1 day 22 hours ago
கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம். பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டியதுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வரவேற்புரையின்போது மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களை வரவேற்கின்றேன். சூறாவளி மற்றும் இதனுடன் இணைந்த வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கும் முயற்சிக்காக மன்னார் மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன். பாதிப்புகளிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின்- பாதுகாப்பு படையினர்- அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுடன் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீட்nடுக்கப்பட்டதையிட்டு யாவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன். வரவேற்புரையைத் தொடர்ந்து ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவிக்கையில் அனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். ‘பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம்இ மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும் உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார். இதன்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அவர், மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தரத் திருத்த மதிப்பீடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், மன்னார் மாவட்டத்தின் வெள்ள நீர் கடலைச் சென்றடைவதற்கான வடிகால் வாய்க்காலின் அளவு போதாமையாக உள்ளமை குறித்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார். மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் நிலவும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்இ தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அதிகாரிகளிடம் வினவினார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பெரும்போகத்துக்கான நீர் விநியோகம், மீள்விதைப்புக்கான ஆயத்தங்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். நிவாரணக் கொடுப்பனவுகள் மக்களைச் சென்றடைவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மரக்கறி மற்றும் தானியச் செய்கை அழிவுகள் தொடர்பிலும் குறிப்பாக வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களின் இழப்புகளுக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி வினவினார். இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அடுத்த ஆண்டு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் பதிவு செய்யப்படாதவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமித்து நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்தார். மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ என உறுதியாகத் தெரிவித்தார். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 25இ000 ரூபா கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் அழிவடைந்துள்ளமை குறித்துக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அது தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தினார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் அபாய வலயங்களில் வசிப்போரை மீள்குடியேற்றுதல் மற்றும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிப்பு குறித்தும் ஜனாதிபதி தெளிவான வழிகாட்டல்களை வழங்கினார். இறுதியாகச் சுகாதாரத் துறை குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையிலான முன்னாயத்தக் கூட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் காரணமாகப் பேரிடரால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்தன எனவும் அவர் தெரிவித்தார். வெள்ள அனர்த்த வேளைகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விசேட உயரமான அம்புலன்ஸ் வண்டி மற்றும் அம்புலன்ஸ் படகுத் தேவையை அவர் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உடனடித் தீர்வுகள் குறித்தும், எதிர்கால நீண்டகாலத் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.samakalam.com/கால்நடைகளுக்கான-இழப்பீட/
1 day 22 hours ago
யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminDecember 14, 2025 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை – வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் https://globaltamilnews.net/2025/224165/
2 days ago
போண்டி கடற்கரையில் டஜன் கணக்கான துப்பாக்கிச் சூடுகள், பலர் உயிரிழந்தனர். மூலம்எமிலி கைன் போண்டி கடற்கரையில் டஜன் கணக்கான துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன, இதில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்குப் பிறகு, அந்தப் பகுதிக்குள் போலீஸ் கார்கள் வேகமாக வந்ததாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையை விட்டு ஓடிவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். போண்டியில் உள்ள மக்கள் 50 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் வரை கேட்டதாகவும், கேம்பல் பரேட் அருகே தரையில் இருந்தவர்கள் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 30 வயதான உள்ளூர்வாசி ஹாரி வில்சன் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தார். அவர் அந்தத் தலைமை அதிகாரியிடம், "தரையில் குறைந்தது பத்து பேரையாவது பார்த்தேன், எல்லா இடங்களிலும் ரத்தம் சிதறிக் கிடந்தது" என்று கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என்று நம்பப்படும் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார், அதே நேரத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர், மேலும் சம்பவ இடத்தில் உள்ள எவரையும் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இங்குள்ள நிலைமை குறித்த புதுப்பிப்புகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருவோம். https://www.smh.com.au/national/nsw/bondi-shooting-live-updates-multiple-casualties-at-sydney-beach-dozens-of-shots-fired-20251214-p5nnkw.html
2 days ago
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது. பிரபலமான சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு மற்றும் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கு ஒரு பெரிய அவசரநிலை உருவாகியுள்ளது. ஆஸ்கார் காட்செல் மற்றும் பேட்ரிக் ஹன்னாஃபோர்ட் 2 நிமிடங்களுக்கும் குறைவாகப் படித்தது டிசம்பர் 14, 2025 - மாலை 7:20 மணி சந்தாதாரர் மட்டும் இந்த வீடியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பார்க்க குழுசேரவும் அல்லது உள்நுழையவும். பதிவுஉள்நுழைய ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்களின் பிரத்யேக நுண்ணறிவுகள் மற்றும்... இடம்பெறும் ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியாவின் நேரடி சேனலை ஸ்ட்ரீம் செய்யுங்கள். மேலும் போண்டி கடற்கரையில் பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன, சம்பவ இடத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போண்டி கடற்கரை கார் நிறுத்துமிடம் அருகே கருப்பு நிற ஆடை அணிந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கியால் சுடும் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. "போண்டி கடற்கரையில் நடந்து வரும் ஒரு சம்பவத்திற்கு காவல்துறையினர் பதிலளித்து வருகின்றனர், மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். சம்பவ இடத்தில் உள்ள எவரும் தஞ்சம் அடைய வேண்டும்" என்று NSW காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் தகவல் கிடைத்ததும் கூடுதல் தகவல்கள் வழங்கப்படும்." இன்னும் வர உள்ளன. https://www.skynews.com.au/australia-news/crime/reports-of-active-shooting-in-bondi-beach/news-story/a55e71f2a6011fbf5129946243b4b5aa யூத பின்புலம் கொண்டவர்களின் மீதான தாக்குதல் என அறியப்படுகிறது, இன்னுமொரு பகுதியிலும் துப்பாக்கி சூடு இடம் பெற்றதாக கூறப்படுகிறது(அதன் உண்மை தன்மை தெரியவில்லை). ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பாண்டி கடற்கரையில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய இரண்டு ஆண்கள் ஒரு பாலத்தில் இருந்து சுடுவது காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஃப்ரெடி பாவ்ல் எழுதியது போண்டி கடற்கரையில் இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர், இதனால் நூற்றுக்கணக்கானோர் கடற்கரையிலிருந்து தப்பி ஓடினர், அதே நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர்வாசிகள் எடுத்த காட்சிகளில், சர்ஃப் கிளப்பின் பின்னால் உள்ள ஒரு நடைபாதையின் மேல் இருந்து கருப்பு நிற உடை அணிந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கிகள் போலத் தோன்றும் துப்பாக்கிகளைச் சுடுவதைக் காட்டியது. 7NEWS செயலி மூலம் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்: இன்றே பதிவிறக்குங்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் வரை, உள்ளூர்வாசிகள் அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு NSW காவல்துறை வலியுறுத்தியுள்ளது. குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாக 7NEWS செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி ஒருவர் எடுத்த கூடுதல் காட்சிகளில், காவல்துறையினரால் கைது செய்யப்படும்போது இரண்டு ஆண்கள் வயிற்றில் படுத்திருப்பதைக் காட்டுகிறது. துப்பாக்கி குண்டுகள் போலத் தோன்றும் பல பெரிய வெடிமருந்து தோட்டாக்கள், அவற்றைச் சுற்றி தரையில் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. அதிகாரிகள் ஒருவருக்கு CPR செய்வதையும் காண முடிந்தது, மற்றொருவர் அவருக்கு அருகில் கைவிலங்குகளுடன் இருப்பது போல் தோன்றியது. https://7news.com.au/news/bondi-beach-shooting-bullets-rain-down-on-australias-most-famous-beach-sending-hundreds-fleeing-c-21000335
2 days ago
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04 அத்தியாயம் 4 - கதிர்காமம் மற்றும் மட்டக்களப்புக்கு ஒரு யாத்திரை ஒரு நாள் முழுமையான ஓய்வின் பின், யாழ்ப்பாணத்தின் அறிவுசார் இதயத்தை விட்டுவிட்டு கதிர்காமத்தின் ஆன்மீக நெருப்புக்காக, ஆரனும் அனலியும் கதிர்காமம் நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். தடாகங்கள், நெல் வயல்கள் மற்றும் காடுகளைக் கடந்து செல்லும் போது, அனலி ஜன்னலில் சாய்ந்தாள், அவள் கண்கள் நாரைகளின் கூட்டத்தைப் பின்தொடர்ந்தன. "தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் கதிர்காமத்தை வணங்குகிறார்கள் தெரியுமா?" என்று அவள், அவனிடம் கேட்டாள். ஆரன் தலையசைத்தான். "ஏனென்றால் இங்கே முருகன் தமிழ் கடவுள் மட்டுமல்ல - அவர் தீவின் பாதுகாவலர். அவர்கள் அவரை ஸ்கந்தன் என்று அழைக்கிறார்கள், நாங்கள் அவரை கதிர்காம முருகன் என்று அழைக்கிறோம். அரசியல் பிரிக்கும் இடத்தில் பக்தி ஒன்றுபடுகிறது." என்றான். ஆரனுக்கு இப்ப வரலாறு தானாக புரிய ஆரம்பித்து விட்டது. அவர்கள் வந்தபோது, கோயில் மணிகள் ஒலித்தன. கற்பூரம் மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றை நிரப்பியது. சிங்கள பக்தர்கள் தாமரை மலர்களை ஏந்திச் செல்ல, தமிழ் யாத்ரீகர்கள் 'முருகனுக்கு அரோஹரா' பாடினர். இங்கே, மொழியின் எல்லைகள் மங்கலாகின - நம்பிக்கை அவற்றை ஒன்றாக இணைத்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் சிதறிக்கிடக்கும் தனது குடும்பத்திற்காக அனலி ஒரு பிரார்த்தனையை கிசுகிசுத்தாள். ஆரன் தன் தாய் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்று மௌனமாக பிரார்த்தனை செய்தான். மாலை தீப வழிபாடு தொடங்கியதும், ஆரன் அனலியை நோக்கி சாய்ந்தான். “உனக்கு தெரிகிறதா? இங்கே, அன்பும் பக்தியும் தான் மக்கள் மனதில். முருகன் இப்படியான காடுகளில்தான் குறத்தி வள்ளியைத் தேர்ந்தெடுத்தான். தெய்வீக அன்பு - என்றும் சாதி, சமூகம் மற்றும் மக்களுக்கிடையான தூரத்தை வெல்ல வேண்டும் என்பதை அவர் [முருகன்] நிரூபித்தார்.” என்றான். கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய் சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் என்னுடன் இன்று அவள் கண்கள் மின்னின. “நாங்களும் அப்படித்தான் ஆரன். நீ கனடா நான் யாழ்ப்பாணம். நாங்களும் இந்தக் காடுகளில் எல்லைகளைக் கடக்கிறோம்.” என்றாள். பின் இருவரும், கதிர்காம ஆலயத்தில் இருந்து திரும்பும் பொழுது, "எல்லாளனுடன் போர் தொடங்குவதற்கு முன், துட்டகாமினி கதிர்காமம் சென்றான் என்றும், 'என் கரங்களில் பலமில்லை, உன் அருள் தான் என்னை வழிநடத்தும்' என்று முருகனை வேண்டினான் என்றும், முருகன் புன்னகையுடன் கையில் இருந்த வேலை உயர்த்தி, அருள்வாக்கு அளித்ததாகக் சிங்கள மக்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது" என்றாள். ஆரனுக்கு சிரிப்பு தான் வந்தது, எல்லா உயிர்களுக்கும் நீதியாக 44 ஆண்டுகள், சமநிலையில் அரசாட்சி செய்தவனைக் கொல்ல தமிழ் ஆண்டவனே ஆசீர்வதித்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதன் பின் இருவரும் அடர்த்தியாக சந்தன மரங்கள் நிறைந்த காடாக உள்ள கதிர்காம மலை போக முடிவெடுத்தார்கள். இதை கதிர்மலை அல்லது கதிரை மலை என்று கூறுவர். மலை மேல் செல்ல ஜீப் வசதிகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் படிகள் வழியே நடந்து ஏறிச் சென்றார்கள். அக்காவின் மகள் ஜீப்பில் சென்றார். அவர்கள் வழி வழியே இளைப்பாறி, மெதுவாக தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டு கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறினார்கள். மேலே எற எற மெளனமான குளிர் மெதுவாக அவர்களை அணைத்தது. ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கும் மழைத்தூறல் மரங்களின் இலைகளில் இருந்து நழுவி நழுவி விழுந்துகொண்டு இருந்தன. இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன சில மேகங்கள். பக்தி பரவசம் கொண்ட அந்த சூழலிலும் அவர்கள் தங்கள் காதல் பரவசத்தை மறக்கவில்லை. அவர்களின் உரையாடல் பல நேரங்களில் இளமைகளின் காதல் உணர்வில் அரும்பிய பேச்சாகவே இருந்தன. கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில் கதிரவன் ஒளியில் ஆரன் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை வாழ்த்துகிறேன் உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே வள்ளி நானோ முருகன் நீயோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ அவர்கள் இறுதியாக மலையுச்சியில் நடப்பட்டுள்ள வேல் வணங்கி, இம்முறை அக்கா மகளுடன் ஜீப்பில் திரும்பினார்கள். அவர்களது பயணத்தின் அடுத்த கட்டம் அவர்களை கிழக்கு நோக்கி, வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகள் [ஏரிகள்], புராணக்கதைகள் மற்றும் பாடல்களின் நிலமான மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றது. ஆங்கே அவர்கள் இருவரும் வாவிக்கு அருகில் நின்று நிலவொளியை ரசித்துக் கொண்டு நின்றார்கள். அப்பொழுது, நீர் ஓடும் ஒலி, அவர்களின் மனதிற்கு அமைதியையும் புத்துணர்வையும் கொடுத்துக் கொண்டு இருந்தது, தாமும் அதற்கு ஆதரவு கொடுப்பது போல, பறவைகளின் ஆரவார ஒலி அமைந்து இருந்தது. "இந்த நீரொலியும், பறவைகளின் கீதமும் அதனோடு சேர்ந்து வீசுகின்ற தென்றலும் ... எனக்கு, எங்களை வாழ்த்தும் ... ஒரு ஆசீர்வாதம் போல இருக்கிறது. உனக்கு ஆரன் ? என்று கேட்டாள். ஆரன் (சிரித்துக் கொண்டு), "ஆமாம், இந்த ஒலிகள், அன்பின் மொழி போன்றது. கண்ணுக்குத் தெரியாத ஒன்று - ஆனாலும், நதி கடலுடன் இணைவது போல, அது நம்மைச் சுமந்து செல்கிறது, இணைக்கிறது." என்றான். பின், “மீன் பாடும் ஒலியை நீ கேட்டாயா?” அனலி திடீரென்று கேட்டாள். “ஆம்,” ஆரன் சிரித்தான். “17 ஆம் நூற்றண்டுக்ளில் இருந்து ஒருவகை மீன் பாடுவதை மீனவர்கள் கேட்டுள்ளார்கள் என்று குறிப்புகளில் உண்டு. எனினும் மட்டக்களப்பின் பாடும் மீனின் மெல்லிசையை உண்மையான காதலர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று என் பாட்டி சொல்லுவதைக் கேட்டுள்ளேன்.” என்றான். இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் “நீரரமகளீர்” இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு என அழைக்கப்படுவதாக, தன் தாத்தா பாட்டிக்கு கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது என ஆரன் அவளிடம் எடுத்துக் கூறினான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்துக்கு அதன் பின் அவர்கள் சென்றனர். சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி கம்மா கரையை ஒசத்திக் கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு... எனும் பட்டுக்கோட்டையின் பாட்டை செயல்வடிவில் அங்கு அவர்கள் பார்த்து ரசித்தனர். கலித்தொகையில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களில் 37 ஆவது பாடல் அப்பொழுது அனலிக்கு நினைவுக்கு வந்தது. அங்கே குறத்தி ஒருத்தி தன் காதல் குறித்து தோழியிடம் கூறுகிறாள். “நான் வயலில் இருக்கும் போதெல்லாம் வில்லும் அம்பும் ஏந்திய இளைஞனொருவன் தப்பி ஓடிய மானின் காலடி தேடிக் கொண்டு வருவது போல நடித்துக் கொண்டு தினமும் வருவான்; வந்து என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்; ஆனால் எதுவும் பேசாமல் போய் விடுவான். இரவில் நான் படுக்கையில் இருக்கும் போது இவன் ஏன் வருகின்றான் என்று நினைத்துப் பார்த்தேன். அவன் பார்வையில் என் மேல் அவனுக்கு விருப்பம் உள்ளது போலத் தோன்றியது. அதுபற்றி அவனோடு பேச நினைத்தேன்; ஆனால் நான் பெண்; முன் பின் தெரியாதவன்; எப்படி நானே பேசத் தொடங்குவது என்று நினைத்து பேசாமல் இருந்தேன்; என்கிறது அந்த பாடலில் ஒரு பகுதி அவள் அதை ஆரனிடம் ஒரு வித வெட்கத்துடன் கூறினாள். ஆரனுக்கு அதன் அர்த்தம் புரிந்தது. அந்த வெட்டவெளி வயலில், அவன் அவளை தன்னுடன் நெருக்கமாக அனைத்து, இப்ப காதில் மெல்ல கூறாயோ என்றான். அவள் திகைத்தாலோ என்னவோ, மௌனமாக ஆனால் அணைத்த கைக்குள்ளேயே அப்படியே நின்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 1940 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04] https://www.facebook.com/groups/978753388866632/posts/32821724707476086/?
2 days 1 hour ago
"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன. சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது. "லென்ஸ்களைத் திறக்க ஏணி மீது ஏறி இறங்க வேண்டியிருந்தது" என்று கூறுகிறார் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டார் கேச்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ரஷ். இந்தச் சோதனையின் நோக்கம் என்னவென்றால், விண்வெளியில் சூரிய ஒளியை ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பி ஆற்றல் தர முடியுமா என்பதைச் சோதிப்பது தான். "ஜாகுவார்ஸ் அணியில் சிலரை எங்களுக்குத் தெரியும். இது ஒரு சுவாரஸ்யமான முயற்சி என்று நினைத்தோம்," என்று கூறும் ரஷ், "நாங்கள் சுமார் 105 மீட்டர் [345 அடி] தூரத்திற்கு 100 வாட் கதிர்வீச்சை அனுப்பினோம்" என்கிறார். ஸ்டார் கேச்சர் (Star Catcher) நிறுவனம் உலகம் முழுவதும் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல நிறுவனங்களில் ஒன்றாகும். பல ஆண்டு காலமாக அறிவியலுக்கும் புனைவுக்கும் இடையே சிக்கித் தவித்த இந்த யோசனை, பூமிக்கு மிகுந்த சுத்தமான ஆற்றலை வழங்கும் நோக்கத்துடன், விண்வெளியில் சூரிய ஒளியை சேகரித்து அதை பூமிக்கோ அல்லது பிற செயற்கைக்கோள்களுக்கோ அனுப்புவதை குறிக்கிறது. பூமியில் உள்ள சோலார் பேனல்கள் வளிமண்டலம், வானிலை, பகல்-இரவு சுழற்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சூரிய ஒளி, பேனல்களை எட்டுவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சை வடிகட்டிவிடுகின்றன. ஆனால் விண்வெளியில் இரவு-பகல் சுழற்சி இல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமும், அதிக திறனுடன் சூரிய ஒளியைச் சேகரிக்க முடியும். "நான் இதைப் பற்றி அப்பாவிடம் சொன்னபோது, அவர் என்னை ஒரு முட்டாளைப் போல பார்த்தார்," என்கிறார் பிரிட்டன் நிறுவனமான 'ஸ்பேஸ் சோலார்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான டேவிட் ஹோம்ஃப்ரே. ஆனால் இப்போது பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,நீண்ட தூரங்களுக்கு வயர்லெஸ் முறையில் ஆற்றலைக் கதிர்வீச்சு செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகள் இப்போது விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை மிகவும் யதார்த்தமான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியுள்ளன "விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலே எரிசக்தி மாற்றத்தை செயல்படுத்தும்," என்று ஹோம்ஃப்ரே கூறுகிறார். ஐரோப்பாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைகளில் 80% வரை இந்த முறையால் பூர்த்தி செய்ய முடியும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். விண்வெளியில் கிடைக்கும் சூரிய சக்தியின் அடர்த்தி (power density) பூமியில் உள்ள சோலார் பேனல்களை விட 10 மடங்குக்கும் அதிகமாக இருப்பது தான் இதற்கான முக்கிய காரணம். அதாவது, அங்கு சூரியனின் ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் மிக அதிகம். ஆனால் இதை நிஜத்தில் செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. இதற்கு பிரம்மாண்டமான செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை (enormous satellite constellations) விண்ணில் அமைக்க வேண்டும். இது சர்ச்சைக்குரியதாகவும், பாதுகாப்பாக இயக்குவதற்கு கடினமாகவும் இருக்கும். அதோடு, இவற்றை உருவாக்க ஏராளமான ராக்கெட் ஏவுதல்கள் தேவைப்படும். மேலும், இதை விட மலிவாகவும் விரைவாகவும் பூமியில் செயல்படுத்தக்கூடிய பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகள் உள்ளன. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில், புதைபடிம எரிபொருள்களை உடனடியாக மாற்றியாக வேண்டும் என்பதால் வேகமாக செயல்பட வேண்டியது மிக முக்கியம். இருந்தாலும், விண்வெளி சூரிய மின்நிலையங்களை உருவாக்குவதால் கிடைக்கும் பலன்கள் எல்லா குறைபாடுகளையும் மிஞ்சிவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். உதாரணமாக, அமெரிக்க ராணுவம் இந்தத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. உலகில் எந்த இடத்துக்கும் தேவைப்படும்போது உடனடியாக ஆற்றலை அனுப்ப முடியும் என்பது நவீன போர்க்களங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றைத் தீர்க்கும். அதேபோல், இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளுக்கோ, மின்சாரம் இல்லாத கிராமப்புறங்களுக்கோ இது அதிக பயனுள்ளதாக அமையும். விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல், பூமியில் உள்ள சூரிய ஆற்றல் அமைப்புகளைப் போலவே செயல்படுகிறது. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் பேனல்கள் மூலம் அது இயங்குகிறது. ஆனால் ஒரு பெரிய நன்மையையும் அது கொண்டுள்ளது. ஏனென்றால் அது வளிமண்டலத்திற்கு மேலே இருக்கும். நமது கிரகத்தை சூழ்ந்துள்ள வாயு மற்றும் மேகங்கள் மூலம் வடிகட்டப்படாத சூரிய ஒளியை நேரடியாக சேகரிக்க முடியும் என்பது தான் இதன் பொருள். வளிமண்டலம் நமது கிரகத்தை அடையும் ஆற்றலில் சுமார் 30% பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அது பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே கால் பகுதியை உறிஞ்சுகிறது. விண்வெளி அடிப்படையிலான சூரிய பேனல்கள் இந்த இழப்புகளைத் தவிர்க்கலாம், மேலும் அவற்றை சரியான சுற்றுப்பாதையில் வைத்தால் கிட்டத்தட்ட தொடர்ச்சியான சூரிய ஒளியை பெற முடியும். சேகரிக்கப்பட்ட மின்சாரம் மைக்ரோவேவ் அல்லது லேசர் கதிர்களாக பூமிக்கு அனுப்பப்பட்டு, பூமியில் உள்ள பெரிய ஆன்டெனாக்களால் (rectennas) பிடிக்கப்பட்டு மீண்டும் மின்சாரமாக மாற்றப்படும். ஆனால் பொருளாதார ரீதியாக இது பயனுள்ளதாக இருக்க, ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஜிகாவாட் அளவிலான மிகப் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்காக விண்வெளியில் மிகப்பெரிய சூரிய பலகை வரிசைகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டிய தேவை எழலாம். அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், 1941 ஆம் ஆண்டு 'ரீசன்' (Reason) என்ற சிறுகதையில், விண்வெளியில் இருந்து சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் யோசனையைப் பற்றி முதன்முதலில் எழுதினார் . பின்னர் 1970-களில், நாசா நடத்திய ஆய்வுகள் இந்த யோசனை சுவாரஸ்யமானது என்றாலும், அதை செயல்படுத்த பெரிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகள் உள்ளன என்று கூறியது. நாசாவின் முன்னாள் இயற்பியலாளரும் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை ஆதரிப்பவருமான ஜான் மான்கின்ஸ், 1990களில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வை வழிநடத்தினார். சூரிய மின்கலங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், இந்த யோசனை நடைமுறைக்கு இன்னும் சாத்தியமானதாக மாறி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. "செலவு மதிப்பீடு ஒரு டிரில்லியன் டாலரில் (1 trillion USD) இருந்து 100 பில்லியன் டாலராக (100 billion USD) மாறியது என்று மான்கின்ஸ் கூறுகிறார். "ஆனால் அந்தக் காலகட்டத்தில் இதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருமே இல்லை." "முப்பது வருடங்களுக்கு முன் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் என்பது மிகவும் குழப்பமான விஷயமாக இருந்தது," என்று கூறும் மான்கின்ஸ், "மக்கள் இரு துருவங்களாகப் பிரிந்திருந்தனர்.ஒரு பகுதியினர் இதை உச்சகட்ட ஆர்வத்துடன் ஆதரித்தனர், மற்றொரு பகுதியினர் இதை முழுமையாக வெறுத்தனர்" என்கிறார். கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாக, பிரிட்டனில் உள்ள சேட்டிலைட் அப்ளிகேஷன்ஸ் கேடபுல்ட் என்ற ஆராய்ச்சி அமைப்பின் மைக் கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "இந்த துறையில் ஆர்வம் பெரிதும் உயர்ந்துள்ளது," என்கிறார் அவர். விண்வெளியில் பொருட்களை ஏவுவதற்கான செலவு குறைந்து வருவதாலும், டெக்சாஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற புதிய பெரிய ராக்கெட்டுகளின் வருகையாலும் இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் மற்றும் பவர்-பீமிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியைப் பெறுவது தொடர்பான வாய்ப்பை நம்முன் கொண்டு வந்துள்ளன. "நாம் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டிவிட்டோம் என்று சொல்லலாம்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். "அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், சுற்றுப்பாதையில் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் திறன் உருவாகும் என நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றும் அவர் பகிர்ந்து கொள்கிறார். 2023 ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசு விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பல நிறுவனங்களுக்கு 4.3 மில்லியன் யூரோ (சுமார் 5.7 மில்லியன் டாலர்) நிதி வழங்கியது. சீனாவில், விஞ்ஞானிகள் ஓமேகா 2.0 எனும் ஒரு முன்மாதிரி விண்வெளி சூரிய மின் செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். இது மைக்ரோவேவ்களைப் பயன்படுத்தி பல்வேறு சூரிய பேனல்களிலிருந்து மின்சாரத்தை கடத்தும் திட்டத்தை நோக்கி செயல்படுகிறது. இதற்காக, விண்வெளியில் 1 கிமீ அகலமான ஆன்டெனாவையும், தலா 100 மீட்டர் அகலமுடைய 600 சூரிய துணை-வரிசைகளையும் ஒன்றுசேர்க்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,081 வாட், அதாவது ஒரு சமையலறை கெட்டில் (kettle) இயங்க போதுமான அளவு சக்தியை 55 மீட்டர் தூரத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் முயற்சி, விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் (Solaris) திட்டம் , விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலை மேலும் ஆழமாக ஆராய வேண்டுமா என்பது குறித்து இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை எடுக்க உள்ளது. அமெரிக்காவில், அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவியுடன் பல தொடக்க நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. "இது பலரும் நினைப்பதை விட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது" என்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் விண்வெளி சட்ட நிபுணரான மிச்செல் ஹன்லான் கூறுகிறார். "ஒருமுறை அந்த தொடக்க முதலீட்டை செய்துவிட்டால், அந்த ஆற்றல் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும். ஆகவே, அந்த முதலீட்டை செய்யும் தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை உள்ளதா என்பதுதான் முக்கியம்" என்கிறார் அவர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஏதர்ஃப்ளக்ஸ் (Aetherflux) எனும் தொடக்க நிலை நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்று. "விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி என்பது இந்த அற்புதமான யோசனை," என்கிறார் நிறுவனர் பைஜு பட். "ஆனால் நாங்கள் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான், 2050-க்கு இலக்கு வைக்காமல், அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் இதைச் செய்ய வேண்டுமானால் எப்படிச் செய்வது?" என்றும் அவர் தெரிவித்தார். ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம், அதிக சக்தி வாய்ந்த அகச்சிவப்பு லேசர்கள் மற்றும் ஃபோட்டோவோல்டாயிக் செல்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைச் சேகரித்து, பின்னர் அதை பூமியில் உள்ள 5–10 மீட்டர் (16–33 அடி) அகலமுடைய சிறிய சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பும். இதனால் அவை நிலத்தில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒவ்வொரு லேசரும் அதன் பாதையில் ஒரு விமானமோ, மற்றொரு செயற்கைக்கோளோ அல்லது வேறு பொருளோ பறந்து வந்தால், உடனடியாக அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்படும். இது அவற்றின் சென்சார்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ சேதம் விளைவிக்காது. இந்த லேசர்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல. உதாரணமாக, இவற்றால் ஒரு விமானத்தை இரண்டு துண்டுகளாக உடைக்க முடியாது. ஆனால், அவை போதுமான சக்தி கொண்டவை என்பதால், அவற்றால் மனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "ஒரு 'டெத் ஸ்டாரை' உருவாக்குவது நோக்கம் இல்லை," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையில் இந்த லேசரில் ஒரு முட்டையை வேகவைக்கக் கூட நிறைய நேரம் ஆகும். அதனால் பறவைகள், விமானங்கள், சூப்பர்மேன் என எதுவாக இருந்தாலும் அதன் வழியாக செல்ல முடியும்" என்கிறார். ஆற்றல் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்று பட் கூறுகிறார். இதில் ராணுவம் ஆரம்பகட்டப் பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம். "அமெரிக்க அரசாங்கத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Alamy படக்குறிப்பு,இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியால் எல்லா நகரங்களுக்கும் மின்சாரம் வழங்க போதுமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க முடியும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன ஏப்ரல் மாதத்தில், ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர் நிதியை திரட்டியதாக அறிவித்தது. 2026ஆம் ஆண்டில், பூமியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்களுக்கு 1 கிலோவாட் அல்லது 1.3 கிலோவாட் சக்தி கொண்ட லேசர் கற்றையை அனுப்பக்கூடிய ஒரு செயல் விளக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. "சிறந்த சூழ்நிலையில், இரண்டு நூறு வாட் அளவிலான மின்சாரம் கிடைப்பதை காண வாய்ப்பு உண்டு," என்கிறார் பட். பூமியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதன் அகச்சிவப்பு லேசர் பரிமாற்ற அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. பிரிட்டனின் ஸ்பேஸ் சோலார் (Space Solar) நிறுவனம் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. விண்வெளியில் பெரிய நகரங்களின் அளவில், பிரம்மாண்டமான சூரிய மின் நிலையங்களை அமைத்து, எல்லா நாடுகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இது மிகப்பெரிய பணியென்றாலும், அது சாத்தியமான ஒன்று என ஹோம்ஃப்ரே நம்புகிறார். "2050க்குள், உலகின் மொத்த மின்சார தேவையின் 20% வரை விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அது முற்றிலும் சாத்தியம் தான் " என்கிறார் அவர். சுமார் 1.2 மில்லியன் யூரோ (1.6 மில்லியன் டாலர்) பிரிட்டன் அரச நிதி பெற்ற ஸ்பேஸ் சோலார், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு செயல் விளக்கப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒன்று ரேடியோ அலைகள் மூலம் நிலத்துக்கு சக்தியை கடத்துவதைப் பயிற்சி செய்வது. இன்னொன்று, ரோபோக்களால் விண்வெளியில் பெரிய கட்டமைப்புகளை உருவாகும் திறனை நிரூபிப்பது. இறுதியில், 1.8 கிமீ அகலமுடைய ஒரு பிரம்மாண்ட விண்வெளி கட்டமைப்பை உருவாக்கி, அதை கேசியோபியா (Cassiopeia) என அழைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது பூமியில் இருந்து சுமார் 36,000 கிமீ உயரத்தில் உள்ள ஜியோஸ்டேஷனரி சுற்றுவட்டத்தில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். அதாவது, பூமியின் ஒரே இடத்திற்கு மேலேயே எப்போதும் நிலைத்து, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக சூரிய ஒளியைப் பெறும். இந்த மின்நிலையம், மில்லியன் கணக்கான மேசை அளவிலான சிறு செயற்கைக்கோள்களால் (modular satellites) ஆனது, அவை ஒவ்வொன்றும் சோலார் பேனல்களால் மூடப்பட்டிருக்கும். அதன்பின், சுமார் 100 கோடி சிறிய ஆன்டெனாக்கள் மூலம் சேகரித்த ஆற்றலை ரேடியோ அலைகளாக பூமிக்கு அனுப்பும். பூமியில் ஒரு ஹீத்ரோ (Heathrow) விமான நிலைய அளவிலான ரிசீவிங் ஸ்டேஷன் போதும். சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். "இவற்றில் ஒரு டஜன் அளவு நிலையங்கள் பிரிட்டனில் இருந்தால், நாட்டின் முழு மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Space Solar படக்குறிப்பு,சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கேசியோபியா மின்நிலையம் சுமார் 700 மெகாவாட் மின்சார திறன் கொண்டதாக இருக்கும் என ஹோம்ஃப்ரே கூறுகிறார். இது பிரிட்டனில் அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மேலும், சோமர்செட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் ஹின்க்லி பாய்ன்ட் C அணு மின் நிலையத்தின் மின்சார உற்பத்தியின் நான்கில் ஒரு பங்கை இது வழங்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பேஸ் சோலார், விண்வெளியில் கட்டமைப்புகளை அமைக்கத் தேவையான ரோபோடிக் அமைப்பின் செயல் விளக்க வடிவமைப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு, வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஃபாஸ்டில் உள்ள ஒரு ஆய்வகத்தில், 360-டிகிரி வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் திறனை நிறுவனம் வெற்றிகரமாகக் நிரூபித்தது. அமெரிக்க நிறுவனமான விர்டுஸ் சோலிஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறது. இந்நிறுவனத்தின் திட்டம், 2,00,000 தேன்கூடு வடிவ செயற்கைக்கோள்களை பல கிலோமீட்டர் நீளமான மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களாக ஒருங்கிணைப்பது தான். இவற்றால், மால்னியா சுற்றுப்பாதை எனப்படும் விசித்திரமான சுற்றுப்பாதையில் பயணித்து, வட அரைக்கோளத்திற்குச் சக்தியை அனுப்ப நீண்ட நேரம் உயர்ந்த அட்சரேகைகளில் தங்க இயலும். விர்டுஸ் சோலிஸ் தனது செயல் விளக்கப் பயணத்தை 2027ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெற்றி பெற்றால், பூமியில் மின்சாரச் செலவு மிகுந்த வீழ்ச்சியடையும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனர் ஜான் பக்னல் கூறுகிறார். "உலகளாவிய சராசரி மின்சார விலை, ஒரு மெகாவாட்-மணிக்கு 75 டாலராக (£55) உள்ளது," என்கிறார் அவர். ஆனால் நிறுவனத்தின் மாதிரி அடிப்படையில், விண்வெளி அடிப்படையிலான மின்சாரம் ஒரு மெகாவாட்-மணிக்கு 0.50 டாலர் (£0.40) ஆக அமையலாம். "அதனால், நம் அனைவருக்கும் ஆண்டுதோறும் எரிசக்திக்காக சுமார் 10 டாலர் (£7) செலவு மட்டுமே ஆகும்," என்கிறார் பக்னல். "அதுவே எங்கள் நோக்கம்." இருப்பினும், சிலர் விண்வெளி சூரிய மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பெரிய அளவிலான விண்வெளி- சூரிய மின்சக்தி வடிவமைப்புகளின் ஒரு மதிப்பீடு, இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பூமி அடிப்படையிலான மாற்றுகளை விட 12-80 மடங்கு அதிகமாக செலவாகும் என்று கூறுகிறது. விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அவர்களின் கதிர்வீச்சு (beam) அமைப்பு, ஃப்ரெஸ்னல் லென்ஸ் (Fresnel lenses) எனப்படும் ஒரு தொடர் கண்ணாடிகளைப் பயன்படுத்தும். இவை நீண்ட காலமாக லைட் ஹவுஸ்களில் (lighthouses) ஒளியை பிரதிபலிக்கவும், விலக்கவும் (reflect & refract) பயன்படுத்தப்பட்டவை. இந்தக் கண்ணாடிகள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களின் சூரிய பலகைகளில் திருப்பி செலுத்தும். இந்தத் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களுக்கு இயற்கையான சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியை வழங்கக்கூடும் என்று ரஷ் கூறுகிறார். "சூரிய ஒளி நேராகப் பட்டால் அவற்றுக்கு மின்சாரம் கிடைக்கிறது. சூரியன் மறைந்தால் எந்த ஆற்றலும் கிடைக்காது," என்கிறார் ரஷ். "நாங்கள் அந்தச் செயற்கைக்கோள்கள் இருக்கும் இடத்துக்கே ஒளியை அனுப்புகிறோம். அந்த ஒளியின் தீவிரத்தைக் ஒரு சூரியனிலிருந்து பத்து சூரியன்கள் அளவுக்கு எங்களால் மாற்றிக் காட்ட முடியும்" என்றும் விளக்குகிறார். பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அத்தகைய அமைப்பு சந்திரனில் உள்ள ரோவர்களுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும், அவை இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் சந்திர இரவுகளில் உயிர்வாழ வேண்டும் என்று ரஷ் கூறுகிறார். ஆனால், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் குறித்து அனைவரும் நம்பிக்கையுடன் இல்லை. முக்கிய கவலை என்னவென்றால், மிக அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதும், விண்வெளியில் பாதுகாப்பாக இயக்குவதும் தான். இது இதுவரை யாராலும், இத்தகைய அளவுக்கு, முயற்சிக்கப்படாத ஒன்று. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைத்து இயக்குவது, மேலும் அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதாமல் பாதுகாப்பது, மிகப்பெரிய சவால் என்று நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளிக் குப்பை நிபுணர் பிரான்செஸ்கா லெடிசியா கூறுகிறார். ஏதேனும் விபத்துகள் நடந்தால், அது இந்த புதிய தொழில்துறையின் வளர்ச்சியை உடனடியாகத் பாதிக்கக்கூடும். "சில சம்பவங்கள் மட்டுமே நடந்தால் கூட அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். மேலும், இத்தகைய மிகப்பெரிய செயற்கைக்கோள் குழுக்கள் சட்டபூர்வமானதாக கூட இல்லாமல் இருக்கலாம் என ஹான்லன் கூறுகிறார். 1967 ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின் படி, பூமியின் சுற்றுப்பாதையின் எந்தப் பகுதியையும் எந்த நாடும் உரிமை கோர முடியாது. "ஆனால் ஒரு சதுர மைல் அளவிலான செயற்கைக்கோள் வரிசையைப் பற்றிப் பேசும்போது அது எப்படி அமையும்?" என ஹான்லன் கேள்வி எழுப்புகிறார். "சீனா 4 சதுர மைல் [10 சதுர கி.மீ] செயற்கைக்கோள்களை அமைக்கப் போவதாக அறிவித்தால், அமெரிக்கா கண்டிப்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று நான் நினைக்கிறேன்." விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி உண்மையில் நம்மால் அடையக்கூடியதா என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாசா அறிக்கை, இந்த தொழில்நுட்பம் தற்போது நிலத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது என்றும், ஏவுதல், உற்பத்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறியது. "நாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிச்சயமாக சிறந்த இடத்தில் இருக்கிறோம்," என்று தொழில்நுட்பம், கொள்கை மற்றும் உத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கான முன்னாள் நாசா இணை நிர்வாகியும், விண்வெளி கொள்கை நிபுணருமான சாரிட்டி வீடன் கூறுகிறார். "ஆனால், இதைச் செய்ய நாம் தயாரா ?" எனக் கேள்வி எழுப்புகிறார். அமெரிக்க லாப நோக்கற்ற நிறுவனமான தி ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் விண்வெளி பொருளாதார வல்லுநரும் தொழில்நுட்ப மூலோபாய வல்லுநருமான கரேன் ஜோன்ஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும், "இது கார்பன் இல்லாத ஆற்றல்," என்றும் கூறுகிறார். "இது நிஜமாகட்டும் என்று நம்புவோம். ஏனெனில், தற்போதைய சூழலில் விண்வெளியில் பரஸ்பர நம்பிக்கை குறைவாக உள்ளது." அத்தகைய முயற்சி , ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) கட்டுமானத்தை சாத்தியமாக்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கக்கூடும். "பூமத்திய ரேகைக்கு மேல் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் நீங்கள் ஒரே ஒரு முதலீட்டைச் செய்யலாம்," என்கிறார் மான்கின்ஸ். "தேவையைப் பொறுத்து, இது போலந்து, லண்டன், ரியாத், கேப் டவுனுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் ஒரு நாளில் பல முறை இலக்கை மாற்றவும் முடியும்." பெரிய புயல் அல்லது பேரழிவுக்குப் பிறகு மின்சாரம் இழந்த நாடுகள், மின்கட்டமைப்பு சரி செய்யப்படும் வரை தற்காலிக உயிர்நாடி போல இதன் பயன்களை பெறலாம். "மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு குறைந்த அளவு மின்சாரத்தையும் நீங்கள் வழங்க முடியும்," என்கிறார் ஜோன்ஸ். ஸ்டார் கேச்சர் தனது அடுத்த பெரிய சோதனையை விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை அமெரிக்க கால்பந்து மைதானத்தில் அல்ல. புளோரிடாவின் கேப் கனாவெரலில் நாசாவின் விண்வெளி ஷட்டிலின் பழைய ஓடுபாதையில் திட்டமிட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தில் ஒரு புதிய சாதனை உருவாகும். "அந்த ஓடுபாதையில் பல கிலோமீட்டர் தூரம் மின்சாரத்தை வழங்க போகிறோம்," என்கிறார் ரஷ். ஆனால் இவ்வளவு வியப்பை உண்டாக்கும் இந்த தொழில்நுட்பம் ஒருநாள் உண்மையில் வெற்றி பெறும் அளவுக்கு வளருமா என்பது இன்னும் பெரிய கேள்வியாகத் தான் எஞ்சியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly32x5ee4eo
2 days 2 hours ago
2 days 2 hours ago
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்ட நிதியத்தின் பெறுமதி ரூ. 3.4 பில்லியனைத் கடந்துள்ளது - நிதி அமைச்சின் செயலாளர் Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 10:59 AM டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்ட நிதியம், இன்றுவரை ரூ. 3,421 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது, உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளனர். அதன்படி, இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை 3.4 பில்லியன் ரூபாவாகும். இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். வெளிநாட்டு நாணய பங்களிப்புகளின் பெறுமதி 4.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 40 நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233316
2 days 2 hours ago
மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி Published By: Digital Desk 1 14 Dec, 2025 | 09:08 AM அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் எதையும் பேசலாம் என்ற நிலையே இன்றுள்ளது. புதிதாக அரசியல் செய்ய வந்தவர்களுக்கு மலையக வரலாறும் மலையக மண்ணை பாதுகாக்க எத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரமுகரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கந்தசாமி நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது அரசியல்வாதிகள் முகநூல் அரசியல் செய்வதால் களத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். மலையக மக்களை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் ஜுலை கலவரமாகும்.அச்சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தார். அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக அவர் இருந்ததால் அது சாத்தியமாயிற்று. இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கம்பளை, நுவரெலியா என பல மலையக நகரங்களுக்குச் சென்ற அவர் மக்களிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டது ஒரு விடயம் மாத்திரமே. தயவு செய்து நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்று விடாதீர்கள். எமது மக்கள் மீது காடைத்தனத்தை ஏவி விட்டவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையான இனவாதிகளே. அவர்களுக்கு பயந்து கொண்டு நாம் ஏன் எமது மண்ணை விட்டுச் செல்ல வேண்டும்? இங்கிருந்தே போராடுவோம். நானும் அதற்குத் தயார். நாமும் எமது பரம்பரையினரும் கட்டியெழுப்பிய இம்மண்ணை பாதுகாப்பது எமது கடமை. எதிர்காலத்தில் நாம் இந்த மண்ணில் சகல துறைகளிலும் தடம் பதிப்போம். ஆகவே வன்முறைகளுக்கு பயந்து கொண்டு எமது மண்ணை விட்டு செல்லும் எண்ணம் இருந்தால் அதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் அப்போது அவரது பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்ததால் அவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் அவருடன் நானும் பயணித்தேன். மலையக மண்ணை பாதுகாப்பதிலும் எதிர்கால திட்டமிடலிலும் அவரது தீர்க்கதரிசனத்தை கண்டு வியந்தேன். கல்வி,குடியிருப்பு, இளைஞர் கட்டமைப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் அவரது செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளன. வன்முறையை காரணம் காட்டி அன்று பெருந்தொகையானோர் வெளியேறியிருந்தால் எமது பிரதிநிதித்துவங்கள் இல்லாது போயிருக்கும்.இன்று அரசியல் வீரவசனம் பேசும் சிலர் கறுப்பு ஜுலை கலவரம் உட்பட பல சந்தர்ப்பங்களில் அச்சத்தினால் இந்தியாவுக்கு ஓடியவர்கள் என்பது முக்கிய விடயம். ஆனால் இன்று அப்படியான ஒரு சூழ்நிலை இல்லை. நிலவுரிமை தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். அதை முன்னெடுப்பதற்கு பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம். அதை கட்டியெழுப்புவதை விடுத்து இங்கே இல்லாவிட்டால் வேறு எங்காவது செல்வோம் எனக் கூறுவது கோழைத்தனம் மாத்திரமின்றி போரட்ட உணர்வு மங்கி போன அரசியலின் வெளிப்பாடு. எமது மண்ணை விட்டு மக்கள் சென்றால் அது வெளியாரின் ஆக்ரமிப்புக்கு வழிவகுக்கும். மலையகம் என்ற அடையாளம் கேள்விக்குறியாகும். எனவே அரசியல் பிரமுகர்கள் ஏதாவது பேசுவதற்கு முன்பு சிந்தித்து வார்த்தைகளை வெளிப்படுத்தல் நல்லது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233297
2 days 2 hours ago
'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல் பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images கட்டுரை தகவல் ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ் பிபிசி ரேடியோ 4 13 டிசம்பர் 2025 அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது. அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான். ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார். காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன. பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார். காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர். அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று. "அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்." பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார். "ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே. காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,CBS via Getty Images படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார். சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை. வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார். ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது. அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது. தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது. ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர். பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார். ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது. காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது. அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார். பிரபலமான சண்டைக் காட்சிகள் வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும். அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார். பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார். அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார். "நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது. பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார். எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார். ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது. தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார். அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது, அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார். "எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன். எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா? சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார். என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார். 72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன். பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo
2 days 2 hours ago
பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 09:43 AM அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/233302
2 days 3 hours ago
குழந்தை பிறந்த ஆரம்பகாலத்தில் சில வேளைகளில் குழந்தையின் தாய் சரியான ஓய்வில்லாமல் ஒரு மனவழுத்தத்தில் குழந்தை மீது சிறிது கடினமாக நடப்பதுண்டு, ஊரில் உறவினர்கள் இருப்பதால் அந்த நிலை ஏற்படுவதில்லை என நினைக்கிறேன், இதனை குழந்தையின் தந்தைகள்தான் கவனமாக தாயினையும் சேயினையும் பார்த்து கொள்ளவேண்டும்.
2 days 3 hours ago
பிரஜைகள் குழு இந்திய இராணுவ காலத்தில் உருவாக்கப்பட்டதாக கருதுகிறேன் (சரியாக நினைவில்லை), இந்த பிரஜைகள் குழு பெரிதும் அந்தந்த ஊரில் உள்ள பிரபலமானவர்களை கொண்டது என கருதுகிறேன், 90 களில் இலங்கை இராணுவத்துடன் போர் ஆரம்பித்த போது இலங்கை இராணுவம் கிழக்கில் இடங்களை புலிகளிடமிருந்து கைப்பற்றி வந்த போது இந்த பிரஜைகள் குழுவினர் முஸ்லீம் மக்களுக்கு இணையாக வாள்களுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறையில் கிழக்கில் ஈடுபட்டதாக கேள்விப்பட்ட நினைவுள்ளது (நீண்டகாலமானதால் நினைவில்லை). வடமராட்சியில் ஒரு பிரபலமான ஒரு ஆசிரியர் ஒரு ஊரின் பிரஜைகள் குழு தலைவராக இருந்தார், அவர் இந்திய இராணுவத்துடன் நல்ல உறவு நிலையில் இருந்தார், இந்திய இராணுவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த வேளை 1989 இறுதியில் அல்லது 1990 ஆரம்பத்தில் (சரியாக நினைவில்லை) ஈரோஸ் அமைப்பு புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த முயற்சி செய்தனர் (கடுமையான முரண்பாடு ஏற்பட்டிருந்தது அக்காலகட்டத்தில்) அப்போது அவரது வீட்டில் வைத்தே அந்த உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை இந்திய இராணுவ கெடுபிடிகளுக்கிடையே இடம்பெற்றிருந்தது, அப்போது அந்த பிரஜைகள் குழு தலைவரை 4 வருடத்திற்கு முன்னர் கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை (அவர் அப்போது வடமாராட்சி பொறுப்பாளராக இருந்த போது) அவரை எச்சரித்திருந்தாக கதைத்தார்கள் (அது ஒரு டெலோ விவகாரம் என நினைக்கிறேன் மறந்துவிட்டேன்), பின்னாளில் இந்திய இராணுவம் படுகொலை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதியதாக கேள்விப்படேன். மக்கள் பிரச்சினையினை பேசுவதற்காக பிரஜைகள் குழுவினரை புலிகள் தான் உருவாக்கினார்கள் என நினைகிறேன், ஆனால் அவர்களது ஆதரவாளர்கள் என்றில்லாமல் மக்களிடம் பிரபலமானவர்களை உள்ளடக்கியிருந்தார்கள் என நினைக்கிறேன்.
2 days 4 hours ago
இந்தப் பதிவில் 880 பக்கங்கள் இருக்கின்றன. தரவிறக்கமும் செய்யலாம்.
2 days 4 hours ago
Satanic Force Collation Of IPKF Related News Affidavits Etc : LTTE : Free Download, Borrow, and Streaming : Internet Archive
2 days 6 hours ago
பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.
2 days 10 hours ago
வேதனை வெறுக்கதக்க செயற்பாடு.
2 days 12 hours ago
2004 இல் அகிலன் பீடில் என்ற ஈழத்து வம்சாவளி வீரர் ஒருவர் அவுஸ்திரேலியா 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடினார். பிற்காலத்தில் காயம் காரணமாக சில காலங்கள் அவரால் விளையாட முடியவில்லை.( கிட்னி ஒன்றை இழந்தார்).பிறகு அவுஸ்திரேலியா பிக்பாஸ் தொடரிலும் விளையாடினார். அவுஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்பட்ட 15 பேரில் 2 இந்தியா , ஒரு சீனா வம்சாவளியை சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
2 days 12 hours ago
இலங்கை அணியில் விக்கினேஸ்வரன் ஆகாஷ் என்ற ஹார்ட்லி கல்லூரி மாணவர் 4 ஓவருக்கு 15 ஓட்டங்கள் குடுத்து ஒரு விக்கேட் எடுத்தார். இந்த ஆசியக்கிண்ணப் போட்டியில் இலங்கையணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களில் ஒருவர் பரியோவன் கல்லூரி மாணவர் குகதாஸ் மாதுளன்.
2 days 13 hours ago
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம். சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரக்கமின்றி கொல்வோம்.. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் - உலகில் எங்கும் அமெரிக்கா உங்களை வேட்டையாடும். உங்களைக் கண்டுபிடித்து, இரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்து உங்கள் சுருக்கமான, பதட்டமான வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை நீங்கள் கழிப்பீர்கள்." என கடுமையாக எச்சரித்துள்ளார். இது சர்வதேச களத்தில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinபடுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில்...சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிப...
Checked
Tue, 12/16/2025 - 07:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed