2 days 5 hours ago
எல்லோரும் முட்டை எடுத்தால் எனக்கு கைத்தொலைபேசி மூலம் யாழில் புள்ளி வழங்குவது இலகு 😀
2 days 5 hours ago
இவா இடையில் ஒரு கச்சை விட்டு விட்டா...........................
2 days 5 hours ago
வினா 11) 3 விக்கேற்றுக்களினால் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியா அணியை தோற்கடித்தது. ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை . 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 11, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
2 days 5 hours ago
2 days 5 hours ago
யாழ்கள போட்டியில் எல்லாருக்கும் முட்டை கிடைச்சது என்றால் இன்று நடந்த போட்டியாய் தான் இருக்க கூடும்😁...........................
2 days 5 hours ago
Published By: Vishnu 09 Oct, 2025 | 07:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல, மனித உரிமைகள்பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். கடந்த அரசாங்கங்கள், தெரிந்தே செய்த அந்த தவறை மீண்டும் செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல் மயமாக்கல் காரணமாக சர்வதேச மயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களுக்கு வெவ்வேறு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. சில நேரங்களில் இந்த அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களை ஆதரித்து அவற்றில் பங்காளிகளாகவும் மாறிவிட்டன (2015,2017, 2019). மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களித்துள்ளன. (2012, 2013, 2014, 2021, 2022).ஏனைய சந்தர்ப்பங்களில், இலங்கை அரசாங்கம் இலங்கை மீது ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை,மேலும் தீர்மானங்களின் சில பிரிவுகளை மட்டுமே எதிர்த்தன. இந்த அனைத்து தீர்மானங்களிலும் இரண்டு பொதுவான புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவது, ஜெனீவாவில் இந்த செயல்முறையின் அடிப்படையிலான தேசிய பிரச்சினைகள் எந்த முந்தைய அரசாங்கத்தாலும் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இந்தத் தீர்மானங்கள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான முக்கிய காரணம் இதுதான். எந்தவொரு போரிலும் மனித உரிமைகள் பிரச்சினைகள் எழுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் நாடுகள் பலவற்றில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பிரச்சினைகள் அவற்றின் சொந்த தேசிய கட்டமைப்பு நிறுவனங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. தேசிய ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கின்றன. ஆனால் நம் நாட்டில் முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன? தேசிய மட்டத்தில் உரிமைகள், பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அவர்கள் இனவெறி, பாலின வேறுபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள்.நாட்டைப் பிரித்தனர், அனைத்து இனங்கள் மற்றும் மத மக்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தினர், மீறினர், மேலும் இலங்கையை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நாடாக மாற்றினர். ஜெனீவா தீர்மானத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால் இது தெளிவாகின்றது. 2009 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை, அப்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு உறுதியளித்தபடி, அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு நிலையான தேசிய தீர்வை செயல்படுத்துவதாகும். ஆனால் அது நடந்ததா? இல்லை. இந்த செயல்முறை நடைபெறாமல் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ,பல நாடுகள் ஒன்றிணைந்து 2012 இல் இலங்கை மீது மற்றொரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. இந்த 2012 தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை,அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாகும். ஆனால் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதா? இல்லை. அது நடக்காத இடத்தில், 2013 ஆம் ஆண்டு பேரவையில் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும், தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நடந்ததா? இல்லை. அவர்கள் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அப்போதைய அரசாங்கங்கள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தேசியப் பிரச்சினைகளையும் ஜெனீவா செயல்முறையையும் பயன்படுத்தின.2013 ஆம் ஆண்டு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஆணையாளரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டார். இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச நம்பகத்தன்மையை இழப்பதன் விளைவு என்ன? இலங்கை அதன் சொந்த தேசிய நிறுவனங்கள் மூலம் அதன் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற கருத்து உருவாகி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் 2021 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க ஒரு சிறப்புப் பிரிவை நிறுவ இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினை. போருக்குப் பின்னர் உடனடியாக ஒரு தேசிய பொறிமுறை மூலம் எளிதாக தீர்க்கப்படக்கூடிய இந்த ஜெனீவா பிரச்சினை, குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைமை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும், அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் வறுமையை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பவும் எங்களுக்கு வலுவான ஆணையை வழங்கினர். இந்த ஆணையை செயல்படுத்துவதும், அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளை உறுதி செய்வதும், இதுவரை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயல்முறையை எப்படியாவது தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதும், வலுவான மற்றும் சுயாதீனமான உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுமே எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதுதான். இலங்கை தொடர்பான அனைத்து திட்டங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. மேலும், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள் படிப்படியாகக் குறைந்து. ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2012 ஆம் ஆண்டில், 47 வாக்குகளில் 15 வாக்குகளைப் பெற்றோம். 2013 இல், 13 வாக்குகள்,2014 இல், 12 வாக்குகள் 2021 இல், 11 வாக்குகள், 2022 இல், 7 வாக்குகள் என்ற அடிப்படையில் வாக்குகள் பெறப்பட்டன. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கால அரசாங்கங்கள் தாங்கள் தோற்போம் என்பதை அறிந்திருந்தும் இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காக மில்லியன் கணக்கான பொதுப் பணத்தைச் செலவிட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றனர். அந்த வாக்குகளைப் பெற அவர்கள் பல்வேறு வழிகளில் தொடர்புடைய நாடுகளுக்கு உதவினார்கள். தேர்தல் தோல்வியடையும் என்ற யதார்த்தத்தை அறிந்தும், ஊடகக் காட்சிகள் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவே அவர்கள் இதையெல்லாம் செய்தார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வில் நான் உரையாற்றினேன். வகுப்புவாத மற்றும் மத அரசியலை நிராகரித்து, அனைத்து இலங்கையர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நமது சொந்த தேசிய வழிமுறைகள் மூலம் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவை நாடுகளுக்குத் தெரிவித்துள்ளேன். கடந்த ஜூன் மாதம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சமர்ப்பித்த தீர்மானம் பேரவையில் தோற்கடிக்கப்படுவது மிகவும் அரிது. இலங்கையின் பார்வையில், எங்கள் நாடு தொடர்பான ஒரு தீர்மானம் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதான் 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம். அதன் பிறகு, இலங்கை தொடர்பான அனைத்து தீர்மானங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்தது இதுவே முதல் முறை. நாங்கள் பதவியேற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூகத் துறையினருடன் அவர் திறந்த கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் உண்மையான நிலைமையை அவர் நேரடியாகக் கண்டார். இந்த விஜயத்தைத் தொடர்ந்து, உயர் ஸ்தானிகர் இலங்கை குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கை சமூகம் முழுவதும் முற்போக்கான மாற்றத்தின் போக்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான திறந்த தன்மை மற்றும் உள்நாட்டு வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை எடுத்த முயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பேரவையின் 60ஆவது அமர்வில் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையிலும் இந்த நேர்மறையான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார். வலுவான உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துமாறு இலங்கையை அவர் வலியுறுத்தினார். இந்த அறிக்கையையும் அதற்கு இலங்கை அரசு வழங்கிய பதிலையும் நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களுடன் கலந்தாலோசிக்க உங்களை அழைக்கிறேன். ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போது மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியையும் என்னையும் சந்தித்தார். நான் முன்னர் கூறியது போன்று ல், தேசிய பிரச்சினைகள் மற்றும் மக்களின் மனித உரிமைகள் அரசியல் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்கு பல ஆண்டுகளாக அடிபணிந்ததன் காரணமாக, இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/ 1, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் என்ற ஒரு பிரிவை நிறுவியது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், வெளியுறவு அமைச்சராக, நானும் ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர பிரதிநிதியும், இதுபோன்ற உள்நாட்டு அல்லாத வழிமுறைகளை இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை என்று பேரவையில் தெளிவாகக் கூறினோம்.சர்வதேச வழிமுறைகளை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல்மயமாக்கல் காரணமாக சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி. இது ஒரு வருடம் போன்ற குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய பணி அல்ல. ஆனால் அதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்துள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் நீதித்துறை அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை நாங்கள் வலுப்படுத்தி சுயாதீனமாக்குகிறோம். காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு சுயாதீனமாக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மசோதாவை விரைவில் கொண்டு வருவோம். இந்த சட்டம் நாட்டில் அவசரநிலைகளுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் நடைமுறையில் உள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுஉடனேயே, மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில், அது தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவதற்கு நாங்கள் முன்மொழிந்தோம். இந்த தேசிய ஆணையம் நிறுவப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஜெனீவா தீர்மானம் இருக்காது. நீங்களும் நானும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அது நடந்திருக்காது. எனவே, உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டம் விரைவில் இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும், ஆணைக்குழுவின் பணிகள் தொடங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.ஜெனீவாவுக்கு காண்பிக்க இந்த முற்போக்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக, அரச அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளான மக்கள் ஒரு அரசியல் இயக்கமாக, மனித உரிமைகள் மீதான எங்கள் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் உண்மையான அனுதாபம் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ அதிகாரிகளையோ அல்லது வேறு எந்த மக்கள் பிரிவையோ குறிவைத்து இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நமது நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது மற்றும் பயங்கரமான மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு . இது நாம் தனியாக அடையக்கூடிய ஒரு குறிக்கோள் அல்ல. இலங்கை மீதான தீர்மானம் கடந்த 6 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டேன். எனது உரையின் ஆரம்பத்தில் நான் விளக்கியது போல், மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். முந்தைய அரசாங்கங்கள், தெரிந்தே பொதுப் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து, வாக்கெடுப்பு தோல்வியடையும் என்ற நம்பிக்கையில் செய்த அந்த பயனற்ற, அந்த தவறான செயலை மீண்டும் செய்வது எங்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது,இந்த விஷயத்தில் எங்கள் நிரந்தர பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார். செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடலின் போது நான் கூறியதையும், அக்டோபர் 6ஆம் திகதி ஜெனீவாவில் நிரந்தரப் பிரதிநிதி தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.அக்டோபர் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், இலங்கை தொடர்பான முந்தைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தது. இது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம்,பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டியது. முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயல்முறை பாராட்டப்பட்டுள்ளது. இது தேசிய நிறுவனங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க இடமளித்துள்ளது.இந்தத் தீர்மானம் 2021 தீர்மானத்தின் நீட்டிப்பு என்பதால், அதன் இறுதி அத்தியாயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிகளைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டது போல,இது ஒரு உள்ளக பொறிமுறை அல்ல என்பதால் எங்கள் அரசாங்கம் இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்கும் போது 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதை நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம். இது பிளவுகளை தீவிரப்படுத்தும் மற்றும் அரசாங்கம் தொடங்கிய திட்டங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று நாங்கள் சுட்டிக்காட்டினோம். அரசாங்கம் தொடங்கிய உள்ளக பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவை நாடுகளில் அதற்காக கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை விரைவில் முடித்து, நமது சொந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் அரசாங்கம் தொடங்கிய உள்நாட்டு வேலைத்திட்டம் மற்றும் இதற்காக மனித உரிமைகள் பேரவை நாடுகளில் கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை முடித்து, எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். அரசாங்கம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைப் பாராட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழிவை சமர்ப்பித்த நாடுகளின் குழுவின் சார்பாகப் பேசிய ஐக்கிய இராச்சியம் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் இது தெளிவாகிறது. அந்தக் குழுவைத் தவிர, சீனா, பங்களாதேஷ், மாலைத்தீவு, கியூபா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், எத்தியோப்பியா, கோஸ்டாரிகா மற்றும் உலகின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நாடுகள் உட்பட பேரவை உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டன. மேலும், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பாக நடைபெற்ற உரையாடலில், சுமார் 43 நாடுகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உள்நாட்டு செயல்முறைகள் மூலம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டின. மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. நமது சொந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது இந்த மதிப்புமிக்க சபையில் நாம் விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. அந்த உரிமைகளைப் பாதுகாப்பது மக்களின் பிரதிநிதிகளாகிய நமது முழுமையான கடமை. பொறுப்பு.. நீங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி கூறியது போல், அனைத்து இலங்கையர்களும் சுதந்திரமாக ஒன்றாக வாழும் அமைதியான மற்றும் வளமான நாடு என்ற கனவு நமக்கு உள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேர்மறையாக ஈடுபடுவதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தக் கனவை நனவாக்கும் பயணத்தில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த தேசிய முயற்சியை ஆதரிப்பது அனைவரினதும் பொறுப்பு என்றார். https://www.virakesari.lk/article/227355
2 days 5 hours ago
போன மாதம், இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பின் போது பேசப் பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது. அவை தீர்க்கப் பட்டு விட்டதா? இப்படி மாதா மாதம் வெட்டியாக போய் சந்தித்து பத்திரிகைகளில் படங்களைப் போட்டு… நானும் அரசியலில் இருக்கின்றேன் என்று, சுத்துமாத்து சுமந்திரன்… இத்துப் போன “பிலிம்” காட்டுகின்றாரா? இந்தப் பேய்க்காட்டல் அரசியல் எல்லாம் பழைய ரெக்னிக். சம்பந்தன் காலத்திலிருந்து பார்த்தும், கேட்டும் அலுத்துப் போச்சுது. புதுசா ஏதாவது செய்யப் பாருங்கள் சுமன். நட்டுக் கழண்ட லூசன் மாதிரி நெடுக செய்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள் ஆபிரஹாம் சுமந்திரன். மக்கள் உங்களை பைத்தியக்காரன் என்று முடிவு கட்டி விடுவார்கள்.
2 days 5 hours ago
இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 11:14 AM இரசாயனத்துக்கான நோபல் பரிசு புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த சுசுமா கிடகவா, பிரித்தானியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்தானைச் சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/227292
2 days 5 hours ago
தென் ஆபிரிக்கா மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்🥰👍....................
2 days 5 hours ago
லோரா நடத்தி விட்டா. நாடீன் முடிச்சு விட்டா.
2 days 5 hours ago
தென்னாப்பிரிக்கா அமோக வெற்றி
2 days 5 hours ago
09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, 'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது. 'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார். இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன.. கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும். அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakesari.lk/article/227305
2 days 5 hours ago
பட மூலாதாரம், Justice department படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கட்டுரை தகவல் அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட் பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது. அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன. புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார். கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images காற்றால் மேலும் பரவிய தீ புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது. சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Justice Department 'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை' தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர். "தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது 2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images 2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். "ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள். வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள். அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce80r9y5lnjo
2 days 5 hours ago
பாகிஸ்தானை பந்தாடியது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 08 Oct, 2025 | 10:15 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இறுதியில் 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. இந்தப் போட்டி முடிவுடன் பாகிஸ்தான் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 13ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் கடைசி 4 விக்கெட்களில் 65 ஓட்டங்கள் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. முன்வரிசையில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சித்ரா ஆமின் 35 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ரமீன் ஷமின் 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 11 ஓட்டங்களையும் பின்வரிசையில் நஷ்ரா சாந்து 11 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தது. பந்துவீச்சில் கிம் கார்த் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் ஷூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெகான் ஷூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதிலும் பெத் மூனி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. நஷ்ரா சாந்து, ரமீன் ஷமிம், பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீட்டெடுத்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலனா கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். நோர்த் சிட்னியில் கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த் ஆகியோர் பகிர்ந்த 77 ஓட்டங்களே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பதாவது விக்கெட்டுக்கான முந்தைய சாதனையாக இருந்தது. பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலனா கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: பெத் மூனி https://www.virakesari.lk/article/227266
2 days 5 hours ago
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கிறது? பிபிசி கண்டது என்ன? படக்குறிப்பு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இயங்கிய ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தைக் குடித்த மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு ஸ்ரேசன் நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' என்ற இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்த மருந்தைக் குடித்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு வாந்தியும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைய ஆரம்பித்தனர். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, 'கோல்ட்ரிஃப்' மருந்தை மாநில அரசு தடை செய்தது. மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததையடுத்து, இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கிய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அக்டோபர் 1-ஆம் தேதி மாலையில் அந்த மருந்து நிறுவனத்தைச் சோதனையிட்டது. சோதனையின்போது மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்சைச் சேர்ந்த மருந்துகள் (Batch No. SR-13 2025 மே மாதம் தயாரிக்கப்பட்டவை) கைப்பற்றப்பட்டன. இதற்குப் பிறகு அங்கிருந்த கோல்ட்ரிஃப் மருந்து, ரெஸ்போலைட் (Respolite) மருந்துகளின் மூன்று வகைகள், ஹெப்சான்டின் மருந்து ஆகியவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கிவைக்கப்பட்டன. இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. படக்குறிப்பு, தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கையை வெளியிட்டது. 'மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை' இந்தச் சோதனைகளின்போது ஸ்ரேசன் நிறுவனம் மருந்து உற்பத்திக்கான நூற்றுக்கணக்கான விதிகளை மீறியது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் சோதனையின்போது கண்டறியப்பட்ட 364 விதி மீறல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் 39 விதி மீறல்கள் மிகத் தீவிரமானவை. 325 விதிமீறல்கள் பெரிய அளவிலானவை. முதலாவதாக, ''இருமல் மருந்தைத் தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால், மருந்து உற்பத்திக்கான தரத்தில் இல்லை'' அடுத்ததாக, ''அந்த வேதிப் பொருள் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு வந்த பிறகு அது மருந்துத் தரத்தில் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படவும் இல்லை''. மேலும் "இந்த மருந்து நிறுவனத்தில் சரியான தரத்திலான பணியாளர்கள் இல்லை. பயன்படுத்தப்படும் தண்ணீர், உற்பத்திக் கருவிகள் போன்றவை அங்கீகரிக்கத்தக்கத் தரத்தில் இல்லை. தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன." என அதில் குறிப்பிடப்படுள்ளது. மேலும், "மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளும் இல்லை. மருந்துகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் இல்லை. தரவுகள் சேகரித்து வைக்கப்படவில்லை. தரத்தை உறுதி செய்யும் பிரிவே இல்லை. வெளியில் இருந்துதான் தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்படுவதும் இல்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியில் விடப்பட்டது. மருந்து உற்பத்திக்கான தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது" என விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கைதான உரிமையாளர் இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் வேதியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அதன்படி, இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோப்பலீன் க்ளைகால் (Propylene Glycol) என்ற வேதிப் பொருள் மருந்துப் பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருளான டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவிக்கிறது. 'மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துத் தொகுப்பில், டைஎத்திலீன் க்ளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்துத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் துவங்கப்பட்டுள்ளதாக மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் 11 பேர் சென்னையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் சென்னை நகரக் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை வியாழக்கிழமையன்று காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 73 வயதாகும் ரங்கநாதன் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். நீண்ட காலமாக நீர்ம மருந்துகளை தயாரித்துவந்தவர். படக்குறிப்பு, ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பிபிசி கண்டது என்ன? கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்துவந்த ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சுங்குவார்சத்திரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் யாருக்கும் பெரும் அதிர்ச்சியே ஏற்படும். நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில், தரைத்தளத்தையும் அதற்கு மேலே ஒரு தளத்தையும் கொண்ட மிகச் சாதாரணமான ஒரு கட்டடத்தில் இயங்கிவருகிறது இந்தத் தொழிற்சாலை. இந்த நிறுவனம் மூடி சீல் வைக்கப்படுவதற்கு முன்புவரை, மொத்தம் 12 பேர் பணியாற்றி வந்தனர். இதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் படிப்பை முடித்தவர். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலை உட்பகுதிகளில் துருப்பிடித்த பொருட்கள், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் என சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படுகின்றன. சார்பிடால் என்ற மருந்தின் மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் எவ்விதப் பாதுகாப்புமின்றி வெளியில் வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் இறந்திருப்பதற்கு தமிழ்நாடு அரசின் மிகமோசமான கவனக் குறைவே காரணம் என மத்தியப் பிரேதசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார். "தயாரிக்கப்படும் ஒவ்வொரு பேட்சிற்கும் Certificate of Analysis சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேட்சிற்கு அப்படிச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியிருப்பதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஸ்ரேசன் நிறுவனத்திற்கு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள், மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் பேச மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. "அவர் இது தொடர்பான விசாரணையில் தீவிரமாக இருப்பதால், இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செய்திக் குறிப்பாக மட்டுமே வழங்கப்படும்" என்கிறது அவரது அலுவலகம். இதற்கிடையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் பிரிவில் பணியாற்றிவந்த கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இரு ஆய்வாளர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் கூறுவது என்ன? இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்துடன் பேச மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வியாழக்கிழமையன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தபோது, ''கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என கூறப்படுகிறதே'' என கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், '' இது தொடர்பாக ஆய்வு நடத்தி, மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் மையம் இந்த மருந்தை வாங்குவதில்லை. தனியார் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார். மேலும், ''எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாகச் சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள். அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசப்போவதில்லை. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கிற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக 2, 3 நாட்களில் முடிவெடுக்கப்படும்" என்றார் படக்குறிப்பு, 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும் என்கிறார் கே. சிவபாலன். அதிர்ச்சியளித்த அறிக்கை ஆனால், தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இது தொடர்பாக அளித்த முதலாவது அறிக்கையில் இருந்த சில வாசகங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதாவது, ''அக்டோபர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் விடுமுறை நாளாக இருந்தாலும் பொதுநலனை மனதில் வைத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கையில் இறங்கியது'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 20 குழந்தைகள் இறந்த ஒரு விவகாரத்தில் பதிலளித்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விடுமுறை நாளிலும் வேலை பார்த்ததாகக் குறிப்பிட்டது தொடர்பாக ஊடகங்கள் விமர்சித்தன. மேலும், இப்போது சோதனை நடத்தி 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் கண்டுபிடித்திருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இத்தனை நாட்களாக என்ன செய்தது என்ற கேள்வியும் எழுந்தது. இதில் பல்வேறு அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்கிறார் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. சிவபாலன். "மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்படுத்த மாநில அரசின் சட்டமும் இருக்கிறது, மத்திய அரசின் சட்டமும் இருக்கிறது. மருந்து உற்பத்திக்கான உரிமங்களைப் பொறுத்தவரை 60 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களை மாநில அரசே தருகிறது. 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும்." என்கிறார் அவர். "20 சதவீத மருந்துகள் அதாவது, தடுப்பூசிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றுக்கு மத்திய அரசு மட்டுமே உரிமங்களை வழங்கும். ஒரு மருந்து நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு மாநில அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் சேர்ந்தோ தனித்தோ சோதனைகளை வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ மேற்கொள்வார்கள்" என்கிறார் கே. சிவபாலன். இந்தச் சோதனைகளின்போது தொழிற்சாலையின் தரம், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் - தண்ணீர், சர்க்கரையில் துவங்கி அனைத்தும் சோதனையிடப்படும். அதேபோல, தயாராகும் மருந்துகளின் மாதிரிகளும் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்படும் என்கிறார் அவர். "ஆனால், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மருந்துகளைத் தயாரிக்கின்றன. ஒரு ஆய்வாளர் சோதனைக்குச் செல்லும்போது பத்து மாதிரிகளைத்தான் சேகரித்து, சோதனைக்கு அனுப்புவார். ஆகவே, எல்லா நிறுவனங்களிலும் எல்லா மருந்துகளையும் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, மருந்துகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அந்தந்த மருந்து நிறுவனங்களின் கடமை" என்கிறார் கே. சிவபாலன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஜெயசீலன். டைஎத்திலீன் க்ளைக்கால் ஆபத்தா? இந்த மருந்தின் தயாரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறு நேர்ந்திருக்கலாம் என்கிறார் இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரிவின் தலைவரான ஜே. ஜெயசீலன். "மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் என்பது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மருந்துகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இரண்டாவது வகை பெயிண்ட் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது." என்றார் ஜெயசீலன். மேலும் "இருமல் மருந்துகளில் Paracetamol, Phenylephrine Hydrochloride, Chlorpheniramine Maleate ஆகிய மருந்துப் பொருட்கள் இருக்கும். இதில் பாராசிட்டமாலைக் கரைப்பதற்கான கரைப்பானாக இந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மருந்து நிறுவனங்கள் தங்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள். ஒவ்வொரு மூலப்பொருளும் வரும்போதும் அவற்றை பரிசோதனை செய்துதான் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மருந்துத் தயாரிப்பு நிறுவனம் பரிசோதிக்காமல் பயன்படுத்தியிருக்கலாம்." எனக் கூறினார் அவர். "பொதுவாக, மருந்தைத் தயாரித்து முடிந்த பிறகு, விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மருந்துகளை வாங்கும்போது அவற்றைப் பரிசோதித்துத்தான் வாங்குவார்கள். ஆனால், மத்தியப் பிரதேச அரசு இதனை பரிசோதித்ததா என்பது தெரியவில்லை. இந்த விநியோகச் சங்கிலியில் ஏதாவது ஒரு இடத்தில் சோதனை நடந்திருந்தால், இதனைத் தடுத்திருக்கலாம்" என்கிறார் ஜெயசீலன். படக்குறிப்பு, கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தீர்வு என்ன? இதில் நிறுவனத்தின் உரிமையாளர் தவிர, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், ப்ரோப்பலீன் க்ளைக்காலை சப்ளை செய்த நிறுவனம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஜே. ஜெயசீலன். ப்ரோபலீன் க்ளைக்கால் என்பது பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ஒரு வேதிப்பொருள். இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக்கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க ஒரு யோசனையைச் சொல்கிறார் ஜே. ஜெயசீலன். "ஒரு முறை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தினால் வேறொரு நாட்டில் மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து மத்திய அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். அதேபோல, தமிழ்நாடு அரசும் ஒரு விதியை உருவாக்கலாம்" என்கிறார். ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்தை இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தயாரிக்க முடியுமா? "மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் தொழிற்சாலைகள்தான் பிரமாண்டமானதாக இருக்கும். மற்றவை இதுபோல சிறிய இடங்களில்தான் இயங்கிவரும். குறிப்பாக Syrup போன்றவை இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகளில்தான் தயாராகும். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்" என்கிறார் ஜெயசீலன். இதற்கிடையில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அளிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது. இந்த நிறுவனங்களில் இணைந்து சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. கோல்ட்ரிஃப் மருந்து விவகாரத்திற்குப் பிறகு நடந்த சோதனைகளில் ரெஸ்பிஃப்ரஷ், ரீலைப் ஆகிய மருந்துகளிலும் டைஎத்திலீன் க்ளைக்கால் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx09v15z4qo
2 days 5 hours ago
அதையும் மினெக்கெட்டு வாசித்ததுக்கு சந்தோஷம் சாரே 😁
2 days 5 hours ago
பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை பெத் மூனியின் அபார சதம் மீட்டெடுத்தது; அலானாவும் சிறந்த பங்களிப்பு 08 Oct, 2025 | 09:55 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது. தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது. https://www.virakesari.lk/article/227265
2 days 5 hours ago
உத்திர பிரதேசத்தில் இலங்கையின் வடகிழக்கு இளையோர்களுக்கு ராணுவ பயிற்சி அவசர அவசரமாய் பொல்லு கொட்டனுடன் கொடுத்தது பாகிஸ்த்தான் ராணுவம் என்றால் தான் நாங்க நம்புவம் .😀 எஜமானர்களுக்கு ஒரு கீறல் விழுமாக இருந்தால் சாக்கை பிய்த்து தலையில் போட்டு கொண்டு உடுப்பு அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் ஆடவும் செய்வம்😁 .. புதிதாய் எழுதப்பட்ட மாகாவம்சத்தில் கொக்குவில் ராணுவம் தாக்கபட்ட போது கனோன் பீரங்கி உடன் ஒரு சிங்கள ராணுவ வீரர் ஒலிபரப்பு கோபுரத்தில் ஏறி நின்று தாக்குதல் நடத்தி யதை சிங்களவர்களே நம்ப தயராக இல்லை அதை மாற்றி எழுத சொல்லி திருத்துகிறார்கள் இங்கு என்னடா என்றால் இன்னமும் முழு யானையை சோத்துக்குள் புதைக்க வெளிக்கிடுனம் .
2 days 5 hours ago
இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் இரண்டு பாலியல் சைக்கோக்கள் தப்பிவிட்டார்கள்!
2 days 5 hours ago
தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறீர்கள். காத்திருப்போம். பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. பாஜகவுக்கு 20 சீட்டுக்கு கீழே ஒதுக்கல். திமுக ஆட்சியை இழத்தல் இவைதான் எனது முன்னுரிமைகள் (priorities). இதே வரிசையில்.
Checked
Sat, 10/11/2025 - 20:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed