2 months 3 weeks ago
நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் .......! 😍
2 months 3 weeks ago
அரசியலாவது வெங்காயமாவது ........ தலைவர் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கின்றார் . .......! 😂
2 months 3 weeks ago
நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணி ஆரம்பம் வெள்ளி, 14 நவம்பர் 2025 03:56 AM தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது யாழ். மாநகர மேயர், பிரதி மேயர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்சிப்படுத்தலும், மாவீரர் நாள் நினைவேந்தலும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்த ஆண்டு அந்தப் பகுதியில் வழமையாக மாவீரர் நினைவேந்தல் பணிகளை முன்னெடுக்கும் தரப்புக்குப் போட்டியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்கே குறித்த காணியை வழங்க வேண்டும் எனக் கோரி வந்தனர். ஒரு காணியை இரண்டு தரப்புக்கள் கோரியதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது. இதையடுத்து யாழ். மாநகர சபையின் கடந்த அமர்வில் கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா, இம்முறை அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்து குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார். இந்த யோசனையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த யாழ். மாநகர சபையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்றனர். இதையடுத்தே குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது கருத்துத் தெரிவித்த மாநகர மேயரும், பிரதி மேயரும் "மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்." - என்று அழைப்பு விடுத்தனர். https://jaffnazone.com/news/52241
2 months 3 weeks ago
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த, அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார். தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர். வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர். தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார். இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி. அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீடியோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா? அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளார்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி. ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. https://akkinikkunchu.com/?p=348636
2 months 3 weeks ago
வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் November 14, 2025 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the vote) என கட்சி முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/budget-2026-sri-lanka-tamil-government-party-decides-not-to-participate-in-the-vote/
2 months 3 weeks ago
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு 14 Nov, 2025 | 12:51 PM யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துற்பாக்கியமும் ஏற்படும். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230332
2 months 3 weeks ago
”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்” - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில், வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும். இந்த மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே( இந்த நீர்ப்பாசன திட்டத்தில் அவர்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்த நிலையில் , கோத்தாபாய் அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் இந்த நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி, அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே இந்த நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம். இப்போது அந்தத் திட்டத்தை JVP அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் (அரசின் உதவியுடன்) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே என்றார். https://www.samakalam.com/வடக்கு-கிழக்கின்-இன-பரம்/
2 months 3 weeks ago
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடு இடிக்கப்பட்டது! adminNovember 14, 2025 டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ புகையிரத நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10ம் திகதி டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ புகையிரத நிலையம் அருகே, கார் ஒன்று வெடித்து சிதறிய நிலையில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்ததுடன் 13 பேர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காரை செலுத்தியவர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் முகமது உமர் நபி என தெரியவந்துள்ளதுடன் இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222653/
2 months 3 weeks ago
யாழ். நகரில் இன்று நீரிழிவு நடைபவனி! adminNovember 14, 2025 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடை பயணத்தில் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222643/
2 months 3 weeks ago
தெருநாய் அதிகரிப்பால் விபத்துகள், நாய்க்கடி பாதிப்புகள் அதிகரிப்பு 14 Nov, 2025 | 10:11 AM நாட்டில் தெருநாய்கடி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெருநாய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும் தேசிய விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் மேற்பட்ட நாய்கடி சம்பவங்கள் பதிவாகின்றன என தேசிய விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழுவின் மற்றுமொரு உறுப்பினர் கிஹான் தினுஷ்கா தெரிவித்துள்ளார். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு நாய் கடித்தால் ஏற்படும் பாதிப்புகளும், வெறிநாய்க்கடி நோய் பரவலும் அதிகரித்துள்ளன. அந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்யவும், நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறவும், பயனுள்ள நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் தேசிய விலங்கு நல நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/230314
2 months 3 weeks ago
Nov 13, 2025 - 10:18 PM சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் சொத்துக்களை ஈட்டிய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி, சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, 3 கோடி ரூபா பெறுமதியான மூன்று காணிகளையும், எஹெலியகொட இரத்தினபுரி வீதிக்கு அருகில் உள்ள 6 பேர்ச் காணியில் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஆவார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmhxnxiuh01ldo29nai4vzv5a
2 months 3 weeks ago
பட மூலாதாரம், ANI 14 நவம்பர் 2025, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பகல் 12 மணி நிலவரப்படி, பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 122 என்டிஏ189Seat count of என்டிஏ189 மகா கூட்டணி50Seat count of மகா கூட்டணி50 ஜேஎஸ்பி0Seat count of ஜேஎஸ்பி0 மற்ற கட்சிகள்4Seat count of மற்ற கட்சிகள்4 கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 12:23 PM சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும். முழு முடிவுகளையும் பார்க்க ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜன் சுராஜ் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் களம் கண்டார் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் எனும் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் போட்டியிட்டார். 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இவரது கட்சி நிறுத்தியது. காலை 10.30 மணி நிலவரப்படி, 1 தொகுதியில் மட்டுமே இவரது கட்சி முன்னிலை பெற்று வருகிறது. மைதிலி தாகூர் முன்னிலை பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty பிகாரின் அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மைதிலி தாகூர் முன்னிலை வகிக்கிறார். இந்த தொகுதியில் மைதிலியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வினோத் மிஸ்ரா மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் பிப்லப் குமார் சவுத்ரி போட்டியிட்டனர். தேஜஸ்வி யாதவ் பின்னடைவு பட மூலாதாரம், Getty Images பிகாரின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பகல் 11.30 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜகவின் சதீஷ்குமார் தேஜஸ்வி யாதவை விட 1200 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ்குமார் மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஞ்சல் குமார் போட்டியிட்டனர். தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு பட மூலாதாரம், Getty Images பிகாரின் மஹுவா தொகுதியில் ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தரவுகளின் படி, 2 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் லோக் ஜனசக்தி கட்சியின் சஞ்சய் குமார் சிங் முன்னிலை பெற்றுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் ஜன்சக்தி தள் எனும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். கேசரி லால் யாதவ் பின்னடைவு பிகார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான கேசரி லால் யாதவ், பின்னடைவை சந்தித்துள்ளார். சாப்ரா தொகுதியில் போட்டியிட்ட போஜ்புரி சினிமா நட்சத்திரமான கேசரி லால், சுமார் 1,600 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முக்கியத்துவம் ஏன்? இந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிகாரில் 1951ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த முறை பிகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட 9.6% அதிகம். ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களில் 8.15 சதவிகிதம் அதிகளவில் வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளர்களில் 62.98 சதவிகிதத்தினரும், பெண் வாக்காளர்களில் 71.78 சதவிகிதத்தினரும் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 3.51 கோடி பெண் வாக்காளர்களும் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ள பிகாரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக உயர்ந்துள்ளது. படக்குறிப்பு, பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம் நிதிஷ் குமாருக்கு சாதகமா? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு சற்று முன்பு, செப்டம்பர் மாதத்தில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கினார். அதில், பிகார் முழுவதும் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தொகை அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், தலா 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவொரு தொடர்ச்சியான திட்டம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. எனவே, பெண்களின் உற்சாகமான பங்கேற்பு நிதிஷ் குமாருக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கும் என்று கணித்துள்ளன. ஆக்ஸிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம். என்.டி.ஏ-வுக்கு 121 முதல் 141 இடங்களும், மகா கூட்டணிக்கு 98 முதல் 118 இடங்களும் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிகாரில் தேர்தல் களத்தில் இறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கலாம். டுடேஸ் சாணக்யாவின் கருத்துக் கணிப்புப்படி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 160 இடங்களைப் பெறலாம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 77 இடங்கள் கிடைக்கலாம். பட மூலாதாரம், Getty Images இருப்பினும், புதன்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 76 லட்சம் வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நிதிஷ் குமார் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்று கூறியுள்ளார். மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் கூறியபோது, மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நம்ப முடியுமா? வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மீது உளவியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர இது வேறெதுவும் இல்லை" என்று தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார். தேஜஸ்வி யாதவ் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் 85க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றியுள்ளார். பிகாரில் தான் ஆட்சி அமைத்தால் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். பிகார் மக்களில் 16 முதல் 18 சதவிகிதம் பேர் மட்டுமே நிதிஷை முதலமைச்சராக்க விரும்புவதாகக் காட்டிய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டிய தேஜஸ்வி, கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gpk4vvwklo
2 months 3 weeks ago
'பல விக்கெட் கீப்பர்களுக்கு இவரை பிடிக்காது' - கில்கிறிஸ்ட் செய்த மாற்றம் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 13 நவம்பர் 2025 ''முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்'' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது. நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், பாபா இந்திரஜித் என விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்ட இருவரிடம் பேசினோம். 'வெகுதூரம் பாய்ந்த கீப்பர்' தான் கிளவுஸ் வாங்க நினைத்தபோது, கில்கிறிஸ்ட் என்ன கிளவுஸ் வைத்திருந்தாரோ அதேபோல வாங்க வேண்டுமென பாபா இந்திரஜித் யோசித்திருக்கிறார். ஆடம் கில்கிறிஸ்டை மிகவும் ஸ்டைலிஷான, அதேநேரம் டெக்னிக்கலாக சிறந்த கீப்பர் என்கிறார் அவர். "அவர் ஒரு முழுமையான கீப்பர். ஸ்டம்புக்கு நெருக்கமாக இருக்கும் போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசும்போதும் நன்றாகச் செயல்படுவார். சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போதுகூட ஸ்டம்புக்கு பின்னாலேயே நின்று பந்துகளைப் பிடித்திருக்கிறார். அதேபோல் பெரியளவு திரும்பும் ஷேன் வார்னேவின் பந்துகளைப் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. அதையும் அவர் நன்றாகக் கையாண்டிருக்கிறார். பந்தைப் பிடிக்க நெடுந்தூரம் அவரால் பறக்கவும் பாயவும் முடியும்" என்றார். பட மூலாதாரம், Getty Images கில்கிறிஸ்ட்டின் இந்தப் பாயும் திறன், ஆஸ்திரேலிய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங்கையும் பலப்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன். இதுபற்றிப் பேசிய அவர், "கில்கிறிஸ்ட்டின் பவர் ஜம்ப் (power jump) அவருக்குப் பெரிய பலம். அதன் மூலம் அவரால் அதிக தூரம் போக முடியும். இது ஒரு வகையில் அந்த அணியின் ஸ்லிப் யூனிட்டையே பலப்படுத்தியது. பொதுவாகவே கீப்பர் திறமையாகச் செயல்படும்போது அது அந்த ஸ்லிப் யூனிட்டை பலப்படுத்தும். இதனால் அந்த ஸ்லிப் ஃபீல்டர்கள் கொஞ்சம் பின்னால் நிற்கலாம், சற்று இடைவெளி விட்டு விலகி நிற்கலாம். உதாரணமாக முதல் ஸ்லிப்பில் நிற்கும் வீரர் "one and a half slip" (முதல் ஸ்லிப்புக்கும் இரண்டாவது ஸ்லிப்புக்கும் நடுவில்) பொசிஷனில் நிற்கலாம். இவ்வாறாக நிற்பது அவர்களுக்கு கேட்ச் பிடிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும். அதனால் ஒட்டுமொத்தமாக அந்த ஸ்லிப் யூனிட் சிறப்பாகச் செயல்படும்" என்றார். ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த கீப்பர் மற்றும் சில சிறந்த ஃபீல்டர்கள் இருந்ததால், அவர்களின் ஸ்லிப் யூனிட் எப்போதும் அச்சுறுத்துவதாகவே இருந்தது என்று கூறுகிறார் ஆர்த்தி. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு சிறந்த கீப்பர் இருக்கும்போது ஸ்லிப் யூனிட் மேலும் வலுப்பெறுகிறது என்கிறார் ஆர்த்தி அதுமட்டுமல்லாமல் கில்கிறிஸ்ட்டின் தினசரி பயிற்சி முறை தனக்குமே உதவிகரமாக இருந்தது என்று அவர் கூறினார். "போட்டிகளுக்கு முன்பு ஒரு சிலர் பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடிப்போம். ஆனால், கில்கிறிஸ்ட் அப்படியல்ல. அவர் எளிதாக சில கேட்ச்கள் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார். அவருடைய காலும், கையும் நன்கு நகர வேண்டும், பந்து அவர் கிளவுஸ்களில் நன்கு அமர வேண்டும் என்பதுதான் அவருடைய தேவையாக இருக்கும். இதெல்லாம் சிறிய விஷயங்கள்தான். ஆனால், அதையெல்லாம் தன்னுடைய வழக்கமாக மாற்றியிருந்தார் கில்கிறிஸ்ட்" என்றார் ஆர்த்தி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சேர்ந்து மொத்தம் 905 ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார் கில்கிறிஸ்ட். இதன் மூலம் அதிக ஆட்டமிழப்புகளுக்குக் காரணமான வீரர்களின் பட்டியலில் மார்க் பவுச்சருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சராசரியாக ஒரு போட்டிக்கு 1.865 ஆட்டமிழப்புகள் செய்திருக்கிறார் அவர். பேட்டிங் மூலம் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியவர் விக்கெட் கீப்பர்களின் ரோலை கில்கிறிஸ்ட் மறுவரையறை செய்ததாகச் சொல்கிறார் இந்திரஜித். "அப்போதெல்லாம் கீப்பர்களின் வேலை கீப்பிங் செய்வது மட்டும்தான். அவர்களிடம் பேட்டிங்கில் அதிகம் எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், கில்கிறிஸ்ட் அதை மாற்றினார்" என்கிறார் அவர். "டி20 போட்டிகள் இல்லாத காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளையே அவர் அப்படித்தான் எதிர்கொண்டார். அவருடைய அதிரடியான ஆட்டம் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அவர் ஹெய்டன் போல் கட்டுமஸ்தான் ஆள் கிடையாது. இருந்தாலும் அவரால் எளிதாக பௌண்டரிக்கு வெளியே பந்தை அடிக்க முடிந்தது" என்றார் இந்திரஜித். அவரால் பிரத்யேகமாக ஒரு பேட்டராகவும் அணியில் ஆட முடியும், பிரத்யேகமாக கீப்பராகவும் அணியில் ஆட முடியும் என்றும் அவர் கூறினார். "ஆஸ்திரேலிய அணி என்றாலே அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயம் அவர்கள் அக்ரஸிவான வீரர்கள் என்பதுதான். ஆனால், அதற்கு மத்தியில் இவரை எல்லோருக்கும் பிடிக்கும். இவரிடம் ஒரு அமைதியான அக்ரஸன் இருக்கும். பேட்டிங்கில் அக்ரஸன் காட்டுவார். ஆனால், அவருடைய குணம் அப்படி இருக்காது" என்றார் இந்திரஜித். கீப்பர்கள் தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் பேட்டிங்காலும் பங்களிக்க முடியும் என்று ரொமேஷ் கலுவிதரனா முதலில் தொடங்கி வைத்ததை, கில்கிறிஸ்ட் அனைத்து ஃபார்மட்களுக்கும் எடுத்துச் சென்றார் என்கிறார் ஆர்த்தி. மேலும், "பொதுவாக கீப்பர்கள் கட் மற்றும் ஸ்வீப் ஷாட்களை நன்றாக அடிப்பார்கள் என்பார்கள். ஆனால், கில்கிறிஸ்ட் தன்னுடைய 'பவர் ஹிட்டிங்' மூலம் அதை மாற்றி அமைத்தார். ஒருநாள் போட்டிகளை அவர் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றார் என்று கண்டிப்பாக சொல்லலாம். நானுமே கூட அவரைப் போல் அதிரடியாக ஆடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், என்னால் அது முடியவில்லை" என்றும் ஆர்த்தி கூறினார். பட மூலாதாரம், Getty Images அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரோலையும் சிறப்பாகச் செய்த ஆல்ரவுண்டர் என்றே கில்கிறிஸ்ட்டை சொல்லலாம் என்றும் ஆர்த்தி சொல்கிறார். ஒருநாள் போட்டிகளில் 9619 ரன்கள் எடுத்திருக்கும் கில்கிறிஸ்ட், 96.94 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவரது ஸ்டிரைக் ரேட் 81.95! விக்கெட் கீப்பர்களின் பேட்டிங் திறன் பற்றிய பார்வையை கில்கிறிஸ்ட் மாற்றியது பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரவுமே ஒருமுறை பேசியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோவிடம் பேசியபோது, "என்னிடம் மட்டுமல்ல, அணிகளின் தேர்வாளர்கள் மத்தியிலும் கூட அவர் தாக்கம் ஏற்படுத்தினார். கீப்பர்கள் பேட்டிங்கில் பங்களிக்காவிட்டால் அவர்கள் இடம் கேள்விக்குறி என்ற சூழலை அவர் ஏற்படுத்தினார். அதனால் கீப்பர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற சவாலை அனைவரின் முன்பும் அவர் வைத்தார். பல ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு நிச்சயம் கில்கிறிஸ்ட்டைப் பிடிக்காது. ஏனெனில், அந்த ரோலுக்கு முடிவுரை எழுதியவர் அவர். ஆனால், நான், தோனி போன்றவர்கள் அவர் ஏற்படுத்திய இந்த மாற்றத்துக்கு கடமைப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார் சங்கக்காரா. பட மூலாதாரம், Getty Images ஆச்சர்யப்பட வைத்த கில்கிறிஸ்ட்டின் குணம் "பேட்டிங், கீப்பிங் எல்லாவற்றையும்விட, கில்கிறிஸ்ட் என்றாலே நினைவுக்கு வருவது உலகக் கோப்பை போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும் அவர் வெளியேறியதுதான்" என்கிறார் ஆர்த்தி. 2003 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அரவிந்த் டி சில்வா வீசிய ஒரு பந்தை கில்கிறிஸ்ட் ஸ்வீப் ஆடுவார். அதை இலங்கை கீப்பர் சங்கக்காரா பிடித்துவிட்டு அப்பீல் செய்வார். ஆனால், நடுவர் ரூடி கோர்ட்ஸன் அவுட் கொடுக்கமாட்டார். இலங்கை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, கில்கிறிஸ்ட் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்த்தி, "அவர் மிகவும் நேர்மையானவர் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அந்த இடத்தில் தன் மனதுக்கு என்ன தோன்றியதோ அதைச் செய்திருக்கிறார். இதுபோன்ற தருணங்களில் தான் ஒரு நபரின் அடிப்படை குணங்கள் தெரியவரும்" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2003 உலகக் கோப்பை அரையிறுதியில் நடுவர் அவுட் கொடுக்காதபோதும் வெளியேறினார் கில்கிறிஸ்ட் மேலும், "அப்படியொரு தருணத்தில் யாரும் அவ்வளவு எளிதாக அப்படிச் செய்துவிடமாட்டார்கள். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை உலகின் மிகப் பெரிய அரங்கில் செய்யத் துணிந்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றும் ஆர்த்தி தெரிவித்தார். கில்கிறிஸ்ட்டிடம் தனக்குப் பிடித்த இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார் ஆர்த்தி. "அவர் இயான் ஹீலியின் மிகப் பெரிய இடத்தை ஆஸ்திரேலிய அணியில் நிரப்பினார். அவ்வளவு பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயமில்லை. கில்கிறிஸ்ட் அதை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாகவும் செய்தார். அதுவும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2008ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார் கில்கிறிஸ்ட் விமர்சனங்களும் சர்ச்சைகளும் தன்னுடைய குணத்துக்காக கில்கிறிஸ்ட் கொண்டாடப்பட்டாலும், சில தருணங்களில் அவர்மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அவர் இலங்கைக்கு எதிரான அந்த அரையிறுதியில் வெளியேறியதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு வீரர் அப்படிச் செல்வது என்பது தனிப்பட்ட முடிவாக இருக்கக்கூடாது, அது அணியின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும் என்று முன்னணி வீரர்கள் சிலர் கருதினார்கள். மேலும், இப்படி செய்வதன்மூலம், அது அப்படி வெளியே செல்லாத மற்ற வீரர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்ற தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் அப்போது வாதிட்டார்கள். அதேபோல், கில்கிறிஸ்ட் தன்னுடைய சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் பற்றி எழுதியிருந்த கருத்துகளும் கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 'மன்கி-கேட்' (Monkey-Gate) பிரச்னையின் விசாரணைகளின்போது சச்சின் தன்னுடைய அறிக்கைகளை மாற்றியதாக 'ட்ரூ கலர்ஸ்' (True Colours) எனும் தன் சுயசரிதையில் குறிப்பிட்டார் அவர். அதுமட்டுமல்லாமல் போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்கச் சென்றபோது சச்சின் அங்கு இல்லை என்று குறிப்பிட்டு அவருடைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மீது கேள்வி எழுப்பியிருந்தார் கில்கிறிஸ்ட். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முத்தையா முரளிதரனின் பந்துவீச்சையும் தன் சுயசரிதையில் விமர்சித்திருந்த கில்கிறிஸ்ட், அவர் மீண்டும் பந்துவீச அனுமதிக்க ஐ.சி.சி விதிகளை மாற்றியதாக அந்த அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தினார். இப்படி பெரிய வீரர்களின் மதிப்பைக் கேள்வி கேட்டு கில்கிறிஸ்ட் தன்னுடைய மதிப்பைத்தான் கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போது பேசியிருந்தார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மார்வன் அட்டப்பட்டு. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70jyp73kd0o
2 months 3 weeks ago
எல்லா விதத்திலும் அலசி இருக்கிறேன். மிக சுருக்கமாக, இங்கு எவர் எதை சொன்னாலும், அரசு எப்படி பார்க்கிறது என்பதே மிக முக்கியம். இலாபம், நட்டம், முறிவு - எவற்றிலும் ஒரேபார்வை - வரி ஏய்க்கப்படவில்லை ( என்ற எடுகோளின் அடிப்படையில்), எனவே நாமம் இல்லை. அதன் மறுவளமாக, இலாபத்தை கொண்டு நாமம் (ஏய்த்தல்), நட்டம், முறிவை பாவித்து நாமம் (ஏய்ப்பு) போடப்பட்டு இருக்கிறதா என்பதையும் ஆராயும். இதற்கு uk வரித்திணைக்களம் பாவிக்கும் வெளியே தெரிந்த கணனி அமைப்பு connect. ( இரகசிய முனைவுகள், அமைப்புக்கள் இருக்கும். ) (நான் சொல்லிய மற்றவை யதார்த்த விபரங்கள். இவை சுவாரசியம் இல்லைத்தான், hard facts, கற்பனை கதை இல்லை) குறிப்பாக, இந்த முறிவில் வரிக்கு (அவர்கள், மற்றும் கம்பனி) நாமம் (ஏய்த்தல்) போட்டதற்கு எந்த பகிரங்க ஆதாரம் இல்லை. இருக்கும் ஆதாரமும், 250 மில்லியன், நாமத்துக்கு (ஏய்த்தல்) எதிர் ஆக இருக்கிறது. (முன்பு யோசித்து இட்டு, எழுதியும் விட்டு, பிரதிபண்ணப்படாமல் விடப்ப்பட்டு விட்டது.) சிலர் சொல்வதின் படி, வரி அறவிடக்கடிய இலாபம் இருந்தால் (அதாவது வரி திணைக்களத்துக்கு காட்டினால் ), நாமம் இருப்பதற்கு இடம் இல்லை என்று நிலை உருவாகும். (அதாவது,அவர்களின் விளக்கப்படி, அந்த நிலையில் நாமத்துக்கு வரி திணைக்களம் விசாரிக்க, ஆராய தேவை இல்லை) இது அவர்கள் வெளியே சொல்லாத (உணராத) ஒரு உப உண்மை கருத்து (corollary).
2 months 3 weeks ago
வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று Nov 14, 2025 - 07:26 AM 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmhy7il7q01lho29nyz2krtk5
2 months 3 weeks ago
அததெரண கருத்துப்படம்.
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்! நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரசிக பீரிஸ் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியிருந்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவி விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். 2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் அவர் பங்காற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452733
2 months 3 weeks ago
ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்! அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் திட்டத்தில் சட்டமியற்றுபவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1452747
2 months 3 weeks ago
இனி அடுத்தது இந்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு புனித யாத்திரையாக பிரகடனம் அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுததல் 😂 இராமனின் மளைவி சீதையின் கோவிலுக்கு அரச காணியை ஏற்கெனவே தானமாக கொடுத்து விட்டனர்
Checked
Wed, 02/11/2026 - 08:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed