார்வையிடாமலேயே அவர்களுக்கான பதில் கிடைத்து விடுவதாகவும் பகுப்பாய்வுகள் கண்டறிந்துள்ளன. 'இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன' பட மூலாதாரம்,GOOGLE/ BBC AI மோட் வசதியின் சில பதிப்புகள் விரைவில் இயல்புநிலையாக மாறும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், மேலும் இது பாரம்பரிய இணைப்புகளின் பட்டியலை முற்றிலுமாக நீக்குவதால், தேடுதலில் AI ஏற்படுத்தும் தாக்கம் அதிகரிக்கும். "கூகுளின் AI மோட், இணையதளங்களுக்குச் செல்லும் கிளிக்குகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இது நேர்மறையிலான சூழ்நிலையில்தான்," என்கிறார் ஆடம்ஸ். "அதிக அளவிலான பயனர்கள் AI அவர்களுக்கு என்ன கொடுக்கிறதோ அதிலேயே திருப்தி அடைவார்கள் என நினைக்கிறேன். இது வணிகத்தில் சாத்தியமான லாபம் கிடைப்பதற்கும், திவாலாவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். பல வெளியீட்டாளர்களுக்கு, இது வியத்தகு முறையில் இருக்கும்." இது ஒரு சில வலைப்பதிவர்கள் வேலை இழப்பது தொடர்பானது மட்டுமல்ல, பயனர்கள் இணையத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் தகவல்களை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதையும் மாற்றக்கூடும். "இணையதளம் என்பது பல்வேறு தகவல்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளவை என்றே சொல்லலாம், ஆனால் அது இனி மாறக்கூடும்" என்று காற்றின் தர தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யும் ஹவுஸ்ஃப்ரெஷின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ கூறுகிறார். கூகுளால் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் இணையதளங்களின் பிரதிநிதியாக நவரோ பேசுகிறார். பயனர்கள் தேடும் தகவல்களுக்கான ஆதாரங்களின் பன்முகத்தன்மையை இது மிகவும் குறைத்துவிடக்கூடும் என்று அவர் கவலை தெரிவிக்கிறார். "இணையதளம் நம் அனைவருக்குமான மிகப்பெரிய நூலகத்தைப் போன்றது. ஆனால், நூலகரிடம் புத்தகம் கேட்டால் அவர் புத்தகத்தைப் பற்றி மட்டுமே உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற கணிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் தவறானவை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். பல்வேறு காரணங்களுக்காக இணையதளங்களின் போக்குவரத்து குறையலாம் என்றும், இந்தச் சிக்கல்களை பற்றிச் சொல்லும் ஆய்வுகள் பெரும்பாலும் சீரற்ற தரவு மற்றும் குறைபாடுள்ள முறையைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார். "எங்கள் கண்ணோட்டத்தில், இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன" என்று கூகுளின் அறிவு மற்றும் தகவல் துறையின் மூத்த துணைத் தலைவர் நிக் ஃபாக்ஸ், தனது சமீபத்திய பாட்காஸ்ட் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "இணையதளங்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து கூகுளைவிட அதிக அக்கறை கொண்ட நிறுவனம் வேறெதுவும் இல்லை." உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையதளங்களில் உள்ள உள்ளடக்கத்தின் அளவு 45% அதிகரித்துள்ளது என்றும், இது ஸ்பேமை தவிர்த்த பிறகு இருக்கும் அளவு என்றும் ஃபாக்ஸ் கூறினார். "இதை தரவுகள் சொல்கின்றன," என்று அவர் கூறினார். "மக்கள் இன்னும் இணையதளங்களிலேயே மிகவும் அதிக அளவில் கிளிக் செய்கிறார்கள்." பல்வேறு உறுதிமொழிகள் இருந்தபோதிலும், சில இணையதளங்கள் AI அடிப்படையில் இயங்கும் சாட்பாட்கள் மற்றும் தேடுபொறியின் வருகையால் சிரமப்படுகின்றன. 'பொது இணையதளங்களை நிச்சயமாக அழிக்கப் போகிறது' பட மூலாதாரம்,HOUSEFRESH/ YUN SUN PARK கடந்த ஆண்டு, பெரிய பிராண்டுகளுக்கு கிளிக்குகளை மாற்றியமைக்கும் கூகுளின் வழிமுறைகளுக்கான புதுப்பிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய எண்ணற்ற சிறிய ஆன்லைன் வணிகங்களில் ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனமும் ஒன்று. தற்போது, தங்களுக்கு AI மூலம் சேதங்கள் அதிகரிப்பதாக நவரோ கூறுகிறார். "சில வாரங்களுக்கு முன்பு, திடீரென ஓர் அதிகரிப்பைக் கவனித்தோம்," என்று நவரோ கூறுகிறார். கூகுள் தேடலில் ஹவுஸ்ஃப்ரெஷ் எத்தனை முறை தோன்றும் என்ற பதிவுகள் அதிகரித்தன. "ஆனால் அதே நேரத்தில், கிளிக்குகள் குறைந்துவிட்டன. எனவே கூகுள் எங்கள் இணைப்புகளை அடிக்கடி காட்டுகிறது. ஆனால் யாரும் கிளிக் செய்வதில்லை. இது AI ஓவர்வியூஸ் உடன் தொடர்புடையது" என்கிறார் அவர். பிரைட்எட்ஜ் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ் வந்த பிறகு, இணையம் முழுவதும் 49% பதிவுகள் அதிகரித்துள்ளன. ஆனால் மக்கள் தங்கள் பதில்களை செயற்கை நுண்ணறிவிடம் இருந்து பெறுவதால் 30% கிளிக்குகள் குறைந்துள்ளன. "கூகுள்தான் விதிகளை உருவாக்குகிறது, விளையாட்டை உருவாக்கிய அவர்களே, அதில் பங்கேற்றவர்களுக்கு வெகுமதி அளித்தனர்," என்று கூறும் நவரோ, "இப்போது அவர்களே, 'இது என் உள்கட்டமைப்பு, இணையதளம் அதில் வாழ்கிறது' என்று கூறுகிறார்கள். நமக்குத் தெரிந்த பொதுவான இணையதளத்தை அது நிச்சயமாக அழிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. அநேகமாக அது ஏற்கெனவே நடந்துவிட்டது." 'இயந்திர இணையதளத்தை வரவேற்போம்' AI மோட் என்பதன் மிகப்பெரிய தாக்கம், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பெறும் அனுபவத்தில் எதிரொலிக்கும். சிலர் நம்புவது போல், நாம் புதிய முன்னுதாரணம் ஒன்றின் தொடக்க காலகட்டத்தில் இருக்கலாம். இணையதளத்தை எதிர்காலத்தில் "இயந்திர இணையதளம்" என்றே அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இணையதளங்கள் என்பது மனிதர்களுக்காக அல்லாமல் AI இயந்திரம் படிக்க உருவாக்கப்படும் இடமாகவும், நாம் சாட்பாட்கள் மூலம் சுருக்கங்களைப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளும் முதன்மை வழியாகவும் மாறலாம். அண்மையில் கூகுள் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி ஆய்வகமான Google DeepMindஇன் தலைவரான டெமிஸ் ஹசாபிஸ் அளித்த பேட்டி ஒன்றில், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை நேரடியாக செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு வழங்க விரும்புவார்கள் என்றும், சிலர் அந்தத் தகவலை மனிதர்கள் படிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். "சில ஆண்டுகளில் விஷ்யங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இணையதளங்கள் வழக்கம் போலவே, வசதியான முறையில் பதில்களைக் கொடுக்கும் ஓர் உலகமாக இருக்கும். ஆனால் திறந்த இணையதளத்தை மிகவும் பிரபலமாக்கிய சில விஷயங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். பல புதிய விஷயங்களை தரும் இந்த வாய்ப்பு நல்லதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். டீகோடர் பாட்காஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் பிச்சை, இது பயனர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கூறினார். பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இணையதளங்களுக்கு நெட்வொர்க் சேவைகளை வழங்கும் Cloudflare நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேத்யூ பிரின்ஸ், இதிலுள்ள மிகப்பெரிய சிக்கலை முன்னறிவிக்கிறார். "ரோபோக்கள் விளம்பரங்களை கிளிக் செய்வதில்லை," என்று அவர் கூறுகிறார். AI பார்வையாளர்களாக மாறினால், படைப்பாளர்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? நேரடியான இழப்பீடு என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அமேசானின் செயற்கை நுண்ணறிவுக்காக, நியூயார்க் டைம்ஸ் உள்ளடக்க உரிமம் வழங்குகிறது. பயனர் தரவுகளில் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்க ரெடிட்டுக்கு ஆண்டுக்கு $60 மில்லியன் கட்டணத்தை கூகுள் செலுத்துகிறது. டஜன் கணக்கான பெரிய வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் OpenAI மற்றும் பிறருடன் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிக தரவுகளைக் கொண்ட மிகப்பெரிய இணையதளங்கள் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. "இதுபோன்ற உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவது இணையதளத்தைத் தக்கவைக்கத் தேவையான அளவில் செயல்படும் ஒரு மாதிரி என்று எனக்குத் தோன்றவில்லை," என்று விளம்பர தொழில்நுட்ப நிறுவனமான ராப்டிவின் நிர்வாக துணைத் தலைவர் டாம் கிரிட்ச்லோ கூறுகிறார். "கிளிக்குகள் குறைவதற்கு மாற்றாக அது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம்" என்கிறார் அவர். இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமாகிவிட்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று ஆடம்ஸும் மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள். நவரோவை போன்ற பலர் இந்த நிலையை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளனர். 'புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது' ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனம் யூட்யூபில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் சமூக ஊடக வழிமுறைகளின் விருப்பங்கள் இன்னும் நிலையற்றவையாகவே இருப்பதாக நவரோ கூறுகிறார். மேலும் படைப்பாளர்கள் விஷயத்தின் ஆழத்தையும் விவரங்களையும் தியாகம் செய்ய தளங்கள் கட்டாயப்படுத்துகின்றன. "உயர்தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை உருவாக்க எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. அனைத்துமே பணமாக்குதல் மற்றும் மாற்றம் பற்றியதாக மாறும், அது தகவலை குறைவாகத் தெரிவிக்கவும் அதிகமாக விற்கவும் கட்டாயப்படுத்துகிறது," என்று நவரோ கூறுகிறார். இணையதளத்தில் வெளியீட்டாளர்கள் கொண்டிருந்த தன்னிச்சையான செயல்பாட்டை இழப்பது என்பது பார்வையாளர்களாகிய உங்களுக்கு தரம் குறைந்த உள்ளடக்கமே கிடைக்கும் என்பதையே ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது என்று நவரோ கூறுகிறார். கூகுளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிற தேடுபொறிகள் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், அவர்களும் தங்கள் தேடல் கருவிகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மைக்ரோசாப்ட் அதன் Bing தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை இணைத்து வருகிறது. ஆனால் கூகுளின் சிறிய போட்டியாளர்கள் மிகக் குறைந்த அளவே சந்தையில் பங்களிப்பதால், அவர்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதுடன், பலர் தங்கள் சொந்த AI கருவிகளைச் சேர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயந்திர இணையதளம் மிகவும் நெருக்கமானதாகவும், பன்முகத் தன்மை குறைவானதாகவும் இருந்தாலும், ஆன்லைனில் தங்கள் நேரத்தைச் செலவிடுவோருக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கலாம். சில பார்வையாளர்கள் பீதியடையவில்லை என்பதையும் கவனிக்கலாம். "பரிணாமம் என்ற அர்த்தத்தில் நான் கவலைப்படவில்லை," என்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரும், 1980களில் உலகளாவிய இணையதளத்தின் முன்னோடியாக இருந்த கட்டமைப்பை வடிவமைத்த ஆரம்பக்கால முன்னோடிகளில் ஒருவருமான டேம் வெண்டி ஹால் கூறுகிறார். "செயற்கை நுண்ணறிவு இப்போது சமன்பாட்டிற்குள் வருகிறது, அது அனைத்து இயக்கவியலையும் மாற்றப் போகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சரியாகச் சொல்ல விரும்பவில்லை. இணையதளம் இன்னும் இருக்கிறது, அது இன்னும் திறந்தே இருக்கிறது. கூகுள் இந்த வழியில் சென்றால், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது," என்று அவர் கூறுகிறார். 'இதுதான் திருட்டுக்கான வரையறை' பட மூலாதாரம்,GETTY IMAGES AI Mode என்பது ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு "fan-out முறையை " பயன்படுத்துகிறது. அதாவது, AI உங்கள் கேள்வியை துணை தலைப்புகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பல தேடல்களைச் செய்கிறது. AI Mode மிகவும் மாறுபட்ட ஆதாரங்களைப் பரிந்துரைக்கவும், மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு ஆழமான பதில்களை உருவாக்கவும், ஆழமாகச் செல்லவும் உதவுகிறது. அத்துடன், தொடர்ந்து கேள்விகளைக் கேட்கும் திறனை நீங்கள் பெறுகிறீர்கள் என்று கூகுள் கூறுகிறது. கூகுளின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ்க்கான எதிர்வினைகள் AI மோட் மிகவும் பிரபலமாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. "மக்கள் AI ஓவர்வியூஸ் பயன்படுத்துவதால், அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களால் திருப்தி அடைவதையும், அவர்கள் அடிக்கடி தேடுவதையும் நாங்கள் காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 'தேடுபொறியில்' மிகவும் வெற்றிகரமான வெளியீடுகளில் இதுவும் ஒன்று," என்று கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் சுந்தர் பிச்சை கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேடலை சிறந்ததாக ஆக்குகிறது என்றும் பயனர்கள் விரும்புவது இதுதான் என்றும் கூகுள் கூறுகிறது. ஆனால் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்று 2,200க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுவான நியூஸ்/மீடியா அலையன்ஸின் தலைவர் டேனியல் காஃபி கூறுகிறார். (பிபிசி நியூஸ்/மீடியா அலையன்ஸில் உறுப்பினராக உள்ளது.) "இதுதான் திருட்டுக்கான வரையறை. செயற்கை நுண்ணறிவு பதில்கள், அசல் தயாரிப்புக்கு மாற்றாகும். அவர்கள் எங்களுடைய உள்ளடக்கத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று காஃபி கூறுகிறார். "விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் சார்பாக இந்த கூகுள் இந்த வணிக முடிவை எடுக்க முடியாது." வெளியீட்டாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் பிரச்னை என்று காஃபி உள்படப் பலரும் கூறுகின்றனர். நீதிமன்ற வழக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட உள் ஆவணங்கள், கூகுள் அதன் விதிகளை "சத்தமின்றிப் புதுப்பிக்க" தேர்வு செய்திருப்பதைக் காட்டுகின்றன. எனவே கூகுள் 'தேடலில்(search)' பங்கேற்பது என்பது இணையதளங்கள் தானாகவே AI க்காக உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு ஒப்புக் கொள்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டாளர்கள் விலகலாம் என்றாலும், அவர்கள் தேடல் முடிவுகளை முழுவதுமாக விலக்கினால் மட்டுமே அது முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 'இதுவே முடிவல்ல என நம்ப விரும்புகிறேன்' இந்த உள் ஆவணங்கள், நிறுவனத்தின் இறுதி முடிவெடுக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்காத ஆரம்ப விவாதங்களைக் காட்டுகின்றன என்றும், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கம் கூகுளில் கிடைக்கிறதா என்பதை எப்போதும் கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்றும் கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இணையதள உரிமையாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை AI மோட் மற்றும் AI ஓவர்வியூஸ் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்து விலக்கி வைக்க அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை கூகுள் வழங்குகிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். "AI பதில்கள் அசல் தயாரிப்புக்கு மாற்றாக உள்ளன. இதை நாம் ஒருபோதும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் ஒரு வணிக முன்மொழிவாக நான் பார்க்கவில்லை," என்கிறார் காஃபி. கடந்த ஓர் ஆண்டாக, தேடுபொறி மற்றும் டிஜிட்டல் விளம்பர வணிகங்களில் கூகுள் ஒன்றல்ல, இரண்டு சட்டவிரோத தனியுரிமையை வைத்திருப்பதாக அமெரிக்க நீதிமன்றங்கள் கண்டறிந்துள்ளன. நீதிமன்றங்கள் இன்னும் விளைவுகளைத் தீர்மானித்து வருகின்றன. மேலும் இணையத்தின் மீதான கூகுளின் கட்டுப்பாட்டிற்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கான சாத்தியங்களும் உள்ளன. நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கூகுள் உடன்படவில்லை என்றும் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கிறது என்றும், நிறுவனத்தை உடைப்பதற்கான திட்டங்கள் நுகர்வோருக்கு மோசமானதாக இருக்கும் என்றும், புத்தாக்கங்களை மந்தப்படுத்தும் என்றும் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால் கூகுளின் பிடி ஏற்கெனவே சிறிய வழிகளில் தளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நீதிமன்ற விசாரணைகளின்போது, சஃபாரியில் கூகுள் தேடல்கள் 22 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதாக ஆப்பிள் நிர்வாகி எடி கியூ கூறினார். இதற்குக் காரணம் மக்கள் AI சாட்பாட்களை பயன்படுத்துவதே. ஆப்பிள் சாதனங்கள் உள்பட ஒட்டுமொத்த 'வினவல் வளர்ச்சியை' நிறுவனம் தொடர்ந்து காண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றில் கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 72% அமெரிக்கர்கள் தேடுபொறிகளுக்குப் பதிலாக சில நேரங்களில் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். "நீங்களே சர்ச் செய்யும்போது அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்," என iPullRank என்ற SEO நிறுவனத்தின் நிறுவனர் மைக் கிங் கூறுகிறார். "ஆனால் பலர் தங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். ஆனால் AI இணைப்பு என்பது குறிப்பிடத்தக்க செலவுகளுடன் வரக்கூடும். "இது வடிகட்டி குமிழ்களை அதிகமாக உருவாக்கப் போகிறது. ஏனென்றால் கூகுள் உங்கள் வினாவுடன் தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விளக்கத்தைக் கொடுக்கிறது," என்று கிங் கூறுகிறார். AI சாட்பாட்கள் பற்றிய ஆராய்ச்சி, அவை எதிரொலி அறைகளாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளன என்பதையும் குறிக்கிறது. "நீங்கள் எதிர்பார்க்கும் தகவல் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்," என்று கிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES AI பதில்களின் தரம் குறித்த அடிப்படைக் கவலைகள் உள்ளதையும் மறுக்க முடியாது. AI ஹாலிசினேஷன்ஸ், அவற்றின் தொழில்நுட்பத் திறன்கள் மேம்படும்போது மோசமடைந்து வருவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுந்தர் பிச்சைகூட ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் தொழில்நுட்பத்தின் "ஓர் உள்ளார்ந்த அம்சம்" ஹாலிசினேஷன்ஸ் என்று கூறினார். கூகுள் AI பதில்களை நிலைநிறுத்த அதன் பாரம்பரிய தேடல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும், மேலும் அதன் துல்லியத்தன்மை மேம்பட்டு வருவதாகவும் கூகுள் கூறுகிறது. கூகுளின் AI தேடல் பதில்களில் பெரும்பாலானவை உண்மையானவை என்றும், அவற்றின் துல்லியம், மற்ற தேடல் அம்சங்களுடன் இணையாக இருப்பதாகவும் பிபிசியுடனான நேர்காணலில் கூகுள் தெரிவித்துள்ளது. இருப்பினும், கூகுளின் AI ஓவர்வியூஸ், மக்களை கற்களைச் சாப்பிடவும் பீட்சா ரெசிபிகளில் பசையைச் சேர்க்கவும் அறிவுறுத்திய ஆரம்பக்கால சறுக்கல்கள் இருந்த காலங்களை மனதில் இருந்து அகற்றிவிட முடியாது. பிழைகளைச் சரிசெய்ய கூகுள் தீவிரமாக முயன்றாலும், 2025ஆம் ஆண்டில் ஒரு சமீபத்திய வியாழக்கிழமையில், AI ஓவர்வியூஸ், இது வியாழக்கிழமை அல்ல, இது 2025 அல்ல என்று கூறியதையும் சுலபமாக மறந்துவிட முடியாது. கணினி விஞ்ஞானிகள் "சாட் சாம்பர்ஸ் (chat chambers)" என்று உருவாக்கிய தவறான தகவல்களைக் கொண்ட அமைப்பையும்கூட ஏஐ ஓவர்வியூஸ் உருவாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கூகுள் AI, இணையத்தில் நீங்கள் காண்பதை மட்டுப்படுத்தாமல் உங்கள் ஆர்வங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். இணையத்தை உருவாக்கி அதைச் சார்ந்து இருப்பவர்களுக்கு இயந்திர இணையதளத்தின் அச்சுறுத்தல் கவலையளிக்கும் அதே வேளையில், கூகுள் ஒரு வித்தியாசமான, உற்சாகமான படத்தை வரைகிறது. "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணையதளங்களுக்கு போக்குவரத்தை அதிகமாக அனுப்புவதை நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் உறுதிபூண்டுள்ள தயாரிப்பின் திசை அதுதான் என்று நான் நினைக்கிறேன்," என்று சுந்தர் பிச்சை டீகோடர் நேர்காணலில் தெரிவித்தார். கூகுள் பிபிசியிடம் பேசியபோது, "தேடலை மேம்படுத்துவது, பயனர்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை உருவாக்குவது மற்றும் இறுதியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்குமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவையே தனது தொலைநோக்குப் பார்வை என்று கூறுகிறது, இருப்பினும் இவை சாத்தியமான வெவ்வேறு வழிகளில்" என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES "என்ன நடக்கப் போகிறது என்று நான் கணிக்கப் போவதில்லை. ஏனென்றால், நிச்சயமாக, எதிர்காலம் பன்முகத்தன்மை கொண்டது," என்கிறார் நீண்டகால தொழில்நுட்ப ஆதரவாளரும் ஆன்லைன் தளங்களின் சிதைவு குறித்து வரவுள்ள என்ஷிட்டிஃபிகேஷன் புத்தகத்தின் எழுத்தாளருமான கோரி டாக்டரோவ். "ஆனால், தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கான அல்லது எனது தகவல்களைக் கண்டறிவதற்கான ஒரு வழியாக கூகுளை மதிப்பவராக நான் இன்னும் இருந்திருந்தால், இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுவேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இணைய பயனர்கள் தாங்கள் காண விரும்பும் மாற்றங்களுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தருணமாகவும் இது இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "இந்த நெருக்கடியை நாம் வீணாக்கி விடக்கூடாது" என்கிறார் டாக்டரோவ். "மக்களை மிகவும் கோபப்படுத்தும் ஒன்றை கூகுள் செய்ய உள்ளது. எனது முதல் எண்ணம் 'சரி, அருமை. அந்தக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதுதான்.' கூட்டணியை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்" எனக் குறிப்பிடுகிறார் அவர். சிலர் கூகுளின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் வரையோ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் செயல்படுவதற்காகவோ காத்திருக்கவில்லை. கிளவுட்ஃப்ளேரின் மேத்யூ பிரின்ஸ், நேரடித் தலையீட்டை ஆதரிக்கிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தாவிட்டால், கிளவுட்ஃப்ளேர் மற்றும் அனைத்து அளவிலான வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பும் கூட்டாக இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை நகல் எடுப்பவர்களைத் தடுப்பதே அவரது திட்டம். இது "ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டவற்றின் விதிமுறைகளை மீட்டமைக்க" மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கின் மாதிரிகளுக்கு எரிபொருளாக இருக்கும் தங்கள் தரவுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த கட்டாயப்படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சி. (இந்தத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை). இது,"எனது மிகவும் நேர்மறையான அணுகுமுறை, மனிதர்கள் இலவசமாக உள்ளடக்கத்தை பெறலாம், தானியங்கு நிரலிகள் உள்ளடக்கத்திற்காகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் என் கோரிக்கை" என்று பிரின்ஸ் கூறுகிறார். புதியதும் சிறப்பானதுமான ஒன்று, தற்போது இருப்பதற்கு மாற்றாக வந்தாலும்கூட, இழந்ததைப் பற்றிய ஏக்கத்தை உணராமல் இருப்பது கடினம் என்று நவரோ கூறுகிறார். "அந்த இணையதளம் என்பது ஒரு சில மக்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களை அடையும்போதுதான் நடக்கும்," என்று அவர் கூறுகிறார். தனது சிறு வயதில், ராக் இசைக் குழுவான குயினுக்காக தாம் உருவாக்கிய ஸ்பானிஷ் மொழி ரசிகர் தளத்தைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். "நான் குயின் இசைக்குழுவை இணையத்தில் தேடினேன். ஆனால் அந்த நேரத்தில் இசைக் குழுவைப் பற்றிய ஸ்பானிஷ் மொழி உள்ளடக்கம் அதிகமாக இல்லை. அதனால் நான் அதை உருவாக்கத் தொடங்கினேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது அதைச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அதை செய்ய முடிந்தது." "இதுவே முடிவல்ல என்று நம்ப விரும்புகிறேன்." *தாமஸ் ஜெர்மைன் பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர். அவர் கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு, தனியுரிமை மற்றும் இணைய கலாசாரத்தின் அம்சங்கள் குறித்து எழுதி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql2qwp622wo

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 05:32 PM வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். புதிய வழிகாட்டுதலின் கீழ், F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வகைப்பாடுகளில் உள்ள அனைத்து மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விண்ணப்பதாரர்களின் ஒன்லைன் இருப்பு உட்பட விரிவான மற்றும் முழுமையான சோதனையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த சோதனையை எளிதாக்க, F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வீசாக்களுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை "பொதுமக்கள்" என்று சரிசெய்ய அறிவுறுத்தப்படுவார்கள். எங்கள் வெளிநாட்டு இடுகைகள் விரைவில் F, M மற்றும் J குடியேறியவர்கள் அல்லாத வீசா விண்ணப்பங்களை திட்டமிடுவதை மீண்டும் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் சந்திப்பு கிடைப்பதற்காக தொடர்புடைய தூதரகம் அல்லது தூதரக வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீசா தீர்ப்பும் ஒரு தேசிய பாதுகாப்பு முடிவாகும். அமெரிக்காவிற்குள் நுழைய விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்கர்களுக்கும் நமது தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதையும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கோரப்படும் வீசாவிற்கான தங்கள் தகுதியை நம்பகத்தன்மையுடன் நிறுவுவதையும், அவர்கள் தங்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதையும் உறுதிசெய்ய, வீசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். https://www.virakesari.lk/article/217927

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று நாங்களும் அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - ஏஞ்சலோ மெத்யூஸ் Published By: VISHNU 17 JUN, 2025 | 01:25 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும். 'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும். நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 16 வருடங்கள் இலங்கைக்காக மூவகை கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்த நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதற்கான காரணம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 'கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒரு சுழற்சியாகும். நாங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறோம். கடந்த கால வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். நாங்கள் எல்லோரும் இளம் வீரர்களாக அணியில இணைந்து சிரேஷ்ட வீரர்களாக வெளியேறுகிறோம். என்னைப்பொறுத்த மட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெறுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. 'கடந்த ஏழு, எட்டு போட்டிகளில் எனது திறமை நான் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. எனவே அணிக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. நான் எமது அணியின் எதிர்கால அட்டவணையைப் பார்த்தபோது நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இல்லை. (பங்களாதேஷுடனான தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னரே அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது) இது துரதிர்ஷ்டவசமாகும். எனவே இதுதான் இளையவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க சரியான தருணம் என எண்ணினேன். ஏனேனில் பல திறமையான இளம் வீரர்கள் சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். தொடர்ந்து பதிலளித்த அவர், 'சனத் பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர், தரங்கவும் அவரது அணியினரும் தேர்வாளர்களாக வந்த பின்னர் தொடர்பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் எங்களோடு அடிக்கடி உரையாடுகிறார்கள்.. சிரேஷ்ட வீரர்களோ அல்லது கனிஷ்ட வீரர்களோ அவர்கள் சரியானவற்றை கலந்துரையாடுகிறார்கள்.. அதுதான் முக்கியமானது. அணியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொடர்பாடல்கள் பிரதானமானது. அதன் பின்னரே ஆற்றல் வெளிவரும். அதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டோம். எங்களுக்கு டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாட கிட்டத்தட்ட வாய்ப்பிருந்தது. அத்துடன் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆகவே தொடர்பாடல் மிகத் தெளிவாக இருந்ததுடன் சூழ்நிலையும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் ஆற்றல்களும் மேலும் மேலும் சிறப்பாக இருந்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றுகின்றனர். அத்துடன் திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களது தரமும் உயர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாட எண்ணியுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 'ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றது. அப் போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இலங்கை சம்பியனாகவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், அதற்கு எனது உடற்தகுதி அனுமதிக்கவேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்கவுள்ளேன். கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு எனது திறமையை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை உடற்தகுதியையும் பேணவுள்ளேன். அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்' என பதிலளித்தார். இலங்கை அணி வீரராக நினைவிலிருந்து நீங்காத தருணங்கள் பற்றி கேட்டபோது, 'எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுப் பார்க்கும்போது ஒவ்வொரு விரரரையும் போன்று எனக்கும் நினைவிலிருந்து நீங்காத எத்தனையோ தருணங்கள் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் 2010இல் நாங்கள் ஈட்டிய வெற்றி - (ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் - மாலிங்க 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 132 ஓட்டங்களின் உதவியுடன் ஈட்டிய ஒரு விக்கெட் வெற்றி), இங்கிலாந்துக்கு எதிராக முதல் தடவையாக அந் நாட்டில் நாங்கள் ஈட்டிய (ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமையில்) முதலாவது டெஸ்ட் வெற்றி, 2016இல் அவஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு ஈட்டிய 3 - 0 தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றிகளாகும். அத்துடன் உலகக் கிண்ணத்தை மறக்க முடியாது. 2014 ரி20 உலகக் கிண்ணம், 2014 ஆசிய கிண்ணம் ஆகிய வெற்றிகளையும் ஈட்டினோம். வெற்றியீட்டிய இந்த அணிகளில் எல்லாம் நான் பங்காற்றியதையிட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்' என்றார். மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் போன்ற கசப்பான நிகழ்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான 2021 உலகக் கிண்ணப் போட்டியில் டைம் அவுட் ஆன விதம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? 'அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால், அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள். அவர்களுக்கு எதிராக எனது மனதில் எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் நலமாகவே இருக்கின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் நாங்கள் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால், அவர்களுக்கு எதிராக எனது மனதில் இதுவும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. வெறுப்பு என்பது கிரிக்கெட்டில் மோசமான வார்த்தை. நாங்கள் அனைவரும் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடுகிறோம். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள்' என ஒரு சிறந்த வீரருக்கே உரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பதிலளித்தார் மெத்யூஸ். இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அணித் தலைவர் பதவியை நீங்கள் துறந்ததற்கான காரணம் என்ன? 'ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் சந்தித்த தோல்வியை இலங்கை அணியினாலும் முழு இலங்கையினாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனை அடுத்து நான் அணித் தலைவர் பதவியலிருந்து விலகிக்கொண்டேன். நாங்கள் வீழ்ச்சி அடைந்த நேரத்திலேயே அணித் தலைவர் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. அந்தத் தோல்வியினால் நான் பெரும் சோகம் அடைந்தேன். அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வெண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் அணித் தலைவர் பதியிலிருந்து விலக நேரிட்டது. ஒரு வருடம் கழித்து தலைமைப் பதவியைப் பொறுப்பெற்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். '2008இலிருந்து இன்றுவரை நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன், எதிர்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவற்றை நான் சமாளித்துக்கொண்டேன். ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும் சவால்கள் வந்தன. உபாதைகளுக்குள்ளானேன். அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வந்தேன். நான் எப்போதும் சரியானதை செய்ய முயற்சித்தேன் என கருதுகிறேன். வீரர்கள் என்ற வகையில் தலைவர் என்ற வகையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் தவறாகி விடுவதுண்டு. விளையாட்டில் இவ்வாறு இடம்பெறுவது சகஜம். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும் போது நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான தீர்மானங்களையே எடுத்தேன் என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். அத்துடன் அணிக்கான எனது நூற்றுக்கு 100 வீத பங்களிப்பை வழங்கினேன் என நம்புகிறேன்' என பதிலளித்தார் மெத்யூஸ். புனித சூயைப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடி இருந்தார். பாடசாலையை விட்டு விலகிய பின்னர் கலம்போ கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸ் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அக் கழகத்திற்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது கிரிக்கெட் வளர்ச்சியில் இக் கழகமும் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர், '2007ஆம் ஆண்டு மாகாண கிரிக்கெட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதால் 2008இல் இலங்கை ஏ அணிக்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். தென் ஆபிரிக்காவுக்கான அந்த கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு சதங்களை அடித்தேன். அதன் பின்னர் இலங்கை அணியில் நான் இணைக்கப்பட்டேன். அப்போது தொலைக்காட்சி திரைகளில் பார்த்து இரசித்த சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல, சங்கக்கார ஆகிய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உடைமாற்று அறையில் (dressing room) பார்த்தபோது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 'ஆனால், அந்த சூழ்நிலையை எனது சொந்த வீடு போல் ஆக்கி எனது மன அழுத்தத்தை குறைத்ததுடன் உணர்ச்சிகளையும் இலகுவாக்கிய டி.எம். டில்ஷான், திலான் சமரவீர உட்பட அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது கன்னி முயற்சியில் நான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் தன்னம்பிக்கையும் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதன் பின்னர் நான் பின்னோக்கி நகரவில்லை. மேடு பள்ளங்களை சந்தித்தேன். தொல்லைகளும் கஷ்டங்களும் வந்தன. அவை அனைத்தையும் கடந்து வந்ததைப் பார்க்கும்போது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் அவர். ஊடக சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ், தன்னை வளர்த்து ஆளாக்கி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தனது பெற்றோரே தனது ஹீரோக்கள் என கூறினார். 'நான் எத்தனையோ பேருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையை எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல தடவைகள் உபாதைக்குள்ளானேன். ஆனால், இறைவனின் ஆசியால் என்னால் 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்ய முடிந்தது. இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க விசேட பயணமாகும். இன்றுவரை நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களை எனக்காக அர்ப்பணித்த எனது பெற்றோர், எனது உடன்பிறப்புகள், எனது மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு நான் நன்றிகூறவேண்டும். நான் அழுத்தங்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவற்றிலிருந்து மீண்டு வர எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அது இலகுவானதல்ல. அவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய எனது பெற்றோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் எனது ஹீரோக்கள். 'எனது நெருங்கிய நண்பர்கள், பிரச்சினைகள், சிரமங்களின்போது எனக்காக என்னோடு இருந்தவர்கள், எனது முன்னாள், சமகால பயிற்றுநர்கள், எனக்கு கல்வி தந்து என்னை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கச் செய்த புனித சூசையப்பர் கல்லூரி, கல்லூரியின் முன்னாள், சமகால முதல்வர்கள் (அதிபர்கள்), முன்னாள் மற்றும் சமகால ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் சமகால பயிற்றுநர்கள் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்னேன். அத்துடன் எனது கழகம் கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நன்றி கூறவேண்டும்' என மெத்யூஸ் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான, 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த காலி சர்வதேச மைதானத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது விசேட அம்சமாகும். https://www.virakesari.lk/article/217668

'14 மணிநேர வேலை, உடல் வலிக்கு ஊசி' - திருவள்ளூரில் மீட்கப்பட்ட ஒடிசா தொழிலாளர்கள்

1 month 2 weeks ago
பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர். ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி? பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை துறை அதிகாரிகள் ஒடிசா மாநிலம், பாலாங்கீர் (Balangir) மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து சுமார் 80 பேர், கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். அவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். "செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்குத் தலா 35 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செங்கல் சூளை உரிமையாளர் அளித்துள்ளார்" என்கிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். "சொந்த ஊரில் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள்தான் விவசாய வேலைகள் இருக்கும். மற்ற நாட்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்தில் கஷ்டம் அதிகரித்ததால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தோம்" எனக் கூறுகிறார், ஒடிசாவின் சலேபாடி கிராமத்தைச் சேர்ந்த ஷிபா மாலிக். பாலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய வருவது வாடிக்கையாக உள்ளது. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றியவர்கள் தங்கியிருந்த இடம் 'ஆறு மாதங்களாக அவஸ்தை' - "கடந்த ஆறு மாதங்களாக குடிநீர், உணவு, இருப்பிடம் என முறையான அடிப்படை வசதிகள் எதுவும் நாங்கள் வேலை பார்த்த சூளையில் செய்து தரப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் ஷிபா மாலிக். ஷிபாவிடம் ஒடியா மொழியில் உரையாடுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சகில் எக்கா என்பவர் பிபிசி தமிழுக்கு உதவி செய்தார். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணிநேரம் தங்களிடம் வேலை வாங்கப்பட்டதாகக் கூறும் ஷிபா மாலிக், "நாங்கள் குடும்பமாக வந்து வேலை செய்தோம். வாரம் முழுக்க செங்கல்லை அறுத்தாலும் ரூ. 500 தான் உரிமையாளர் தருவார். எதிர்த்துக் கேள்வி கேட்டால், அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுவார்," என்கிறார். தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் இல்லாததால், சூளை உரிமையாளரிடம் சில தொழிலாளர்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் வாரத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் முன்பணத்தைக் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். "மீதமுள்ள மூன்று வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு பணம் செலுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த தகவலை சூளையில் வேலை பார்த்த பெண்ணின் மகன், ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," எனக் கூறுகிறார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன். இதன்பிறகு ஜூன் 17 அன்று சிவன்வாயலில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, வலி நிவாரணிகளாக போலி மருத்துவரால் வழங்கப்பட்ட மருந்துகள் 'உடல் வலியைப் போக்குவதற்கு ஊசி' "குடும்பமாக தங்குவதற்கு சிறிய குடிசை மாதிரி அமைத்துத் தந்துள்ளனர். அதன் உள்ளே நுழைவதற்கு 2 அடி உயரம்தான் உள்ளது. மின்வசதி உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை" எனக் கூறுகிறார், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பேசிய அவர், "14 மணிநேரத்துக்கும் மேலாக வேலை பார்த்ததால் அவர்களுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊசி போட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதற்காக வாரம் ஒருமுறை போலி மருத்துவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்," எனக் கூறுகிறார். போலி மருத்துவர் மூலம் மருந்துகளைக் கையாண்டதாக சூளை உரிமையாளர் மீது வெங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பயன்படுத்திய ஊசிகள், ஏராளமான மருந்து அட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர். மருந்துகளின் தன்மை குறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தியிடம் கேட்டபோது, "வலி நிவாரணத்துக்கான மருந்துகளாக இவை உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார். "நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் செங்கற்களை அறுப்போம். ஆனால், மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டதால், அது உணவு செலவுக்கே சரியாக இருக்கும். ஊருக்குள் சென்று ரேசன் அரிசியை வாங்கி பயன்படுத்துவோம்" எனக் கூறுகிறார் ஷிபா மாலிக். "ஆறு மாதங்களாக வேலை பார்த்தாலும் சூளை உரிமையாளரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,IRCDS 'ஒடிசா தொழிலாளர்களை குறிவைக்கும் முகவர்கள்' "திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிமம் பெறாத சூளைகளும் உள்ளன. ஒடிசாவில் வறுமையால் வாடும் மக்களை குறிவைத்து சில முகவர்கள் இயங்கி வருகின்றனர்" எனக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் (Integrated rural community development society) ஒருங்கிணைப்பாளரான பழனி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் முகவர் மூலமாக வந்துள்ளனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் சூளைக்குச் செல்கின்றனர். அதிகாலை வரை வேலை பார்ப்பார்கள். பகலில் கற்கள் காய்வதற்கு எளிதாக இருக்கும். சிலர் மாலை 4 மணிக்கு சென்றுவிட்டு 12 மணி வரையில் வேலை பார்ப்பார்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தாலும் ஆய்வு நடத்தும்போது, தங்களின் உரிமையாளர் குறித்து தவறாக எதுவும் கூற மாட்டார்கள். அதனால் மீட்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்," எனக் கூறுகிறார் ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் களப் பணியாளர் சூர்யா நடராஜன். ஒருவர் கொத்தடிமை எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார். "மீட்கப்பட்ட தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு உடனே முப்பதாயிரம் ரூபாயை அரசு வரவு வைக்கிறது. வழக்கு நடக்கும் காலங்களில் மீதமுள்ள தொகையை வரவு வைப்பது வழக்கம்" என்கிறார் சூர்யா நடராஜன். செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஷிபா மாலிக், தீபாஞ்சலி மாலிக், சாய்ரேந்திரி நாக், பகாரட் நாக், ஹடுபரிகா, ஜென்ஹி பரிஹா மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவே ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். '2 மாதங்களில் மூன்றாவது சம்பவம்' செங்கல் சூளையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் உரிமம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஊழியர்களுக்கான வருகைப் பதிவேடு, ஊதிய பதிவேடு ஆகியவற்றை பராமரிக்கவில்லை என்பதும் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்தனர். சூளை உரிமையாளர் துளசி மீது வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை உரிமையாளர் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன், "முன்தொகை கொடுத்து தொழிலாளர்களைக் கூட்டி வருவது என்பது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி அதிக நேரம் வேலை பார்க்க வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார். "ஆனால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. தற்போது சூளையின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார்" என, ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று நிகழ்வுகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார். "கொத்தடிமைகளாக யாரையும் பயன்படுத்த மாட்டோம் என்பதை அவர்களிடம் எழுதி வாங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். கொத்தடிமைகளாக மக்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976-ன் கீழ், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 வரை அபராதமும் விதிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wpn9rqg12o
Checked
Sun, 08/03/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed