புதிய பதிவுகள்2

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

2 months 4 weeks ago
அவர்களுக்குப் புரியும். புரிந்தும் என்ன பயன் ? மீண்டும் இதே நபர்களே தேர்தலில் நின்று வெல்கிறார்கள். அல்லது மாற்றீடாக ஒரு பைத்தியத்தை வெல்ல வைக்கிறார்கள்.

நிரூபணவாதி

2 months 4 weeks ago
முயற்சி பண்ணினால் கடவுள் எழுதிக்கொடுக்கும் அந்த காகிதமும் கிடைக்கும் ...வாழ்த்துக்கள் ரசோ.. இடக்கு மடக்கு எழுத்துக்கள்.... அதை எவர்மூலம் வாசித்தாலிம் சிறப்பு... நானும் எத்தனயோ விடையங்களை எழுத நினைக்கின்றேன் ...சோம்பல்தனம் டடுத்து விடுகின்றது...

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

2 months 4 weeks ago
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸார் ஈடுபடவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கம் 12 Nov, 2025 | 04:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது. தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது. கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/230180

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 months 4 weeks ago
'இந்திய அணி கொடுத்த பிறந்த நாள் பரிசு' - மகளிர் கிரிக்கெட் அணியில் பணியாற்றிய தமிழக மருத்துவர் பட மூலாதாரம், Harini Muralidharan கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி. இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள், இந்திய அணி தோல்விகளிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், இந்த அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்த விஷயங்கள் என இந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் ஹரிணி. கேப்டன், துணைக் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் ஆகியோர் முக்கியமான தருணங்களில் என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்மிடம் அவர் கூறினார். உலக சாம்பியன் அணியின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அந்த உணர்வு எப்படி இருக்கிறது? உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே பெரிய விஷயம். அதற்கே முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன்பிறகு அந்தப் பயணத்தில் ஒன்றாக இருந்து, அணியோடு வெற்றி, தோல்விகள் அனைத்தையும் சந்தித்து, அந்த உலகக் கோப்பையையும் வென்ற அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த நிமிடங்கள் எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தான் வந்தது. சொல்லப்போனால் அப்போது எதுவுமே தோன்றவில்லை, ஆனால் எங்களைச் சுற்றிப் பேசிய ஒரு விஷயம் பின்பு புரிந்தது. அது என்னவெனில், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எப்படி 1983 உலகக் கோப்பையோ அதுபோல் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வருட வெற்றி என்றார்கள். அதைக் கேட்கும்போது புல்லரித்தது. இது மிகவும் விசேஷமான ஒரு தருணம். பட மூலாதாரம், Harini Muralidharan படக்குறிப்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன் ஒரு கிரிக்கெட் அணியில் உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது? இந்த அணியில் மருத்துவராக உங்களுடைய பங்கு என்ன? மருத்துவம் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது சிலர் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தை பரிந்துரைத்தனர். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, பாசு சங்கரிடம் (இந்திய அணிக்கு ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தவர்) இன்டர்ன்ஷிப் (internship) செய்தேன். அப்போது ஒரு மாதத்திலேயே எனக்கு இதுதான் எதிர்காலம் என்று தோன்றிவிட்டது. அதன்பிறகு பிரிட்டனில் முதுகலை பட்டம் பெற்றேன். இப்போது ஆர்சிபி (RCB), இந்திய அணி என்று பயணிக்கிறேன். ஸ்போர்ட்ஸ் மருத்துவம் என்பது 'காயம் மேலான்மை' (injury management) பற்றியது. முக்கியமாக ஒரு காயம் ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம், ஒருவேளை காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்பன முக்கியமான விஷயங்கள். அதிலிருந்து தொடங்கி, ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுப்பது எப்படி என்பதிலும் நாங்கள் பங்களிக்கவேண்டும். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் ஊட்டச்சத்து, கொஞ்சம் உளவியல் ஆகியவையும் சேர்ந்ததுதான் ஸ்போர்ட்ஸ் மருத்துவம். இதுவே ஒரு அணிக்குள் ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் (strength & conditioning) பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், உளவியல் ஆலோசகர் என தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருப்பார்கள். அதேசமயம் வீரர்களும் தனியாக தங்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சியாளர்கள் வைத்திருப்பார்கள். அப்படியிருக்கும்போது நான் முக்கியமாக கவனத்தில் கொள்வது, ஒரு தொடருக்கு நடுவே எந்த மாற்றமும் கொண்டுவரக்கூடாது என்பது. அந்தந்த தருணங்களில் அந்த வீரருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும். காயம் மேலாண்மை என்று பேசும்போது, இந்த இந்திய அணியில் உங்களுக்கு பல சவால்கள் இருந்திருக்கும். ஐந்து வாரங்கள் நடக்கும் ஒரு மிகப் பெரிய தொடரில் அனைவரையும் ஃபிட்டாக வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய சவால்தானே? பொதுவாகவே இப்போது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி பெண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஆஃப் சீசன் (Off Season - போட்டிகள் இல்லாத காலகட்டம்) என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒரு வீரரின் ஃபிட்னஸ் முன்னேற்றம் பற்றிய எங்களுடைய திட்டங்கள் ஓய்வு நேரத்தை பொறுத்துத்தான் அமையும். ஆனால், இப்போது வீரர்களுக்கு அவ்வளவாக நேரமே கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரெகவரி நேரம் (recovery time) மிகவும் குறைவு. இந்த உலகக் கோப்பைக்கு முன்புகூட அவர்கள் ஒரு தொடரை முடித்துவிட்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) நேராக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அப்படியிக்கும்போது அதன் தாக்கம் நிச்சயம் இதில் இருக்கும். ஆனால், நான் அதை சவால் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு வீரருக்குமான தேவை என்ன, அவர்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறார்கள், அவர்களின் ரெகவரி நேரம் என்ன என்பதை கணக்கிட்டோம். ஒரு சிறு வலியாக இருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும், ஃபிசியோ தேவையா, மருந்துகள் தேவையா, மருந்துகள் என்றால் என்ன கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டோம். உதாரணமாக ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) கொடுக்கும்போது உடல் பலவீனமாகும். அதனால் அனைத்து விஷயங்களையும் சரியாக அலசி ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா சரி, இந்த உலகக் கோப்பையின் முக்கிய தருணங்களைப் பற்றிப் பேசுவோம்... லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக 3 போட்டிகளைத் தோற்றது. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டு வந்தது எப்படி? அதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்னென்ன? இந்த அணியில் நான் பார்த்த நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. அந்தத் தோல்விகள் அவர்களுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தன. ஆனால், அதை யாருமே நெகடிவாக வெளிக்காட்டவே இல்லை. 'இன்று நாம் தோற்றுவிட்டோம், அடுத்த போட்டியில் ஜெயித்துவிடலாம்' என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். நானாக இருக்கட்டும், அணியில் இருந்த பயிற்சியாளர் குழுவாகட்டும், அனைவருமே உரையாடல்களை பாசிடிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். யாரிடமும் தோல்வியைப் பற்றிப் பேசாமல், அடுத்த போட்டிக்கு, அடுத்த பயிற்சிக்கு என்ன செய்யப்போகிறோம், வீரர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்யப்போகிறோம், அவர்களை எப்படி அடுத்த வெற்றிக்குத் தயார் செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் உரையாடல்களாக இருந்தது. அனைவருமே அடுத்த நாள் பற்றித்தான் யோசித்தார்களே தவிர, முந்தைய நாள் பற்றி யாரும் பேசவில்லை. அதுவே வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர் குழுவில் யாரும் அந்தத் தோல்விகளைப் பற்றிப் பேசவில்லை எனும்போது, 'அவர்கள் நம்மை நம்புகிறார்கள். நமக்காக உழைக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்ககூடும். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே! ஏனெனில், தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு அரையிறுதி இடம் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விக்குப் பின் என்ன மாற்றம் நடந்தது? நிச்சயமாக அந்த மூன்றாவது தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அந்தத் தொடரின்போது வீராங்கனைகளின் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். 'இந்தப் போட்டியை விட்டுவிட்டோமே' என்ற கவலை அவர்களிடத்தில் இருந்தது. அங்கு நடந்த அழகான விஷயம் என்னவெனில், அணியின் கேப்டனும் (ஹர்மன்ப்ரீத் கவுர்) துணைக் கேப்டனும் (ஸ்மிரிதி மந்தனா) பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார்கள். 'இது எங்கள் அணி, அந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம், நாங்கள் இந்த அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள். கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் இன்னொரு அழகான விஷயம் சொன்னார்கள். அங்கிருந்த சப்போர்ட் ஸ்டாஃப் (support staff) அனைவரையும் பார்த்து உங்களுக்காக இதை வென்றுகொடுக்கிறோம் என்றார்கள். வீராங்கனைகள் எங்களுக்காக பேசியது மிகவும் சிறப்பான ஓர் உணர்வைக் கொடுத்தது. இந்த வீராங்கனைகள் அவர்களுக்காக என்று நினைக்காமல், ஒருவருக்கொருவர் ஆடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அதுதான் இந்த அணியின் சிறப்பம்சம். நீங்கள் சொன்னதுபோல், ஸ்மிரிதி தானே அந்தத் தோல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார். தன்னுடைய விக்கெட் தான் தோல்விக்கு வித்திட்டது என்று வெளிப்படையாக சொன்னார். சொன்னதுபோல் பொறுப்பை ஏற்று அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரை ஆர்சிபி அணியில் இன்னும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இங்கிலாந்து டிஸ்மிசல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அடுத்த சில தினங்களில் ஸ்மிரிதியிடம் என்ன மாறியது? அவரிடம் எதுவும் அதிகமாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. அவர் தலைமைப்பண்பை நன்கு வெளிப்படுத்தினார் என்றுதான் நான் சொல்வேன். ஸ்மிரிதி அன்று களமிறங்கும்போது 'நான் என்னுடைய 100% கொடுப்பேன் என்றுதான் இறங்கினார். ஆனால், அவர் எப்போதுமே அந்த மனநிலையில் தான் களமிறங்குவார். அவர் அதே மனநிலையில் தான் இருந்தார். அதேசமயம், என்னதான் பொறுப்பை அவர் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டாலும், இந்த இந்திய யூனிட் எப்போதும் ஓர் அணியாகவே செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருமே அந்தப் போட்டிக்கு நன்கு தயாரானார்கள். அந்தப் போட்டிக்கு முன்பு நடந்த 2 பயிற்சி செஷன்களிலுமே மிகவும் தீவிரமாக பயிற்சியெடுத்தார்கள். அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இருவரும் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டனர் என்கிறார் மருத்துவர் ஹரிணி. அந்த இங்கிலாந்து தோல்வி உங்களுக்கு பெர்சனலாகவும் வருத்தமளித்திருக்குமே! ஏனெனில், அன்று (அக்டோபர் 19) உங்களுடைய பிறந்த நாள் வேறு... நான் இந்த பணிக்கு விண்ணப்பித்த பிறகு, 'என் பிறந்தநாளன்று இந்திய அணியுடன் இருக்கவேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 2 தோல்விகளுக்குப் பிறகு அன்று வீராங்கனைகள் சற்று பாசிடிவாகத்தான் இருந்தார்கள். 'இன்னைக்கு எனக்காக ஜெயித்துக் கொடுத்திடுங்க' என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், போட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தது. அந்த நிலையிலும் கூட வீராங்கனைகள் கேக் வெட்டுவதற்காக எடுத்துவந்தார்கள். நான் வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் கேக் வெட்ட வைத்தார்கள். எல்லாம் முடித்து கிளம்பும்போது பேருந்தில் ஜெமி (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) அருகில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவர்தான், 'சாரி மேம் உங்களுக்காக ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடியவில்லை' என்று வருந்தி கூறினார். 'பரவாயில்லை ஜெமி, 2ம் தேதி (நவம்பர் 2 - இறுதிப் போட்டி நடந்த நாள்) பரிசு கொடுங்கள் என்று சொன்னேன். அன்று இறுதிப் போட்டியை வென்றதும், பரிசுக்கு நன்றி என்று ஜெமியிடம் சொன்னேன். கட்டிப்பிடித்து 'ஹேப்பி பர்த்டே மேம்' என்று அவர் சொல்லிச் சென்றார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஒரு மிக முக்கியமான செயல்பாட்டை இந்த உலகக் கோப்பையில் கொடுத்தார். ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடரின் தொடக்கத்தில் இரண்டு டக் அவுட்கள், பின்னர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், அதன்பிறகு பேட்டிங் பொசிஷன் மாற்றம் வேறு. அனைத்தையும் கடந்து அசத்தினார். ஆனால், அவரும் கூட உளவியல் ரீதியாக கஷ்டப்பட்டதாகக் கூறினார். நீங்களும் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் உளவியலும் ஒரு அங்கம் என்று சொன்னீர்கள். உங்கள் பார்வையில் ஜெமியின் இந்தப் பயணம் எப்படி இருந்தது? ஜெமி போன்று ஒரு பாசிடிவான குதூகலமான ஒரு ஆளைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர் அவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார் என்பதே அந்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் தன்னுடைய அறையில் அந்த உணர்வுகளோடு போராடியிருக்கிறார். அதை நினைக்கும்போதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவர் வெளியில் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வுகளை காட்டிக்கொள்ளவில்லை. அவர் எல்லோர் மீதும் அக்கறை செலுத்துவார், அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்துவார். மும்பையில் அவர் வீட்டில் இருந்து அவருக்காக ஏதாவது உணவுப்பொருள் வருகிறதென்றால், அது மொத்த அணிக்கும் வருமாறு பார்த்துக்கொள்வார். மிகவும் பாசிடிவான நபர் அவர். அந்த தருணத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கும் ஒருவர் அவர். அவுட் ஆனாலும் கூட, அடுத்து ஃபீல்டிங்கில் எப்படி பங்களிக்கலாம் என்று யோசிப்பவர். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அணிக்காகத்தான். அதுதான் முதலில். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகக் கோப்பையின்போது உளவியல் ரீதியாக தான் அவதிப்பட்டதாகக் கூறியிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 338 என்ற இலக்கை அதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சேஸ் செய்ததில்லை. அதை இந்தியா மிகப் பெரிய அரங்கில் நிகழ்த்திக் காட்டியது. ஆனால், அசாத்தியம் என்று கருதப்பட்ட விஷயம் எப்படி சாத்தியமானது. இன்னிங்ஸ் இடைவெளியில் என்ன நடந்தது? அப்போது யாரும் அதிகமாகப் பேசிய நினைவு இல்லை. அனைவரும் தயாராகிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஒரேயொரு விஷயத்தை அங்கிருந்த போர்டில் ஒரு விஷயத்தை எழுதினார். 'நாம் அவர்களை விட 1 ரன் அதிகமாக எடுப்போம்' என்பதை எழுதிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். எல்லோரும் தயாரானார்கள். சென்று கூடுதலாக அந்த ரன்களையும் எடுத்துவிட்டார்கள். தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று ஓர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார். அவர் இந்த அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? நான் பார்த்தவரைக்கும் அவர் மிகவும் நிதானமான நம்பிக்கையான பயிற்சியாளர். அவருக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன தேவையோ அதை சரியாகத் திட்டமிட்டு, சரியாக அதை தொடர்புகொள்கிறார். இது முதல் விஷயம். இரண்டாவதாக, ஒரு வீரரின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வீரரை 100% நம்புகிறார். அந்த வீராங்கனை கொடுக்கும் கருத்துகளை (feedback) ஏற்றுக்கொண்டு திட்டமிடுகிறார். வீரர்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் அதுதான். 'நீங்கள் இந்த விஷயத்தில் வல்லுநர், இதுதான் சிறந்தது என்று நீங்கள் பரிந்துரைத்தால் நாம் அதைச் செய்வோம்' என்கிறார். அவர் எதையும் முயற்சி செய்யாமல் விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் செய்தால் நல்ல முடிவு கிடைக்குமா, அதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதை நாம் செய்துவிடுவோம் என்று சொல்பவர். இதுவொரு மிகச் சிறந்த பண்பு. ஒவ்வொருவரின் மீதும் மரியாதை செலுத்தி, அவர்கள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது இந்த அணி ஒரு குடும்பம் போல் ஆகிவிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான அமோல் மஜும்தார் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடர் இந்த வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? டபிள்யூ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிகப் பெரியது. அதை மறுக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் தொடர் அட்டவணைகள் என்பது அவ்வளவாக இருந்திருக்கவில்லை. நம்முடைய இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று தேசிய அணிக்கு வீரர்களை அடையாளம் காண்பது என்பது நடைமுறையில் கடினமான ஒன்று. இந்த இடத்தில் டபிள்யூ.பி.எல் மேடை நன்கு இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியிருக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தரத்தில், ஃபிட்னஸில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சீசனில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இங்கு வாய்ப்பு பெற்ற வீராங்கனைகள் பிரகாசமாக ஜொலிப்பதற்கும், புதிதாக வீராங்கனைகள் விளையாட ஆசைப்படுவதற்கும் இது ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இவ்வளவு ஏன் எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்கள் கூட நிறையப் பேர் அங்கிருந்துதான் வந்திருக்கிறோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0rpyd1pkd4o

நிரூபணவாதி

2 months 4 weeks ago
🤣................ 'கடவுள் இருக்காரு அல்வாயன்...............', ஆனால் கோயில் மண்டபத்தில் வைத்து எனக்கு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு அவர் என்னோடு இதுவரை அவ்வளவு நெருக்கம் இல்லை போல............ 'மானிடனே, உன்னுள் இருந்து எழுதுவதும் நானே........... அல்வாயனின் உள்ளே இருந்து வாசிப்பதும் நானே..................' என்று இன்று இரவு கனவில் வந்து நிற்கப் போகின்றார்............🤣.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

2 months 4 weeks ago
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் . அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார். இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார். இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/230188

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

2 months 4 weeks ago
எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

2 months 4 weeks ago
காஜலிச கோட்ப்பாட்டில் இந்த பிரபஞ்சத்தில் மூடர்களால் உருவான எடுப்பது (Take) கொடுப்பது (Give) என்ற துஸ்பிரயோகமே இல்லை. பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு. அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது இந்த நொடியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருக்கும் சூரியன்/ சந்திரன் தன் ஒளியை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் காற்று தான் சுமந்திருக்கும் ஓட்ஸிசனை பகிர்ந்துகொள்ளும் அவ்வாறு கண்ணுக்கு தெரியாத பல மூல கூறுகள் ஒவ்வொன்றும் பகிர்வதால் இந்த பிரபஞ்சம் நீள்கிறது அந்த நொடியில் உங்கள் அருகில் இருக்கும் மூல கூறுகளுடன் எதை பகிர முடியுமோ அதை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கையில் தண்ணீர் இருந்தால் ஒரு செடிக்கு ஊற்றுங்கள் விலங்குகள் பறவைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். இந்த பிரபஞ்ச பயணத்தில் தொடருங்கள் ......... ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்

2 months 4 weeks ago
11 Nov, 2025 | 02:20 PM (நெவில் அன்தனி) இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார். ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார. மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கோப்பை பிரிவு கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே ஆகாஷ் இந்த இரண்டு சாதனைகளையும் நிலைநாட்டினார். மேகாலயா அணியின் முதல் இன்னிங்ஸில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஆடுகளம் நுழைந்த ஆகாஷ் சௌதரி, முதலாவது பந்தில் ஓட்டம் பெறாததுடன் அடுத்த 2 பந்துகளில் ஒற்றைகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து இடதுகை சுழல்பந்துவீச்சாளர் லிமார் தாபியின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ் சௌதரி தொடர்ச்சியாக 6 சிக்ஸ்களை விளாசினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியவர்கள் வரிசையில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள் - 1968), ரவி ஷாஸ்திரி (இந்தியா - 1985) ஆகியோருடன் மூன்றாவது வீரராக ஆகாஷ் சௌதரி இணைந்துகொண்டார். அதன் பின்னர் மற்றொரு சுழல்பந்துவீச்சாளரான ரி.என்.ஆர். மோஹித்தின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸ்களாக அடித்து 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை விளாசிய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இசெக்ஸ் அணிக்கு எதிராக லெஸ்டர்ஷயர் வீரர் வெய்ன் வைட் 2012இல் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததே முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது. ஆகாஷ் அரைச் சதம் பூர்த்திசெய்ததும் மேகாலய அணி தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்கள் இழப்புக்கு 629 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. அருணாச்சல பிரதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு சுரண்டதுடன் பலோ ஒன்னில் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 446 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சௌதரி முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். பந்துவீச்சில் 31 போட்டிகளில் 90 விக்கெட்களைக் கைப்பற்றி ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக ஆகாஷ் சௌதரி முன்னேறி வருகிறார். https://www.virakesari.lk/article/230081

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

2 months 4 weeks ago
பொதுவாக உலகில் ஆண்களை விடப் பெண்கள் விகிதாசாரப்படி அதிகம். இதற்கான முக்கிய காரணம் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகமானது. எப்படியிருந்தாலும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள். 😁

சுறாவின் ரம்பம் போன்ற பற்களில் சிக்கி உயிர் பிழைத்த ஆய்வாளரின் திகில் அனுபவம்

2 months 4 weeks ago
பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ் கட்டுரை தகவல் ரஃபேல் அபுசைடா பிபிசி நியூஸ் முண்டோ 12 நவம்பர் 2025, 08:40 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கலாம்.) தன்னுடைய மண்டை ஓட்டின் மீது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமுடைய பெண் கலாபகோஸ் சுறாவின் தாடை ஏற்படுத்திய அழுத்தத்தை மௌரிசியோ ஹோயோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். தனது கழுத்து நரம்பை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி முயற்சியில் தலையை சாய்க்கக் கூட நேரமில்லாத வகையில் அது அவரை நோக்கி திடுக்கிடும் வேகத்தில் வந்தது. "அது தன் தாடையை மூடிக் கொண்டபோது, சுறா கடித்த அழுத்தத்தை உணர்ந்தேன், பின் ஒரு நொடியில் மீண்டும் தாடையை திறந்து என்னை தப்பிச் செல்ல அனுமதித்தது," என மெக்ஸிகோவின் பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஹோயோஸ் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். அச்சமயத்தில், சுறாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து ஒருமாதமே ஆகியிருந்தது. கடல் உயிரியலாளரான ஹோயோஸ், சுறாக்களை அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு சென்று ஆராய்வதில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை சுறா ஒன்று தாக்கியது. முகத்தில் ஏற்பட்ட காயத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர், தான் மீண்டு வந்தது "நம்ப முடியாததாக உள்ளது" என்றும், தன்னை தாக்கிய சுறாவை தான் மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கூறினார். படக்குறிப்பு, சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ் கொக்கோஸ் தீவில் (Cocos Island) ஹோயோஸுக்கு நடந்தது, ஆபத்து என தான் நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ளும்போது விலங்குகளின் இயல்பான நடத்தையின் விளைவு அது. "நாய் கடித்தது போன்று இருந்தது," என்கிறார் அவர். "ஒரு நாய் தனக்கு அருகில் வரும்போது மற்றொரு நாய் அதை விரைந்து கடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது அந்த நாய்க்கு வலிக்காது, ஆனால் நெருங்கி வரும் நாயை அமைதிப்படுத்தும்." ஹோயோஸ் சகாக்களுடன் இணைந்து தன் வேலையின் ஒரு பகுதியாக சுறாக்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றுக்கு ஒலிப்புலன் சார்ந்த பட்டைகளை (acoustic tags) பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் சுறா இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அவருக்கு எச்சரித்தனர். அது 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது, தான் வந்த படகை செலுத்தியவரிடம் "தான் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருப்பேன்" என கூறியுள்ளார். பின்னர் நீருக்குள் மெல்ல மூழ்க ஆரம்பித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும் சுறாவை எதிர்கொண்டது குறித்து ஹோயோஸ் கூறினார்: "3-3.5 மீட்டர் (11.5 அடி) நீளமுடைய அந்த பெண் சுறா நீந்தி அடிப்பகுதியை நோக்கிச் சென்றது, நான் அதன் முதுகெலும்பு துடுப்பில் டேக்-ஐ பொருத்துவதற்கு ஏற்றபடி இருந்தேன்." ஆனால், தனது பல தசாப்த பணியில் பலவித சுறாக்களுக்கு டேக் பொருத்தியிருக்கும் ஹோயோஸ், இந்த சுறா மற்றவற்றைவிட வித்தியாசமாக நடந்துகொண்டதாக கூறுகிறார். "அந்த டேக்கின், ஆய்வுக்கருவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளுடன் உள்ள உலோகத்தாலான கூர்முனையை உள்ளே செலுத்தியவுடன் மற்ற சுறாக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும், மாறாக இந்த சுறா என்னை திரும்பி பார்த்தது," என அவர் நினைவுகூர்கிறார். "அதன் சிறிய கண்கள் என்னை பார்ப்பதை நான் கண்டேன், அது அமைதியாக திரும்பியதை நான் பார்த்தேன்." படக்குறிப்பு, ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர். சுறா நீந்திச் சென்றபோது அதன் கண்களை பார்த்ததாக கூறும் ஹோயோஸ், திடீரென அது தன்னை நோக்கி வந்ததாக கூறுகிறார். "நான் என் தலையை தாழ்த்திக்கொண்டேன், அதன்பின், அதன் கீழ் தாடை என் கன்னத்தையும் மேல் தாடை என் தலையையும் துளைப்பதை உணர்ந்தேன். அதன் தாடைக்குள் நான் இருப்பதாக நினைத்தேன், பின் மீண்டும் அது தன் தாடையை திறந்தது." "சுறா தன் தாடையை மூடியதும், அது கடித்ததன் அழுத்தத்தை உணர்ந்தேன். பின் அது என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தது," என ஆச்சர்யப்படுகிறார். கலாபகோஸ் சுறாவின் ரம்பம் போன்ற 29 பற்கள், ஹோயோஸுக்கு அவரின் தலை மற்றும் முகத்தில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய டைவிங் கருவியின் ஆக்சிஜன் குழாயையும் துண்டித்தது. சுறாவின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்தாலும் அவர் மரண ஆபத்தில் தான் இருந்தார். நீச்சலின் போது அணியக்கூடிய கண் பாதுகாப்பு கண்ணாடியையும் கிழித்துவிட்டது, தவிர ஏற்கெனவே மங்கலான அவரின் பார்வை, ரத்தம் கலந்த நீரால் மேலும் மங்கலானது. "டைவிங் கருவியிலிருந்து ஆக்சிஜன் வரவில்லை என்பதை உணர்ந்ததும், எங்களிடம் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக்கொண்டேன், அதை நாங்கள் ஆக்டோபஸ் என அழைக்கிறோம், மூச்சுக்காற்று தேவைப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது," என அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார். "பின்னர்தான் அக்கருவியின் ரெகுலேட்டர் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், காற்றை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அதை வெளியேற்றிக் கொண்டிருந்தது, எனவே நான் என்னுடைய பயிற்சியை நினைவில் வைத்து, என் உதடுகள் மூலம் அதை ஒழுங்குபடுத்தினேன்." ஒருபுறம் ரத்தம், மங்கலான பார்வை, காற்று இல்லாத நிலை என, மேற்பரப்புக்கு வர ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருப்பதை ஹோயோஸ் கணக்கிட்டார். "என்னால் எதையும் பார்க்க முடியாததால், வெளிச்சத்திற்காக மேற்பரப்புக்கு வர முயற்சித்தேன். எனவே, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேல்நோக்கி நீந்தினேன், ஏனெனில் சுறாவை கவரும் வகையிலான ஒருங்கற்ற நகர்வுகளை நான் தவிர்க்க விரும்பினேன்." பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை ஹோயோஸ் பிரயோகிக்க வேண்டியிருந்தது. ஹோயோஸ் மேற்பரப்புக்கு வந்ததும் இளைஞர் ஒருவர் அவரை இழுத்து படகில் அமரவைத்தார், படகை செலுத்தியவர் அவரின் நிலைமையை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிறிது நேரத்திற்கு அந்த காயத்தின் வலியை தான் அவ்வளவாக உணரவில்லை என விவரிக்கிறார் ஹோயோஸ். "உண்மையில் நான் பதற்றத்தில் இருந்தேன், அந்த காயம் எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. அதன் தாக்கம் தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. 3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு விலங்கு, அந்த வேகத்தில் என்னை கடித்தது, கார் என் மீது மோதியது போன்று இருந்தது. என் தாடை முழுக்க பெரிய காயம் இருந்தது, அது உடைந்துவிட்டது என்றே நினைத்தேன்." பின்னர், அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சை செய்தனர். ஹோயோஸ் அதிர்ஷ்டக்காரர். சுறாவின் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்பரப்புக்கு நீந்தியபோதும் அவருடைய காயத்தில் தொற்று ஏற்படவில்லை, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைவான காலத்தில் காயம் குணமடைய தொடங்கியது. "இது அதிசயம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர்: செப்டம்பர் 27-ஆம் தேதி சுறா என்னை தாக்கியது, அதன்பின், நான் 34 மணிநேரம் பயணம் செய்தேன், மருத்துவர்கள் எனக்கு சேதமடைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர், இரு தினங்கள் கழித்து எனக்கு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யலாமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்தனர்." இந்த தாக்குதல் ஹோயோஸுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். மருத்துவர்களின் கூற்றின்படி, 2017-ஆம் ஆண்டில் அதே பகுதியில் கலாபகோஸ் சுறாவால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட காயங்கள் சரிவர ஆறவில்லை என்பதால், சுமார் ஒருமாத காலம் அவர் ஹைபர்பேரிக் சேம்பரில் (hyperbaric chamber - இது அழுத்தப்பட்ட சூழலில் 100% ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கலன்) இருக்க வேண்டியிருந்ததாக கூறினர். "என் காயங்கள் ஆறிய விதம் நம்ப முடியாததாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொற்று குறித்து தாங்கள் எப்படி கவலையடைந்தோம் என மருத்துவர்கள் கூறினர், ஏனெனில் முகத்தில் காயம் இருந்ததால் அது மூளைக்கான நேரடி பாதையாக இருந்தது." பட மூலாதாரம், Mauricio Hoyos மீண்டும் அதே நீருக்குள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிரித்துக்கொண்டே கூறிய ஹோயோஸ், நவம்பர் 14-ஆம் தேதி அங்கு டைவிங் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலுக்கு ஆளான பின்பு, தான் ஆராய்ச்சி செய்யும் விலங்குகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். "சுறாக்கள் இல்லாமல் கடல் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் கடலின் சிக்கலான சமநிலையை பராமரிக்க சுறாக்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து புரியாமல் அவர்கள் இதை கூறுகின்றனர்." தன் கன்னத்தில் உள்ள பெரிய காயத்தை சுட்டிக்காட்டிய அவர், "அந்த பெண் சுறா என் உயிரை காப்பாற்றியது என்பதற்கு இதுவே சான்று. இது, சுறாக்கள் குறித்து நன்றாக பேசுவதை தொடரவும் எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் என்னை அனுமதிக்கும்." இதனிடையே, ஹோயோஸை தாக்கிய கலாபகோஸ் சுறா நீரின் ஆழத்தில் தன் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறது, அதை மீண்டும் சந்திப்பேன் என நம்பிக்கை கொள்கிறார் அவர். தன்னை தாக்குவதற்கு முன்பு அவர் சுறாவின் மீது டேக்-ஐ பொருத்திவிட்டதால் மீண்டும் அதை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது. "ஜனவரி மாதம் நான் கொக்கோஸ் தீவுக்கு செல்லவிருக்கிறேன். ஜன. 20 முல் 27 வரை நாங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளோம், நிச்சயமாக (தாக்குதல் நடந்த) ரோகா சுசியாவுக்கு (Roca Sucia) சென்று ஆழ்கடலில் டைவ் செய்வேன்," என மன உறுதியுடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3k75239j0o

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

2 months 4 weeks ago
கணக்கு எடுப்பின் பிரகாரம் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் 7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!

நிரூபணவாதி

2 months 4 weeks ago
'Achilles heel' என்று கிரேக்க புராணங்களில் சொல்லப்படுவது போல, மிகவும் பலமான மனிதர்களுக்கும் ஒன்றோ சிலவோ பலவீனங்கள் அமைந்து, அவர்களை அழித்தும் விடுகின்றன, அண்ணா..........

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை - டிசம்பர் 10 முதல் சட்டம் அமுல்!

2 months 4 weeks ago
12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168

கருத்து படங்கள்

2 months 4 weeks ago
பிக்குவும், பாதிரியாரும்... காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி.... சிறுவர், சிறுமியர், பெண்கள் எல்லோரையும் மேய்ந்து தள்ளி விடுவார்கள். அவர்கள் திருமணம் செய்யாமல் தனியே வசிப்பதால்... இந்த வியாதியை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி எல்லை மீறி விடுகின்றார்கள். 😂 ஐயரும் , மௌலவியும் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதால்... பாலியல் விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கின்றார்கள். 👍 😜

டெல்லி கார் வெடிப்புக்கு முன் கைதான பெண் மருத்துவர் உள்பட 3 மருத்துவர்களின் பின்னணி

2 months 4 weeks ago
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் சையத் மொஸீஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நாட்களாக நடந்த கூட்டு நடவடிக்கையின் விளைவு. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது," என்றார். ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தின் விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவரின் பணியிடத்தில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சஹரன்பூர் மற்றும் லக்னௌ பகுதிகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஃபரிதாபாத் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் சுமார் 800 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அல் ஃபலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர் அதீல், மருத்துவர் முஸம்மில் ஷகீல் மற்றும் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரிக்கும் புலனாய்வுக் குழு. சந்தேகத்துக்குரிய நபர்களின் பட்டியலில் மருத்துவர் உமர் நபி தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராகக் கருதப்படுகிறார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர் உமர் குற்றமற்றவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் தனது பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். விசாரணை அமைப்புகளின்படி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டிச் சென்றவர் 34 வயதான மருத்துவர் உமர் நபி என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை பிபிசி உறுதிப்படுத்தவில்லை. அந்த காருக்கும் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஃபரிதாபாத்தில் காவல்துறையினர் அதிக அளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வலையமைப்புடன் மருத்துவர் உமர் நபிக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நபியின் உறவினர் முசம்மிலா, தான் வெள்ளிக்கிழமை நபியுடன் பேசினேன் என்றும், பின்னர் போலீசார் தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனரை அழைத்துச் சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து நபியின் தந்தையையும் கைது செய்தனர் என்றும் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் மருத்துவர் கைது மருத்துவர் அதீல் அகமது ராதர் நவம்பர் 7-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் வழங்கியுள்ளது. ராதரின் ஆதார் அட்டையில் அனந்த்நாக் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. சஹரன்பூரில் அம்பாலா சாலையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக மருத்துவர் அதீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் அதீல், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், அனந்த்நாக் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஆதரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டியதாக போலீசார் கூறுகின்றனர். விசாரணையின் போது ஸ்ரீநகர் போலீசார் பெற்ற சிசிடிவி காட்சிகளில், அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில், அவர் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவர் அதீல் கடந்த மூன்று ஆண்டுகளாக சஹரன்பூரில் வசித்து வந்துள்ளார். மங்காமோவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், அந்த இடத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்பு, அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். அக்டோபர் 24, 2024 வரை அவர் அங்கு பணியில் இருந்துள்ளார். உத்தரபிரதேச போலீசார் சஹரன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அவர் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, ஊழியர்களிடம் விசாரித்தனர். அதீலுக்கு அம்பாலா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் அதீல், அக்டோபர் 4, 2025 அன்று ஜம்மு காஷ்மீரில் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 26-ஆம் தேதி விடுப்பில் சென்ற அவர், சில பணியாளர்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் அவரது கைது செய்தி வெளிவந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது பெயர்ப் பலகையை அகற்றியது. மருத்துவமனை நிர்வாகம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரிலும் பல மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவமனையின் மேலாளர் மனோஜ் மிஸ்ரா கூறுகையில், "ஜனவரி–பிப்ரவரி 2025 இல் மருத்துவமனையில் மருத்துவர் பதவி காலியாக இருந்தது. அப்பதவியில் மார்ச் மாதத்தில் அதீல் நியமிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அவரது சேவையை நிறுத்தியுள்ளது." என்றார். உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சஹரன்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் வ்யோம் பிண்டால் ஊடகங்களிடம் பேசுகையில், "இது ஜம்மு–காஷ்மீர் காவல்துறையின் வழக்கு. உத்தரபிரதேச காவல்துறை ஒத்துழைப்பு மட்டுமே அளித்துள்ளது." என்றார். அதே சமயம், சஹரன்பூரில் மருத்துவர் அதீல் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் அதீல் அகமது ராதர் முன்பு சஹரன்பூரில் உள்ள வி பிரதர்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அதன் நிர்வாகியான மருத்துவர் மம்தா வர்மா கூறுகையில், "மருத்துவர் அதீல், மருத்துவ நிபுணராக இங்கு சுமார் நான்கு மாதங்கள் பணியாற்றினார்." என்றார். பின்னர், அவர் பிப்ரவரி 28-ஆம் தேதி விலகி பிரபல மருத்துவமனைக்கு மாறியுள்ளார். அவருடன் பணியாற்றிய சிலர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இதுகுறித்து பேசினர். அப்போது, 'அதீல் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அவரது வருங்கால மனைவியும் ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்றும் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தனர். அவருடன் பணியாற்றிய சக மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'அதீலுக்கு மருத்துவம் குறித்த அறிவு மிக நன்றாக இருந்தது. நாங்கள் அவ்வப்போது அதைப் பற்றி விவாதிப்போம். ஆனால், தனிப்பட்ட தொடர்பு மிகவும் குறைவாக இருந்தது' என்றார். அவர் எங்கு தங்கியிருந்தார் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், வழக்கமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து, உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கம் என்று அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர். ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் மருத்துவர் கைது ஹரியாணா மாநிலம் தௌஜில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் முசம்மில் ஷகீல், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டு நடவடிக்கையின் போது, மருத்துவர் முசம்மிலிடமிருந்து ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். மருத்துவர் முசம்மில் அக்டோபர் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது வாடகை வீட்டில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குப்தா கூறுகையில், "முசம்மில் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்தார். அவரிடமிருந்து ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு டைமர் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றார். ஷாஹீன் சயீத் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷாஹீனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். "360 கிலோ எடையுள்ள எளிதில் தீப்பிடிக்கும் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஆர்.டி.எக்ஸ் அல்ல," என்று சதேந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவர் முசம்மிலின் தாயார் நசீமா, பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் மற்றவர்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டோம். அவரைச் சந்திக்க முயன்றோம், ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை," என்றார். முசம்மில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஃபரிதாபாத்தில் ஷாஹீன் சயீத் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, முசம்மிலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் ஷாஹீனுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், புல்வாமாவில் உள்ள மருத்துவர் முசம்மிலின் சகோதரர் ஆசாத் ஷகீல், 'என் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை' என்று பிடிஐக்கு தெரிவித்தார். அவர் வருடத்திற்கு இரண்டு முறை வீட்டிற்கு வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனை மேற்கொள்கின்றனர். லக்னௌவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை செவ்வாய்க்கிழமை, ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் லக்னௌ வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் குடும்பம் லக்னௌவின் லால் பாக் பகுதியில் உள்ள கந்தாரி பஜாரில் வசிக்கிறது. அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் ஷோயிப் சயீத்தின் தந்தையுடன் வசிக்கிறார், இளையவர் பர்வேஸ் சயீத் ஐஐஎம் மதியான்வ் அருகே வசிக்கிறார். அவரது தந்தை சையத் அகமது அன்சாரி கூறுகையில், "எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஷாஹீன் சயீத் என் இரண்டாவது மகள். அவர் அலஹாபாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டம் பெற்றுள்ளார்," என்றார். மேலும், "நீங்கள் சொல்வதை (சட்டவிரோத நடவடிக்கைகள்) என்னால் நம்ப முடியவில்லை. இதுவரை போலீசார் என்னைத் தொடர்புகொள்ளவில்லை," என்று சையத் அகமது அன்சாரி கூறினார். சஹரன்பூர் மற்றும் லக்னௌவிலுள்ள ஷாஹீன் சயீத்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நவம்பர் 11-ஆம் தேதி உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவும், ஜம்மு–காஷ்மீர் காவல்துறையினரும் ஷாஹீன் சயீத்தின் தந்தையின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். சையத் அன்சாரி கூறுகையில், 'நான் பர்வேஸுடன் ஒவ்வொரு வாரமும் பேசுவேன். அவர் இன்டக்ரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஷாஹீனுடன் நான் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்' என்றும் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், "ஷாஹீன் சயீத் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கவில்லை. அவர் இங்கே வருவது மிகவும் அரிது," என்றார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சந்தையில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். முன்வைக்கப்படும் கேள்விகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாங்கள் ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தக் கூட்டு நடவடிக்கை உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, "இந்த நடவடிக்கை நீண்டகால கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது." இந்தக் குழு ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தீவிரமாகச் செயல்பட்டு வந்தது என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளைஞர்களைத் தூண்டியது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தது என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறுகிறது. காஷ்மீர் காவல்துறை அளித்த தகவலின்படி, சோதனைகளின் போது பல டிஜிட்டல் சாதனங்கள், சுவரொட்டிகள் மற்றும் மின்னணு பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சித்தாந்தத்தைப் பரப்பி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், அதாவது UAPA வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூடான் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி வெடிப்புச் சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் சதி செய்தவர்கள் தப்ப முடியாது. இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்," என்றார். மறுபுறம் இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டுமே ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது அங்கே எப்படி சென்றது? அது எவ்வளவு பெரிய பேரழிவாக மாறியிருக்கும்?" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சுமார் ஏழு மாதங்களுக்கு முன்புதான் பஹல்காமில் ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இப்போது டெல்லியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் எங்கே? பிரதமர் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15pyyvpn0yo

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

2 months 4 weeks ago
உங்களை போன்ற அறிவாளிகள் ஒரு சிலர் பிறப்பார்கள் அந்த வெப்பத்தில் தமிழ் இனம் உயிர் பெரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு
Checked
Tue, 02/10/2026 - 23:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed