புதிய பதிவுகள்2

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

1 month 1 week ago
இதன் உள்நோக்கம் இன்னமும் வெளிவரவில்லை. பொறுத்திருந்து பார்ப் போம்.

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

1 month 1 week ago
இது ஒரு போருக்கான அமெரிக்காவின் தயாரிப்பாக நிச்சயமாக இல்லை என கருதுகிறேன், அமெரிக்க பொருளாதாரம் ஒரு பெரியளவிலான போர் ஒன்றை இரஸ்சியாவிற்கெதிராக ஆரம்பிக்காது, ஆனால் என்றுமில்லாதவாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரஸ்சிய ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் அத்துமீறுவதாக கூறுகின்ற செயல்பாடு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு போருக்காக தயாராகி வருவதாக காட்டுகின்றன. முழு அளவிலான போர் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்புடைய சூழ்நிலை ஐரோப்பாவிலும் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய அறிக்கைகள் கடுமையாக இருக்கிறது, ஐரோப்பிய ஒன்றியம் தற்போதய உக்கிரேன் இரஸ்சிய போரில் ஏதேனும் வகையில் தலையீடு செய்யலாம். சில வேளை அமெரிக்க பொருளாதார அழுத்தத்திற்கு ஈடு கொடுக்கும் முகமாக தேவையற்ற உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

1 month 1 week ago
மேற்குலகை அரவணைத்து நடந்தால் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவுத்துப் போட மறுத்தால் ஒரேஒரு அறிக்கையில் எவருமே போகாமல் பண்ணி விடுவார்கள்.

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

1 month 1 week ago
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிகாரிகள் பெருமளவில் பணிநீக்கம் செய்வது வரை பல கோட்பாடுகளை அவர்கள் கேள்விப்பட்டதாக ஒரு வட்டாரம் கூறியது, ஆனால் இவ்வளவு மூத்த இராணுவ அதிகாரிகள் திடீரென கூட்டப்பட்டது ஏன் என்பது மிகவும் அசாதாரணமானது. "இது பொது ஸ்க்விட் விளையாட்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது," என்று ஒரு அதிகாரி நகைச்சுவையாகக் கூறினார். ஒரே நேரத்தில் இவ்வளவு உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பது குறித்து சில அதிகாரிகள் பாதுகாப்பு கவலைகளையும் தெரிவித்தனர். ஹெக்ஸெத் "ஒரு பெரிய புதிய இராணுவ பிரச்சாரத்தை அல்லது இராணுவ கட்டளை கட்டமைப்பின் முழுமையான மாற்றத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தால், இதற்கு ஒரு நல்ல காரணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று காங்கிரஸ் உதவியாளர் ஒருவர் CNN இடம் கூறினார். வாஷிங்டன் போஸ்ட் முதலில் கூட்டத்தின் செய்தியை வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்டது. பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், ஹெக்ஸெத் "அடுத்த வார தொடக்கத்தில் தனது மூத்த இராணுவத் தலைவர்களை உரையாற்றுவார்" என்பதை உறுதிப்படுத்தினார். கூட்டத்தின் நோக்கம் அல்லது இந்த உத்தரவு இராணுவத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் கொடி அதிகாரிகளுக்கும் உள்ளதா என்பது குறித்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார், "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சந்திக்க வருவது நன்றாக இல்லையா?" https://edition.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டாவது தவணையில் யாருடனாவது போர் செய்து முத்திரை பதிப்பதையே விரும்புவர். இப்போதுள்ள போர்ச் சூழலில் ரம்பின் கை முந்தப் போகிறதா?

முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது குற்றச்சாட்டு.

1 month 1 week ago
முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும். ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். “அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார். தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் நடவடிக்கைகளைத் தடுத்ததாகவும் கோமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Former FBI Director James Comey has been indicted by a federal grand jury, an extraordinary escalation in President Donald Trump’s effort to prosecute his political enemies. Comey, a longtime adversary of the president, is now the first senior government official to face federal charges in one of Trump’s largest grievances: the 2016 investigation into whether his first presidential campaign colluded with Russia. “JUSTICE IN AMERICA! One of the worst human beings this Country has ever been exposed to is James Comey, the former Corrupt Head of the FBI,” Trump wrote in a Truth Social post. Comey has been charged with giving false statements and obstruction of a congressional proceeding, and he could face up to five years in prison if convicted, the Justice Department said in a statement. https://www.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
ராமசெயம் கடைந்தெடுத்த காடை கும்பல் தலைவன் ரியல் எஸ்டேட் மாபியா . குறுநில இளவரசன் பெண் பொறுக்கி ,ரோட்டில் கண்ணுக்கு அழகாக தெரிந்தால் யாரையும் விட்டு வைப்பதில்லை. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ அப்படிப்பட்ட இளவரசனுக்கு ஒரு இட பிரச்சனையில் இடத்தின் மீதும் இடத்தின் ஓனர் மகளின் மீதும் ஒருங்கே ஆசை வர பலவந்தமாக அடைந்துவிட்டர் இரண்டையும் நெஞ்சில் கனன்ற நெருப்பை சிறிது காலம் பொறுமை காத்து தீவிரமாக களத்தில் இறங்கினார் அந்த சாதாரண மிடில் கிளாஸ் மனிதர் .இங்கிருந்து ஆட்களை கொல்ல வைத்தால் மாட்டுவோம் என்று இலங்கையில் இருந்து ஆட்களை வரவைத்தார்.. அதிலும் வித்தியாசமான கொலை செய்யுமாறு பணித்தார். அதென்ன வித்தியாசமான கொலை (கடைசியில்) ஒருவழியா கூலிக்கு கொலை செய்து முடித்தாகி விட்டது. இலங்கைக்கும் படகு ஏறி தப்பித்தும் போய்விட்டார்கள் கிடைத்த ஒரே ஒரு துப்பு அவர்கள் பயன்படுத்திய மாருதி வான் மற்றும் சமீபத்திய பத்திர பதிவுகள் நம்ம காவல்துறையும் ஸ்காட்லாண்டுக்கு ஈடாச்சே ? விரைவாகவே அந்த குற்றவாளியை நெருங்கினர் இங்கதான் ருவிஸ்ற் இருக்கு அப்போதையை திருச்சி ஏ.சி (பெயர் நினைவில் இல்லை. ) கொலைக்கான காரணத்தை அறிந்து வெகுவாக அவரை பாராட்டி விட்டு எஞ்சிய சாட்சியங்களை அழித்துவிட்டு சென்றார் ( விக்ரமின் சாமி மாதிரி நல்ல போலீஸ் போல் இருக்கு) போலீஸ் சாட்சிய அழித்தால் ? சிஐடி அல்ல சிபிஐ , தங்கள் அபிமான ரோ, இண்டர் போல் வந்தாலும் துப்பு துலக்க முடியாது. அதுதான் இப்ப நடக்கிறது இந்த வழக்கு கலியுகம் முடியும் வரை நடக்கும் டிஸ்கி ராம ஜெயம் சடலம் கண்டெடுக்க பட்ட போது ஏதோ மர்ம பொருள் வாயில் திணித்து கொலை செய்தார்கள் அது என்ன மர்ம பொருள் ? பேரை போடுங்க.. ஊடக தர்மமா..? எந்த உறுப்பு தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோ அதை வெட்டி அவன் வாயிலேயே வைக்குமாறு கட்டளை இட்டார் அன்பு தந்தை அதுதான் டாஸ்க் டிஸ்கிக்கு டிஸ்கி தலைப்பை விட்டு விலகி செல்கிறோம் என நினைக்கிறேன் தோழர் வேறு திரியில் இது பற்றி விவாதிப்போம்..

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

1 month 1 week ago
ஆட்சிக்கு வந்தவுடன் இனப்பிரச்சனையை தீர்க்க முற்பட்டால் (அதாவது ஒரு கதைக்கு தமிழர் கேட்கும் உரிமைகளை கொடுப்பது) மகிந்த,கோத்தபாய ரணில் போன்ற இனவாத கும்பல் சும்மா இருப்பார்களா? இதுதான் சந்தர்ப்பம் என ஆட்சியையே கவிழ்த்து விடுவார்கள் அல்லவா? இந்த கருத்தை நான் எழுதியதால் நீங்கள் என்னை அனுர ஆதரவாளன் என நினைப்பீர்கள் என எண்ணுகின்றேன்.😂

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

1 month 1 week ago
விவசாயம் செய்தவர்களுக்கு தெரியும் குரங்குகளின் அழிப்புகளும் ஆக்கினைகளும்.....இதுகளை வெருட்டுறதுக்கெண்டே அனுமான் வெடி கொழுத்திய அனுபவங்கள் எக்கச்சக்கம். நாள் செல்ல செல்ல மூலைவெடிக்கும் குரங்குகள் அசையவில்லை. எல்லாம் அதுகளுக்கு பழகி விட்டது.😂 கடைசியாக எடுத்த ஆயுதம் வெற்றியளித்தது.😎

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
இவ்வளவு நேரமும் நீங்கள் தலைப்பை விளங்காமல் வாதாடி உள்ளீர்கள் தோழர். இந்த திரியியிலோ வேறு எந்த திரியிலோ நான் எந்த தலைவரையும் ஒழுக்க சீலர் என வாதிடவில்லை. என் வாதம்…. ஒன்றே ஒன்றுதான் … இரு குடும்பபெண்கள்…. தாமாகவே பொதுவெளியில் முன் வந்து அப்படி எதுவும் நடக்கவில்லை + நான் கருணாநிதி மனைவி இல்லை என சொன்ன பின்னர் - அதை மீள மீள பரப்புவது - அந்த பெண்களின் மானத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடும் செயல்…. என்பது மட்டுமே.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
தலைவர் சொன்ன தமிழ்த்தேசியற்கும் இங்கு அரசியல் ஆதாயம் இல்லை சீமானுக்கும் அரசியல் ஆதாயம் இல்லை ஏதோ நாம் இங்கே கருத்தாடியதை பார்த்து படித்து தெளிந்து வாக்களிக்க போவது இல்லை.. காச வாங்கி கொண்டு எப்படியும் சுடாலின் அடுத்த முறை விடியல் தர போகிறார். நமக்குள் தர்க்கம் தலைவர்களது ஒழுக்கம் சார்ந்ததே..

டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

1 month 1 week ago
போலி கதைகள் சொல்லி தம் மக்களின் வாய்களை அடைத்து வைப்பதில் மேற்கத்தையவர்கள் வலு கெட்டிக்காரர்கள். ஆனால் இன்றைய சமூகம் கொஞ்சம் சுதாரிப்பதாக தெரிகின்றது. அதனால் தான் மாற்றுக்கருத்து கட்சிகள் இன்று முன்னிலையில் நிற்கின்றன.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர். எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது. ஜெ யிடம் வாய்ப்பே இல்லை. அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
நீங்கள் உண்மையில் தலைவர் சொன்ன தமிழ் தேசியத்தை பின் பற்றின், ஒரு பெண்ணின் மானத்தை ஈடு வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயலமாட்டீர்கள் தோழர். நீங்கள் சீமானியத்தின் ஆதரவாளன். அம்புலி மாமா இல்லைத்தானே?

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
நாதக இன்று 2009 வந்த கட்சி. சீமானை ஆராதிப்பவன் அல்ல தமிழ்தேசியத்திற்கு எனது வாக்கு சுடாலின் கதைகளை எல்லாம் 80s களின் இறுதியில் எங்கள் மாமா சொல்ல கேட்டு இருக்கிறன் என் கொலைய நீ கண்டு கொள்ளாதே உன் கொலைய நான் கண்டு கொள்ள மாட்டேன் அதுதான் ஒப்பந்தம்

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
எப்படி? உங்களை தாரா விடயத்தை மறுக்க நிர்பந்தித்தது போலவா தோழர்😂. ஏன் தோழர்? கே என் நேருவின் தம்பி இராமஜெயம் கொலை வழக்கு முடிவு என்ன தோழர்?

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
நாளைக்கு நீங்கள் என்னதான் இல்லை இல்லை என மறுத்தாலும், நயந்தாரா விடயம் உண்மைதான், தோழரை மிரட்டி பொய் சொல்ல வைத்துள்ளார்கள் என எழுதுவது போல் இருக்கிறது உங்கள் வாதம் 😂. முன்பே சொன்னது போல் கருணாநிதி மனைவி விடயம் ஒரு பைத்தியகாரத்தனமான கற்பனை. செய்திவாசிப்பவர் ஜெ க்கு மிக நெருக்கமானவர். கட்சியில் முன்னிலையில் இருந்தவர். இப்படி ஒரு விடயம் உண்மை எனில், அதை ஜெயிடம் முறையிட்டிருந்தால் - இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஸ்டாலினை ஆயுசுக்கும் களி தின்ன வைத்திருப்பார். கருணாநிதியையே கதற கதற இழுத்து ஜெயிலில் போட்டவர் இப்படி ஒரு வாய்ப்பை விடுவாரா? ஆகவே மிரட்டல் என்பது உங்கள் உருட்டல். சம்பந்த பட்ட பெண்ணே இல்லை என சொன்னபின், மிரட்டி இருப்பார்கள், உருட்டி இருப்பார்கள் என நீங்கள் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். உங்கள் அரசியல்…. ஒரு பெண்ணின் மானம் போனாலும் பரவாயில்லை நா த க விற்கு அதனால் அரசியல் ஆதாயம் வந்தால் போதும் என்பதே உங்கள் எண்ணம். அதனால்தான் ஜெ மீது திமுக சொத்து குவிப்பு வழக்கு போட்டு அவரை உள்ளே தள்ளினார்களா? அப்படியே ஆனாலும், அரசியல் காரணங்களுகாக அதையே மீள, மீள கிளறும் உங்களை போன்றோர் எவ்வளவு சாடிஸ்ட்? அப்போ அவர் மன நிம்மதியை குலைத்தாவது நீங்கள் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும்? நீங்கள் நினைப்பது போல் அவர் அப்படி பயந்து ஒதுங்கியதாக தெரியவில்லை. அவர் கணவரும் புரிந்துணர்வு உள்ளவராகவே தெரிகிறார். நீங்கள் அதிகம் 80களின் தமிழ் படங்கள் பார்த்த பாதிப்பில் உள்ளீர்கள் என படுகிறது😂.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
திமுக / அதிமுக இடையில் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிந்ததே.. ஏதோ ஜெ. அருகில் இருந்தால் யானை பலம் என்றெல்லாம் கிடையாது இரண்டாவது குடும்ப வாழ்வில் இறங்கிய பெண் கடந்த காலங்களை பற்றி பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட மாட்டார் என்பது காமுகர்களுக்கு எளிதாக வாய்ப்பாக மாறுகின்றது அல்லவா..

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

1 month 1 week ago
உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை written by admin September 25, 2025 பிரித்தானிய பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவியுள்ள கவர்ச்சிகரமான கடற்கரைகள், மலைப்பயண வாய்ப்புகள், பண்டைய இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாாிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன. இந்தத் தரவரிசை, ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. ஏனைய முக்கிய சுற்றுலா தலங்களாக ஸ்பெயினின் வலென்சியா, அமெரிக்காவின் நியூயோர்க், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா , ஹர்ஸகொவினா, ருமேனியாவின் டிமிசோரா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றுள்ளன. https://globaltamilnews.net/2025/220794/
Checked
Tue, 11/04/2025 - 23:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed