2 days 22 hours ago
வாழ்த்துகள் கீர்த்தனா
2 days 22 hours ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21: ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ – அ. குமரேசன் ஒன்று நாவலாக இருக்க வேண்டும், அல்லது தன் வரலாறாக இருக்க வேண்டும், அல்லது மற்றவர்கள் பற்றிய உண்மைக் கதையாக இருக்க வேண்டும் – இலக்கியத்தின் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் வரவில்லையே என்று தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு புத்தகம். ஆபாசம் என்றும் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. புத்தகத்தின் வெளியீட்டாளரும் விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்பில் அவர்கள் விடுதலையானதோடு, ஆபாசம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புதிய புரிதல்களுக்கும் இட்டுச் சென்றது அந்தப் புத்தகம். நவீன இலக்கிய முத்துமணிகளில் ஒன்றாக மதிக்கப்படும் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer)அந்த இடத்திற்கு வந்தது ஒரு சுவையான அனுபவப் பயணம்தான். ஹென்றி மில்லர் (Henry Miller)எழுதிய தன் வரலாறும் சமூக விமர்சனமும் கற்பனையும் கலந்த அந்தப் படைப்பு, தணிக்கை வரலாற்றிலும் இடம் பிடித்தது. 1891இல் பிறந்து 1980இல் விடைபெற்ற (90 ஆண்டுகள்) அமெரிக்கரான ஹென்றி மில்லர் (Henry Miller) இளமைக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில், குறிப்பாக பாரிஸ் நகரில் வாழ்ந்தார். வறுமை, புறக்கணிப்புகள், பலவகை மனிதர்களோடு தொடர்புகள் என வாழ்ந்த அந்த அனுபவங்களையும், பிற்காலத்தில் அமெரிக்க வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளையும்தான் புத்தகங்களாக எழுதினார். அவரே தன் எழுத்துகளைப் புனைவிலக்கியம் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆயினும், உண்மைகளும் கற்பனைகளும் கலந்த வெளிப்பாட்டிற்கு நல்ல முன்மாதிரிகளாக அந்தப் புத்தகங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘டிராபிக் கேன்சர்’ தன்வரலாற்றுப் புனைவு என்ற புதிய வகை எழுத்துகளுக்கான ஒரு சான்றாக எடுத்துக்காட்டப்படுகிறது. படைப்பாளிகள் அரவணைப்பு ஆங்கிலத்தில் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1934இல் பாரிஸ் நகரில் வெளியானது. அங்கே அது தடையையோ, கடும் நடவடிக்கைகளையோ சந்திக்கவில்லை என்றாலும், கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ளவே செய்தது. ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) தடை விதிக்க முடிவு செய்தது, ஆயினும் டி.எஸ். எலியட் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் அந்த எழுத்தாக்கத்தை அரவணைத்தார்கள். ஆகவே சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இறக்குமதி செய்வதில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கடத்தி வரப்பட்ட புத்தகப் படிகள்தான் வாசகர்கள் கைகளுக்குச் சென்றன. ஹென்றி மில்லர் (Henry Miller) கனடா சுங்கத் துறை புத்தகத்திற்குத் தடை விதித்தது. புத்தகக் கடைகளிலிருந்த படிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆஸ்திரேலியாவில் 1970கள் வரையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பிறகு, அச்சிடப்பட்ட நூல்களுக்கான தணிக்கை விதிகள் பெரிதும் தளர்த்தப்பட்டன. ஃபின்லாந்து நாட்டில் ஃபின்னிஷ் மொழிப் பதிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆங்கில, ஸ்வீடிஷ் மொழிப் பதிப்புகள் கிடைத்தன. பின்னர் அந்தத் தடையும் விலக்கப்பட்டது. பிற்காலத்தில் துருக்கி அரசு இந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தது. கைதுகளும் வழக்குகளும் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆபாசம் என்ற குற்றச்சாட்டுடன், அதைப் பரப்பினார்கள் என்ற புகாரின் பேரில் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். 60க்கு மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. 1964இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் புத்தகத்தை விடுவித்தது. அந்தத் தீர்ப்பு, பாலியல் வக்கிரங்களைத் தூண்டாத, ஆனால் பாலியல் உண்மைகளையும் சிக்கல்களையும் சுரண்டல்களையும் சித்தரிப்பது எப்படி ஆபாசமாகும் என்ற விவாதங்களுக்கு வழியமைத்தது. “நான் இந்த வாழ்க்கையை எதற்காகக் கண்டறிந்தேன்? எதற்காக உண்மையை மறைக்க வேண்டும்? எப்படி உணர்கிறேனோ அதைத்தான் எழுத முடியும்” என்று மில்லர் கூறியது எழுத்துலகில் பரவலாக எதிரொலித்தது. வழக்கமான நாவல் கட்டமைப்பிலிருந்து விலகிய, நேரடிச் சித்தரிப்பும் கவிதையும் கலந்த அவரது மொழி நடை கவனத்திற்கு உள்ளானதாக இணையப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கடக ரேகைக் கதை ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) புத்தகம் புத்தகத்தின் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்புக்கு, பூமியின் “கடக ரேகை” என்று பொருள். வறுமையில் வாடும் எழுத்தாளர் ஹென்றி, 1930களில் பாரிஸ் நகரின் வெளிச்சமற்ற பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கடக்கிறார். அந்த வாழ்க்கையில் எதிர்கொள்கிற இன்பங்களும் துன்பங்களுமாக அத்தியாயங்கள் விரிகின்றன. அந்த அனுபவங்களையே தனது கற்பனை வளமும் கவித் திறனும் கலந்து விவரிக்கிறார். ஹென்றி தனது நண்பர்களுடன் நடத்தும் உரையாடல்கள், தேடிச் செல்லும் காதலிகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழிலாளர்களின் நிலைமைகள், பணத்திற்காக அலையும் அவலங்கள், எதையாவது செய்யத் தூண்டுகிற பசி, யாருமற்ற தனிமை உணர்வு என அவருடைய அன்றாடப் போராட்ட அனுபவங்களை வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது இந்த நூல். அழகான ஆரம்பம், கதாபாத்திரங்கள் வருகை, அடுத்தடுத்து விறுவிறுப்பான நிகழ்வுகள், எதிர்பாராத திருப்பத்துடன் முடிவு என்று வழக்கமான நாவல் நடையில் புத்தகம் செல்லாது. பொதுவாக மனிதர்கள் சமகாலக் காட்சிகள், கடந்த கால நினைவுகள், எதிர்காலக் கனவுகன் என்று மாறிமாறிப் பயணிப்பது போலவே ஹென்றியின் வாழ்க்கை செல்கிறது. புத்தகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி இதில் அவரது மன ஓட்டங்கள், தத்துவச் சிந்தனைகள், சமூக நையாண்டி, அதிர்வூட்டும் உண்மை நிலவரங்கள் ஆகியவற்றின் கலவையாகப் புத்தகம் உருவாகியிருக்கிறது. அதில், சமூகத்தின் பாசாங்குத்தனம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. மனிதர்களின் அருவருப்பான பக்கமும் திறந்துகாட்டப்படுகிறது. கெடுபிடிக் கலாச்சாரம் கூண்டில் நிறுத்தப்படுகிறது. கதையோட்டமோ, கதாபாத்திரங்களோ, நிகழ்ச்சித் திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ இல்லை என்பதால் புத்தக உள்ளடக்கத்திற்குள் இதற்கு மேல் செல்ல வேண்டியதில்லை. ஒரு தனிமனிதரின் சுய தேடலோடு இணைந்த, கயிறுகளால் கட்டிப் போடப்படாத வெளிப்பாட்டு முனைப்பாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. இலக்கியம் என்பதற்கான பாரம்பரிய விதிகளை உடைத்து, களித்துக் கடக்கப்படும் வாழ்கையில் கழித்துக் கடக்கப்பட்ட மனிதர்கள் இருப்பதைத் துணிச்சலாகக் காட்டுகிறது. பூமியை அளவிடவும், ஆராய்ந்திடவும் அதன் குறுக்கிலும் நெடுக்கிலும் நாம் கற்பனைக் கோடுகளை வரைந்து வைத்திருக்கிறோம். நில நடு ரேகைக்கு வடக்கே வரையப்பட்டிருப்பது கடக ரேகை. அது எப்படி கற்பனையானதோ அதே போல் மனித எதிர்பார்ப்பு கற்பனையாகிவிடுகிறது. சூரியனை பூமி சுற்றிவருகிறபோது, சூரியப் பாதை வடக்கே நகர்ந்து தெற்கே திரும்பும் எல்லையைக் கடக ரேகை என்று குறிப்பிடுகிறார்கள் புவியியலாளர்கள். மனிதர்களின் வாழ்க்கை அப்படி இருட்டாகிவிடுவதை கடக ரேகை புத்தகம் விவரிக்கிறது. கடக ரேகையின் மறுபகுதியில் ஒளி படர்வது போல, நம்பிக்கைகள் வெளிச்சம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உட்பொருள்கள் பொதிந்திருப்பதால் ‘‘டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்பு பொருந்துகிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி கடினமான வேலிகளைத் தாண்டிய புத்தகத்திற்கு முக்கியமான இலக்கிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் சார்ந்த முக்கியமான சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த எழுத்து, பதுங்கிக்கொள்ளாத வெளிப்படையான எழுத்தாக்கத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த எழுத்து, இவ்வகையான புத்தகமாக்கலுக்கு ஒரு வெற்றிகரமான இலக்கிய முன்னோடி என்ற பெயர்களைப் பெற்றது. டிராபிக் ஆஃக் கேப்ரிகான், பிளாக் ஸ்பிரிங், தி ரோஸி க்ரூசிஃபிகேஷன், தி கொலோசஸ் ஆஃப் மரூசி, கொயட் டேய்ஸ் இன் க்ளிச்சி, தி ஏர்கண்டிஷண்டு நைட்மேர் உள்ளிட்ட நூல்களையும் ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதியிருக்கிறார். அவையும் பல்வேறு கோணங்களில் சமூக விமர்சனம் செய்யும் படைப்புகளே.‘ முற்றிலும் புனைவு அல்லாத ஒரு படைப்புக்கு இலக்கியத் தகுதி அளிக்கப்படுவது அரிதான நிகழ்வு. அதைக் கடக ரேகை சாதித்திருக்கிறது. 1970 இல் இதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்து கவனம் பெற்றது. ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பும் ‘தி கார்டியன்’ பத்திரிகையும் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆங்கில நாவல்கள் பட்டியல்களில் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. ‘தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்’ என்ற நமது பட்டியலில் 21ஆவது புத்தகமாகக் கடக ரேகை இடம் பெற்றதோடு, தற்காலிகமாக விடைபெறுவோம். இந்தியாவிலும் இதர நாடுகளிலும் சவால்களைச் சந்தித்த புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, ஓர் இடைவெளிக்குப் பின் சந்திப்போம். இடைவேளை……………………… https://bookday.in/a-kumaresans-books-beyond-obstacles-series-about-henry-millers-tropic-of-cancer-novel/
2 days 22 hours ago
சொந்த இடத்தைவிட்டு புலம்பெயர்வின் வலியை உணர்ந்த நாம், அந்த மக்களை அவர்களின் சொந்த இடத்தில் வாழ வசதிகள் அமைத்து கொடுப்பதே நல்லது
2 days 22 hours ago
சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார் இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும். பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்: ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும். உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்: காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும். ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்: மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால் அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும். உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்: ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும். நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக) உணரும் அனுமானமே இது. வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்: ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல் ஐதிகப்பிரமாணமாகும். இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும். இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும். இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும். 4. காட்சியளவையின் வகை மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா? ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும். வாயிற் காட்சி: கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும். பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை, இஃது ஒரு சுவை, இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும் (வாயில்-பொறி). மானதக் காட்சி: பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது. கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும். வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும். ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும். தன் வேதனைக் காட்சி பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில் மீது உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும். யோகக்காட்சி மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும். இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும். https://www.siddhantham.in/2025/05/3_90.html
2 days 22 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 days 23 hours ago
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது 13 Dec 2025, 11:15 AM பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். வழக்கு விபரம் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் விளக்கம் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். https://minnambalam.com/youtuber-savukku-shankar-arrested/
2 days 23 hours ago
தாராளமாக நிறுத்தலாம். எனக்கு பதிலளிக்குமாறு நான் உங்களை வற்புறுத்தினேனா? இல்லையே!
2 days 23 hours ago
சிறு பிள்ளை தனமாய் கேட்டு கொண்டு இருக்க முடியாது இனி உங்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை .
2 days 23 hours ago
யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை சனி, 13 டிசம்பர் 2025 05:46 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://jaffnazone.com/news/53156
2 days 23 hours ago
இந்த திரியிலும் உள்ளது.
2 days 23 hours ago
இதே இடத்தில் சிங்கள மீனவர்களின் வலைகள் அறுக்க பட்டால் சிங்கள கடல்படை பொங்கி எழுந்து இருக்கும் .
2 days 23 hours ago
ஆதாரத்தை சொல்லுங்க இருந்தால் தானே சொல்ல முடியும் .😁
2 days 23 hours ago
ஏற்கெனவே சோம்பேறிகள், அவர்களை அழைத்து வந்து மலை அட்டை உறிஞ்சியது போக மிஞ்சியதை உறிஞ்சி தாம் சுகமாக வாழ நினைக்கின்றனர். அவர்களும் வாழ வேண்டுமென்று நினைத்தால்; அவர்கள் வாழ்விடங்களிலேயே நிம்மதியாக, நிரந்தரமாக வாழ வழிசெய்ய வேண்டும். அதுதான் அவர்கள் விரும்பும் வாழ்க்கை. அதை விடுத்து அவர்களுக்கு என்ன தேவை, விருப்பம் என்று கேளாமல், நாம் நினைத்ததை திணிக்க முடியாது. மலையகத்தில் உள்ள அனைவரையும் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி வேலை வாய்ப்பு, வாழ்க்கை, வசதியளிக்க முடியுமா? வடக்கு கிழக்கிலே எத்தனையோ பேர் வேலையில்லாமல் அலைகிறார்கள். சும்மா ஜதார்த்ததை உணராமல் ஜாம்பவான் பேச்சு.
2 days 23 hours ago
மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார். மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் மீனவ கிராமங்களாக காணப்படுகின்றன. மேலும் தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள மீனவர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட மீனவ அமைப்புக்கள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அரச அதிபரை சந்திக்கும் போது முழுமையான விடையங்களை அரச அதிபரிடம் தெரிவிப்பதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மீனவர்கள் பாதிப்பை தான் வெளிக் கொண்டு வருவதாகவும் பாதிப்புகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சார்பாக 578 முறைப்பாடுகள் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாகியமை உள்ளடங்களாக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 578 நபர்களின் முறைப்பாடுகளை தவிர ஏனையவர்களின் பாதிப்புக்களும் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு பதியப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். எமக்கு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் மாவட்டத்தில் திணைக்களம் சார்பாக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மீனவர்கள் சார்பாக கடற்றொழில் உதவி பணிப்பாளர் கலந்து கொள்வார். முழுமையாக மீனவர்களின் விடயம் பேசப்பட வேண்டும். ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். உண்மையிலேயே மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 578 மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன், கடந்த மாதம் 27 ஆம் திகதியில் இருந்து இன்று வரை கடற்தொழில் செய்ய முடியாத சூழ்நிலை கடலில் காணப்படுகிறது. அனர்த்தம் என்றால் உடனடியாக உரிய திணைக்களங்கள் மீனவர்களுக்கு அறிவித்தல்களை வழங்குகின்றனர். மீனவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று. ஆனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாது விட்டால் அவர்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. இதுவரை மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட போதும் அரசினால் மீனவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ள நிலையில் மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்திற்குள்ளும் ஊடுருவும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விடையங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அதிகரித்துள்ளது.எமது மீனவர்களின் மீன்பிடி வலைகள் கடும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 27 ஆம் திகதி சுமார் 15 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நண்டு வலைகள் இந்திய இழுவைப்படகுகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=352264
2 days 23 hours ago
இப்ப சிங்களவர்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சனை ? அகதி யாகனும் என்று ?
2 days 23 hours ago
நேர்மையான யாழ்கள வாசகர்கள் அனைவரும் அதை அறிவார்கள்.
2 days 23 hours ago
வெல்லாவெளி தொல்பொருள் பதாகை விவகாரம்: 56 பேருக்கு வழக்கு December 13, 2025 மட்டக்களப்பு வெல்லாவெளியில் தொல்பொருள் பதாதை வைக்கவிடாமல் தடுத்த 56 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்ன் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2025,நவம்பர்,25 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு (11 ) நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிலையில் இவர்கள் அனைவருக்கும் சொந்தப் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 2026.01.09 ம் திகதிக்கு வழக்கு தவணை வழங்கப்பட்டது. இதில் ஒருவர் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/wellaveli-archaeological-banner-issue-56-people-charged/
2 days 23 hours ago
சிங்களவன் ஊரிலேயே காமம் தலைக்கு ஏறி, பாலியல் வன்புணர்வு செய்து கொண்டு திரிகின்ற இனம். இவர்களின் மதத் தலைவர்களான பிக்குகள் தான்… இவர்களுக்கு வழிகாட்டி. இவனை தூக்கி 25 வருசமாவது மறியலில் போடுங்க சார்.
2 days 23 hours ago
13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு December 13, 2025 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்த அவர், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர். தமிழ் – சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். வடக்கில் அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பகுதிக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் https://www.ilakku.org/13th-amendment-is-not-possible-namal-rajapaksa/
2 days 23 hours ago
தனிப்பட்ட அவதூறு அதை சொல்லுங்க பார்ப்பம் .
Checked
Tue, 12/16/2025 - 07:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed