அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர் மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது. இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.…
-
- 2 replies
- 450 views
-
-
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம் வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அ…
-
- 2 replies
- 314 views
-
-
பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்! அகணி சுரேஸ் வெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்ப…
-
- 0 replies
- 843 views
-
-
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து இந்த தொலைநோக்கி தகவல்கள் பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதல் மற்றும் பார்வைக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் செயல்படுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாகூ பயனாளிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாகூ நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 20 கோடி பேரின் தகவல்களை விற்க PEACE என்ற பெயருடைய ஹேக்கர் முன்வந்தபோது தான் இத்திருட்டு குறித்து முதல் முறையாக செய்தி வெளியாகியுள்ளது. கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி,…
-
- 0 replies
- 410 views
-
-
தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன் தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார். இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பி…
-
- 0 replies
- 516 views
-
-
இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7 ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும். ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும் அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டே…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது. என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தன…
-
- 0 replies
- 461 views
-
-
உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு வளமான நாட்டு விதைகளை அதிவேகமாக இழந்துவருவது. நாட்டு விதைகளை அடையாளம் காணுதல், சேகரித்தல், பரப்புதல், உழவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஒரு சில இயற்கை ஆர்வலர்களே தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பட்டறையைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை உழவர்களுக்கான பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 538 views
-
-
மரபணு மாற்றம் ! மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்: கடுகின் காரம் குறையப்போவதில்லை! பல்வேறு அபாயங்கள் அடங்கிய, ஆரோக்கியத் திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு, நம் சோற்றிலும் கலக்கக் கூடிய அபாயம் உருவாகி உள்ளது. இந்த வகை கடுகை சாகுபடி செய்ய அனுமதிப் பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது. தெரிந்து தான் செய்கிறதா... அதற்கு இப்படி வழிகாட்டு பவர்கள் யார்? வரலாறு: ரசாயனம் மற்றும் மருந்து தொழிலில் ஈடு பட்டுள்ள, 'பேயர்' என்ற பன்னாட்டு நிறுவனம், உலகளவில், பூச்சிக்கொல்லி சந்தையில் ஒரு பெரும் பங்கை வைத்துள்ளது. இதன் பணபலம் எப்பேர்பட்டது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பரப்புவதில் முன்னோடியாக இருக்கும், 'மொன்சான்டோ' நிறுவனத்தை, சமீ…
-
- 1 reply
- 721 views
-
-
பெண்கள் இன்றி ஆண்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் ; ஆய்வில் அதிர்ச்சி முடிவு பெண்கள் இன்றி இனி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தமது தோல் செல்கள் மூலம் குழந்தை பெறலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஆணின் உயிரணுவுடன் மற்றொரு ஆணின் தோல் செல்கள் அல்லது மற்ற திசுக்கள் கலக்கப்படுகிறது. அதன்மூலம் குழந்தை உருவாகிறது. ஆணுக்கு ஆண் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிக வசதியாக அமையும் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் பெண்களும் தங்கள் குழந்தைகள…
-
- 2 replies
- 493 views
-
-
ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டது ஐரோப்பிய விண்வெளி முகமை நமது அண்டமான பால்வெளி அண்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய அறிவு, பெருமளவு அதிகரித்துள்ளது. பால்வெளி அண்டம் (கோப்புப்படம்) ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும் இடம், அவைகளின் பிரகாசம் ஆகியவை பற்றிய தகவல்களை ஐரோப்பிய விண்வெளி முகமை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், கையா விண்வெளி தொலைநோக்கி மூலம் பெரும் அளவிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த தகவல்கள் மிகப்பெருமளவு குவிந்துவிட்டதால், அவற்றிலிரநது சுவாரஸ்யமான ஏதாவது கண்டுபிடிக்க வேண்டி ஐரோப்பிய விண்வெளி முகமை,தொழில்சாரா விண்ணியல் ஆர்வலர்கள் மற்றும் பள்ளிக் …
-
- 0 replies
- 265 views
-
-
புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார். சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏ…
-
- 0 replies
- 514 views
-
-
பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது. எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். http://www.virakesari.lk/article/11236
-
- 0 replies
- 442 views
-
-
பாலைவன மணலை, வளமாக்கிய சீனர்கள்! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசியை, பிளாஸ்டிக்கில் இருந்து உருவாக்கி உலகையே அதிரவைத்த சீனர்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மணலை மண்ணாக்கும் புதிய தொழில்நுட்பத்தைத்தான் கண்டறிந்துள்ளனர். இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா? சாதாரண மணலில், பெரும்பாலான தாவரங்கள் முளைக்காது. ஆனால், மணலை வளமான மண்ணாக மாற்றிய பிறகு அந்த மண்ணில் வளம் கூடியுள்ளது. சாதாரணமாக மண்ணில் விளையும் பயிர்கள் அனைத்தும், மணலில் இருந்து மாற்றிய மண்ணிலும் விளைந்தன. இப்படி சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 1.6 ஹெக்டேர் பரப்பளவினை கொண்ட 'உலன் புக்' பாலைவனத்தை நல்ல வளமான மண்கொண்ட விவசாய பூமியாக மாற்றியிருக்கிறார்கள்…
-
- 0 replies
- 686 views
-
-
இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய நிலை நுட்பமாக இணையத்தை அடையாளம் காணலாம். இந்த இணையத்தைப் பயன்படுத்திப் பல விடயங்கள் சாத்தியமாக்கப்படுகின்ற அமைவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதில், உலகத்தரத்திலான உயரிய கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிசெய்கின்ற இணையத்தின் அமைவு நிலை முதன்மை வாய்ந்தது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும் பாடநெறிகளை, அப்படியாகவே, அந்தப் பல்கலைக்கழகங்கள் இணையத்தின் மூலமாக இலவசமாக அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் வழங்க முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து, கற்கவேண்டிய பல துறைப் பாடநெறிகளை இலவசமாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உண்டுபண்ணியுள்ள பல்கலைக்கழகங்களினதும், இணையத் தன்னார்வ அமைப்ப…
-
- 5 replies
- 901 views
-
-
கடலில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் ரோபோ அறிமுகம்: ஒரே நேரத்தில் ஐவரை மீட்கும் (Video) வளைகுடா நாடுகளில் முதன்முறையாக கடற்கரைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், இராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர். ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் …
-
- 0 replies
- 383 views
-
-
மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை ---------------------------------------------------------------------------------------------------------- நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி. தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத…
-
- 0 replies
- 432 views
-
-
அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்த…
-
- 0 replies
- 391 views
-
-
தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…
-
- 1 reply
- 669 views
-
-
பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…
-
- 0 replies
- 456 views
-
-
பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது. சாப்பிடாமல் கொள்ளாமல…
-
- 2 replies
- 559 views
-
-
நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான். கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது. தொடக்கத்தில் இந்த கார் பய…
-
- 0 replies
- 391 views
-
-
வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்? கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது. இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? 1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம்…
-
- 0 replies
- 485 views
-
-
தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் அபார வெற்றி கண்டவர்: ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மதுரைக்காரரான கருப்பையா முத்துமணி. உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ள இவரை மருத்துவ உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பையா முத்துமணி (51). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. மதுரை …
-
- 0 replies
- 409 views
-