Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை ரவி நடராஜன் 2015 –ன் ஆரம்பத்தில் நடந்த நுகர்வோர் கருத்தரங்கில், சாம்சுங்கின் தலைவர், ஒரு பி.எம்.டபிள்யு. காரை நுண்ணறிப்பேசியில் அழைக்க, அவரை நோக்கி விரைந்த, அந்தக் கார், அவர் முன் வந்து நின்றது. காரில் ஏறியவுடன், அவருடைய நுண்ணறிப்பேசி மூலம், சென்றடைய வேண்டிய இடத்தைச் சொல்ல, காரும் அங்கே செல்லத் தொடங்கியது. காரில் ஓட்டுனர் எவரும் இல்லை. 2015, ஜூலை மாதம் க்ரைஸ்லரின் ஜீப் வண்டிகளை இணையம் மூலம் ஓட்டுனரிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஓடும் காரை இன்னொருவர், இணையம் மூலம் கட்டுப்படுத்த முடியுமா? மேலே சொன்ன இரு விஷயங்களும், எப்படி இணையத்துடன் இணைக்கப்பட்ட கருவிகள் நம்முடைய வாழ்க்கையை ம…

  2. தோட்டத்தில் கீரை பறிக்கும் விவசாயி விஸ்வநாதன் அரைக் கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பீட்ரூட் கீரை, முடக்கத்தான் கீரை, புளிச்ச கீரை, அகத்திக் கீரை இப்படிக் கீரையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையையும் தன் தோட்டத்தில் பயிர் செய்திருக்கிறார் கோவை புட்டுவிக்கி சாலையில் வசிக்கும் விஸ்வநாதன். வாடிக்கையாளர்கள் வந்து கேட்ட பின்பு தோட்டத்தில் புத்தம் புதுசாகக் கீரையைப் பறித்துத் தருகிறார். ‘இந்தக் கீரையின் பெயரை நாங்க கேள்விப்பட்டதில்லையே? இதை எப்படிச் சமைக்கிறது?’ என்று வாங்குபவர்கள் கேட்டால், அந்தக் கீரையில் என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதைத் தெளிவாக விளக்கவும் செய்கிறா…

  3. Started by Knowthyself,

    வேலை வாய்ப்பு 1. முழுநேர வேலை - வலைத்தள, வலைச்செயலி நிர்மானிப்பு, Microsoft தொழில்நுட்பம், Angular 1 and 2 Framework, and .. 2. ஒப்பந்த அடிப்படையில், திறமையை வெளிப்படுத்தவும்/நிரூபிக்க கூடியதாக இருக்க வேண்டும் - வலைத்தள, வலைச்செயலி நிர்மானிப்பு (தமிழீளத்தில் உள்ளவர்களும், ஆங்கிலம் கதைக்ககூடியவர்களாகவும் இருக்க வேண்டும்), Microsoft தொழில்நுட்பம், Angular 1 and 2 Framework, and .. விரும்பின் தனிமடலில்

  4. வாட்ஸ் அப்பில் வீடியோ கால்! நீங்களே டெஸ்ட் செய்யலாம்! #WhatsappVideoCall வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் அபார வளர்ச்சி! 2010ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ் அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்திற்கு கொண்டு சென்றதில் வாட்ஸ் அப்பின் பங்கு அளவிட முடியாதது. ஒரு குறுந்தகவலுக்கு ஒரு ரூபாய் என்று இருந்த காலத்தில் வெறும் இணையதள இணைப்பு இருந்தால் உலகம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் கு…

  5. வந்துவிட்டது 'தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன்'..! பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஃபோன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடித்தது பற்றி பிரஷாந்த், 'மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐத் தொடர்ந்து தற்போது, தண்ணீரில மிதக்கும் 'வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்' வந்திரு…

  6. பெர்முடா முக்கோண மர்மம்... இதுதான் காரணமா? இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது. பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ? வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது…

  7. குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்! #GoogleFlights நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது. விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம். இதேபோல பயணங்களுக்காக விமானப் பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலோனோரின் கவலை, அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது கூகுளின் Flights சேவை. நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம் ஆகியவற்றை மட்…

  8. நமது சூரியக் குடும்பத்தில் நெப்டியூனுக்கு அப்பால் பூமியை விடப் பத்து மடங்கு நிறை கொண்ட ஒரு புதிய கோள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள். நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பல வான்பொருட்களின் சுற்றுப் பாதையைக் கணினி மாதிரிகள் உருவகப்படுத்தும்போது, இப்படியொரு கோள் இருப்பது போல் தெரிந்தது என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கால்டெக் (Caltech) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இந்தக் கோளை யாரும் தொலைநோக்கியில் பார்க்கவில்லை. புதிய கோள் இப்படி ஒரு கோள் இருக்குமா என்கிற சந்தேகம் முதலில் பலருக்கு எழுந்தது. ஆனால், தொடர்ந்து சூரியக் குடும்பத்தின் வெளிப் பகுதியை ஆராய்ந்தவர்கள் இந்தக் கோளின் இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். தற…

  9. இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி. இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன். பயிற்சிக் கழகம் தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் உள்ள இயற்கை வேளாண் உழ…

    • 23 replies
    • 8.7k views
  10. கூகுள் தேடல் - மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்? #GoogleSearch நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது. கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லி…

  11. அறிவியல் அறிவோம்: கொட்டாவி விட்டால் மூளைக்காரர்! ஆசிரியர் தீவிரமாகப் பாடம் நடத்தும்போதோ, அலுவலகக் கூட்டத்தில் அதிகாரி பேசும்போதோ கொட்டாவி வந்தால் சங்கடத்துக்கு உள்ளாவோம். காரணம், ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவருக்குத் தூக்கம் வருகிறது, பேச்சில் ஆர்வமில்லை என்று எதிரில் இருப்பவர் புரிந்துகொள்வார். புதிதாக வெளிவந்துள்ள ஆய்வு முடிவைக் கேட்டால், கொட்டாவி வருவது கௌரவமான விஷயம்தான் என்று எண்ணத்தோன்றும். நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ காலப் உள்ளிட்டோர் நடத்திவரும் ‘பயாலஜி லெட்டர்’ எனும் ஆய்விதழில் சமீபத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. யூடியூபில் பதிவுசெய்யப்பட்டுள்ள வீடியோவில்…

  12. ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு? ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை. 1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்பட…

  13. பெண் குரங்குகளுக்கு ஆணிடம் என்ன பிடிக்கும்? கெலாடா சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமும் அதிகாரமும் அதிகம் ஒரு கோழிக் கூட்டத்தில் மிகவும் பெரிய அல்லது மூத்த கோழி மற்ற கோழிகளின் தலையில் கொத்தும். ஒவ்வொரு கோழியும் தன்னைவிட, இளைய கோழிகளைக் கொத்தும். வீட்டில், கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அரசியல் இயக்கங்களில் என்று எங்கும் ஒவ்வொருவரும் தன்னை அடுத்துக் கீழ்நிலையில் இருப்பவரின் தலையில் குட்டுவார்கள். இதை ‘கொத்தல் வரிசை’ எனலாம். கல்வி நிலையத்தில், அலுவலகத்தில், வீட்டில் அல்லது வீதியில் கொத்தல் வரிசையில் நமது இடம் எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களில் மட்டுமே காணப்படுக…

  14. அந்தமான் விவசாயம் 04: நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர, தாழ்வான பகுதிகளில் உள்ள உவர் நிலப்பகுதியை அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அகலமான வாய்க்காலாகவும் பாத்திகளாகவும் மாற்றி வடிவமைப்பதே அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி) முறை. இதில் இயந்திரங்களின் உதவியுடன் 5-6 மீட்டர் அகலமும் 1.5 2.0 மீட்டர் ஆழமும் கொண்ட வாய்க்கால்கள் கோடைக் காலத்தில் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு அதே வரிசையில் (மேல் புற மண் பாத்தியின் மேலும், ஆழத்தில் வெட்டப்பட்ட மண் பாத்தியின் கீழ்ப் பகுதியில் இருக்குமாறும் போடப்படுகிறது) நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் வாய்க்காலின் விளிம்பில் இருந்து ஒரு மீட்டர் தள்ளி 1…

    • 2 replies
    • 535 views
  15. இனி ஃபேஸ்புக் தான் உங்கள் அலுவலகம் #FacebookWorkPlace அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு வேலை செய்பவர்களை வேலை நேரத்தில் எப்ப பாரு ஃபேஸ்புக் என்று கலாய்ப்பவது வழக்கம். அவர்கள் இனி கெத்தாக பெருமை கொள்ள வந்துவிட்டது ஃபேஸ்புக் வொர்க்ப்ளேஸ். இனி அலுவலக வேலைகளை ஃபேஸ்புக்கிலேயே செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஒரு சமூக வலைதளம், வர்த்தக பக்கம் என்ற விஷயங்களை தாண்டி அலுவலகம் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100% வெளிப்படைத் தன்மையுடனும் செய்து முடிக்க இந்த பக்கம் எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் விற்பனை ப…

  16. ஐபோனுக்கு சவால் விடும் பிக்ஸல்! கூகுள் WiFi.. புதிய ஓ.எஸ்! தெறிக்கவிடுமா கூகுள்! #GoogleEvent ஆப்பிள் ஐபோன்கள் வெளியாகும் ஆப்பிள் நிகழ்ச்சிக்கு இணையாக மொத்த டெக் உலகமும் அக்டோபர் 4ம் தேதிக்காக‌ ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது, இதற்கு காரணம் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் நிறுவனத்தின் Pixel மொபைல் போன்களை அந்நிறுவனம் வெளியிடலாம் என்றச் செய்தியே.சான் பிரான்ஸிஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் கூகுள் தன் பிக்சல் மொபைல், அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான Echoக்கு போட்டியாக கூகுள் ஹோம் எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கர், புதிய க்ரோம்கேஸ்ட், புதிய Wi-Fi ரூட்டர்,ஆண்ட்ரோமீடா (Andromeda) என்ற புதிய OS என பல விஷயங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்…

  17. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் இந்திய அளவில் 145 இடங்களிலும், அவற்றில் தமிழகப் பகுதிகளில் மட்டும…

    • 0 replies
    • 437 views
  18. மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர் மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது. இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.…

  19. வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம் வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அ…

  20. பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்! அகணி சுரேஸ் வெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்ப…

  21. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து இந்த தொலைநோக்கி தகவல்கள் பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதல் மற்றும் பார்வைக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் செயல்படுத்…

  22. யாகூ பயனாளிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாகூ நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 20 கோடி பேரின் தகவல்களை விற்க PEACE என்ற பெயருடைய ஹேக்கர் முன்வந்தபோது தான் இத்திருட்டு குறித்து முதல் முறையாக செய்தி வெளியாகியுள்ளது. கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி,…

  23. தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன் தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார். இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பி…

  24. இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7 ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும். ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும் அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டே…

  25. ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது. என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.