புதிய பதிவுகள்2

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

2 months 3 weeks ago
இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும் அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

2 months 3 weeks ago
மன்னாரில் பாவிக்கப்பட்ட ஆஞ்செல்கை அ சங்கடம் என்ற வகை கடற்கலம். 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழரிடம் இரு வகையான கடற்கலங்கள் இருந்ததாக கிரேக்கத்து கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிபிளஸ் கூறுகிறது என்கிறார் 'MEMOIRS OF THE ASIATIC SOCIETY OF BENGAL' என்ற 1918—1923 ஆண்டு கால நூலின் 7ம் பாகத்திலுள்ள ஒரு பகுதியை எழுதிய Hornell James அவர்கள். இவர் தன் பகுதியின் நான்காம் மடலத்தில் (PART IV.—THE CLASSES OF VESSELS EMPLOYED BY INDIANS IN ANCIENT DAYS PRIOR TO PORTUGUESE MARITIME DOMINANCE.) பக்கம் 215 & 216இல் இக்கடற்கலங்கள் தொடர்பிலான விளக்கத்தை தந்துள்ளார். தேவையான படிமங்கள் அனைத்தும் பதிவிடப்பட்டுவிட்டதால், தமிழில் பதிவிடப்படுவது இடைநிறுத்தப்பட்டு ஆங்கிலத்தில் புதுத்திரி தொடங்கப்பட்டு நீட்டிக்கப்படும். நன்றி

வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்

2 months 3 weeks ago
சிறீதரன் எம்.பி இந்த வருட மாவீரர் தினநிகழ்வில் பங்குபற்ற மாட்டார் ...இப்பவே நெஞ்சு நோகுது என்றூ ஆசுப்பத்திரிய்ல் இருப்பதாக கேள்வி..

கொஞ்சம் ரசிக்க

2 months 3 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு... மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க... பெரிய விஷயம்... ஆமாம் மாப்பிள்ளை... சந்தோஷம்... நிம்மதியா இருக்கேன்.. ஒரே ஒரு சின்ன குறைதான் மாமா.. என்னது? உங்க பொண்ணுங்களை கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்... ஆமால்ல... அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும். பெரிய வேலையாய் போயிருக்கும் பாருங்க... மாப்பிள்ளை 😧" மாமனாரா கொக்கா!!! 😆" Voir la traduction

தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் ஜனாதிபதியின் ஆலோசகர் முஜிபுர் எம்.பி. சுட்டிக்காட்டு; குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறும் சவால்

2 months 3 weeks ago
இவைக்கு கூதல் விட்டுப்போச்சு....மாதாமாதம் அரசுடன் பேச்சுவார்த்தை தானே...

கருத்து படங்கள்

2 months 3 weeks ago
அதுதானே...செய்தித்தளங்கள் பம்முது என்று பார்த்தேன்....எப்புடி...பலே கில்லாடி சார் நீங்க.. இதைவிட ..இந்த செய்தியின்கீ ழ் கருத்திட்ட மூனாக்கள் ... இதற்காகத்தான் தங்கடை பெண்கள் முற்றாக மூடி மறைப்பது என்று ..திமிர் பதில் போட்டவை....இப்ப விளங்குது அவையோடை சமயத்தில்..ஒரு விதி இருக்காம்..ஆண் உடலுறவுக்கு எந்த நேரம் கேட்டாலும் பெண் படுக்கைக்கு...அந்த இடத்தில் போகவேண்டும் ..அதுதான் இந்த மூனா இந்த வெள்ளையை முசுலிம் பெண் என நினைத்து விட்டது போல இருக்கு.... என்னா சார் ...நீங்க..

ஆயுதப்படை நினைவேந்தல், பொப்பி மலர் தினம் அனுஷ்டிப்பு

2 months 3 weeks ago
16 Nov, 2025 | 06:15 PM ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் மிகுந்த கௌரவத்துடன் நடைபெற்றது. இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் (Cenotaph War Memorial) என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் (முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்) உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது, சர் எட்வின் லேன்ட்ஸீர் லூட்டென்ஸ் (Sir Edwin Landseer Lutyens) என்ற கட்டிடக் கலைஞரின் வடிவமைப்பாகும். இந்த நினைவுச் சின்னம் இலங்கையின் பழமையான மற்றும் பிரதானமான போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இங்கு வருடாந்த நினைவு தினத்தில் (Remembrance Day) நவம்பர் 11ஆம் திகதியை அண்மித்த ஞாயிற்றுக்கிழமை) தேசிய நினைவேந்தல் விழா நடத்தப்படுகிறது. இதன்போது, பிரதமர் நினைவுச் சின்னத்தில் பொப்பி மலர்க் கொத்தை வைத்து, உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தினார். முதலாம் உலகப் போர் காலம் முதல் இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதும் அவர்களின் உன்னதமான தியாகத்திற்குக் மரியாதைச் செலுத்துவதுமே இந்த வருடாந்த நினைவேந்தலின் பிரதான நோக்கமாகும். முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதற்காகப் போப்பி மலர் தினம் மகாபிரித்தானியாவால் 1919ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகிறது. இதில் பொப்பி மலர் (Poppy) பிரதான சின்னமாக இருந்து வருகிறது. பெல்ஜியப் போர்க்களத்தில், நண்பரின் மரணத்தால் துயருற்ற லெப்டினன்ட் கேர்ணல் ஜோன் மக்ரே (John McCrae) கல்லறைகளின் மீது வளர்ந்திருந்த பொப்பி மலர்களைப் பார்த்துக் கவிதை வடிக்கலானார். அவ்வாறு வடித்த "In Flanders Fields" என்னும் கவிதையே இந்த மலரை நிரந்தர நினைவுச்சின்னமாக அமைய முதன்மைக் காரணியாக அமைந்தது. பிற்காலத்தில், அமெரிக்க இளைஞர் சங்கத்தின் செயலாளராக இருந்த மொய்னா மைக்கல் (Moina Michael), பொப்பி மலர்களை விற்றுப் பெற்ற பணத்தை, இறந்த இராணுவ உறுப்பினர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த பொப்பி மலரின் முக்கியத்துவம் உலகளவில் உறுதிப்படுத்தப்பட்டது. பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கை ஆயுதப்படையின் மூத்த வீரர்களின் சங்கமும் ஆயுதப் படைத் தரப்பினரும் இணைந்து ஒழுங்குச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, முப்படைத் தளபதிகள், ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை ஆயுதப் படைகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பெருமளவு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/230512
Checked
Wed, 02/11/2026 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed