Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
  3. வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
  4. Today
  5. வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
  6. பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
  7. பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
  8. பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
  9. பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .
  10. வகை பெயர் தெரியவில்லை சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
  11. ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன. மேலிருந்து கீழாக: பட்டை சங்கடம்/ ஆஞ்செல்கை வள்ளம் பிளாவு
  12. சோழமண்டல கடற்கரையில் ஓடிய தமிழரின் குள்ளத்தோணி/ யாத்திரை தோணி: இதற்கும் தூம்புக்கட்டை (outrigger) உண்டு. எனினும் இதனது மிகை கட்டமைப்பு (super structure) கோடியக்கரையிலிருந்து உருவோடிய (sailed) கள்ளத்தோணியின் (படத்திற்கு அடுத்த மறுமொழிப்பெட்டியைக் காண்க) கட்டமைப்பை ஒத்து வருகிறது. எனினும் இவையிரண்டும் ஒன்றல்ல என்பது இரண்டினது கலவோடு (hull), முற்பாய், மற்றும் சுக்கான் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தமிழரின் இக்கலத்தின் படிமம் லெப். கொ. சோமசிறி தேவேந்திர அவர்கட்கு கிடைக்கப்பெறாமையால் தான் அவர் இது முற்றிலும் ஈழத்தீவில் மட்டுமே பாவிக்கப்பட்ட கடற்கலம் என்ற முடிவிற்கு வந்தாரா என்பது தெரியவில்லை. சிங்களவரின் யாத்ர ஒருவா: தமிழரின் மிகை கட்டமைப்பிற்கும் சிங்களவரின் மிகை கட்டமைப்பிற்கும் வேறுபாடுகள் தெளிவாக தெரிகிறது; சிங்களவரின் மூடும் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றாக மூடியுள்ளது. தமிழரினது 75 வீதமே மூடியுள்ளதோடு, சிங்களவரின் மிகை கட்டமைப்பின் மேற்புறத்திலுள்ள வீடு போன்ற கூறு தமிழரின் கலத்தில் காணப்படவில்லை. கீழுள்ள படிமமானது சிங்களவர் மற்றும் தமிழருக்குப் பொதுவான இக்கடற்கலத்தின் விரிவான விளக்கமாகும். படிமப்புரவு: Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843
  13. குள்ளத்தோணி/ மகா ஒருவா, யாத்ர ஒருவா கற்பிட்டி, புத்தளம் இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் இக்கடற்கலங்கள் பொதுவானவை என்றதோடு இவை தொடர்பான விரிவான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் (Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843) அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க. படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  15. தோணி கேரளா தோணிகள் என்ற சொல்லானது பாரிய கலங்களை மட்டுமல்லாது ஒத்தைமரத்திலான கலங்களையும் குறித்தது.
  16. ஓட வகைகளில் ஒன்று கொச்சி, கேரளா 4-5 பேர் செல்லக்கூடியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.