புதிய பதிவுகள்2

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

1 month 2 weeks ago
14 JUN, 2025 | 04:28 PM மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது. இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/217455

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

1 month 2 weeks ago
'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜூன் 2025, 14:30 GMT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. இது ஐசிசி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெல்லும் 2வது சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன் 1998ல் நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. இனியும் பதற்றத்தில் தோல்வியடையும் அணி அல்ல ஐசிசி பைனல், அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்க அணி பதற்றத்தில் வெற்றியை நழுவவிடுவார்கள் என்ற அவப்பெயர் கடந்த காலங்களி்ல் அந்த அணி மீது இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அது அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணியினர் மாற்றிவிட்டனர். தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் 27 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் அணி ஐசிசி அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்ததைத்தான் பார்த்திருந்தார்கள். ஆனால், இந்த இளம் வீரர்கள்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். கடைசியாக தென் ஆப்ரிக்க அணி 1998ம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. அதன்பின், 27 ஆண்டுகளாக பலமுறை ஐசிசி நடத்தும்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தென் ஆப்ரிக்க அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்திய அணியிடம் தோற்றது. ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருப்பின் பலனாக இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக வென்றது. இதுவரை நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தார்போல் 3வது அணியாக தென்ஆப்ரிக்கா சாம்பியனானது. மார்க்ரம் ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் எய்டன் மார்க்ரம் தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் (136) ஆகச்சிறந்த ஆட்டம் மற்றும் கேப்டன் பவுமாவின்(66) பொறுப்பான பேட்டிங் முக்கியக் காரணமாகும். முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம், 2வது இன்னிங்ஸில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐசிசி இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார். இதற்கு முன் கிளைவ் லாய்டு (1985), அரவிந்த டி சில்வா (1996) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி பைனலில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது மார்க்ரம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 282 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மார்க்ரம் 156 பந்துகளில் சதத்தையும், பவுமா அரைசதத்தையும் நிறைவு செய்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடன் களத்தில் இருந்து 4வது நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கேப்டன் பவுமா கூடுதலாக ஒரு ரன் சேர்த்து 66 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்க்ரமுக்கு ஒத்துழைத்து ஆடவே ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து பெடிங்ஹம் களமிறங்கி, மார்க்ரமுடன் சேர்ந்தார். இளம் வீரராக இருந்தாலும் பெடிங்ஹம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து அணியை மெல்ல வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் மார்க்ரம் (136) மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர். அடுத்து, வெர்னே களமிறங்கி, பெடிங்ஹமுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெடிஹாம் 21 ரன்களுடனும், வெர்னே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பெவிலியனிலும், டக்அவுட்டிலும் இருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கேசவ் மகராஜ், கேப்டன் பவுமா உள்பட பல வீரர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். திருப்புமுனை பந்துவீச்சாளர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கேப்டன் பவுமா, மார்க்ரமின் சதம் எந்த அளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததோ, அதே அளவுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ரபாடா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும், யான்சென் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதில் குறிப்பாக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் கடைசி 5 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர், அதேபோல 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை ஒருபோதும் தென் ஆப்ரிக்க அணி தவறவிடவில்லை. கேப்டனின் பொறுப்பான ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை என்ற சாதனையை பவுமா தக்க வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுடன் சேர்ந்து பார்ட்ன்ர்ஷிப் அமைத்து ஆடிய பவுமா வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். ஒரு கட்டத்தில் பவுமாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். இதனால் பவுமா ரிட்டயர்ஹர்ட் முறையில் பெவிலியன் வர வேண்டுமா என்ற விவாதம் வர்ணனையாளர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், முக்கியத்துவம் மிகுந்த இந்த ஆட்டத்தில் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து கொண்ட பவுமா, நேற்றைய ஆட்டம் முடியும் வரை தசைப்பிடிப்பு வலியுடன் மார்க்ரமுடன் இணைந்து பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமாக இருந்தார். கால் நூற்றாண்டு காத்திருப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது. 1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது. 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது. 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. கடின உழைப்பு, நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா அளித்த பேட்டியில் " எங்களுக்கு கடந்த இரு நாட்களும் சிறப்பானதாக இருந்தது, சில நேரங்களில் நாங்கள் தென் ஆப்ரிக்க என்று உணரவைத்தது. இந்த தொடருக்காக கடினமாக உழைத்தோம், தயாராகினோம், அதிகமான நம்பிக்கையுடனும், ஏராளமான சந்தேகங்களைச் சுமந்தும் வந்தோம். சிறப்பாக ஆடிய அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு இரு ஆகச்சிறந்த தருணம், அடுத்த இருநாட்களில் எங்களை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்கள். இந்த எழுச்சியைத்தான், உணர்ச்சியைத்தான் அணியினர் அனைவரும் எதிர்பார்த்தார்கள் விரும்பினார்கள். மார்க்ரமை அணிக்குள் கொண்டுவந்த போது அவரைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் அனைத்தையும் அவரின் ஆட்டம் நொறுக்கிவிட்டது. ரபாடாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் பலவாறு சிதறி இருந்தாலும், தேசமாக ஒன்றாக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம், இதை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் ஆடாத பயிற்சியாளர் தென் ஆப்ரிக்க அணியின் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் முக்கியக் காரணம். தென் ஆப்ரிக்க தேசிய அணியில் இடம் பெறாத, சர்வதேச போட்டியில் ஆடாத சுக்ரி கான்ராட் கடந்த 2023ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தென் ஆப்ரிக்க அணியில் ஏற்பட்ட மாற்றங்கள், வெற்றிகள் சாம்பியன்ஷிப் வரை கொண்டு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிக்கி கான்ராடின் மகன் சுக்ரி கான்ராட் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண அணிக்காக இளமைக் காலத்தில் ஆடிய சுக்ரி கான்ராட் 13 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கேப் கோப்ராஸ், கட்டெங், ஹைவீல்ட் லயன்ஸ் ஆகிய கவுன்டி அணிகளுக்குப் பயிற்சியாளராக சுக்ரி பணியாற்றியுள்ளார். உகாண்டா தேசிய அணிக்கு 2010-2011ல் பயிற்சியாளராகவும் சுக்ரி இருந்து அதன்பின் தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைமைப் பயிற்சியாளராக சுக்ரி நியமிக்கப்பட்டார். 2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அணியை தயார் செய்த சுக்ரி, கேப்டனாக இருந்த மார்க்ரமை சமீபத்தில் மாற்றிவிட்டு, டெம்பா பவுமாவை நியமிக்க பரிந்துரை செய்தார். அதற்கான பலனும் கிடைக்கவே முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தென் ஆப்ரிக்கா வென்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g6n5d19kjo

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

1 month 2 weeks ago
கிழக்கில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம்; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர 14 JUN, 2025 | 07:59 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் 'சரோஜா' திட்டத்தை ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்களே ஆகும். இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே தவறான நடத்தைக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது. அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பார் அல்லது தாய், தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு பிரச்சினை உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த 'சரோஜா' திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/217452

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கி கப்பல்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:37 PM (எம்.மனோசித்ரா) துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார். இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217436

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி

1 month 2 weeks ago
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம் Jun 14, 2025 - 15:46 - நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமான இன்று (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbw2zxqw01uqqpbshhecsnve

யாழ். பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கம் – அமைச்சர் சந்திரசேகர்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:55 PM யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார். இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/217464

தாக்குதல் அச்சுறுத்தல் - KKS பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு

1 month 2 weeks ago
வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
மினி முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் அதிரடியாக போட்டியை நடாத்திய கோசானுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

1 month 2 weeks ago
'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம். யார் இந்த டெம்பா பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. “இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.” இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா. டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன? 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர். இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான் 2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது. ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார். டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார். அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார். விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர். இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது. கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது. இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா. இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2gpdrd4po

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
பாகிஸ்தான் இஸ்ரேலுடனான உறவை துண்டித்ததுடன், ஈரானுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரான், பாகிஸ்தான் அண்டைய நாடுகள் எனும் வகையில் பார்க்கும்போது, அத்துடன் முஸ்லீம் நாடுகள் எனும் வகையில் ஒன்றிணையும்போது இது போரில் மாற்றத்தை கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் ஈரானும் ஆயுத வழங்கல்கள் வெளியில் இருந்து கிடைக்கும் என்றே தோன்றுகின்றது.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டுமே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொண்டு.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 2 weeks ago
இதோ உங்கள் வெற்றியாளர்கள். உலக டெஸ்ட் கிண்ணம் வென்ற தென்னாபிரிக்கா. அவர்களின் முதலாவது பெரிய கோப்பை. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது நடந்து விட்டது. வாழ்த்துகள் பசங்களா.
Checked
Sat, 08/02/2025 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed