1 month 1 week ago
எந்த நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று தெரியுமா? ஏற்கனவே இப்படியானவர்கள் விசா அவசியமில்லாத தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று "ஜோதியில்" கலந்து விட்ட உதாரணங்கள் இருக்கின்றன. வவுனியாவில் பிரபல தெரு றௌடியாக இருந்த ஒரு இளவல் தற்போது பிரான்ஸ் லாசப்பலில் தெருவில் நிற்கிறார் என அறிந்தேன்!
1 month 1 week ago
"வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!
1 month 1 week ago
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும். டைம் அவுட்டின் படி, இந்த இடங்கள் அவற்றின் பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. Tamilmirror Online || ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை
1 month 1 week ago
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் கீரைப்பிடி 200 ரூபா மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. கீரைப்பிடி 200 ரூபா
1 month 1 week ago
Published By: Vishnu 24 Sep, 2025 | 07:06 AM இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது. ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும். அதற்கமைய புதன்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் மறுநாள் காலை (25) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும். இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார். இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை | Virakesari.lk
1 month 1 week ago
24 Sep, 2025 | 03:14 PM (செ.சுபதர்ஷனி) கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது. இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது. நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார். இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து தெரிவிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உலக அளவில் 2.3 மில்லியன் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் மரணங்களும் சம்பவித்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடாந்தம் மார்பகப்புற்றுநோய் காரணமாக 8000 மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆகையால் அனைவரும் நோய் அவதானம் மற்றும் நோய் நிலையின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக அனைத்து பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படக் கூடிய அவதானம் உள்ளது. எனினும் சில சமயங்களில் ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம். இது பாரதூரமான விடயமாகும். புற்றுநோய் கலங்கள் ஆண்களின் மார்பு பகுதியை நேரடியாக தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். 12 வயதுக்கு முதல் பூப்பெய்தியவர்கள், பிள்ளை பெறாத தாய்மார், உடல் பருமனானவர்கள், புகைத்தல் மற்றும் மது அருந்துவோர் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்றார். நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல் | Virakesari.lk
1 month 1 week ago
24 Sep, 2025 | 03:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை 69 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மேம்படுத்தியுள்ளது. இஞ்சின் கிடைக்காத காரணத்தினால் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த இரண்டு விமானங்கள் இப்போது சேவைக்கு திரும்பியுள்ளன. மூன்றாவது விமானம் அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு திரும்பவுள்ளத. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டில் தனது வலையமைப்பை சீரமைத்தல், டிஜிட்டல் விற்பனை தளங்களை சீரமைத்தல், வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தலில் அதிக கவனம் செலுத்தியது. 2025/26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வருவாய் 10 சதவீதமாக அதிகரித்தது மற்றும் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்வடைந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் சௌகரியத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுது. இந்த முயற்சிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் விமான நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடன் மறுசீரமைப்பு, உலகளாவிய நிலைத்தன்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் எதிர்கால பயணிகளுக்கான தடையற்ற அனுபவங்களை வழங்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் கவனம் செலுத்தும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்...... | Virakesari.lk
1 month 1 week ago
24 Sep, 2025 | 05:04 PM கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர். 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். அத்துடன் ஓகஸ்ற் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை! | Virakesari.lk
1 month 1 week ago
24 Sep, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை சந்தித்திருந்தார். இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk
1 month 1 week ago
"இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல. பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம். மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம். எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம்"
1 month 1 week ago
மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார். 24 Sep, 2025 | 05:45 PM மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும்,சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார். மன்னார் போராட்டக்களத்தில் இன்று புதன்கிழமை (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும்,அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார். எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை.பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும்,ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும்,எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம். எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல்,தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது. வாழ்வது எமது உரிமை.அதை யாரும் பறிக்க முடியாது.அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும்.மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது. நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது. இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம் அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயல்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது. குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம்.மிகவும் வேதனையான விடையமாக அமைந்துள்ளது. கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத்திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மாவட்டச் செயலகமும்,அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப்போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.மக்களை அழிக்கும்,மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற,இத்தீவை இல்லாது செய்கின்ற செயல்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா?,என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர்களின் செயல்பாடு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது மண்ணையும்,வளங்களையும்,உரிமையையும் பாதுகாக்க எமது போராட்டம் தொடரும்.இனி வரும் நாட்களில் இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதே மிகவும் கவலைக்குரிய விடயம். மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை களை எடுப்போம் என அனைத்து அதிகாரிகளும் தெரிவித் திருந்தனர்.ஆனால் ஜனாதிபதியினுடைய அறிவித்தல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அது ஜனாதிபதியின் முடிவாக இருக்கின்ற நிலையில்,எங்களுடைய முடிவு எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்ற ஒரு முடிவு தான். எனவே இந்த போராட்டக் களத்தில் இருந்து சட்டங்களை மீறாது எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். சட்ட ரீதியாக மூன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.கனிய மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம்.14 காற்றாலை திட்டங்களுக்கு எதிரான இரு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் | Virakesari.lk
1 month 1 week ago
தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.
1 month 1 week ago
தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏 அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு
1 month 1 week ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 ஆலயத்தில் 'கள்வர்கள் கவனம் உங்கள் நகைகளையும், பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்ற எச்சரிக்கும் பலகை கண்ணில் தெரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அலங்கார கந்தனை பார்த்தான். நீ இந்த அலங்கார கோலம் எனறால், பெண்களை எப்படி குறை சொல்லுவேன்? அவர்களுக்கும் ஆசை அடிமனதில் இருக்கும் தானே?? கள்ளனையும், ஏமாற்றி பறிப்பவளையும் ... ' ... அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. சனநெருக்கம் அவனை வெளியே தள்ளிவிட்டது. என்றாலும் அவன் வாய், தன் வேதனையை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசியா ? உனைப்போன்ற பெண்ணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே எனைப்போன்ற ஆணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக் கொல்லாதே! ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்! ஆகஸ்ட் 21, தேர்த்திருவிழா இன்று. நல்லூர் திருவிழாவின் கடைசி பெரிய நாள் இது - தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். அருண், காலையில் வெக்கை என்பதால், வேட்டி சால்வையுடன் மட்டுமே வந்தான். ஆனால் இன்று தேவையான பணம் கொண்டு வந்தான். அவன் கண்களுக்கு இன்னும் வெட்கம் இல்லை. ஆரணி அங்கு நிற்கிறாளா எனத் தேடிக் கொண்டு இருந்தது. ஆசை யாரைத்தான் விடுகுது? இன்று அவனிடம் தாராளமாக பணம் இருப்பினும், ஒரு எளிய சாலையோர விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஒற்றை சிவப்பு ரோஜாவை ஏந்தி, அங்கு காத்து நின்றான். அவன் கண்கள் அன்பால் நிறைந்திருந்தன. ஆரணி தூர வருவது அவனுக்கு தெரிந்தது, ஆனால் அவள் தனியவரவில்லை. ஒரு இளம் தம்பதியாக, அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடனும் அலங்காரத்துடனும் வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு தோழியையும் காணவில்லை. அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவன் நெஞ்சம் நடுங்கியது, அவன் இதயம் வெறுமையாகியது. அவள், அவனை கண்டும் காணாமலும், ஒரு கேலியான புன்னகையுடன் கூட்டத்திற்குள் நழுவினாள். அருணின் கையிலிருந்து ரோஜா தூசி நிறைந்த தெருவில் விழுந்தது. அவன் மனம் வாழ்வதா சாவதா என்று காதல் மேல் கோபம் கொண்டு ஏதேதோ புலம்பத் தொடங்கியது. அவன் இப்ப தத்துவவாதி (Philosopher) ஆகிவிட்டான் தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? அருண் உயர்ந்த கோபுரத்தின் கீழ் தனியாக நின்றான். தேர் மணிகள் முழங்கின, சங்குகள் ஊதப்பட்டன, தெய்வம் தனது முழு மகிமையிலும் பிரகாசித்தது - ஆனால் அருணின் கண்கள் ஏமாற்றத்தால் நனைந்தன. அவன் திரும்பி பார்த்தான் ஆரணி ஒரு மூலையில், வெள்ளை மணலில் அந்த நபருடன் அருகில் இருந்து கடலை கொரித்துக் கொண்டு இருந்தாள். இடைக் கிடை அவர்கள் இருவரும் உரையாடுவது தெரிந்தது. என்றாலும் அவனுடன் அவள் முன்பு எப்படி அன்னியோன்னியமாக, நெருக்கமாக கொஞ்சி பேசினாலோ, அப்படி அது இருக்கவில்லை. அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒரு வயதான ஒருவர், சற்று நின்று, அவனது நெற்றியில் மெதுவாக புனித திருநீறு பூசினார். "மகனே," மெதுவாகச் சொன்னார், "உண்மையான கடவுள் ஒரு பூவைக் கூட அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆபரணங்களையும் தங்கத்தையும் கேட்பவர்களுக்கு அன்பு தெரியாது - அவர்களுக்கு ஆசை மட்டுமே தெரியும்." அருண், அவரின் வார்த்தைக்கு முன் தலை குனிந்தான். அந்த வார்த்தைகள் ஆழமாகத் தாக்கின. பளபளப்பை தங்கம் என்றும், கவனத்தை பாசம் என்றும், பக்திக்கான ஆசை என்றும் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்தான். வாங்கி பெறப்படும் அன்பு நிலையானதல்ல. அது ஒரு நாள் விற்கப்படும். பரிசுகள், பொருட்கள், ஆடம்பரங்கள் மூலம் கட்டப்பட்ட அன்பு, அந்தப் பரிசுகள் இல்லாமல் போனவுடன் மங்கிவிடும். ஆனால் உண்மையான அன்பு வேறுபட்டது. அது ஆபரணங்களையும் செல்வங்களையும் எண்ணாது. பொருள்களை அளவிடாது. அது உள்ளம் உள்ளத்தோடு பிணையும் உணர்வு. கைகள் காலியாக இருந்தாலும், அன்பின் தூய்மை என்றும் அழியாது நிலைத்து நிற்கும். அருண், அன்று இரவு யாழை விட்டு புறப்பட்டான். ஆனால் அந்தப் பிரிவிலும் கூட, அவன் இதயம் மேலும் ஞானம் பெற்றது. ஏனெனில் அவன் உணர்ந்தான்—பொய்யான அன்பு, அழகு மலர்கள் போலவே விரைவில் வாடிவிடும். அது இறுதியில் பணப்பையையும் இதயத்தையும் காலி செய்து விடும். ஆனால் உண்மையான காதல், சாம்பலுக்குள் மறைந்திருந்தாலும், ஒருநாள் மறுபடியும் முளைத்து மலரக் கூடிய சக்தி கொண்டது. அது அழியாதது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/31456074064041164/?
1 month 1 week ago
மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.
1 month 1 week ago
24 Sep, 2025 | 04:01 PM தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதிஅமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். இதன்போது ஆக்கபூர்வமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. குறிப்பாக நானும் இதன்போது பல்வேறு விடயங்கள் சார்ந்து கருத்துக்களை இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரிவித்திருந்தேன். குறிப்பாக இதன்போது மாகாணசபைகள் தொடர்பில் பேசியிருந்தேன். அந்தவகையில் மாகாணசபை முறைமையை இந்தநாட்டில் அறிமுகப்படுத்தியதே இந்தியாதான் ஆனால் தற்போது மகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தெரிவித்தேன். அத்தோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்று கூறப்பட்டு வருகின்றபோதும் நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமலுள்ளமையினையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதேவேளை தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய அதிகமான நிலப்பரப்புக்கள் சில திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தினையும் இதன்போது எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு எமது தமிழ் மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்கள் வனவளத்திணைகமகளம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர்போன்ற அரசகட்டமைப்புக்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ளதால் எமதுக்கள் விவசாயம், கடற்றொழில், கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசகட்டமைப்புக்களின் ஊடாக காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ள விதத்தை புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் இதே ஆக்கிரமிப்பு நிலமைகள் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். இதுதவிர இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள்தொடர்பிலும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். குறிப்பாக ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்தகாலயுத்தம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கடற்பரப்புக்களில் தற்போது இந்திய இழுவைப்படகுகள் அத்தமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், வடபகுதி தமிழ் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்கூட இந்திய இழுவைப்படகுகள் தமது அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தை நான் அவதானித்தவற்றையும் எடுத்துக்கூறினேன். எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன். அதேவேளை இந்திய நிதிஉதவியில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலையில் அமைக்கப்படவிருந்த நோயாளர் விடுதி இதுவரை அமைக்கப்படாமலுள்ளமை தொடர்பிலும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். குறித்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைப்பதுதொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் சுகாதார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தநிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விரைவில் குறித்த நோயாளர் விடுதிக்கான வேலைத்திட்டங்களுக்கான நடவடிக்மைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்த விடயத்தையும் இதன்போது தெரியப்படுத்தினேன். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் போதுமான அளவில் முறையான நோயாளர் விடுதி இன்மையால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள கலைமகள்வித்தியாலயத்தில் இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்ற விடயத்தினை இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரதே கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். இவ்வாறு இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்டு, பூரணப்படுத்தப்படாமலுள்ள கட்டடத் தொகுதியிலேயே மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அத்தோடு குறித்த வகுப்பறைக் கட்டடத்தொகுதி அமைப்பதுடன் தொடர்புடைய சில ஆவணங்களும் இதன்போது என்னால் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு மாணவர்களின் நலன்கருதி விரைவாக முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடத்தொகுதி வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தேன். என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்த இந்திய உயர்ஸ்தானிகர், என்னால் முன்வைக்கப்பட்ட சகலவிடயங்களிலும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர்விடுதி அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாகவும், விரைவில் தாமும் இந்தவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த நோயாளர் விடுதியை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைக் கட்டடத்தொகுதி விடயத்திலும் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைகின்ற விடயத்திலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது இந்தியஉயர்ஸ்தானிகர் தெரிவித்தார். மேலும் அரசியல்ரீதியான பல்வேறு விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அந்தவகையில் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. கலந்துகொண்ட அனைத்துப் பராாளுமன்ற உறுப்பினர்களும் ஆக்கபூர்வமாக தமது கருத்துக்களை முன்வைத்தனர் என்றார். https://www.virakesari.lk/article/225962
1 month 1 week ago
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! 24 Sep, 2025 | 03:41 PM முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225960
1 month 1 week ago
இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
1 month 1 week ago
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 24 Sep, 2025 | 03:19 PM தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/225954
1 month 1 week ago
பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கட்டுநாயக்கவில் கைது! 24 Sep, 2025 | 12:26 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225939
Checked
Tue, 11/04/2025 - 17:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed